Sunday, October 4, 2020

கள்ளர் போர்முறை


கள்ளர் என்ற பெயர் கள்ளர் சமூகத்துக்கு எதனால்?
___________
போரில் திருடுவது திருட்டுச் சமூகம் அல்ல. போர் சமூகம்.
வடுகப்புத்தி என்ன பன்னும்னா தமிழர்களின் முழு வரலாற்றை வெளிப்படுத்தாமல் தாங்கள் தமிழ்நாட்டை ஆண்டதில் இருந்து தமிழ்குடிகளின் வரலாற்றைத் தோண்டும். வடுகர்கள் காலத்தில் ஒரு தமிழ்க்குடி செய்த தொழிலை தமிழர்களின் குலத்தொழில் போல் சித்தரித்து தங்கள் ஆட்சியில் இருந்து செய்யப்பட்ட மாற்றங்களை தமிழர்களின் ஆரம்பக்காலம் தொட்டு செய்துவருவதாக பூச்சாண்டி காட்டி தமிழரின் மொத்த வரலாறே அதுதான் எனத் திரித்துக்காட்டும்.
இந்த முறையைப்பயன்படுத்தி தான்
1. ஆகவர் போர்முறை கள்ளரை திருட்டுக்கூட்டம் என்றும்
2. பார்ப்பார் பறையரை பறையடிப்பவன் என்றும்
3. மருத நிலப்பள்ளரை பண்ணை அடிமை என்றும்
4. போர்கலை பயிற்றுனர் சான்றாரை பணையேறி என்றும் கூறி திரித்தது.
இதுக்கு முன்னர் போட்ட பதிவுகளில் பறையர் பார்ப்பனர் என்றும் சான்றார் போர் கலைப் பயிற்றுனர் என்றும் அவர்கள் வடுகர் காலத்தில் முறையே பறை அடிப்போராக்கியும் பணையேறிகளாக்கியதையும் பதிவிட்டிருப்பேன். இப்போது கள்ளர் சமூகத்துக்கான மானுடவியல் காரணியை சொல்லியாக வேண்டும்.
கள்ளர் என்ற சமூகம் திருட்டுச் சமூகம் என்று சொல்வது போலியான காரணம். கள்ளர் சமூகம் உருவாக்கப்பட்ட போர் காரணியை தற்போது நடந்த போர்களோடு ஒப்பிட்டால் கள்ளர் சமூகம் உருவாக்கப்பட்டதற்கான காரணி புரியும்.
1. ஆனையிறவு இரண்டாம் முற்றுகையின் போது வதிரையண் ஃபாக்சு நடவடிக்கைக்காக பால்ராஜ் தலைமையில் புலிப்படை நீரில் இறக்கிவிடப்படுகிறது. சிங்களர் படை எண்ணிக்கை அதிகம். தமிழர்களின் புலிப்படை எண்ணிக்கை குறைவு. அதாவது 300 படத்தைப் போல. இந்நேரத்தில் புலிகள் செய்ய வேண்டியது சிங்களரின் படைத் தளவாடங்களை எல்லாம் கவர்வது. தங்களுடையாக்குவது. இப்போது இந்த கவர்தலை திருட்டுத்தொழில் எனலாமா?
2. மருதநாயகத்தின் போர் நுட்பங்களில் சில. போர்தொடுக்கும் முன்னர் எதிரி நாட்டின் சந்தை, நீர்நிலைகள், உணவு உற்பத்தி செய்யும் இடங்கள் அனைத்தையும் சூறையாடி அங்குள்ள பொருட்களை கவர்ந்து எதிரியின் பொருளாதார பலத்தை வீழ்த்துவது. அதுக்குப்பிறகு தான் போரே நடக்கும். இது போர் நுட்பமா? திருட்டுத்தொழிலா?
3. ஆனால் மருதநாயகத்தால் ஆப்பநாட்டு கொண்டயங்கோட்டை மறவர் சமூகத்தில் வந்த புலித்தேவனை மட்டும் எளிதில் வீழ்த்த முடியவில்லை. ஏன் எனத் தெரியுமா? புலித்தேவன் இந்த போர் நுட்பத்தை வழி வழியாக செய்துவந்த ஆநிரை மீட்கும் மறவர் வழிவந்த அரசன். அதனால் தன்னிடம் உள்ள பொருளாதார வளங்களை எதிரி திருடாமல் காக்கவும். எதிரி திருடிய பொருட்களை மீட்கவும் தெரிந்தவன். ஏன் புலித்தேவனே ஆநிரை கவர்ந்து எதிரியின் பொருளாதார பலத்தை வீழ்த்திய வரலாறுண்டு. அதனால் புலித்தேவன் என்ன திருடனா?
சங்காலத்தில் இருந்து (தமிழகம் முழுவதும்) மறவர் பாளையங்களின் காலம் வரை (புலித்தேவன் கீழிருந்த பாளையங்கள் மட்டும்) தமிழர் மரபில் ஆநிரை, யானை, எதிரி நாட்டின் பொருளாதார பலத்தை கவர்வதற்கென்றே தனி நுட்பங்களை தெரிந்த ஒரு போர் சமூகத்தை உருவாக்கி வைத்திருந்தனர் தமிழர். அதுதான் கள்ளர் சமூகம். ஆனால் வந்தேறி வடுகன் ஆட்சியில் தமிழ் வேந்தனான மும்முடிப் பாண்டியன் (சேர சோழ பாண்டிய நாடுகளை ஆழ்பவன்) வீழ்த்தப்படுகிறான்.
அதனால் தமிழகம் எங்கும் அரசமரபினர் தேடித்தேடி வீழ்த்தப்படுகின்றனர். இப்போது ஆநிரை கவர்தல், எதிரியின் பொருளாதாரத்தை வீழ்த்துதல் போன்ற நுட்பமான போர்முறைகளை செய்து வந்த சமூகம் என்னாகும்?
1. ஒன்று புதிய ஆட்சியாளர்களை எதிர்க்கும்.
2. அல்லது அவர்களுக்கு பணியும்.
3. அல்லது பக்கத்தில் இருக்கும் தமிழர் நாடுகளிலும் குட்டிக் கிராமங்களிலும் புகுந்து சூரையாடும்.
4. இல்லையெனில் சில கூட்டங்கள் புதியவர்களை எதிர்த்தும் சில கூட்டங்கள் ஆதரிக்கவும் செய்யும்.
நான்காவது காரணம் தான் வடுகர் ஆட்சிக்காலங்களில் நடக்கிறது.
புலித்தேவன் பரம்பரையும் வடுக கெட்டிபொம்முவும் பரம்பரைப் பகைவர். தென்பாண்டி நாட்டின் கீழக்குக் கடற்கரை பரதவ அரசியான டான் குரூசு பாண்டிமாதேவி படை மறவரும் ஈழ மறவரும் விசுவநாத நாயுடுவை ஓட விட்டு அடித்தவர்கள்.
ஆனால் இந்த வரலாற்றை மறைத்து சங்ககாலம் முதல் மறவர் பாளையங்களின் காலம் வரை அங்கீகரிக்கப்பட்ட ஆகவர் போர்தொழிலை செய்து வந்தோரை திருடரெனவும் அவர்களுக்கு தாங்கள் தான் ஆட்சியைக் கொடுத்து ஆள வைத்ததாகவும் சொல்லி வரலாற்றைத் திரிக்கிறது வடுகர் கூட்டம்.
______________
சங்ககாலத்தில் தமிழகத்தில் இருந்த கள்ளர் போர்முறைகள்
1. ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருஙு குறும்பு எறிந்த ஆற்றலொடு - அகநானூறு 342
விளக்கம்: ஆநிரை கவரும் பொருட்டு ஆகொள்ளுக்கு சிறந்த பெயரைப் பெற்ற மூதூரின் கள்வர் பெருமகன் என்பவன் ஏவிவிட இளையர் படைத் தலைவன் எதிரியின் குறும்பு ஆடுகளை கவர்கிறான். இதனால் எதிரியின் பொருளாதார பலம் அழிய கள்வர் படை வென்றது.
2. ஆயிடை அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
பிற்படு பூசலின் வழிவழ யோடி - அகநானூறு 7
ஆநிரை கவர்ந்து கள்ளர் சென்றுவிட அவரை துரத்திச் சென்று ஆநிரை மீட்கும் மறவர் போல் பின்னே சென்றதாக உவமை சொல்கிறது.
இதுதான் கள்ளரின் போர்முறை. 2500 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கள்ளரின் போர்முறை காரணமாக அவர்களுக்கு வந்த பெயர்கள் தான் கள்வர், கள்ளர். இதை திருட்டுத்தொழில் செய்த கள்ளர் என்று திரித்துக் கூறும் வடுக வந்தேறி பாசிசுடுக்களை நம்பினால் தமிழர் வீழப்போவது உறுதி.
கள்ளருக்கு வடுக வந்தேறி ஒன்றும் ஆட்சியைக் கொடுக்கவில்லை.
________________
கீழுள்ளது வடுக வந்தேறியான இராஜா நாயுடு போரில் ஆநிரை கவரும் போர்குடிக் கள்ளரை திருட்டுத் தொழில் செய்பவர் எனப் போட்டுள்ள பதிவு. இந்த வடுகனுக்கு காவ்லதுறையில் இருக்கும் கள்ளர் சமூகத்தின் சதவீதத்தை காட்டினால் தான் வாயடைப்பான் போலும்.
//*களவு தொழிலை செய்து வந்த தேவர் சமுகத்தை அடிக்கியதொடு மட்டும் இல்லாமல் அவர்களை ஆள செய்த பெருமை .//

http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html 


Friday, October 2, 2020

இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம்

 இன்று (02-10-2020) தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில்  சீர்மரபினர் நலச்சத்தின் சார்பில் விகிதாச்சார இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பழகன், மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, தேவதானப்பட்டி பகுதி பொறுப்பாளர்கள் அ.பெருமாள் தேவன், ஆர்.கே. தங்கராஜா, மணிகண்டன், சுபாஷ், ரத்தினசாமி, செல்வபாண்டி, சரவணன், சரத்குமார், பாண்டிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...