Thursday, May 21, 2020

காவலே எங்கள் உயிர் 1


#Tanjore_version

கிபி1861-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய சட்டம் 5-ன் கீழ் கொண்டு வரப்பட்ட indian Imperial police சேவையை, ஆங்கில அரசு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியது.

இச்சட்டம் இந்தியா முழுவதும் உள்ள அரச மற்றும் போர்குடிகளின் அடிப்படை தொழிலான காவல் உரிமையை பறித்தது.

இதனை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சி ஏற்பட்டது.

மதுரை
திருச்சி
தஞ்சை
நெல்லை
ஆற்காடு

போன்ற பகுதிகளில் ஆங்கில அரசு நேரடியாக இரும்பு கரம் கொண்டு பூர்வ காவல் சேவையை அடக்கிக் கொண்டிருந்தது.

அச்சமயத்தில் அடிப்படை காவல் உரிமைக்காக தஞ்சை கள்ளர்கள் சீர்காழியில் உள்ள பிரிட்டிஷ் அரசின் சிப்பாய்களை கொன்று குவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் பட்டுக்கோட்டையில் ஆங்கில அரசால் உருவாக்கப்பட்ட தலைமை ஆனையர் காவல் அலுவலத்தை தீக்கிரையாக்கினர். மேலும் பட்டுக்கோட்டை காவல் ஆனையாளரின் வீட்டை சூரையாடியும் தங்கள் எதிர்ப்பினை வரலாற்றில் பதிவு செய்தனர்.

#கொற்றப்பரம்பரை

Source The kallars by Black burn

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு


Wednesday, May 20, 2020

காவலே எங்கள் உயிர்

18-ம் நூற்றாண்டு இறுதியில் கள்ளர்களின் காவல் உரிமையின் மீதான ஆங்கிலேய ஏகாதிபத்திய போர் உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த நேரம் அது.
மேலூர், அழகர்கோவில், வெள்ளளூர், உசிலம்பட்டி, தேவதானப்பட்டி, கம்பம், குச்சனூர், பழனி, திண்டுக்கல், தேனி மண்டல பகுதிகளில் கள்ளர்கள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த சமயத்தில் கிபி1896-ல் குச்சனூர் பகுதி காவல்காரரான பிறமலைக் கள்ளர் பிரிட்டிஸ் மேஜிஸ்ட்ரேட் முன்பு “எங்களுடைய காவல் சேவையானது, விவசாயத்தை விட மேலானது” என வாதிட்டுள்ளார். மேலும் இத்தகைய கருத்தியலானது அப்பகுதியில் உள்ள அனைத்து கள்ளர்களின் கருத்தியலாகவே இருந்துள்ளது.
#கொற்றப்பழங்குடி🦾
Source:-
Blackburn “The Kallars”

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Wednesday, May 13, 2020

கீழாநிலை அறந்தாங்கி பட்டுக்கோட்டையை மீட்ட தொண்டைமான் தளபதிகள்


18ஆம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத வரலாறாக பொறிக்கப்பட்டதே மைசூர் யுத்தம் 1,2,3 ஆகும்.
மைசூர் சுல்தான்கள்,பிரஞ்சு படைகள், தென்னக பாளையக்காரர்கள் ஒரு அணியினராகவும்.
ஆற்காட் நவாப், தொண்டைமான் அரசர், ஆங்கிலேயப் படைகள் ஒரு அணியாகவும் நின்று மோதிக் கொண்டனர்.
இதில் இரண்டாம் மைசூர் போரில், கிபி1781ல் மைசூர் அரசர் ஹைதர் அலியின் கூட்டுப்படைகள் மைசூரில் இருந்து பெங்களூர், சித்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல் வரை கைப்பற்றியது. பிறகு தஞ்சை, மேலூர், திருச்சி மண்டலங்களை கைப்பற்ற முன்னேறியது.
அதில் தஞ்சை மராட்டியர்களின் இரு தரப்பட்ட நிலைப்பாட்டால் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, கீழாநிலைக்கோட்டை போன்ற பகுதிகளை மைசூர் அரசர் ஹைதர் அலியின் படைகளால் கைப்பற்றப்பட்டது. தஞ்சையின் இக்கட்டான இச்சூழலில் தஞ்சை மராட்டியர்கள் தஞ்சையை விட்டு வெளியேறி தலைமறைவாகின்றனர்.
பிறகு புதுக்கோட்டைக்கு முன்னேறிய ஹைதர் அலியின் படையை, புதுக்கோட்டை அரசர் இராய ரகுநாத தொண்டைமான் நேரடியாக போரிட்டு வீழ்த்தி, ஹைதர் அலியின் படைகளை திண்டுக்கல்லுக்கு விரட்டுகிறார்.
தஞ்சையை மீட்க புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் உதவி இல்லாமல் மீட்க முடியாது என்பதனை உணர்ந்த ஆற்காட் நவாப்பும், ஆங்கிலேய அரசும், இராய ரகு நாத தொண்டைமானிடம் உதவி கோருகின்றனர்.
இதனை எற்றுக் கொண்ட புதுக்கோட்டை மன்னர் குதிரைப்படை,கலாட்படையுடன் கூடிய பெரும் படைப்பற்றை கள்ளர் தளபதிகளான இராமசாமி சேர்வைக்காரர் மற்றும் சுப்ரமணிய முதலியார் தலைமையில் அனுப்புகிறார்.
ஹைதர், ஷாவின் பெரும் பிரஞ்சு கூட்டுப்படைகளை மிகவும் குறைந்த மணி நேரத்தில் வீரமிக்க இவ்விரண்டு தளபதிகளால் அறந்தாங்கி, கீழா நிலைக்கோட்டை, பட்டுக்கோட்டையில் முற்றுகையிட்டு ஹைதர் படைகளை வீழ்த்தி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
அதன் பின்பு ஒப்பந்த அடிப்படையில் பட்டுக்கோட்டையை தஞ்சை மராட்டியரிடமும், அறந்தாங்கியை அறந்தாங்கி தொண்டைமான்களிடமும் ஒப்படைக்கின்றனர்.
ஆனால் பாரம்பரியமிக்க கீழாநிலைக்கோட்டையை இராய ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை நாட்டில் இனைத்துக் கொண்டார்.
அவருக்கு பின்னால் வந்த 6 தொண்டைமான் அரசர்களும் இக்கோட்டையை முறையாக பராமரித்து வந்துள்ளனர்.
சோழ, பாண்டியர் காலம் தொட்டு இருக்கும் இப்போர் பாசறை, இன்று சிதலமடைந்திருக்க்கிறது. இக்கோட்டையில் இன்றும் புதுக்கோட்டை தொண்டைமான்கள் வீரம் சொல்லும் விதமாக கிபி1920ல் இராஜா ஸ்ரீமார்த்தாண்ட பைரவ தொண்டைமானால் வைக்கப்பட்ட பீரங்கி இன்றும் உள்ளது.
மேலும் புதுக்கோட்டை அரசர்களால் உருவாக்க்பட்ட நெற்களஞ்சியமும் இன்றும் உள்ளது. கிபி1989ல் சுதந்திர இந்தியாவில் இக்கோட்டை மரமத்து என்கிற பெயரில் சிதைவை ஏற்படுத்தியுள்ளனர்.
சுமார் 43.61 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்கோட்டையின் நுழைவுவாயிலில் ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. அதனை தொடர்ந்து உள்ளே சென்றால் இக்கோட்டையின் முதன்மை தெய்வமாகவும், பாண்டிய மன்னரின் மகளாக கருதப்படும் ஸ்ரீஅரியநாயகி அம்மன் ஆங்கார சொருபமாக காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து அம்மன் குளமும்,விஷ்ணு கோவிலும் உள்ளது. கோட்டையின் தெற்கு பகுதியில் கோட்டை காவல் தெய்வமாக பொற்பனைக்கோட்டை முனி உக்கிரமாக காட்சியளிக்கிறார்.
கோட்டையின் நுழைவுவாயிலுக்கு முன்பு வல்லம்பர் சமுதாயத்தை சேர்ந்த செல்லச்சாமி சாமியாடி அவர்களின் ஜீவசமாதி இன்று கோவிலாக அனைவராலும் வணங்கப்படுகிறது. இப்பகுதி வாழ் மக்கள்கள், இக்கோட்டையை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும்,சுற்றுலா தளமாகவும் அறிவிக்கக் அரசுக்கு கோரிக்கை அளித்து வருகிறார்கள்.
குறிப்பு:-
இப்பகுதி மக்கள் கீழாநிலைக்கோட்டையில் இரகசிய சுரங்க பாதை உள்ளதாகவும், அப்பாதை சாக்கோட்டைக்கு செல்லலாம் என்கிறார்கள். இதனை நான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.
நன்றி
The important moments in and around pudukkottai
History of madras army by Wilson
Copies and extract of letters of pudukkottai Thondaiman
மற்றும் இக்கட்டுரையை எழுத ஆர்வம் தூண்டிய நாடுமதிச்சான் வெங்களப்பன் அம்பலம்
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு














Tuesday, May 12, 2020

மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சிக்கான காணொளி இந்த இணைப்பில் உள்ளது.
https://www.facebook.com/karvannan.karvannan.31/videos/2385498655080859/UzpfSTEwMDAwMDYzOTY0MzM4MzozMDg2ODEzNTI0NjgzMjcy/?composeropen=1

Sunday, May 10, 2020

*அ. அய்யணன் அம்பலம் வரலாறு* .


*அ. அய்யணன் அம்பலம் வரலாறு* .

*வங்கத்து சிங்கம் நேதாஜி உருவாக்கிய அகில இந்திய *பார்வர்டுப்ளாக் கட்சியின் மாநிலத் தலைவர்*
*அ. அய்யணன் அம்பலம் வரலாறு* .
உயர்ந்த தோற்றம், ஏரிய நெற்றி, நேரிய பார்வை, முழங்கை வரைக்கும் தொங்கும் அரைக்கை சட்டை, வென்பற்க்கள் சிந்தும் நளின சிரிப்பு இவற்றையே அணிகலன்களா கொண்டு நம் முன் காட்சி தந்தவர்தான் அய்யா அய்யணன் அம்பலம் அவர்கள்.
மதுரை ராஜகம்பிரம் கிராமத்தில் கள்ளர் குடியில் ஐயா. அண்ணாமலை அம்பலம், வேலாயு அம்மாள் அவர்களுக்கு 15.9.1924 ஆம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தார்.
தனது பள்ளி நாட்களில் வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார்.
இளைய வயதில் அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். மதுரை மாவட்டத்தில் ஐக்கிய மாகாணசபை தேர்தலில் அவர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக ஆனார். 1945 ஆம் ஆண்டில் பார்வர்ட் பிளாக் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஐயா முத்துராமலிங்க தேவரோடு தொடர்பு கொண்டார்.
25 ஆண்டு காலம் தொடர்ந்து மதுரை கிழக்கு ஊராட்சி மன்ற பெருந்தலைவர், தமிழக சட்டசபையின் மேலவை உறுப்பினர், இந்திய சோவியத் நட்புறவு கழகத்தின் தலைவர், முல்லைப் பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர், அகில இந்திய பார்வர்டு பிளாக்கில் தேசிய அளவில் தலைவர், சோசலிச சிந்தனையாளர், பசும்பொன் தேவர் ஜெயந்தி அன்றே தம் மரணத்தை தேவர் ஐயாவிடம் கேட்டு பெற்றுவந்த தேவரின் திருத்தொண்டர்.
மதுரை கிழக்கு ஒன்றியத்தில் தொடர்ந்து 36 ஆண்டுகள் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டு பெருந்தலைவராக இருந்தவர். ஐயா மூக்கையா தேவரின் உண்மை விசுவாசி.
தெய்வீகதிருமகன் தேவர் ஐயா மீது பொய் குற்றம் சாட்டி தனிமை சிறையில் அடைத்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து வேரொடும், வேரடி மண்ணேடும் வீழ்த்த சபதம் ஏற்றவர். காங்கிரஸ் எதிர்த்து மேலூரில் ஓ.பி.ராமன் என்பவரை வெற்றி பெற செய்து, தேவர் நினைவிடத்தில் வெண்கலமணியை காணிக்கை செலுத்தினார்.
தனது இராஜகம்பீரம் இல்லத்தில் தேவரை தங்கச் செய்து அடிக்கடி உரையாடி மகிழ்வர். 1980 ல் பசும்பொன் பார்வர்டு பிளாக்கை தொடங்கினார். 1984 ல் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் ரை எதிர்த்து ஆண்டிபட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளராக பி. என். வல்லரசை நிறுத்தினார்.
இஸ்ரேல் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, தமிழர்களை வதைக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைக் கண்டித்து 3.7.84 அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரணிக்குக் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமை ஏற்றார். அய்யணன் அம்பலம் ஆகியோர் பங்குபெற்ற இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organization) அல்லது டெசோ (TESO) தமிழீழ ஆதரவு அமைப்பாகும். இது இலங்கைத் தமிழர் நலன் கருதி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களை தமிழீழமாக அறிவிக்க கோரும் போராளிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் சென்னையில் 1985ல் துவக்கப்பட்டது. இதில் மு. கருணாநிதி, கி. வீரமணி, நெடுமாறன், ஃபார்வர்டு பிளாக் தலைவராக இருந்த அய்யணன் அம்பலம் ஆகியோர் இருந்தனர்.
1989 ல் உசிலம்பட்டியில் வல்லரசுக்கு ஒதுக்கி வெற்றி பெற செய்தார். 1989 ல் தம் கட்சியை அகில இந்திய பார்வர்ட் பிளாக் உடன் இணைத்தார். 1996ல் சந்தானம் அவர்களுக்கு சோழவந்தான் தொகுயையும், வல்லரசுக்கு உசிலம்பட்டி தொகுதியையும் ஒதுக்கி வெற்றி பெற செய்தார்.
1998 ல் அகில இந்திய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டார். சாதி கலவரம் நடந்த காலத்தில் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார். உசிலம்பட்டி யில் தேவர் கல்லூரி நிறுவ மூக்கையா தேவருக்கு முக்கிய பங்காபங்காற்றினார். மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அமைக்க இவர் பங்கு இன்றியமையாதது.
பூவந்தி.சீமைச்சாமி, பி.டி.ஆர். பாரதிரத்தினம், சோணைமுத்து சேர்வை. சுந்தர்ராஜன் சேர்வை என அனைவரும் இவர் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள்.
ரவிச்சந்திரன் சுப்பையா 1987 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுகிறார்:
திரு. அய்யணன் அம்பலம் அவர்கள் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளார். அவரிடம் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் ஊராட்சி தலைவர் தங்களது ஊருக்கு பேருந்து வசதி பெற்றத்தர கோரிக்கை. ஐயா அவர்கள் அவருடன் நான் பணிபுரிந்த கிளை மேலாளரை சுமார் ஐந்தாறு முறை நேரில் வந்து சந்தித்து கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தார். சம்பந்தப்பட்ட எழுத்தரான நான், நெடுஞ்சாலையில் இருந்து 1.2 கிமீ தூரமே உள்ள இந்த தூரத்தை கிராம மக்கள் கடக்கலாமே. மதுரையின் உட்பகுதியில் உள்ள இடங்களுக்கு இதே அளவு தூரத்தை பல ஆயிரம் மக்கள் கடந்து செல்கிறார்கள் என்ற கூறி அவரது கோரிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தேன்.
ஒரு நாள் வழக்கம் திரு அய்யணன் அம்பலம் அவர்கள் எனது கிளை மேலாளரை பார்க்க வந்த போது அவர் இல்லை. உடனே அவர் சம்பந்தப்பட்ட எழுத்தர் நான் என்பதை அறிந்து நேரடியாக எனது இருக்கைக்கு வந்தார். அவரது தோற்றம் கம்பீரமாக இருக்கும். நான் உடனே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தி அருகில் உள்ள சிறு வட்ட வடிவ ஸ்டூலில் அமரக் கூறினேன். அவர் எனது தோள்பட்டைகளை அழுத்தி முதலில் நீங்கள் அமருங்கள் என்று கூறி என்னை அமர வைத்து விட்டு அவரும் ஸ்டூலில் அமர்ந்தார்.
அவர் என்னிடம், " தம்பி! என்னை தலைவராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். பேருந்து வசதி கிடைத்து விடும் என்று. நானும் ஐந்தாறு முறை தங்கள் அலுவலகத்திற்கு வருவது தாங்கள் அறிந்ததே! எந்த ஒரு அலுவலகத்திலும் மேலே உள்ள அதிகாரிகள் செய்வதைக் காட்டிலும் கீழே உள்ள எழுத்தர்கள் நினைத்தால் பெரிய காரியம் கூட செய்து முடித்து விடுவர். எனது அலுவலகத்திலும் நான் தலைவர் ஆக இருந்தாலும் இதுதான் உண்மை! தாங்கள் எனக்காக உங்கள் மேலாளரிடம் கூறி பெரியார் நிலையம் - கொடிக்குளம் தடத்தில் பேருந்தை விட சொல்ல வேண்டும்" என என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. மிக மதிக்கக் கூடிய ஒரு தலைவர் (அன்றைய முதல்வர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய தலைவர்களில் அவரும் ஒருவர்) என்னிடம் கோரிக்கையை பொதுமக்களுக்காக தன் தகுதியை விட்டு இறங்கி மிகச் சாதாரணமான சிறுவயது என்னிடம் கேட்ட பாங்கு என்னை சிலிர்க்க வைத்து விட்டது.
அதன்பின்பு அலுவலகத்திற்கு வந்த கிளை மேலாளரிடம் நடந்த இந்த சம்பவத்தை கூறி அவரது வேண்டுகோள்படி பெரியார் நிலையம் - கொடிக்குளம் தட பேருந்து இயக்கப்பட்டது.
அன்றைய காலத்தில் பெரும் தலைவர்கள் பொது மக்களுக்காக எந்த அளவில் கீழிறங்கி சேவை செய்துள்ளனர். இன்றைய நாளில் இதனை எதிர்பார்க்க முடியுமா?
1993 ல் ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்கள் எழுதிய " முடிசூடா மன்னர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் முதல் பதிப்பு வெளியீட்டுவிழா. அ.அய்யணன்அம்பலம் வாழ்த்துரை வழங்கினார்.மேடையில் ஏ.ஆர்.பெருமாள்தேவர் பொதுச்செயலாளர் தோழர் சித்தபாசு, டாக்டர்.சேதுராமன், பி.என்.வல்லரசு.விழாவை மதுரை விக்டோரியாஎட்வர்ட்ஹால்
விமான நிலையத்திற்கு தேவர் பெயர் :
1992 ல் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியின் அகில இந்திய தலைவராக அய்யா ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்களும்,தமிழக தலைவராக அய்யணன் அம்பலம் அவர்கள் இருந்தபோதும் கட்சியின் சார்பாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டப்படும் என தீர்மானம் போடப்பட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தபாசு எம்.பி.அவர்கள் பாராளுமன்றத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் அவர்கள் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அறிவித்தார்.
அக்டோபர் 30 -1998 பசும்பொன்னில் இறுதி உரை:
அகில இந்திய தேவர் பேரவை - முக்குலத்தோர் சங்கம் என்ற அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று மதுரையில் பிரமாண்டமாக தொடங்குகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிகொள்வதெல்லாம் நமது இனத்தில் பிறந்திட்ட ஒப்பற்றதலைவர் தேசிய தலைவர் தேவர்மகனார் உருவாக்கிய அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி இருக்கும்போது வேறு ஒரு அரசியல் கட்சி தேவையில்லை மேலும் உறவினர்கள் சேதுராமனும் - பிரேம்குமார் வாண்டையாரும் தேவர் கட்சியான பார்வர்ட் ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த தேவர் ஜெயந்தி நாளென்று வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று உரையாற்றி விட்டு பசும்பொன்னில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருக்கும் பொழுதுமதுரை தெப்பக்குளம் அருகே நடைபெற்ற விபத்தில் அய்யணன் அம்பலம் மறைகிறார் .
தேவர் ஜெயந்தி அன்றே அவர் பக்தரும் மறைகிறார்
பசும்பொன் தேவர் திருமகனை பின்பற்றி நடந்த அரசியல் தலைவர்களில் தேவர் ஜெயந்தி அன்றே தேவருடன் ஐக்கியமான தலைவர் அய்யணன் அம்பலம் என்ற பெருமையை பெறுகிறார்.

இராவணனின் சமாதி

இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது
#கன்னியா_மலையில்_காணப்படும் #இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது
#கன்னியா_மலையில்_காணப்படும் #இராவணனின்_தாயின்_சமாதி
அது தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/157 4 மே 2020
http://nksthiru.blogspot.com/2020/05/blog-post_4.html
திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.
இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள். இது ஓர் இஸ்லாமியரின் சமாதி என்றே அண்மைக்காலமாக கூறப்பட்டு வருகிறது.
கன்னியா வெந்நீர் கிணறுகளையும், அங்குள்ள சமாதியையும் பார்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக கன்னியாவுக்கு சென்றேன். அப்போது அங்கு கடமையில் இருந்த காவலாளியிடம் கன்னியா மலையில் உள்ள சமாதியைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறிய விபரங்கள் சற்று புதுமையாக இருந்தது. மலையில் 60 அடி நீளமான ஓர் பிரமாண்டமான சமாதி உள்ளது, அதுதான் இந்த வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கிய இராவணனின் தாயின் சமாதி, இஸ்லாமியர்கள் அதை ஓர் இஸ்லாமிய பெரியவரின் சமாதி என்று சொல்கின்றனர், நீங்கள் போய்ப் பார்க்கலாம் எனக் கூறி, தனது பிள்ளைகள் இருவரை எனக்கு வழிகாட்டியாக என்னோடு மலைக்கு அனுப்பி வைத்தார். மலை உச்சிக்குச் சென்று பிரமாண்டமான அந்த சமாதியைப் பார்த்து வியப்படைந்தேன். அப்படி ஓர் நீளமான சமாதியை அன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன். மலையில் இருந்து இறங்கி வந்ததும் இது இராவணனின் தாயின் சமாதி தானா? என மீண்டும் அவரிடம் கேட்டேன். ஆம், எனது மூதாதையர்கள் அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள் என்றார் காவலாளி. வெந்நீர் ஊற்றுக்களில் நீராடியதும், மிகப்பெரிய சமாதியைப் பார்த்ததும் பெருமிதமாக இருந்தது.
அதன்பின் 2014 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்” எனும் தொடர் ஆய்வுக் கட்டுரையை நான் பத்திரிகையில் எழுதி வந்த போது, இராவணனின் தாயாரின் சமாதி பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்தது. அது பற்றிய ஆதாரங்களை ஆராய்ந்தபோது தான் இந்திய ஆய்வாளரான அசோக்காந்த் எழுதிய குறிப்பொன்றைப் படித்தேன். கன்னியா மலையில் இருப்பது இராவணனின் தாயின் சமாதி என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன் வைத்திருக்கவில்லை. இராவணன் தனது தாய்க்கு ஈமக் கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாயின் சமாதியை அமைத்திருப்பான் எனும் யூகத்திலேயே அக்குறிப்பை எழுதியிருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து “யார் இந்த இராவணன்” கட்டுரையில் கன்னியா மலையிலுள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என முதன் முதலாக எழுதினேன். 2018 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்?” புத்தகமாக வெளிவந்தது.
இது இப்படி இருக்க, கடந்த வருடம் கன்னியா வரலாறு பற்றிய ஓர் முழுமையான நூலை எழுத வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டது. அப்போது கன்னியாவில் இருந்த சிவன் கோயில், பிள்ளையார் கோயில், இராவணனின் தொடர்பு, இராவணனின் தாயின் சமாதி போன்றவை பற்றிய வாய்வழிச் செய்திகளும், ஐதீகங்களும் மட்டுமே இருந்தன. இவற்றிற்கான வலுவான பழமையான ஆதாரங்கள் இருக்கவில்லை.
இந்த சமயத்தில் கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயுடையது என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த நூலில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஏனெனின் எனது சந்தேகமும் இராவணன் தனது தாய்க்கு கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாய்க்கு ஓர் ஞாபகச் சின்னத்தை அமைத்திருக்க வேண்டும் என்பதே.
கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இவை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய ஆதாரங்களைத் தேடினேன். கன்னியா பற்றிய நான்கு ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவை அவ்வளவு பழைய ஆதாரங்கள் அல்ல. இருப்பினும் முயற்சியைக் கைவிடவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கன்னியா பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என இணைய தளங்கள் மூலம் தேடினேன். விடாமுயற்சியுடன் இரண்டு மாதங்கள் வரை தேடினேன். இறுதியில் இங்கிலாந்து, கலிபோர்னியா(அமெரிக்கா), கனடா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து கன்னியா பற்றிய பல நூல் குறிப்புகள் கிடைத்தன. இங்கு கிடைத்தவை 26 நூல் ஆதாரங்கள். மொத்தமாக இப்போது 30 ஆதாரங்கள் என் கையில் இருந்தன. இவை சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களாகும். இவற்றில் கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய 5 ஆதாரங்கள் கிடைத்தன.
பிரமாண்டமான சமாதி காணப்படும் கன்னியா மலையின் உண்மையான பெயர் பெரிய கரடிமலை என்பதாகும். இம்மலையில் கரடிகள் அதிகமாக வாழ்வதால் இப்படி ஒரு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இம்மலை இங்கிருந்து விளாங்குளம் வரை 5 கி.மீ தூரம் வரை ஒடுங்கி, நீளமாகக் காணப்படும் தட்டையான மலையாகும். இம்மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளன. கன்னியாவில் உள்ள உச்சியில் சமாதி உள்ளது. இவ்வுச்சி 50 மீற்றர் உயரம் கொண்டது. அடுத்த உச்சி விளாங்குளத்தின் அருகில் உள்ளது. இது 100 மீற்றர் உயரமானது. கன்னியா மலை அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆரம்பப் இடமாகும். இக்காடு கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருந்து தெற்குப்பக்கம் 6 கி.மீ வரையும், மேற்குப்பக்கம் 16 கி.மீ வரையும், தென்மேற்குப்பக்கம் ஹபரணை வரை 80 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய காடாகும்.
கன்னியாவுடன் தொடர்புள்ள இராவணனின் தாய் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.
தீவிர சிவபக்தையான இராவணனின் தாய் கைகேசி சுகவீனமாக இருந்த வேளை தட்சிண கைலாயம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் இருக்கும் சிவனைத் தரிசிக்க விரும்பியதாகவும், தன் விருப்பத்தை மகன் இராவணனிடம் கூறியபோது இராவணன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சுவாமி மலையில் இருந்த சிவாலயத்தை மலையோடு சேர்த்து வாளால் வெட்டி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது சிவன் இராவணனின் கையில் வலியை உண்டாக்கி வாளை கீழே விழச் செய்ததாகவும் ஓர் ஐதீகம் உள்ளது. இத்தனை முயற்சிகள் எடுத்தும் இராவணனின் தாய் கைகேசி இறுதிவரை தட்சிண கைலாயப் பெருமானை தரிசிக்காமலேயே உயிர் துறந்தாள். தாய் இறந்த பின்பு அவளின் ஈமக்கிரிகைகளை கன்னியா கங்கை தீர்த்தத்தில் செய்து முடித்த இராவணன் அவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான்.
கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும். தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி இவ்வளவு நீளமாக ஏன் இருக்க வேண்டும்?
அதற்கும் ஓர் காரணம் உள்ளது.
கன்னியா மலையில் உள்ள சமாதி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இராவணன் தன் தாய்க்கு அமைத்த சமாதியாகும். இராவண னின் தாய் ஓர் யக்ஷ குலப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய இராட்சத உடலமைப்பைக் கொண்ட வர்கள் எனும் அர்த்தத்திலேயே மலைமீது மனித உருவத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 60 அடி நீளத்தில் சமாதி அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இராவணனின் சமாதியும் அவனது தலைநகருக்கருகில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள திரிகூடகிரி என்பது கோணசர் மலையாகும். எனவே இராவணனின் சமாதியும் அவனது தாயின் சமாதியின் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு யக்ஷர்களின் பெரிய இருவேறு சமாதிகள் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 40 அல்லது 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. எனவே இவ்வளவு நீளத்தில் காணப்படும் இப்பெரிய சமாதி இராட்சத அரக்கர்கள் எனக் கூறப்படும் இராவணனினதும், அவனின் தாயாரினதும் சமாதிகள் என ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக உள்ளது.
இராவணன் தனது தாயின் சமாதியை வெந்நீர் கிணறுகளின் அருகில் அமைக்காமல் ஏன் மலை உச்சியில் அமைக்க வேண்டும்?
அதற்கும் ஓர் முக்கிய காரணம் உள்ளது. இராவணனின் தாயான கைகேசியின் நெடுநாள் ஆசையானது தட்சிண கைலாசம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் சிவனை தரிசித்து வழிபடுவ தாகும். ஆனால் இராவணன் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இரண்டு தடவைகள் முயற்சி செய்தும் அதை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது. தாயும் நிறைவேறாத ஆசையோடு உயிர் துறந்தார். அதன்பின் இராவணன் தாயின் கிரிகைகளை முடித்துவிட்டு கன்னியா மலை உச்சியில் சமாதியை அமைத்தான். இம்மலை உச்சியிலிருந்து திருக்கோணேஸ்வரத்தை அழகாகத் தரிசிக்கலாம். எனவே தனது தாயின் இறுதி ஆசையான திருக்கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வேண்டும் எனும் வேண்டுகோளை தாய் இறந்த பின்பாவது நிறைவேற்ற வேண்டும் எனும் எண்ணத்துடன் மலைமீது தாயின் சமாதியை இராவணன் அமைத்திருக்க வேண்டும். இச்சமாதி மீது இருந்து தன் தாயின் ஆன்மா என்றென்றும் திருக்கோணேஸ்வரப் பெருமானை நேரடியாகவே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சிவ பக்தனான இராவணனின் ஆசையும், சிவன் மீது அதீத பற்று கொண்ட தாய்க்குச் செய்யும் கடமையும் ஆகும் என இராவணன் நினைத்திருக்க வேண்டும்.
இச்சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி எனவும் சிலர் கூறுகின்றனர். இம்மலையில் இராவணன் காலத்துடன் தொடர்புடைய தொன்மை வரலாற்றை அறிந்திராத சிலரே இவ்வாறு கூறுகின்றனர். 200 வருடங்களுக்கு முன்பு இலங்கையை ஆராய்ந்து தமது நூல்களில் ஆவணப்படுத்திய ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் கன்னியா மலையில் உள்ள சமாதி இஸ்லாமிய பெரியாருடையது எனக் குறிப் பிடவில்லை. மாறாக இது இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி எனும் பொருளில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனி னதும் சமாதி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள்.
ஜேம்ஸ் கோர்டினரின் குறிப்பு
கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றி ஜேம்ஸ் கோர்டினர் எனும் வரலாற்றறிஞர் 1798 ஆம் ஆண்டு அவர் எழுதிய “A Description of Ceylon” எனும் நூலில் பின்வருமாறு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“On the Summit of the above mentioned Hill are shewn two monumental piles of earth enclosed with loose stones, one thirty-six feet in length, and ten in breath, the other ten feet long, and three broad. They are said to be the dimensions of a giant and his son, who were buried there at a very remote period in the fabulous History of Ceylon.”
இக்குறிப்பில் கன்னியா மலையின் உச்சியில் இறுக்கமற்ற கற் களினால் சுற்றிவர கட்டப்பட்ட இரண்டு நினைவுச் சின்னக் குவிய ல்கள் காணப்படுவதாகவும், அவற்றில் ஒன்று 36 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், அடுத்தது 10 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும் காணப்படுகிறது. இவை இலங்கை வரலாற் றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன் ஆகியோரினது பரிமாண ங்கள் எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.35 ஜேம்ஸ் கோர்டினரின் மேற்சொன்ன குறிப்பு இராவணன் மற்றும் அவனின் தாய் ஆகியோரின் சமாதியைக் குறிக்கிறது என்பதற்கு இவர் பயன்படுத்தியிருக்கும் “இலங்கை வரலாற்றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன்..” எனும் சில வரிகள் ஏதுவாக அமைகின்றன.
இவரின் குறிப்பின் படி இராவணனின் தாயின் சமாதி 36 அடி நீளமும், இராவணனின் சமாதி 10 அடி நீளமும் கொண்ட இரு வேறு சமாதிகளாக மொத்தமாக 46 அடி நீளமாக இருந்துள்ளன. அண் மைக்காலத்தில் இவ்விரு சமாதிகளையும் ஒன்றாக்கி கட்டியவர்கள் 60 அடி சமாதி எனப் பெயரிட்டு, இது ஓர் இஸ்லாமியப் பெரியாரின் சமாதி எனக் கதை கட்டி விட்டனர்.
சைமன் காசிச்செட்டியின் குறிப்பு
மேலே சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சைமன் காசிச்செட்டி எனும் அறிஞர் 1833 ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Ceylon Gazetteer” எனும் நூலில் “Fasing the west side there are several hills, and on the Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் கூறியுள்ளார். இக்குறிப்பில் சைமன் காசிச்செட்டி இங்குள்ள மலை உச்சியில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனினதும் சமாதியின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார்.
சார்லஸ் ப்ரிதாமின் குறிப்பு
இதே குறிப்பை சார்லஸ் ப்ரிதாம் எனும் ஆராய்ச்சியாளர் 1849 ஆம் ஆண்டு தான் எழுதிய “An Historical Political and Statistical of Ceylon” எனும் நூலில் “The Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் குறிப்பிட்டுள்ளார்.37
மூன்று அறிஞர்களின் கூற்றுக்கும் வலு சேர்க்கும் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு
கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் எனும் அறிஞர் 1950 ஆம் ஆண்டு எழுதிய “Ceylon Pearl of the East” எனும் நூலில் சில முக்கிய விபரங்களைக் கூறியுள்ளார். மேலே கன்னியா மலையில் உள்ள சமாதியை மூன்று அறிஞர்களும் “Tombs of a Giant and his Son” என்றே குறிப்பிட்டுள்ளனர். இது இராட்சதன் மற்றும் அவனின் மகன் எனப் பொருள்படும். இங்கே இராட்சதன் என்பது இராவ ணனையே குறிப்பதாகும். இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் இந் நூலில் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு அமைந்துள்ளது. அக்குறிப்பின் பின்பகுதி கீழ்வருமாறு.
“According to them King Ravanna, during his long war with Vishnu, was informed by that deity that Kanya virgin mother of the King of Ceylon, was dead. Ravanna naturally had to set about the task of performing the necessary obituary services for the beloved dead, and Vishnu to help him … and incidentally to accomplish his main design of delaying him … Caused hot springs to burst out of the ground for the Giant’s use. and there they remain.
மேலே கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ள விபரங்களில் இராவணன் தன் தாய்க்கு கிரிகைகள் செய்வதற்காக இவ்வெந் நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டன எனும் செய்தியே கூறப்பட்டுள்ளது. இப்பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் மிக முக்கியமானவையாகும்.
இதில் “caused hot springs to burst out of the ground for the giant’s use. And there they remain.” எனக் கூறப்பட்டுள்ளது. இது “வெந்நீர் ஊற்றுக்கள் இரட்சதனின் பாவனைக்காக நிலத்திலிருந்து திடீரெனத் தோன்றின. அங்கே அவை நிலைத்து இருக்கின்றன.”எனப் பொருள்படுகிறது. இதில் இவர் நேரடியாகவே இராவணனை Giant எனக் கூறியுள்ளார்.
எனவே “Tombs of a Giant and his Son” என மேலே மூன்று அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது இராவணன் மற் றும் அவனின் தாயின் சமாதியையே என்பது ஹரி வில்லியம்ஸின் குறிப்பு மூலம் உறுதியாகிறது.
1919 ஆம் ஆண்டு திருகோணமலை தேசப்படத்தில் கன்னியாவில் ராட்ஷசன் இராவணனின் சமாதி
கன்னியா மலையில் இராவணனின் தாய் மற்றும் இராவணன் ஆகியோரின் சமாதியே உள்ளது என்பதற்குச் சான்றாக இன்னுமோர் ஆதாரமும் காணப்படுகிறது. அது 1919 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திருகோணமலையின் தேசப்படமாகும். இத்தேசப்படத்தின் இடது பக்க மேல் மூலையில் “Kannia-Giants Tombs” (கன்னியா இராட்ஷசன் சமாதி) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேசப்படத்தின் விபரங்கள் “Description” என படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் “This map shows the Giants Tombs near Kannia, possibly referring to the mythical King Ravana.” என கன்னியா சமாதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா வது இந்த தேசப்படத்தில் கன்னியா ராட்சசன் சமாதி எனக் குறிப்பிடப் பட்டிருப்பது புராண காலத்து மன்னன் இராவணனைக் குறிப்பதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அறிஞர்களும் இச்சமாதிகள் இராட்ச சர்களின் சமாதிகள் எனும் பொருள்படக் கூறியுள்ளனரேயன்றி இஸ்லாமியப் பெரியாருடையது எனக் கூறவில்லை. இவ் அறிஞர்கள் கன்னியா மலைக்கு சென்றபோது இப்பகுதியில் வசித்த மக்கள் இராவ ணன் மற்றும் அவனின் தாய் ஆகியோருடன் கன்னியாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றிக் கூறியுள்ளனர். அவர்களின் சமாதியே மலை உச்சி யில் இருப்பவை எனவும் கூறியுள்ளனர்.அறிஞர்களும் இக்கருத்தையே தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன்பும் இது இராட்சதர்களின் சமாதியாகவே காணப்பட்டுள்ளது.
இறுதியில் கன்னியா மலையில் உள்ள சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி என இதுவரை கூறப்பட்டு வந்த கூற்றுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதும், இச்சமாதி இராவணனனினதும், அவனின் தாயாரினதும் சமாதியே என்பதுக்கு 300 வருடங்களுக்கு முற்பட்ட ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் ஆதாரங்களாக இருக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
( வசந்தம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிக்கு இடம்பெறும் "வழிபாடு" நிகழ்ச்சியில் இலங்கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றியஎனது தொகுப்பைப்பார்க்கலாம். அல்லது vasantham.lk எனும் இணைய தளத்திற்குச் சென்று "வழிபாடு" நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.)
அது தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/157 4 மே 2020
http://nksthiru.blogspot.com/2020/05/blog-post_4.html
திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.
இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள். இது ஓர் இஸ்லாமியரின் சமாதி என்றே அண்மைக்காலமாக கூறப்பட்டு வருகிறது.
கன்னியா வெந்நீர் கிணறுகளையும், அங்குள்ள சமாதியையும் பார்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக கன்னியாவுக்கு சென்றேன். அப்போது அங்கு கடமையில் இருந்த காவலாளியிடம் கன்னியா மலையில் உள்ள சமாதியைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறிய விபரங்கள் சற்று புதுமையாக இருந்தது. மலையில் 60 அடி நீளமான ஓர் பிரமாண்டமான சமாதி உள்ளது, அதுதான் இந்த வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கிய இராவணனின் தாயின் சமாதி, இஸ்லாமியர்கள் அதை ஓர் இஸ்லாமிய பெரியவரின் சமாதி என்று சொல்கின்றனர், நீங்கள் போய்ப் பார்க்கலாம் எனக் கூறி, தனது பிள்ளைகள் இருவரை எனக்கு வழிகாட்டியாக என்னோடு மலைக்கு அனுப்பி வைத்தார். மலை உச்சிக்குச் சென்று பிரமாண்டமான அந்த சமாதியைப் பார்த்து வியப்படைந்தேன். அப்படி ஓர் நீளமான சமாதியை அன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன். மலையில் இருந்து இறங்கி வந்ததும் இது இராவணனின் தாயின் சமாதி தானா? என மீண்டும் அவரிடம் கேட்டேன். ஆம், எனது மூதாதையர்கள் அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள் என்றார் காவலாளி. வெந்நீர் ஊற்றுக்களில் நீராடியதும், மிகப்பெரிய சமாதியைப் பார்த்ததும் பெருமிதமாக இருந்தது.
அதன்பின் 2014 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்” எனும் தொடர் ஆய்வுக் கட்டுரையை நான் பத்திரிகையில் எழுதி வந்த போது, இராவணனின் தாயாரின் சமாதி பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்தது. அது பற்றிய ஆதாரங்களை ஆராய்ந்தபோது தான் இந்திய ஆய்வாளரான அசோக்காந்த் எழுதிய குறிப்பொன்றைப் படித்தேன். கன்னியா மலையில் இருப்பது இராவணனின் தாயின் சமாதி என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன் வைத்திருக்கவில்லை. இராவணன் தனது தாய்க்கு ஈமக் கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாயின் சமாதியை அமைத்திருப்பான் எனும் யூகத்திலேயே அக்குறிப்பை எழுதியிருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து “யார் இந்த இராவணன்” கட்டுரையில் கன்னியா மலையிலுள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என முதன் முதலாக எழுதினேன். 2018 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்?” புத்தகமாக வெளிவந்தது.
இது இப்படி இருக்க, கடந்த வருடம் கன்னியா வரலாறு பற்றிய ஓர் முழுமையான நூலை எழுத வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டது. அப்போது கன்னியாவில் இருந்த சிவன் கோயில், பிள்ளையார் கோயில், இராவணனின் தொடர்பு, இராவணனின் தாயின் சமாதி போன்றவை பற்றிய வாய்வழிச் செய்திகளும், ஐதீகங்களும் மட்டுமே இருந்தன. இவற்றிற்கான வலுவான பழமையான ஆதாரங்கள் இருக்கவில்லை.
இந்த சமயத்தில் கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயுடையது என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த நூலில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஏனெனின் எனது சந்தேகமும் இராவணன் தனது தாய்க்கு கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாய்க்கு ஓர் ஞாபகச் சின்னத்தை அமைத்திருக்க வேண்டும் என்பதே.
கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இவை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய ஆதாரங்களைத் தேடினேன். கன்னியா பற்றிய நான்கு ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவை அவ்வளவு பழைய ஆதாரங்கள் அல்ல. இருப்பினும் முயற்சியைக் கைவிடவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கன்னியா பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என இணைய தளங்கள் மூலம் தேடினேன். விடாமுயற்சியுடன் இரண்டு மாதங்கள் வரை தேடினேன். இறுதியில் இங்கிலாந்து, கலிபோர்னியா(அமெரிக்கா), கனடா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து கன்னியா பற்றிய பல நூல் குறிப்புகள் கிடைத்தன. இங்கு கிடைத்தவை 26 நூல் ஆதாரங்கள். மொத்தமாக இப்போது 30 ஆதாரங்கள் என் கையில் இருந்தன. இவை சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களாகும். இவற்றில் கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய 5 ஆதாரங்கள் கிடைத்தன.
பிரமாண்டமான சமாதி காணப்படும் கன்னியா மலையின் உண்மையான பெயர் பெரிய கரடிமலை என்பதாகும். இம்மலையில் கரடிகள் அதிகமாக வாழ்வதால் இப்படி ஒரு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இம்மலை இங்கிருந்து விளாங்குளம் வரை 5 கி.மீ தூரம் வரை ஒடுங்கி, நீளமாகக் காணப்படும் தட்டையான மலையாகும். இம்மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளன. கன்னியாவில் உள்ள உச்சியில் சமாதி உள்ளது. இவ்வுச்சி 50 மீற்றர் உயரம் கொண்டது. அடுத்த உச்சி விளாங்குளத்தின் அருகில் உள்ளது. இது 100 மீற்றர் உயரமானது. கன்னியா மலை அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆரம்பப் இடமாகும். இக்காடு கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருந்து தெற்குப்பக்கம் 6 கி.மீ வரையும், மேற்குப்பக்கம் 16 கி.மீ வரையும், தென்மேற்குப்பக்கம் ஹபரணை வரை 80 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய காடாகும்.
கன்னியாவுடன் தொடர்புள்ள இராவணனின் தாய் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.
தீவிர சிவபக்தையான இராவணனின் தாய் கைகேசி சுகவீனமாக இருந்த வேளை தட்சிண கைலாயம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் இருக்கும் சிவனைத் தரிசிக்க விரும்பியதாகவும், தன் விருப்பத்தை மகன் இராவணனிடம் கூறியபோது இராவணன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சுவாமி மலையில் இருந்த சிவாலயத்தை மலையோடு சேர்த்து வாளால் வெட்டி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது சிவன் இராவணனின் கையில் வலியை உண்டாக்கி வாளை கீழே விழச் செய்ததாகவும் ஓர் ஐதீகம் உள்ளது. இத்தனை முயற்சிகள் எடுத்தும் இராவணனின் தாய் கைகேசி இறுதிவரை தட்சிண கைலாயப் பெருமானை தரிசிக்காமலேயே உயிர் துறந்தாள். தாய் இறந்த பின்பு அவளின் ஈமக்கிரிகைகளை கன்னியா கங்கை தீர்த்தத்தில் செய்து முடித்த இராவணன் அவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான்.
கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும். தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி இவ்வளவு நீளமாக ஏன் இருக்க வேண்டும்?
அதற்கும் ஓர் காரணம் உள்ளது.
கன்னியா மலையில் உள்ள சமாதி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இராவணன் தன் தாய்க்கு அமைத்த சமாதியாகும். இராவண னின் தாய் ஓர் யக்ஷ குலப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய இராட்சத உடலமைப்பைக் கொண்ட வர்கள் எனும் அர்த்தத்திலேயே மலைமீது மனித உருவத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 60 அடி நீளத்தில் சமாதி அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இராவணனின் சமாதியும் அவனது தலைநகருக்கருகில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள திரிகூடகிரி என்பது கோணசர் மலையாகும். எனவே இராவணனின் சமாதியும் அவனது தாயின் சமாதியின் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு யக்ஷர்களின் பெரிய இருவேறு சமாதிகள் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 40 அல்லது 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. எனவே இவ்வளவு நீளத்தில் காணப்படும் இப்பெரிய சமாதி இராட்சத அரக்கர்கள் எனக் கூறப்படும் இராவணனினதும், அவனின் தாயாரினதும் சமாதிகள் என ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக உள்ளது.
இராவணன் தனது தாயின் சமாதியை வெந்நீர் கிணறுகளின் அருகில் அமைக்காமல் ஏன் மலை உச்சியில் அமைக்க வேண்டும்?
அதற்கும் ஓர் முக்கிய காரணம் உள்ளது. இராவணனின் தாயான கைகேசியின் நெடுநாள் ஆசையானது தட்சிண கைலாசம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் சிவனை தரிசித்து வழிபடுவ தாகும். ஆனால் இராவணன் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இரண்டு தடவைகள் முயற்சி செய்தும் அதை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது. தாயும் நிறைவேறாத ஆசையோடு உயிர் துறந்தார். அதன்பின் இராவணன் தாயின் கிரிகைகளை முடித்துவிட்டு கன்னியா மலை உச்சியில் சமாதியை அமைத்தான். இம்மலை உச்சியிலிருந்து திருக்கோணேஸ்வரத்தை அழகாகத் தரிசிக்கலாம். எனவே தனது தாயின் இறுதி ஆசையான திருக்கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வேண்டும் எனும் வேண்டுகோளை தாய் இறந்த பின்பாவது நிறைவேற்ற வேண்டும் எனும் எண்ணத்துடன் மலைமீது தாயின் சமாதியை இராவணன் அமைத்திருக்க வேண்டும். இச்சமாதி மீது இருந்து தன் தாயின் ஆன்மா என்றென்றும் திருக்கோணேஸ்வரப் பெருமானை நேரடியாகவே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சிவ பக்தனான இராவணனின் ஆசையும், சிவன் மீது அதீத பற்று கொண்ட தாய்க்குச் செய்யும் கடமையும் ஆகும் என இராவணன் நினைத்திருக்க வேண்டும்.
இச்சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி எனவும் சிலர் கூறுகின்றனர். இம்மலையில் இராவணன் காலத்துடன் தொடர்புடைய தொன்மை வரலாற்றை அறிந்திராத சிலரே இவ்வாறு கூறுகின்றனர். 200 வருடங்களுக்கு முன்பு இலங்கையை ஆராய்ந்து தமது நூல்களில் ஆவணப்படுத்திய ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் கன்னியா மலையில் உள்ள சமாதி இஸ்லாமிய பெரியாருடையது எனக் குறிப் பிடவில்லை. மாறாக இது இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி எனும் பொருளில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனி னதும் சமாதி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள்.
ஜேம்ஸ் கோர்டினரின் குறிப்பு
கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றி ஜேம்ஸ் கோர்டினர் எனும் வரலாற்றறிஞர் 1798 ஆம் ஆண்டு அவர் எழுதிய “A Description of Ceylon” எனும் நூலில் பின்வருமாறு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“On the Summit of the above mentioned Hill are shewn two monumental piles of earth enclosed with loose stones, one thirty-six feet in length, and ten in breath, the other ten feet long, and three broad. They are said to be the dimensions of a giant and his son, who were buried there at a very remote period in the fabulous History of Ceylon.”
இக்குறிப்பில் கன்னியா மலையின் உச்சியில் இறுக்கமற்ற கற் களினால் சுற்றிவர கட்டப்பட்ட இரண்டு நினைவுச் சின்னக் குவிய ல்கள் காணப்படுவதாகவும், அவற்றில் ஒன்று 36 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், அடுத்தது 10 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும் காணப்படுகிறது. இவை இலங்கை வரலாற் றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன் ஆகியோரினது பரிமாண ங்கள் எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.35 ஜேம்ஸ் கோர்டினரின் மேற்சொன்ன குறிப்பு இராவணன் மற்றும் அவனின் தாய் ஆகியோரின் சமாதியைக் குறிக்கிறது என்பதற்கு இவர் பயன்படுத்தியிருக்கும் “இலங்கை வரலாற்றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன்..” எனும் சில வரிகள் ஏதுவாக அமைகின்றன.
இவரின் குறிப்பின் படி இராவணனின் தாயின் சமாதி 36 அடி நீளமும், இராவணனின் சமாதி 10 அடி நீளமும் கொண்ட இரு வேறு சமாதிகளாக மொத்தமாக 46 அடி நீளமாக இருந்துள்ளன. அண் மைக்காலத்தில் இவ்விரு சமாதிகளையும் ஒன்றாக்கி கட்டியவர்கள் 60 அடி சமாதி எனப் பெயரிட்டு, இது ஓர் இஸ்லாமியப் பெரியாரின் சமாதி எனக் கதை கட்டி விட்டனர்.
சைமன் காசிச்செட்டியின் குறிப்பு
மேலே சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சைமன் காசிச்செட்டி எனும் அறிஞர் 1833 ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Ceylon Gazetteer” எனும் நூலில் “Fasing the west side there are several hills, and on the Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் கூறியுள்ளார். இக்குறிப்பில் சைமன் காசிச்செட்டி இங்குள்ள மலை உச்சியில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனினதும் சமாதியின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார்.
சார்லஸ் ப்ரிதாமின் குறிப்பு
இதே குறிப்பை சார்லஸ் ப்ரிதாம் எனும் ஆராய்ச்சியாளர் 1849 ஆம் ஆண்டு தான் எழுதிய “An Historical Political and Statistical of Ceylon” எனும் நூலில் “The Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் குறிப்பிட்டுள்ளார்.37
மூன்று அறிஞர்களின் கூற்றுக்கும் வலு சேர்க்கும் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு
கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் எனும் அறிஞர் 1950 ஆம் ஆண்டு எழுதிய “Ceylon Pearl of the East” எனும் நூலில் சில முக்கிய விபரங்களைக் கூறியுள்ளார். மேலே கன்னியா மலையில் உள்ள சமாதியை மூன்று அறிஞர்களும் “Tombs of a Giant and his Son” என்றே குறிப்பிட்டுள்ளனர். இது இராட்சதன் மற்றும் அவனின் மகன் எனப் பொருள்படும். இங்கே இராட்சதன் என்பது இராவ ணனையே குறிப்பதாகும். இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் இந் நூலில் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு அமைந்துள்ளது. அக்குறிப்பின் பின்பகுதி கீழ்வருமாறு.
“According to them King Ravanna, during his long war with Vishnu, was informed by that deity that Kanya virgin mother of the King of Ceylon, was dead. Ravanna naturally had to set about the task of performing the necessary obituary services for the beloved dead, and Vishnu to help him … and incidentally to accomplish his main design of delaying him … Caused hot springs to burst out of the ground for the Giant’s use. and there they remain.
மேலே கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ள விபரங்களில் இராவணன் தன் தாய்க்கு கிரிகைகள் செய்வதற்காக இவ்வெந் நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டன எனும் செய்தியே கூறப்பட்டுள்ளது. இப்பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் மிக முக்கியமானவையாகும்.
இதில் “caused hot springs to burst out of the ground for the giant’s use. And there they remain.” எனக் கூறப்பட்டுள்ளது. இது “வெந்நீர் ஊற்றுக்கள் இரட்சதனின் பாவனைக்காக நிலத்திலிருந்து திடீரெனத் தோன்றின. அங்கே அவை நிலைத்து இருக்கின்றன.”எனப் பொருள்படுகிறது. இதில் இவர் நேரடியாகவே இராவணனை Giant எனக் கூறியுள்ளார்.
எனவே “Tombs of a Giant and his Son” என மேலே மூன்று அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது இராவணன் மற் றும் அவனின் தாயின் சமாதியையே என்பது ஹரி வில்லியம்ஸின் குறிப்பு மூலம் உறுதியாகிறது.
1919 ஆம் ஆண்டு திருகோணமலை தேசப்படத்தில் கன்னியாவில் ராட்ஷசன் இராவணனின் சமாதி
கன்னியா மலையில் இராவணனின் தாய் மற்றும் இராவணன் ஆகியோரின் சமாதியே உள்ளது என்பதற்குச் சான்றாக இன்னுமோர் ஆதாரமும் காணப்படுகிறது. அது 1919 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திருகோணமலையின் தேசப்படமாகும். இத்தேசப்படத்தின் இடது பக்க மேல் மூலையில் “Kannia-Giants Tombs” (கன்னியா இராட்ஷசன் சமாதி) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேசப்படத்தின் விபரங்கள் “Description” என படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் “This map shows the Giants Tombs near Kannia, possibly referring to the mythical King Ravana.” என கன்னியா சமாதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா வது இந்த தேசப்படத்தில் கன்னியா ராட்சசன் சமாதி எனக் குறிப்பிடப் பட்டிருப்பது புராண காலத்து மன்னன் இராவணனைக் குறிப்பதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அறிஞர்களும் இச்சமாதிகள் இராட்ச சர்களின் சமாதிகள் எனும் பொருள்படக் கூறியுள்ளனரேயன்றி இஸ்லாமியப் பெரியாருடையது எனக் கூறவில்லை. இவ் அறிஞர்கள் கன்னியா மலைக்கு சென்றபோது இப்பகுதியில் வசித்த மக்கள் இராவ ணன் மற்றும் அவனின் தாய் ஆகியோருடன் கன்னியாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றிக் கூறியுள்ளனர். அவர்களின் சமாதியே மலை உச்சி யில் இருப்பவை எனவும் கூறியுள்ளனர்.அறிஞர்களும் இக்கருத்தையே தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன்பும் இது இராட்சதர்களின் சமாதியாகவே காணப்பட்டுள்ளது.
இறுதியில் கன்னியா மலையில் உள்ள சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி என இதுவரை கூறப்பட்டு வந்த கூற்றுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதும், இச்சமாதி இராவணனனினதும், அவனின் தாயாரினதும் சமாதியே என்பதுக்கு 300 வருடங்களுக்கு முற்பட்ட ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் ஆதாரங்களாக இருக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
( வசந்தம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிக்கு இடம்பெறும் "வழிபாடு" நிகழ்ச்சியில் இலங்கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றியஎனது தொகுப்பைப்பார்க்கலாம். அல்லது vasantham.lk எனும் இணைய தளத்திற்குச் சென்று "வழிபாடு" நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.)


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...