16ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் முழுமையாக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களின் வழித்தோன்றலாகிய கள்ளர்குல தொண்டைமான்கள் சூரைக்குடி,அறந்தாங்கி,பல்லவராயர்,அம்புநாட்டு தொண்டைமான்கள் தனித்த அரசாக ஆட்சி செலுத்தி வந்தனர்.
அவர்களில் யானைகளை அடக்குவதில் வல்லமைமிக்க அம்பு நாட்டு தொண்டைமான்கள் தங்களின் அசுர பலத்தால் வடக்கே விராலிமலை முதல் தெற்கே மீமிசல் கடற்கரை வரையும். கிழக்கே அறந்தாங்கி முதல் மேற்கே மல்லாக்கோட்டை நாட்டு எல்லைக்கோடு வரை பரந்து விரிந்து ஆட்சி செய்தனர்.
அம்பு நாட்டு தொண்டைமான்களின் ஒட்டுமொத்த ஆட்சி நிலப்பரப்பாக கிபி1930ல் 3053.59சதுர கிலோமீட்டர் பரப்பளவை தன்னகத்தே வைத்திருள்ளனர். இதுவே மூவேந்தர்களுக்கு பின்பு தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒரே தமிழ் மன்னர்கள் தொண்டைமான்களே.....!
இந்திய ஒன்றியத்திற்காக தன்னுடைய நாட்டையே தானமாக அளித்த பாரி நாட்டு வேந்தன் இந்திர வங்கிசத்து தொண்டைமானையே சாரும்.
ஆனால் தமிழகத்தின் ஜமீன்களும்,சமஸ்தானங்களும் 99% பேர், இன்றும் அரசு உதவித் தொகையை பெற்று வருகின்றனர். பல கோவில்களின் உண்டியல் பணம் பல சமஸ்தானங்களின் வயிறு வளர்க்க பெரும் உதவி செய்கிறது. ஆற்காடு நவாப் இன்றும் சைரன் போட்ட காரில் அரசு உதவித்தொகையுடன் வலம் வருகிறார்.
ஆனால் தொண்டைமான் அரசர்களோ தங்களுடைய நிலம்,அரசு கஜானா,அரண்மனைகள்,படை பரிவாரங்கள்,100க்கும் மேற்பட்ட அரசு கோவில் சொத்துக்கள் அனைத்தையும் கிபி1948ல் இந்திய ஒன்றியத்திடம் அளித்து விட்டு எந்த ஒரு உதவித்தொகை பெறாமல் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து இன்று சராசரி இந்திய குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
நன்றி
The hollow crown by asiatic society
The hollow crown by asiatic society
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment