முத்துராமலிங்கத்
தேவர், இந்து மதம் மீது தீவிரப் பற்றுக் கொண்டவர், எனவே தமிழர்கள், குறிப்பாக முக்குலத்தோர்
“இந்துத்வா” கொள்கையை முன்னெடுக்கும் பாஜகவில் இணைய வேண்டும், மேலும் அவர்கள் முஸ்லீம்,
கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பேச வேண்டும் என்ற ரீதியில் சிலர் சமூக வலைதளங்களில் எழுதி
வருகிறார்கள்.
அவர்களுக்கு
பதில் அளிககும் வகையில்தான் இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.
பல்லாயிரம்
ஆண்டுகளாக தமிழ் மண்ணையும் மக்களையும் பாதுகாத்து ஆட்சி செய்த பாரம்பரிய ஆட்சியாளர்களின்
அரசியல் வெள்ளையர்களின் வருகையோடு முடிவுக்கு வந்தது. அந்த ஆட்சியாளர்களின் கடைசி
ஜனநாயக வாரிசாகத் தோன்றியவர்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். பாரம்பரிய ஆட்சியாளர்கள்,
தாங்கள் சார்ந்த மதம் மீது பற்றுக் கொண்டிருந்தாலும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள்
வாழும் அத்தனை பிரிவு மக்களையும் உள்ளடக்கியதாகவே அவர்களின் ஆட்சிமுறை அமைந்தது. அவர்கள்
தாங்கள் சாராத மத மக்களைப் பாதுகாத்தும் அவர்களுக்கு உதவிகள் செய்தும் வந்தனர்.
ஆனால்,
வெள்ளையர் ஆட்சிகாலத்தில் ஜனநாயக அரசியல் கருத்துக்கள் பரவின அல்லது பரப்பப்பட்டன.
ஆட்சிமுறை என்பது “மதம் சாராததாக” இருக்க வேண்டும் என்று வெள்ளை ஆட்சியாளர்கள் கூறினான்.
ஏனெனில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருக்கின்ற காரணத்தால், அவர்கள் இந்துக்கள்
என்று ஒன்று சேர்ந்தால் தங்களால் ஆட்சி செய்ய முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
ஆனால், இங்கிலாந்தில் மன்னருக்கு முடிசூட்டி வைப்பவராக தலைமை மதகுருவே இருந்து வந்தார்.
ஆங்கிலேயரின் இந்த இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக் காட்டிய தேவர் அரசியல் என்பது மதம்
சார்ந்ததாகவே இருக்க வேண்டும், தனிநபர் ஒழுக்கமே அரசியலுக்கு முக்கியமானது என்று பேசினார்.
தென்னாப்பிரிக்காவில்
புகழ்பெற்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1916 ஆண்டு இந்தியா திரும்பி அரசியல் செய்யத்
துவங்கினார். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் புகழ்பெற்ற அரசியல்வாதிகளாக இருந்தவர்கள்
பால கங்காதர திலகர், அவருக்கு போட்டியாக வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கோபால கிருஷ்ண
கோகலே, ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த பெண்ணான அன்னி பெஸன்ட் அம்மையார் ஆவர். இவர்கள் மூவருமே
இந்து மதம் சார்ந்தவர்கள். அன்னி பெஸன்ட் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியா
வந்து இந்துவாகவே வாழ்ந்து வந்தார். இந்த மூவருமே சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள்.
அந்தக் காலத்தில் இவர்களுக்குத்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. காந்தியை
யாரும் கண்டுகொள்ள வில்லை. காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டார். இருந்தாலும் அப்போதைக்கு காந்திக்கு செல்வாக்கு ஏற்படவில்லை.
எனவே,
மேற்படி மூவரிடமிருந்தும் தன்னை சற்று மாறுபட்டவராக காட்ட காந்தி திட்டமிட்டார். இதே
காலகட்டத்தில், இங்கிலாந்து, துருக்கியில் ஆட்சியிலிருந்த ஒட்டோமென் துருக்கியரை ஆட்சியிலிருந்து
அகற்றியது. மீண்டும் அவர்களையே ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்று இந்திய முஸ்லீம்கள்
கிலாபத் இயக்கத்தை துவங்கினார்கள். இதனை பயன்படுத்த திட்டமிட்ட காந்தி கிலாபத் இயக்கக்
கூட்டங்களில் கலந்து கொண்டு இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்துப் பேசினார். இவ்வாறு
காந்தி தனது அரசியலுக்கு முஸ்லீம்களைப் பயன்படுத்தினார். அப்போதைக்கு முஸ்லீம்கள்
காந்தியைப் பயன்படுத்திக் கொண்டனர். இருந்தாலும் காந்தி தன்னை இந்து பற்றாளராக காட்டிக்
கொண்டார். இவ்வாறுதான் முஸ்லீம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் தொடங்கப்பட்டது.
அதுவே பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக மாறிப்போனது.
காந்தியின்
இந்தப் போக்கை, சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவாளரான ஸ்ரீநிவாச ஐயங்கார் கண்டித்தார்.
1927-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற பூரண சுதந்திர தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது தான் அங்கிருக்கக் கூடாது
என்று கருதிய காந்தி முன்னதாக புறப்பட்டார். காந்தி ஸ்ரீநிவாஸ ஐயங்காரின் வீட்டில்தான்
தங்கியிருந்தார். அங்கிருந்துதான் புறப்பட்டார். அப்போது ஸ்ரீநிவாஸ ஐயங்கார் காந்தியைப்
பார்த்து, ''பனியா சாதியில் பிறந்த, அசாதாரண மனிதரான நீங்கள் சிறந்த திட்டமிட்டுச்
செயல்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள். குடியேற்ற நாடுகளில் ஒரு மோதல் ஏற்படும் காலங்களில்
சரிக்கட்டும் நிகழச்சி நடைபெறும். எழுத்தர்கள் இருக்கும் இடத்தில் சரிக்கட்டுதல் நடைபெறும்.
அது ஒருபோதும் இடதுசாரிகளிடம் செய்யப்படாது. வலதுசாரிகளின் முன்னணித் தலைவராக உள்ள
உங்களிடம்தான் செய்யப்படும். இந்து மதத்திற்கு எதிரான அஹிம்சையை சாதனையாகப் பரப்புரை
செய்வது நீண்டகால அடிப்படையில் அது நாட்டின் தீரத்தை நீர்த்துப் போகச் செய்யும். அப்போது
முஸ்லீம்கள் அதன் பலனை அறுவடை செய்வார்கள். அதன் விளைவுகள் துரதிர்ஷ்டவசமானவையாக இருக்கும்.
நீங்கள் இயற்கைக்கு மாறான இறப்பைச் சந்திப்பீர்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை''
என்று கூறினார். இது எல்லாம் தீர்க்கதரிசனமாக
மாறிப்போனது வரலாறு.
காந்தியின்
சுவரொட்டி பையனான நேரு, அப்படியே தனது குருநாதரின் வழியில் நடந்து நாட்டுப் பிரிவினைக்கு
ஒப்புக் கொண்டார். வடக்கே இந்து மதத்தை முதலில் பழித்தவர் என்றால் அது ஜவஹர் லால்
நேருதான் என்று சொல்லலாம். தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த நாட்டில்
ராமன் தெய்வமல்ல, ராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் சண்டை” என்று குறிப்பிட்டார்.
மேலும், யாரையும் எளிதில் முட்டாள்கள் என்று சொல்லும் நேரு, “கிரஹகணத்திற்கு குளிப்பவர்கள்
முட்டாள்கள். பசுவதையை தடை செய்யச் சொல்பவர்கள் அறிவீனர்கள்” என்ற வகையில் பேசினார்.
இதைச் சுட்டிக் காட்டும் தேவர், இம்மாதிரி நாஸ்திகத்திற்குப் போவது நல்லதல்ல, அதே
நேரத்தில் தேசியத்தை விசாலமாக்கப் போகிறோம் என்று தட்டையான நிலைமைக்குப் போகின்ற
நிலையிலும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.
அதேபோல,
''ஒரு தேசம் மதச் சார்பற்றிருக்கிறது என்றால், அதை எந்த நாடும் தூக்கிற எறிந்து விடும்
அஸ்திவாரம் இருக்கக் கூடிய அரசியல் நமக்கு வேண்டும். பலனை அனுபவிக்க மதம் நமக்கு வேண்டும்.
இந்த தேசம் என்றும் சாயாமல் இருக்க ஆணிவேர் போட்டு நிற்க, இரண்டையும் தயாராக நாம்
சேர்த்து வைத்துக் கொண்டு அதோடு வாழுகிற நிலைமை, அந்த நிலைமையிலும் எதைச் செய்ய வேண்டும்
என்பதைக் கருதி ஒன்றுமே இல்லாமல், யாருக்கும் உரிமையே இல்லாமல் செய்து விடலாம் என்று
நினைக்கிற கம்யூனிஸம் என்றைக்குமே நிறைவேறாது.
அதற்காக
முதலாளி வர்க்கத்தைக் கூட்டிக் குவிக்க அனுமதிப்பது மிகப்பெரிய கொடுமை. ஒவ்வொருவருக்கும்
உழைப்புக்கும், தன்மைக்கும் தக்கவாறு சர்க்கார் பெற்று, அவனுடைய தேவைக்குத் தக்கவாறு
அனைவருக்கும் ஊதியம் வைத்து, இதன் மூலம் அரசாட்சி புரிவதுதான் உண்மையான ஜனநாயகமாகும்''
என்று குறிப்பிடுகிறார்.
சரி,
இவ்வாறு பேசும் தேவர் முஸ்லீம்கள் தொடர்பான பிரச்சனையில் எவ்வாறு நடந்து கொண்டார்
என்பதையும் பார்ப்போம். அபிராமம் கிராமத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சந்தைக்கு வரும்
இந்துப் பெண்களிடம் குறும்பு செய்தபோது அதை முஸ்லீம் பெரியவர்களிடம் சொல்லி சரிசெய்ய
முயன்றார். ஆனால் அவர்களும் கேளாது போகவே, “முஸ்லீம்களின் நிலங்களுக்கு வேலைச் செல்வதையும்
முஸ்லீம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க” அறிவுறுத்தினார். இந்தப் பிரச்சனை
நீதிமன்றம் வரை சென்று பின்னர் “அநீதியை எதிர்க்க சமூக ஒத்துழையாமையை மேற்கொள்வது
தவறில்லை” என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறாக தேவர் முஸ்லீம் இளைஞர்களின்
தவறுகளைக் கண்டித்தார். அதேவேளையில், 1948-ம் ஆண்டு காந்தி கொல்லப்பட்டபோது காந்தியை
கொன்றவர் ஒரு முஸ்லீம் என்ற வதந்தி பரவியது. இது மத மோதலை உருவாக்கும் என்பதால்,
“காந்தியை கொலை செய்தது ஒரு இந்துதான்” என்று தேவர் மதுரையில் பிரச்சாரம் செய்து மத
மோதலை தடுத்தார். இவ்வாறு தேவர் தேவைப்படும் இடங்களில் முஸ்லீம்களை கண்டிப்பவராகவும்,
அவர்களை பாதுகாக்க வேண்டிய இடங்களில் அவரை பாதுகாக்கவும் செய்தார். இவ்வாறு தேவர் தனது
பேச்சு, கொள்கை, சிந்தனை என்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயக அரசியலையே முன்னெடுத்தார்.
இவ்வாறு
அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக ஆன்மீகச் செம்மலாக வாழ்ந்து, இன்றும் அவரின் பெயரைச் சொல்லாமல்
யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற வகையில் அரசியல் வானில் உயர்ந்து நிற்கும் தேவரை
இந்து மதத்தின் பெயரால் அரசியல் செய்ய முயலும் ஒரு குள்ளநரிக் கூட்டம் கடத்திச் செல்ல
முனைகிறது. தேவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கருத்தையும் உள்வாங்கிச் செயல்படும் என்னைப்போன்ற
பலரும் சற்றும் விட்டுக் கொடுக்காத நிலையில் இன்றும் பேசியும் செயல்பட்டு வருகிறோம்.
கடந்த
பத்தாண்டு கால இணையதள விவாதங்களில், பல்வேறு கருத்துக்களில் எனக்கும் பல இஸ்லாமியருக்கும்
கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் என்னை ஒரு இந்து தீவிரவாதி என்று
கூறினர்.
வடக்கே
எவ்வாறு காந்தியும் நேருவும் இந்துக்களுக்கு எதிரான அரசியலை செய்தார்களோ, அவ்வாறே
தெற்கே, திக, திமுக செய்தன. இவர்கள் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
என்ற ரீதியில் பேசி அவர்களை வைத்து அரசியல் செய்து வந்தனர். இந்தச் செளகரியத்தைப் பெற்ற
முஸ்லீம்கள், தாங்களும் இந்துக்களுக்கு எதிராக பேசலாம் என்ற துணிவைப் பெற்றனர். அவ்வாறே
பேசி வந்தார்கள். தமிழகத்தில் ஈழப்போருக்குப் பின்னர் தமிழின அரசியல் பரலாகப் பேசப்பட்டது.
அப்போது “சாதி ஒழிப்பு” என்ற பொய்யான கருத்தியல் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது,
இதனால், தமிழர் ஒற்றுமையின்மையே ஏற்படும் என்பதை என்போன்ற தமிழ்த் தேசியவாதிகள் உணர்ந்தனர்.
ஆனால், இந்து எதிர்ப்பு மனோநிலையில் இருந்த திமுவை சேர்ந்த முஸ்லீம்கள், சாதி அமைப்பு
தீய ஒன்று, அதனால் சாதி ஒழிப்பு அவசியம் என்று பேசினர். அப்போது, மதம் தீய ஒன்று,
எனவே மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நாம் சொன்னபோது அவர்களால் பதில் பேச முடியவில்லை.
என்
போன்றோர் தமிழர்களை அடையாளம் காண சாதி அடையாளங்களே அடிப்படை என்று கூறி அதைப் பயன்படுத்த
வலியுறுத்தியபோது சில திமுக மூளைச் சலவை முஸ்லீம்கள் அதனை மறுத்தார்கள். அப்போது,
முஸ்லீம்கள் தங்கள் பெயரில் உள்ள அடையாளங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று நாம் சொன்னபோது
அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதுபோல இந்து- முஸ்லீம் சார்ந்த பல்வேறு விஷயங்களை
நான் வாதம் செய்தேன். இதுபோல வாதம் செய்த பல முஸ்லீம்களும், தமிழ் சாதி அடையாளங்களை
ஒழிப்பது, தமிழர் பண்பாடுகளுக்கு எதிராகப் பேசுவது என்பது தவறு என்பதை உணர்ந்து தங்கள்
நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். இன்னமும் பல முஸ்லீம்கள், பாஜக எதிர்ப்பு அரசியலை
வைத்து அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ இந்து எதிர்ப்பை பேசி வருகிறார்கள்.
இந்துத்வா
சார்ந்து பேசும் சில தமிழர்கள், குறிப்பாக முக்குலத்தோர் இஸ்லாமியர் மீது பல குற்றச்
சாட்டுக்களை வைக்கிறார்கள். அதாவது அவர்கள் பெயரிலிருந்தே தமிழர்களாக இருப்பதில்லை.
வாழ்க்கை முறையிலும் அவர்கள் தமிழர்களாக இருப்பதில்லை. மொழியையும் விரைவில் மாற்றி
விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லாமலில்லை. ஒரு காலத்தில் கிரிக்கெட்டில்
பாகிஸ்தான் வெற்றி ஊர்வலம் நடத்தும் மனநிலை முஸ்லீம்களிடையே காணப்பட்டது. இன்று அந்த
நிலை இல்லை. இன்னும் இனம் சார்ந்த ஓர்மை ஏற்பட்டு அரசியல் அதிகாரம் பெறப்படும்போது
நிச்சயமாக தமிழக முஸ்லீம்களின் இந்த நிலைப்பாடு மாறும் என்றே நான் நம்புகிறேன். அதற்கு
ஏற்ற சரியான முனைவுகளின் மூலமாக மாற்ற முயற்சிப்போம். எந்தவொரு சமூகப் பிரிவையும்
(தெலுங்கர் உட்பட) ஒதுக்காமல் எல்லாரையும் உள்ளடக்கிய ஜனநாயக அரசியல் முனைவுகளை சரியானவையாக
இருக்கும். அதை விடுத்து, பாஜக பாணியில் முஸ்லீம்களை காரணமின்றி வெறுத்து அதை வைத்து
அரசியல் செய்வது இந்துக்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி எந்தவித பயனையும் தராது.
இவர்கள் தங்கள் இந்துத்வா கொள்கைகளுக்காக, தேவரின் பெயரை பயன்படுத்துவதை தமிழர்களும்
சரி முக்குலத்தோரும் சரி ஏற்க மாட்டார்கள்.
உதவிய
நூல்கள்:
1.
மதர்
பெஸன்ட் அண்ட் மஹாத்மா காந்தி
2.
முடிசூடா
மன்னர் முத்துராமலிங்கத் தேவர்
*******
No comments:
Post a Comment