விழிப்புணர்வு_பதிவு...!
-----------------------------------------------------------------------
உலகெங்கும் பரந்து வாழும் கள்ளர் சமூகம் தங்களுக்குள் ஒற்றுமையே ஏற்படுத்தி கொண்டு வருகிறார்கள். ஆனால் அத்தகைய ஒற்றுமைக்கு ஊறு விளைவுக்கும் வகையில் பல தவறான செயல்கள் சமீபகாலத்தில் நடந்து வருகிறது.
-----------------------------------------------------------------------
உலகெங்கும் பரந்து வாழும் கள்ளர் சமூகம் தங்களுக்குள் ஒற்றுமையே ஏற்படுத்தி கொண்டு வருகிறார்கள். ஆனால் அத்தகைய ஒற்றுமைக்கு ஊறு விளைவுக்கும் வகையில் பல தவறான செயல்கள் சமீபகாலத்தில் நடந்து வருகிறது.
நாங்களும் கள்ளர் சமூகம் தான் என்று சில பிரிவினர் களத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக மலையமார், வாதிரியார், தொண்டமான், பட்டங்கட்டியார், போன்ற சாதியினர் எவ்வித ஆதாரமும் இன்றி தங்களை கள்ளர் சமூகம் என்று நிருவிட பார்கிறார்கள்.
தங்களை கள்ளர் வழிவந்தவர்கள் என்று சொல்லும் இவர்களிடம் எத்தகைய ஆதாரமும் கிடையாது.
மேலும் கள்ளர் பட்டங்கள் சாதியாக மாறிவிட்டது என்று முட்டாள்தனமான ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள். சோழ நாட்டு கள்ளரை பொருத்தவரை பட்டத்தை வைத்து திருமணம் செய்ய கூடியவர்கள். ஒரே பட்டம் கொண்டவர்கள் பங்காளிகள். வெவ்வேறு பட்டங்கள் தான் மாமன் மைத்துனர் உறவு. இப்படி உறவுகளை தீர்மானிக்கும் சக்தியாக பட்டங்கள் உள்ள நிலையில் அது எப்படி சாதியாக மாறும்?? சரி அது சாதியாக மாறினால் அவர்கள் எந்த பட்டம் கொண்டவர்களுடன் திருமணம் வைத்தனர் ?? ஒரே பட்டத்திற்குள்ளயே திருமணம் முடிப்பார்களா??. இப்படி பல கேள்விகள் இவர்கள் கள்ளர்கள் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்கிறது.
-----------------------------------------------------------------------
#மலையமார்
-----------------------------------------------------------------------
#மலையமார்
மலையமான் என்று சொல்லும் ஒரு சாதி பிரிவினர் கரூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர் மட்டும் தங்களை கள்ளர் என்று சொல்லி வருகிறார்கள். (ஒட்டுமொத்த சமூக பெரியவர்களும் சொல்லவில்லை). ஆதியில் கள்ளர் என்றும் தங்களின் பட்டப்பெயர் சாதிப்பெயராக பிற்காலத்தில் மாறிவிட்டது என்றும் தங்கள் மலையமான் பெயருக்கு விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் சோழர் காலத்தில் இருந்தே இவர்களின் சாதி பெயர் மலையமார் தான். சோழர் காலத்து கல்வெட்டில் மலையமார் மக்களும் நத்தமார் மக்களும் இடங்கை பிரிவில் இருந்தது பற்றி குறிப்பு உள்ளது. எனவே இவர்கள் கள்ளர்கள் இல்லை சோழர் காலத்தில் இருந்தே மலையமார் என்ற சாதி பெயரில் தான் இருந்து வந்துள்ளனர் என்பதற்கு இந்த கல்வெட்டு சான்றாக அமைகிறது.
-----------------------------------------------------------------------
#வாதிரியார்
-----------------------------------------------------------------------
#வாதிரியார்
வாதிரியார் என்ற சாதியினர் தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு கிளை உள்ளதால், தங்களை கிளை மரபு கொண்ட கள்ளர்கள் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் கிளை என்பது அங்குள்ள வெள்ளாளர் , மறவர் முதற்கொண்டு பல சாதியினருக்கு உள்ளது. மேலும் இவர்கள் கப்பல் பாய்மர தூணிகளை நெசவு செய்ய கூடியவர்கள். இவர்களுக்கும் போர் தொழில் செய்யும் கள்ளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
-----------------------------------------------------------------------
#தொண்டைமார்
-----------------------------------------------------------------------
#தொண்டைமார்
தொண்டைமான் என்ற சாதியினர் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களை கள்ளர் குல தொண்டைமான் என்று சாதி சான்றிதழ் வாங்கி வைத்து, தங்களை கள்ளர் சமூகம் என்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் கள்ளருக்கும் , தொண்டைமான் என்ற பெயரை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. தொண்டைமான் என்கிற பெயரை வைத்து மட்டுமே தங்களை புதுக்கோட்டை கள்ளர்களுடன் தொடர்பு படுத்துகிறார்கள். ஆனால் புதுக்கோட்டை கள்ளர்களின் வாழ்வியல் முறைக்கும் இவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. புதுக்கோட்டைலேயே தொண்டைமான் பட்டம் கொண்டவர்கள் 200 முதல் 300 குடும்பங்கள் தான் உள்ளது. ஆனால் அங்கிருந்து பிரிந்து சென்ற அரச பரம்பரை என்று சொல்லும் இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தோராயமாக 4000 - 5000 குடும்பங்களாக வாழ்கிறார்கள். இதிலேயே இவர்களின் முரண்களை அறியலாம். மேலும் இவர்கள் சுண்ணாம்பு தொழில் செய்யும் பரவர் என்றும், கோவில் மேளக்காரர் என்றும் குறிப்புகள் உள்ளது.
இவர்களின் திருமண முறை கள்ளர்களின் திருமணம் முறை கிடையாது. கள்ளர் சமூகத்தின் பன்பாட்டு அடையாளம் என்பது அவர்களின் திருமண முறை தான். அதை வைத்தே அவர்கள் கள்ளர்களா இல்லையா என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். இந்த தொண்டைமான் சாதியினர் தங்கள் தொண்டைமானுக்குள்ளயே திருமணம் செய்ய கூடியவர்கள். பட்டங்களை வைத்து திருமணம் கிடையாது. எனவே இவர்கள் கள்ளர் சமூகம் கிடையாது. தொண்டைமான் சாதியினரை கள்ளர் என்று தவறாக நினைத்து, முக்குலத்திற்குள் சிலர் திருமண உறவு செய்துள்ளனர்.
-----------------------------------------------------------------------
#பட்டங்கட்டியார்
-----------------------------------------------------------------------
#பட்டங்கட்டியார்
இவர்கள் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். கடையரில் ஒரு பிரிவினர். ஆனால் இவர்களை கள்ளர்கள் என்று சிலர் சொல்லி வருகின்றனர். கள்ளர் சமூகத்திற்கு பட்டங்கள் சூட்டுவதால் இவர்களை பட்டங்கட்டியார் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் கப்பல் கட்டுமரத்தின் பட்டத்தை கட்ட கூடியவர்கள். இவர்களுக்கும் கள்ளர் சமூகத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
கள்ளர் சமூகத்தின் பட்டங்களின் பெயரில் சாதிகள் பல உள்ளது.
கள்ளர் சமூகத்தின் பட்டங்களின் பெயரில் சாதிகள் பல உள்ளது.
1) அம்பலம் என்ற பட்டம் கள்ளருக்கு இருப்பதால் அம்பலக்காரர் என்று சொல்லப்படும் வலையரை கள்ளர் என்று சொல்லிவிட முடியாது.
2) கள்ளருக்கு பண்டாரத்தார் பட்டத்தை போல பறையரில் பண்டாரம் என்ற ஒரு சாதி உள்ளது. கோவில் பண்டாரத்தை கள்ளர் என்று சொல்லி விட முடியாது.
3) கள்ளரில் முத்தரையர் என்ற பட்டம் உள்ளது போல, வலையரில் முத்திரியர் என்ற சாதி உள்ளது. இதை வைத்து இருவரும் ஒரே சாதி என்று சொல்லி விட முடியாது.
4 ) கள்ளரில் படையாச்சி என்ற பட்டம் உள்ளது. வன்னியரில் உள்ள படையாச்சி என்ற சாதியே கள்ளர் என்று சொல்லி விட முடியாது.
5 ) கள்ளரில் உடையார் என்ற பட்டம் உள்ளது. தஞ்சையில் வாழும் உடையார் சாதியே கள்ளர் என்று சொல்லி விட முடியாது.
எனவே கள்ளர் பட்டங்கள் சாதியாக மாறாது. சோழ நாட்டு கள்ளர்கள் பட்டத்தை வைத்து திருமணம் செய்ய கூடியவர்கள் பட்டத்தை மறந்தாலும் மறப்பார்களே தவிர, தங்களின் கள்ளர் என்ற சாதி அடையாளத்தை மறக்க மாட்டார்கள்.
-----------------------------------------------------------------------
இப்படி மலையமான், வாதிரியார், தொண்டைமான், பட்டங்கட்டியார் போன்ற சாதியினர் கள்ளர் என்று சொல்வது வரலாற்றுக்கு முரணான தகவல்கள். இவர்களுக்கும் கள்ளர் சமூகத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சிலர் அரசியலுக்காகவும், பணத்திற்காகவும் இவர்களை கள்ளர் சமூகத்துடன் இணைத்து வைத்து செயல்படுகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த கள்ளர் சமூக ஒற்றுமை பாதிப்படையும் என்பதில் சந்தேகமில்லை.
-----------------------------------------------------------------------
இப்படி மலையமான், வாதிரியார், தொண்டைமான், பட்டங்கட்டியார் போன்ற சாதியினர் கள்ளர் என்று சொல்வது வரலாற்றுக்கு முரணான தகவல்கள். இவர்களுக்கும் கள்ளர் சமூகத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சிலர் அரசியலுக்காகவும், பணத்திற்காகவும் இவர்களை கள்ளர் சமூகத்துடன் இணைத்து வைத்து செயல்படுகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த கள்ளர் சமூக ஒற்றுமை பாதிப்படையும் என்பதில் சந்தேகமில்லை.
கள்ளர் சமூகத்தின் மரபணு அறிக்கை படி தற்போது உள்ள தமிழ் சாதியினர் அனைவரும் கள்ளரிடம் இருந்து தான் பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது. எனவே பிரிந்து சென்ற அனைத்து சாதியினரையும் கள்ளர் என்று சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழினத்தையும் கள்ளர் என்று தான் சொல்ல வேண்டி வரும். எனவே கள்ளர் சமூக ஒற்றுமையை பாதிக்கும் இத்தகைய செயல்களை தடுத்திடுவோம்.