Sunday, November 22, 2020

ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்


 ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம் நேற்று 21- 11-2020 திருவரங்கம் திருச்சியில் இனிதே துவக்கப்பட்டது! இது பிறப்புவழி சாதிக்கு முந்தைய நிலையையும், திணைவழி குடிகளுக்கு பிந்தைய நிலையில் உள்ள குடிகளை, 18 குடிகளாக கொண்டு உருவாக்கம் செய்து,இது அனைத்து தமிழருக்குமான அடிப்படை அமைப்பாக செயல்படும் ஒரு மன்றம் அமைக்கப்பட்டு,அனைத்து குடிகளின் குறைபாடுகளுக்கும் தீர்வை தரும் உச்சநீதி குடிகளின் மன்றமாக செயல்படும், இன்னும் நிறைய விடையத்தை பற்றிய கொள்கைகள் முன்மொழியப்பட்டு தீர்மானங்களாக ஏற்கப்பட்டது....இதை ஒவ்வொன்றாக பிறகு வெளியிடுவேன்..... இதன் முழுவிபரத்தை மாநாடு போட்டு வெளியிடுவோம்......

ரெ.ரவிராசாளியார்
நிறுவனர் & தலைவர்
ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்
உலக மக்கள் இயற்கை வாழ்வியல் கழகம்

Tuesday, November 17, 2020

பத்திரம் பிழைத்திருத்தல்

 பத்திரம் பிழைத்திருத்தல்

பற்றிய தகவல்..!
கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல்
பத்திரத்தின் 20 தகவல்கள்....
1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.
2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.
4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.
5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.
6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.
7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.
8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 100/- மொத்த செலவும், 500 க்குள் முடியும்.
9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.
11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.
12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.
14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.
15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.
16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.
17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்
18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.
20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.
நன்றி :Mr.
Murugappan Muruga

Sunday, November 15, 2020

ராஜேந்திர சோழன் காலத்து தஞ்சை கள்ளர் வீரன்

கிபி 1015 ஆம் ஆண்டு சோழ பேரரசை மாமன்னர் ராஜேந்திர சோழத்தேவர் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லை வாயில் மாசிலாமணி ஈசுவரர் கோயிலுக்கு அச்சரப்பாக்கம் இசக்க நறிவாளன் என்பவர் 1200 குழி நிலத்தை தானமாக அளித்தார்.

கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை அதே பகுதியில் வாழ்ந்த நிலவுடைமையாளர்களிடம் இருந்து இசக்க நறிவாளன் விலைக்கு வாங்கியுள்ளார். நிலத்தை விலைக்கு அளித்தவர்கள்:-
"தஞ்சை வீரன் சூற்றி கள்ளன்"
'தஞ்சை வீரன் நாகன் அறியான்"
"அம்பத்துழான் சதுரன் ஒற்றி"
இம்மூவர் வசம் இருந்து 1200 குழி நிலம் பெறப்பட்டு திருமுல்லைவாயில் நாதருக்கு திருப்பணியாக கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகளில் வரும் "தஞ்சை வீரர்கள்" தஞ்சையில் இருந்து குடிபெயர்ந்து தொண்டை மண்டலத்தில் வாழ்ந்தாலும், தங்களது பெயர்களில் தஞ்சையையும் சேர்த்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இவர்களை வீரன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் , சோழப்படையில் பணியாற்றிய முக்கிய தளபதிகள் என அறியலாம். கள்ளன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் இவர்கள் கள்ளர் மரபினர் என்பது தெளிவாகும்
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் கள்ளர்களின் தனி படைபற்று இருந்ததை முதலாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு " காடும் நாடும் நகரங்களும் கள்ளப் பற்றும்" என குறிப்பிடுகிறது. (கல்வெட்டு எண் : 103 of 1897)
தஞ்சையில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலவுடைமை கொண்டவர்களாகவும், படைத் தளபதிகாளவும் இருந்துள்ளதை இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.
( கல்வெட்டு எண்: 684 of 1904)
தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்




நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...