சில திராவிட அறிவாளிகள், இந்திய பாசக்காரத் தம்பிகள்
தனித் தமிழ்நாடு கோரிக்கை விடுத்தால் அது தமிழகத்தின் ஒவ்வொரு
பகுதிகளையும் தனித்தனியாக கோர வழிவகுக்கும் என்று
கிண்டலடிக்கிறார்கள்.
அவர்களின்
அறிவுக்கு எட்டிய செயலைச் செய்கிறார்கள்,
பரவாயில்லை. அது அவர்களின் ஆழ்ந்த
அரசியல் அறிவைக் காட்டுகிறது.
தமிழர்கள்
இயல்பிலேயே அறநெறி, போர்நெறி, சமூகநெறி, ஒழுக்கநெறி மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் சோழர்களின் காலத்திலேயே அவர்கள் உள்ளாட்சித் தலைவர்களை தேர்வு செய்ய குடவோலை
என்ற குடியாட்சி முறையை பின்பற்றி இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட
அறிவிற் சிறந்த தமிழர்கள் தனித்
தமிழ்நாடு என்று கிடைத்து விட்டால்
அதை எப்படி சீரும் சிறப்புமாக
அமைப்பார்கள்? அது ஓரு கூட்டாட்சிக்
குடியரசாகவே அமையும். இருக்கின்ற 32 மாவட்டங்களும் தனித் தனி அரசுகளாகவே
அமையும். இதனால் ஒரு பகுதியைச்
சேர்ந்தவர்கள் மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களின்
விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டியிருக்காது.
அத்தனை சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படும்.
கூட்டாட்சிக்
குடியரசுகளுக்கான பின்னடைவுகளும் இருக்கவே செய்யும். ஆனால் அவற்றை தங்கள்
கூரிய அறிவால் சரி செய்வார். தங்க்ள
சீரிய அரசியலால் உலகையே வழிநடத்துவர்.
இன்னொரு
விஷயம், அப்போ து பாண்டிச்சேரியும்,
ஈழமும் தனிக் குடியரசுகளாக இருக்கும்.