நேற்று (28-11-2021) உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழச்சி நடைபெற்றது. 1990-93 காலத்தில் படித்த நண்பர்கள் சந்தித்து உரையாடினோம்.
Sunday, November 28, 2021
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நேற்று (28-11-2021) உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழச்சி நடைபெற்றது. 1990-93 காலத்தில் படித்த நண்பர்கள் சந்தித்து உரையாடினோம்.
Tuesday, November 23, 2021
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு ஆலோசகராக நியமனம்
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு ஆலோசகராக என்னை நியமித்திருக்கும் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
Monday, November 15, 2021
இடுக்கி அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம்
முல்லைப் பெரியாறு அணைந்து விடும் என்று சொல்லி கேரளா அணையில் தண்ணீரை தேக்க விடாமல் தடுத்து வருகிறது. கேரள அரசியல்வாதிகள் தண்ணீரைத் தேக்கினால் அணை உடைந்து விடும் என்று புரளியைக் கிளப்பி வருகின்றனர். தண்ணீரை தேக்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும் என்பதில்லை, இடுக்கி அணையிலிருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரலாம் என்று ஓய்வு பெற்ற பொறியாளரான ரா. வேலுச்சாமி கூறியுள்ளார். அவர் இந்தத் தகவலை என்னிடம் கூறியதும் நான் இது பற்றி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளரான எஸ். ஆர். சக்கரவர்தியிடம் தெரிவித்தேன். உடனே அவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்றார். தேனி வந்த வேலுச்சாமியும் தமிழ்த் தேசிய ஆர்வலர் கோவை கண்ணனும் எஸ்.ஆர். சக்கரவர்த்தியை சந்தித்து திட்டம் பற்றி விவரித்தனர். உடனே அவர் இது பற்றி தேனி மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். அவர் திட்டம் எவ்வளவு சாத்தியமானது என்பது பற்றி முல்லை பெரியாறு பொதுப்பணித் துறை தலைமை அதிகாரியிடம் பேசச் சொன்னார். திட்டம் பற்றி விசாரித்த அதிகாரிகள் திட்டம் சாத்தியமான ஒன்றுதான் என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து இதனை ஒரு மனுவாக தன்னிடம் கொடுக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நேற்று (15-11-2021) மாவட்ட ஆட்சியரிடம் திட்டம் பற்றிய மனுக் கொடுக்கப்பட்டது. அவர் இதனை தமிழக அரசுக்குத் தெரிவிப்பதாக கூறினார். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த வேலுசாமி திட்டம் பற்றி விவரித்தார். திட்டத்தின்படி இடுக்கி அணையின் அடிமட்ட அளவிலிருந்து சுமார் 15 கிமீ சுரங்கப் பாதை அமைத்து கூடலூர் மொட்டையாண்டி கோவில் அருகே தண்ணீரைக் கொண்டு வந்து பதினெட்டாம் கால்வாய் வழியாக வைகை அணைக்கு தண்ணீரை கொண்டு வந்து விடலாம். இதில் கேரள அரசு தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கவும் செய்யலாம். ஏற்கனவே கேரள அரசு 1500 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவது பற்றிப் பேசி வருகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை 500 கோடி செலவில் செய்து விடலாம் என்று வேலுச்சாமி கூறினார்.
Sunday, September 5, 2021
கல்வித் தந்தை மூக்கையாத் தேவர்
Wednesday, August 11, 2021
சீர் மரபினர் மக்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
நேற்று (10-08-2021) அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சீர் மரபினர் மக்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் மற்றும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.
Saturday, July 24, 2021
தமிழின அரசியலுக்கான எச்சரிக்கை மணி
இந்தியத் துணைக் கண்டமானது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சகிப்புத் தன்மை கொண்ட நிலமாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்த வெள்ளையன் தனது பிரித்தாளும் அரசியலுக்கு வசதியாக இந்தியர் மீது மதச்சார்பின்மை என்ற கொள்கையை அரசியல் கொள்கையாகத் திணித்தான். வெள்ளையர்களை நல்லவர்கள் என்று நம்பிய குஜராத்தியான காந்தியும், வெள்ளையன் கல்வியை கல்வி என்று நம்பிய பண்டிதர்களும் அதுபோன்ற அரசியல்தான் இந்தியாவுக்கு உகந்தது என்று நம்பினார்கள். அதையே சட்டமாக்கினார்கள். ஆனால் வெள்ளையன் தொடர்ந்து திருச்சபை மூலமாகவே தனது மன்னர்களுக்கு பட்டாபிஷேகம் செய்து வந்தான். உலகெங்கும் மக்களாட்சி நடைபெற்று வரும் இந்தக் காலத்திலும் மன்னர் குடும்பத்தை அன்னாந்து பார்த்து வியந்து வருகிறான். அப்படிப்பட்ட அறிவுக் குருடர்கள் ஓதிய மதச்சார்பின்மையை இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய சிறுபான்மை ஆட்சியாளர்களும் தங்கள் வசதிக்காக அதையே தொடர்ந்தார்கள். அதன் விளைவுதான் இந்தத் துணைக் கண்டத்தில் போலி மதச் சார்பின்மை துளிர்விட்டு இன்று விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதற்கான ஒரு எடுத்துக் காட்டுதான் ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ சங்கியின் இந்த உளறல். எந்தவொரு மதமாக இருந்தாலும் அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக போலி மதச்சார்பின்மை பின்பற்றப்பட்டால் அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போவார்கள். இந்த கிறிஸ்தவ சங்கியின் திமிர் பேச்சு தமிழின அரசியலுக்கு விடும் சவாலாகும். வெளியில் தெரிந்தது பனிக்கட்டியின் நுனி போன்றதாகும். அரசியல் தெளிவு பெற்று வரும் தமிழினம் இதுபோன்ற சங்கிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து தீர்க்கமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
Sunday, February 28, 2021
தேனியில் 10 ரூபாய் உணவகம்
தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் மனிதநேய காப்பகம் மற்றும் பள்ளி நடத்தி வந்த பால்பாண்டி ஏற்கனவே பல சாதனைகளைச் செய்துள்ளார். குறிப்பாக தேனி மாவட்டத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காண்பித்தார். தற்போது இவரது காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் கதிர் உணவகத்தை தொடங்கியுள்ளார். அதிலும் இவ்வளவு பணம் ஆகிறது என்று யாரும் கேட்டு வாங்குவதில்லை. சாப்பிடுபவர்கள் கடையில் உள்ள உண்டியிலில் பணம் போட்டால் போதுமானது. பணம் இல்லாதவர்கள் பணம் கொடுக்காமலும் சென்று விடலாம்.
இந்த உணவகம் தேனி அரசு மருத்துவமனை அருகேயுள்ள கானா விலக்கு காவல் நிலையத்தின் எதிராக மெயின் ரோட்டிலிருந்து சிறிது உள்ளே திறக்கப்பட்டுள்ளது. இது தேனி மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இட்லி, வடை தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்ற உணவுகளும், சில நேரங்களில் சாப்பாடும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த (2020) டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தக் கடை செயல்பட்டு வருகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது என்று கேட்டபோது, சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் பணம் போட்டு விடுகிறார்கள். மற்றபடி நன்கொடையாளர்களிடமிருந்து காய்கறி அரிசி போன்றவற்றைப் பெற்று கடையை நடத்துகிறோம் என்று பால்பாண்டி தெரிவித்தார்.
Thursday, February 18, 2021
கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளர்களை குற்றப்பரம்பரையினர் என்று சுட்டிக்காட்டிப் பேசிய தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 17.02.21 அன்று (தேனி மாவட்டம்) தேவதானப்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Sunday, February 14, 2021
தேவதானப்பட்டி பிரமலைக் கள்ளர் சமுதாயச் சங்கம்
கடந்த ஆறு ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பின்னர் தேவதானப்பட்டி பிரமலைக் கள்ளர் சமுதாயச் சங்கத்தை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளேன். பதிவுச் சான்றிதழை சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தபோது எடுத்த படம்.
Saturday, February 13, 2021
விவசாயக் குழுவிற்காக டிராக்டர் வாங்க சென்றபோது
கடந்த 11-02-2021 அன்று தேனியில் விவசாய கருவிகள் கண்காட்சியில் எங்கள் விவசாயக் குழுவிற்காக மாநில அரசு வழங்கும் டிராக்டரை வாங்க சென்றபோது எடுத்த படம்.
Tuesday, January 12, 2021
மண்ணின் மைந்தர்களும் நாயக்கஅரசும்
நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்
நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...
-
தேவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் , பாஜகவையும் தேவர் ஆதரித்தார் என்று ஒரு தம்பி சொல்கிறார். இதுபோன்ற மூளைச் சலவையில் இருப்பவர்களுக...
-
இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 1 குற்றவியல் அமர்வு நீதிமன்றம் ராமநாதபுரம் பிரிவு இருப்பு புதுக்கோட்டை ...
-
கள்ளர் குல இருக்குவேளிர் வழி வந்த ஹொய்சாள வீரவல்லாளத்தேவன் முன்னுரை வரலாறு படிப்பவர்களுக்கு நன்கு தெரியும், சில வரலாறுகளை படிக...