Tuesday, January 12, 2021

மண்ணின் மைந்தர்களும் நாயக்கஅரசும்

பாகம் : 1
பாண்டிய மன்னனின் மனதை ஆட்கொண்ட நகரம் என்பதனாலே, பாண்டிய மன்னன் தன்னுடைய தலைநகரமாக மதுரையை 2500 வருடங்களாக தொடர்ந்து வைத்திருந்தனர்.
அப்படிப்பட்ட பாண்டிய தேசம் பாண்டியர்களின் சகோதர யுத்தத்தால் கிபி1335 முதல் 1378ஆம் வரை இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.
கிபி1378ல் கம்பண உடையார் என்கிற விஜயநகர இளவரசன், மதுரை சுல்தான் சிக்கந்தர் ஷாவை தோற்கடித்து வெளியேறுகிறார்
பின்பு கிபி1378 முதல் கிபி1422வரை சுமார் 44 ஆண்டுகள் மதுரை, ஒரு குழப்பமான சூழ்நிலையில் விஜயநகர அடைப்பைக்காரர்களான கவரை,கம்பளத்தாருக்கும் என்கிற நாயக்கர்(தளவாய்), பாண்டிய மன்னர்களும் தொடர் மோதலில் நிலையற்ற ஆட்சியில் இருந்தது.
பின்பு கிபி1422ல் பராக்கிரம பாண்டியன் மீண்டும் மதுரையில் பாண்டியர்களின் ஆட்சியை நிறுவினார். தொடர்ந்து மதுரையை 107வருடங்களாக ஆட்சி செய்தனர்.
அதன்பின்பு கிபி1529ல் மதுரை மாநகர் நாயக்கர் ஆட்சியில் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய மன்னர்கள் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள தென்காசிக்கு சென்று “தென்காசி பாண்டியர்” என்று கிபி 1618வரை ஆட்சி செய்தனர்.
நாயக்கர் என்பது ஒரு சாதி கிடையாது, அது ஒரு தளபதி என்பதன் பட்டமாகும். இதனை தூய தமிழில் நாயகர் என்பார்கள்.
புதுக்கோட்டை பாண்டியர் கல்வெட்டுகளில் நாயகர் என்கிற பாண்டிய அதிகாரிகளை காணலாம். மேலும் நாயகர் பட்டம் இன்றும் கள்ளர்களுக்கு வழங்கப் பெருவதை புதுக்கோட்டை,தஞ்சையில் காணலாம்.
ஆக தமிழ் நாட்டில் அது நாயகர் என்றும்,
அதே தமிழ் நாட்டில் தெலுங்கு அரசர்களின் தளபதிகளாக இருந்த கவரை,கம்பளத்தார்,தொட்டியர்,பலிஜா போன்றோர் தங்களை நாயக்கர் என்று அழைத்துக் கொண்டனர்.
கர்நாடகா,ஆந்திராவில் - நாயுடு என்றும்
ஒரிசாவில் - நாயக் என்றும்
வட இந்தியாவில் - நாய்க் என்றும் வழங்கப் பெறுகிறது.
இந்திய இராணுவத்தில் நாய்க் என்கிற பதவி இன்றும் உள்ளது.
ஆக கவரை,கம்பளத்தார்,தொட்டியர் போன்றோர் நாயக்கர் என்கிற அடையாளத்தில் நின்றனர்.
அதேபோல் அவர்களுக்கு சேவகம் செய்ய அனுப்ப கவுடா என்கிற கன்னட சேவகர்கள் “அனுப்ப” என்கிற அடைமொழியை தவிர்த்து கவுண்டர் என்று சாதிச் சான்றிதழ்கள் வாங்குகிறார்கள்.
இவர்களே இன்று அலங்கா நல்லூர் என்கிற புதிய ஜல்கிக்கட்டை உருவாக்கி, அதனை நன்கு தொழில்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் இதே நாயக்கர் ஆட்சியில் பல அன்னிய குடிகள் குடியேற்றப்பட்டனர்.
தமிழ் நெசவாளர்களுக்கு பதிலாக பட்டுனூல்காரர்கள் என்கிற செளராஸ்ட்ரா வகுப்பினர் மற்றும் கன்னட தேவாங்கு ஜவுளி செட்டியார்களையும் குடியேற்றினர்.
தமிழ் ஆசாரிகளுக்கு பதிலாக விஸ்வகர்மா என்கிற தெலுங்கு கம்மாளர்களை குடியேற்றினர்.
தமிழ் பொற்கொல்லர் ஆசாரிகளுக்கு பதிலாக கோமுட்டி செட்டி,கன்னட மஞ்சப்பு செட்டிகள் குடியேற்றப்பட்டனர்.
தமிழ் வணிகர்களுக்கு பதிலாக தெலுங்கு மனை செட்டியார்கள்,ஆயிரம் வைசியர்,பாத்திர செட்டி,வளையல் செட்டி குடியேற்றினர்.
தமிழ் பண்டாரங்கள்,வேளார்கள் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்டு தெலுங்கு பிராமணர்கள்,விசுவ பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர்.
இதுபோக இதர சேவக தெலுங்கு குடிகளான முத்துராச்சா, முடிராஜூ ,முத்திரிய நாயுடு, முத்திரிய ராவ்,முத்திரிய நாயக்கர் என்பவர்களையும் குடியேற்றினர். ( தற்போது இவர்கள் தமிழ் சாதியான வலையருடன் சேர முயற்சி செய்கிறார்கள்)
மேலும்,
ஒட்டர்
சில்லவார்
தாசரி
போயர்
கம்சலா
சவளக்காரர்
ரெட்டியார்கள் (கொண்டா,காப்பு உட்பட)
காட்டு நாயக்கர் குடியேற்றப்பட்டனர்.
கள்ளர் நாடுகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்ய மணிக்காரர் என்கிற ஜாதியை உருவாக்குகிறார்கள்.
போர் செய்வதற்கு தமிழ் போர்குடிகளை தவிர்த்து, சத்திரிய ராஜூ, தொகட்ட வீர சத்திரியர்,உக்கிரகுல சத்திரிய நச்யக்கர் போன்றோர் குடியமர்த்தப்படுகின்றனர்.
தொழில் சேவக ஜாதிகளாக மாதாரி,சக்கிலியர்,ஆதி ஆந்திரர்,ஆதி கன்னடர்,டொம்மர்,குடியமர்த்தப் படுகின்றனர்.
இப்படியாக மதுரை மட்டும் அல்லாமல் திருச்சி,தஞ்சை என அனைத்து தலை நகரங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட குடிகளை குடியேற்றினர்.
தமிழகத்தை விஸ்வநாத நாயக்கரின் சேவகர் அரியநாத என்ற தொண்டைமண்டலமுதலியாரால் 72பாளையங்களாக பிரித்து தங்களது பிரதிநிதிகளை நியமித்தனர்.
இதனால் பல இடங்களில் மதுரை மண்ணின் மைந்தர்களான கள்ளர் நாட்டார்களின் கிளர்ச்சி ஏற்பட்டது.
நாயக்க மன்னர்கள் அவர்களை அடக்க பல இடங்களில் போர் செய்தனர். கள்ளர் நாடுகளில் இருந்து நாயக்க அரசின் மேலாண்மையை ஏற்க பல பிரதானிகளை அனுப்பினர்.
கள்ளர் நாட்டார்கள் அவர்களுடைய மேலாண்மையை ஏற்றார்களா...?
சமாதானமானார்களா...?
தோற்கடிக்கப்பட்டார்களா..?
என்பதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.........!
அன்புடன்
சோழபாண்டியன் சேர்வைக்காரர்
ஏழுகோட்டை நாடு

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...