Tuesday, March 15, 2016

கள்ளர் பள்ளியின் ஆண்டு விழா இனிதே நடைபெற்றது.



தேவதானப்பட்டி வடக்குத் தெருவில் உள்ள கள்ளர் தொடக்கப் பள்ளியின்
ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

வடக்குத் தெரு காளியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அகில பாரத துறவியர் சங்க அமைப்புச் செயலாளரான சுவாமி ராமானந்தா, வெள்ளிமலை பள்ளிவாசல் தலைவர் எம். செய்யது இஸ்மாயில் ஆலிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


விழாவிற்கு தலைமை ஆசிரியர் எம். மகாலெட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் . பெருமாள் தேவன், செயலாளர் கா. அமர்நாத், உறுப்பினர் சுபாஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் மாணவமாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் அவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.




நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...