வரலாற்று ஆய்வு நூல்கள் பட்டியல்
1) 1813 ஆண்டில் j.korley என்பவர் ஆங்கிலத்தில்
எழுதிய மருது mahradu (an indian story of the beginning of the
nineteenth century ) என்னும் நூல்1813 ஆண்டில் வெளியிடப்பட்டது . இந்த ஆங்கில நூலை
பேராசிரியர் நா.தர்மராஜன் என்பவரால் தமிழ் மொழி பெயர்க்கப்பட்டு "ஜெகமதி
கலைகூடம்" பதிப்பகத்தின் மூலம் வெளியீடான "முதல் விடுதலைப் போர் 1800-
1801 " என்றதலைப்பில் மூன்றாவது நூலாக 2013ஆம் ஆண்டு வெளிவந்தது
2) 1830 ஆம் ஆண்டில் மருது சகோதரர் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியாக பணிபுரிந்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் colonel jamesh Welsh இவர் எழுதிய ஆங்கில நூல் military reminiscence ராணுவம் குறிப்புகள் இதை லண்டன் பதிப்பகம் ஒன்று 1830 ஆம் ஆண்டு வெளியிட்டது
இந்த நூலின் சில பகுதிகளை மட்டும் பேராசிரியர் தர்மராஜன் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு முதல் விடுதலைப் போர் 1800 - 1801 என்னும் தலைப்பில் இரண்டாவது பாகமாக 2013 ல் வெளியிடப்பட்டது
3) 1835 ஆம் ஆண்டில் Fr.baauche என்ன கிறிஸ்துவ பாதிரியார் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட marudhupandian ,the fateful 18th century (மருதுபாண்டியன் : விதிவசப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டு) எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலினை தமிழாக்கம் செய்து ஆசிரியர்கள் மு.பாலகிருஷ்ணன், எஸ் ஆர் விவேகானந்தம் அவர்களால் தமிழ் மொழியில் "மறவர் சீமை; பாரதியாரின் பார்வையில் " என்னும் தலைப்பில் 2014ஆம் ஆண்டு அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
4) 1840 ஆம் ஆண்டில் மாறைநாடு முருகேசன் அவர்களால் எழுதப்பட்ட "சிவகங்கை சரித்திர அம்மானை " நூல் Oriental manuscripts library, Madars வெளியிடப்பட்டது
5) 1881 ஆம் ஆண்டில் டாக்டர் கால்டுவெல் என்பரால் the history of
Thirunalveli எனும் நூல் அப்போதைய சென்னை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. இதில் 30 பக்கம் மட்டும் சிவகங்கை வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த நூலை 1970இல் தமிழில் "திருநெல்வேலி சரித்திரம்" என்ற தலைப்பில் பேராசிரியர் ந.சஞ்சீவி அவரின் மனைவி பேராசிரியர் கிருட்டிணா சஞ்சீவி மொழிபெயர்த்துள்ளனர் .
6) 1882 ஆம் ஆண்டில் சிவகங்கை சரித்திர அம்மானையுடன் இணைந்து பாஞ்சை முத்துசாமி என்பவரால் எழுதப்பட்டுள்ள "சிவகங்கை சரித்திரக் கும்மி" நூல் வெளியிடப்பட்டது.
7) 1939 ஆம் ஆண்டில் கவிராஜ ஜெகவீரபாண்டியனார் என்பவரால் எழுதப்பட்டுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் பாகம் 2 வெளியிடப்பட்டது
8)1954 ஆம் ஆண்டில் டாக்டர் ந.சஞ்சீவி என்பவரால் எழுதப்பட்டுள்ள "மானங்காத்த மருது பாண்டியர்கள்" எனும் நூல் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டது .
9) 1956 ஆம் ஆண்டில் டாக்டர் சஞ்சீவி என்பரால் "மருதிருவர்" என்னும் நூல் எழுதி வெளியிடப்பட்டது .
10) 1971 ஆம் ஆண்டில் டாக்டர் கே.ராஜய்யன் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "south indian rebellion the first war of independence 1800 - 1801 " ( தென்னிந்திய புரட்சி சுதந்திரத்திற்கான முதல் போர் 1800 - 1801) நூல் வெளியிடப்பட்டது . இந்த நூலை பொன். சின்னத்தம்பி முருகேசன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு ஜெகமதி கலைகூடம் வெளியீடாக முதல் விடுதலைப் போர் 1800 1801 என்ற தலைப்பில் 2013 ஆண்டு வெளியிடப்பட்டது
11) 1974 ஆம் ஆண்டில் டாக்டர் கே ராஜய்யன் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள rise and fall of the poligars of tamilnadu நூல் வெளியிடப்பட்டது . இந்த நூலை நெய்வேலி பாலு என்பவர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு "தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் தோற்றமும் வீழ்ச்சியும் " என்ற தலைப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .
12) 1988 ஆம் ஆண்டில் முனைவர் மங்கையர்கரசி என்பவரால் எழுதப்பட்டு உள்ள மருதுபாண்டியர் வரலாறும் வழிமுறைகளும் முனைவர் பட்ட ஆய்வேடு இது 1988 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆய்வேட்டை 2008 ஆம்
ஆண்டு புத்தா வெளியீட்டகத்தின் மூலம் நூலாக்கம் செய்யப்பட்டு
வெளிவந்துள்ளது.
13) 1989 ஆம் ஆண்டில் எஸ் எம் கமால் என்பவரால் எழுதப்பட்டுள்ள "மாவீரர் மருதுபாண்டியர்" நூல் ஷர்மிளா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது .
14) 1994 ஆம் ஆண்டு மீ.மனோகரன் என்பவரால் எழுதப்பட்டுள்ள "மருதுபாண்டியர் மன்னர் " எனும் நூல் அன்னம் பதிப்பதால் வெளியிடப்பட்டது.
15) 1997 ஆம் ஆண்டில் எஸ் எம் கமால் என்பவரால் எழுதப்பட்டுள்ள "சீர்மிகு சிவகங்கை" எனும் நூல் பசும்பொன் மாவட்ட கலை இலக்கிய பேரவையினால் வெளியிடப்பட்டது.
16) 1962 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் எழுதி தயாரிக்கப்பட்ட "சிவகங்கை சீமை" திரைப்படம் வெளிவந்தது.
17) 2009 ஆம் ஆண்டு ப.சந்திரகாந்தம் என்பவரால் "ஆளப்பிறந்த மருது மைந்தன்" என்று நாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.
18) 2006 ஆம் ஆண்டில் "மருதிருவர் "எனும் ஆவணப்படத்தை ஜெகமதி கலைகூடம் தயாரித்த தினகரன் ஜெய் என்பவரால் இயக்கப்பட்டது.
மேலே குறிப்பிட்டுள்ள 18 ஆவணங்களிலும் எந்த இடத்திலும் குயிலி சம்பந்தமான கதாபாத்திரங்களோ அல்லது வடிவங்களோ ஒரு வரி கூட வரவில்லை .
இப்படி இருக்கையில் 2000 ஆண்டில் எழுதிய ஜீவபாரதி நாவலில் வரும் கற்பனை கதையை வைத்துக்கொண்டு குயிலி கற்பனை போராளியை தூக்கிப் பிடிப்பது நியாயமா?
வெள்ளையனை எதிர்த்து சிவகங்கையில் ஆரம்பித்த முதல் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று பல ஆயிரம் வீரர்கள் (மருதுபாண்டியர் உட்பட) உயிர் நீத்த அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் கலங்கப்படுத்த விதமாக இந்த வரலாறு உள்ளது
நடக்காத ஒரு போரில் தன் உடலில் நெய்யை ஊற்றிக்கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கும் கற்பனை காவியத்தின் கதாநாயகிகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது . குயில் கதாபாத்திரத்திற்கு இரண்டு சமூகமும் உரிமை கொண்டாடுகிறது.
குயிலி பற்றி ஆய்வு செய்யாமல் உண்மை தன்மையை அறியாமல் தமிழ்நாடு அரசு 30 லட்ச ரூபாய் செலவில் குயிலி நினைவுத்தூண் எழுப்பப்பட்டது . மேலும், போலியான வரலாற்றை வைத்துக்கொண்டு குயிலுக்கு தபால் தலை வெளியிட வேண்டும். குயிலி பெயரில் விமான நிலையத்திற்கு பெயர் வைக்க வேண்டும். குயிலி பேரில் சாலைக்கு பெயர் வைக்க வேண்டும் . குயிலி பெயரில் என்னென்ன
கோரிக்கை வைக்க போறாங்கன்னு தெரியல அடுத்த
இதே நிலை நீடித்தால் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு போலியான வரலாற்றுக்கு
துணை போகும் இந்த அரசும் , இந்த கற்பனை வரலாற்றை எழுதிய போலி வரலாற்ற
ஆசிரியருக்கும், குயிலியை தாங்கிப் பிடிக்கும் அமைப்புகளுக்கும் கூடிய
விரைவில் முகத்திரை கிழிக்கப்படும்.
-அகமுடையார் அரண்