தமிழர்களுக்கான
அதிகாரப் பகிர்வு
தமிழகத்தில்
நாளுக்குநாள் தமிழ்த் தேசியச் சிந்தனை பெருகி வருகிறது. குறிப்பாக மண்ணின் மைந்தர்களிடையே
விழிப்புணர்வும், தங்கள் அதிகார இழப்புக்கான காரணங்கள் என்னவென்று ஆராயும் வேகமும்
ஏற்பட்டு வருகிறது. இவர்கள் அந்நியர்களான திராவிடர்களின் ஆட்சிக்கு முடிவுகட்ட அடிக்கல்
நாட்டி வருகிறார்கள்.
கருத்தியல்
ரீதியாக, தங்கள் போலித்தனத்தின் காரணமாக இவர்களை எதிர்கொள்ள முடியாத திராவிடர்கள் மண்ணின்
மைந்தர்கள் பேசும் தமிழ்த் தேசியத்தை சாதி தேசியம் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
எப்படியாவது மண்ணின் மைந்தர்களின் எழுச்சியை முடக்கி விடமுடியாதா என்ற பரிதவிப்பில்
ஏதோதோ பிதற்றி தங்கள் திராவிடத்தை தக்க வைக்க, நியாயப்படுத்த முயன்று வருகிறார்கள்.
‘சாதி
கெட்டது’ என்ற இவர்களின் பிரச்சாரம் தவிடுபொடியாகிவிட்ட காரணத்தால் தற்போது தமிழ்த்
தேசியத்திற்கு சாதிச் சாயம் பூசி தாங்கள் விரும்பும் வண்ணத்தில் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
இவர்கள் ஏதோ ஆதிக்க சாதிகள் தமிழ்த் தேசியத்தைக் கைப்பற்றி மற்ற சாதிகளின் மீது கொடுமைகள்
செய்வார்கள் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வகிறார்கள். அதனால் தங்களின் இருப்பு
தமிழர்களுக்கு அவசியம் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இது சுதந்திரப் போராட்ட காலத்தில்
வெள்ளையர்கள் இந்தியர்களுக்கு ஆளத்தெரியாது, எனவே தங்கள் இருப்பு அவசியமானது என்று
சொன்னதற்கு ஒப்பாக உள்ளது.
அதேபோல
அவர்கள் வைக்கும் மற்றொரு கருத்து (அவர்களின் கருத்துப்படி) சாதிவெறியர்களின் ஆட்சி
திறமையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது. விகிதாச்சாரப்படி அதிகாரத்தை பகிர்ந்தால்
திறமை அடிபட்டுவிடும், அதில் ஜனநாயகம் இருக்காது, அது தமிழர்களுக்கு பாதகமாக அமையும்
என்று சொல்கிறார்கள். இதுவும் திராவிடக் கருத்தியலின் தோல்வியையே காட்டுகிறது. ஆனால்
தமிழர்களுக்கான அரசியல் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும் அதேவேளையில்
ஜனநாயக கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும், இருக்க வேண்டும்.
திராவிடர்களின்
சாதி ஒழிப்புச் சாயம் வெளுத்துவிட்டது. இவர்களது நோக்கம் சாதி ஒழிப்பல்ல, இவர்களின்
அதிகாரத்தை தக்க வைத்தலே ஆகும். இல்லாது போனால் கடந்த 47 ஆண்டு திராவிட ஆட்சியில் பல
சாதிகளை ஒழித்துக் கட்டியிருக்கலாம். நாங்கள் சொன்ன சாதி ஒழிப்பு சாதி வேற்றுமை ஒழிப்பே
தவிர, சாதி ஒழிப்பு அல்ல என்று இப்போது திராவிடம் தனது சாதி ஒழிப்புக்கு புது அர்த்தம்
சொல்லி வருகிறது. ஆனால் மண்ணின் மைந்தர்கள் திராவிடத்தின் பித்தலாட்டங்களை, மோசடிகளை
நன்கு உணர்ந்துகொண்டனர்.
கருத்தியல்
ரீதியில் திராவிடம் தோற்றுவிட்டது. தற்போது மண்ணின் மைந்தர்களின் கைக்கு அதிகாரம் செல்ல
வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இந்த அதிகார மாற்றம் நடைபெறும் வரையில் திராவிடர்கள்
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பதவி சுகத்தை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளலாம். ஊழல்களைச்
செய்து கொள்ளை அடித்துக் கொள்ளலாம்.
அடுத்த
கட்டமாக மண்ணின் மைந்தர்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை தங்களுக்குள்
எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்ற ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியுள்ளது. அதுவே ஒரு
சரியான திறமையான ஆட்சியை எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தின் நலனை பேணிப் பாதுகாக்கக் கூடிய
வலிமையான ஆட்சியை ஏற்படுத்துவதாக அமையும். அதற்கான வழிமுறைகளை ஆராய்வதே கட்டுரையின்
நோக்கம். ஏற்கனவே எழுதிய தமிழ்த் தேசிய அரசியலமைப்புச் சட்டம் முன்னோட்டம் (http://perumalthevan.blogspot.in/2011/12/blog-post_18.html),
தமிழர்களுக்கான சாதிமதக் கொள்கை (http://perumalthevan.blogspot.in/2012/08/blog-post_6510.html),
யார் தமிழர்கள் அல்லது ஒரு இனம் என்பது என்ன? (http://perumalthevan.blogspot.in/2014/05/blog-post_7.html)
ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை
எழுதுகிறேன்.
சாதி
என்பது மண்ணின் மைந்தர்களின் அடிப்படைக் கூறாக உள்ளது. எனவே தமிழர்கள் அமைக்கும் தமிழ்த்
தேசியத்தில் சாதிகளின் பங்கு, அதிகாரப் பகிர்வு முக்கியமானதாகும். அதற்கு அடிப்படையாக
எந்தெந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்துவது அவசியமாகிறது.
இதன் மூலம் பெரும்பான்மை சாதிகள் எவை, சாதிகளின் விகிதாச்சாரம் என்று கண்டறிந்து அவர்களுக்கு
அந்த அளவிலான முக்கியத்துவம், அதிகாரம் அளிக்க வேண்டும். இந்தக் கட்டுரை ஒரு உதாரணமே
தவிர இதுவே இறுதியானது அல்ல.
1. சாதிவாரிக்
கணக்கெடுப்பு, விகிதாச்சார நிர்ணயம்
சாதிவாரிக்
கணக்கெடுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த மக்கள் எத்தனை சதவீதம்பேர் இருக்கிறார்கள்
என்று தெரிய வரும். அதற்கேற்ப அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துகொடுக்க வேண்டும்.
மக்கள் தொகையில் 20%-க்கு அதிகமாக உள்ள சாதியினருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் 20%-க்கு மேலாக இருந்தால் அவர்களிடையே சுழற்சி முறையில்
அதிகாரத்தை பகிர்ந்துகொடுக்கலாம். அல்லது தொகுதிக்கான பிரதிநிதியான ஒரு சாதியைச் சேர்ந்தவரையும்,
துணைப் பிரதிநிதியாக மற்றொரு சாதியைச் சேர்ந்தவரையும் தேர்ந்தெடுக்க வகை செய்யலாம்.
மொத்த மக்கள் தொகையில் ஏதாவது ஒரு சாதி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாதிகள் 30% அல்லது
அதற்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அதிகாரங்களை கூடுதலாக பகிர்ந்தளிக்கலாம். குறைந்த
விகிதாச்சாரத்தை கொண்ட மக்களுக்கு குறைந்த அதிகாரமே வழங்கப்படும்.
மாற்று
மொழியை தாய்மொழியாகக் கொண்ட சாதியினருக்கு அவர்களது விகிதாச்சரப்படி பிரதிநிதித்துவம்
வழங்கப்படும். ஆனால் அவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில தலைமைப் பதவிகள் வழங்கப்படாது.
2. சாதி வாரியாக
தொகுதிகளை, மாவட்டங்களைப் பிரித்தல்
தமிழ்த்
தேசியக் அரசு அமையும்பட்சத்தில் அது மாவட்டங்களை மாநிலங்களாக பாவிக்கும். சாதிவாரி
கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த சாதியினர் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள்
என்பது தெரியவரும். அதன்படி அந்த மாவட்ட அரசுகளுக்கான அதிகாரம் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
சாதி விகிதாச்சாரப்படி (அ) பெரும்பான்மை மாவட்டங்கள் (ஆ) சமநிலை மாவட்டங்கள் (இ) பன்முக
மாவட்டங்கள் (ஈ) பொது மாவட்டங்கள் என்று பிரிக்கலாம்.
இதில்
ஏதாவது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகமாக வசித்தால்
அது அவர்களுக்கான பெரும்பான்மை மாவட்டமாக கருதப்படும். இரண்டு சாதிகள் சமநிலையில் இருந்தால்
அது அந்த சாதிகளுக்கான சமநிலை மாவட்டங்கள் என்று கருதப்படும். ஒரு மாவட்டத்தில் இரண்டுக்கும்
மேற்பட்ட சாதிகள் சமநிலையில் இருந்தால் அது பன்முக மாவட்டமாக கருதப்படும். ஒரு மாவட்டத்தில்
எந்த சாதியினரும் 10%-க்கும் மேலாக இல்லை என்றால் அது பொது மாவட்டங்களாக கருதப்படும்.
இது மதங்களுக்கும் பொருந்தும். மதங்களில் சாதி முறையை பின்பற்றுபவர்களாக இருந்தால்
அந்த முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
3.
சாதிச் சங்கங்களின் ஜனநாயக கட்டமைப்பு
சாதிச்
சங்கங்கள் தங்கள் சங்கங்களை ஜனநாயக முறைப்படி கட்டமைத்து நடத்த வேண்டும். குறிப்பிட்ட
கால இடைவெளியில் தேர்தல் நடத்தி சங்கத் தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு
கிராமச் சாதிச் சங்கங்களும் தங்கள் சங்கத்திற்கான நிர்வாகிகளை தேந்தெடுத்துக் கொள்ள
வேண்டும். ஊராட்சி மன்ற உறுப்பினர்களைப் போல ஒவ்வொரு கிராமச் சாதிச் சங்கமும் அந்தந்த
கிராமத்தில் உள்ள தெருக்கள், அல்லது பிரிவுகளுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில்
உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு
உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, பதவி வகித்த ஒருவரே கிராமச் சாதிச் சங்கத்திற்கு தலைவராக
போட்டியிட முடியும். கிராமச் சாதிச் சங்கத்தின் தலைவராக இருந்த, இருப்பவக்ள் மட்டுமே,
ஒன்றிய, வட்டார தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வட்டார
சங்கத் தலைவர்கள் மட்டுமே மாவட்ட சாதிச் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். சாதிச்
சங்கத் தேர்தல்களை தேர்தல் ஆணையமே நடத்தித் தரும். இது மதங்களுக்கும் பொருந்தும்.
4. தேர்தல் ஆணையம், தேர்தல் முறை
தமிழ்த்
தேசியத்திற்கான தேர்தல் ஆணையம் பெரும்பான்மை சாதி உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக இருக்கும்.
இந்த ஆணையம் ஒவ்வொரு சாதிச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையமாகவும் செயல்படும். ஒவ்வொரு
சாதி அமைப்புகளும் ஜனநாயக முறைப்படி செயல்படுவதை, அதன் பொறுப்பாளர்கள் ஜனநாயக முறைப்படி
தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
ஒரு
பெரும்பான்மை மாவட்டம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான மாவட்டமாக ஒதுக்கப்படும்பட்சத்தில்
அந்த மாவட்ட ஆட்சியாளர் பதவிக்கு அந்த சாதியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமே போட்டியிட
வேண்டும். அந்தச் சூழலில் ஏற்கனவே அவர்கள் சாதிச் சங்கங்களில் செயல்பட்ட விதம். மாவட்ட
அளவில் போட்டியிடும் தகுதியை அவர் பெற்றிக்கிறாரா என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய
வேண்டும்.
உதாரணமாக
கோவை மாவட்டம் கவுண்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த மாவட்டத்தின்
எல்லைக்குள் வரும் வட்டார கவுண்டர் சங்கங்களின் தலைவர்களாக இருந்தவர்கள் அந்த மாவட்ட
ஆட்சியாளர் பதவிக்குப் போட்டியிடலாம். இவ்வாறு போட்டியிடுபவர்களை அந்த மாவட்ட கவுண்டர்
சங்கம் முன்மொழிய வேண்டும். அந்தச் சங்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை முன்மொழியலாம்.
அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்களிலிருந்து ஒருவரை பொது மக்கள் வாக்களித்து ஆட்சியாளராகத் தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல
ஏதாவது ஒரு வட்டாரத்தின் கவுண்டர் சாதிச் சங்கத் தலைவராக பதவி வகித்தவரும் மாவட்டச் சங்கம் அனுமதித்தால் பெற்று போட்டியிடலாம்.
அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கும்போது அந்தந்தச் சாதிச் சங்கங்கள் தங்கள்
வேட்பாளர்களை அறிவிப்பார்கள். பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களித்து பிரதிநிதியை தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்களுக்கு தற்செயலான (ரேண்டம்) முறையில் அல்லது சுழற்சி முறையில் பதவி வழங்கப்படும்.
இதே முறையில்தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களும் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
5.
மாவட்ட, நகர அரசுகள்
தமிழ்ச்
சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
என்ற காரணத்தால்தான் மாவட்ட, நகர அரசுகளை உருவாக்க அல்லது அவற்றுக்கு அதிக அதிகாரங்களை
வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் தேசிய அரசியலில் பங்கு பெற இயலாத அல்லது
குறைந்த அதிகாரத்தை பெறும் பிரிவினர் அதிகாரம் பெறுவதை உறுதி செய்யலாம்.
உதாரணமாக
ஒரு மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சாதி அல்லது சாதிகள் 50% அதிகாரங்களை தங்களிடம்
வைத்துக் கொண்டு மீதியுள்ள 50% அதிகாரங்களை அடுத்த நிலையில் உள்ள சாதிகளுக்கு பிரித்துக்
கொடுத்து விட வேண்டும்.
6.
முதல்வர், பதவிப் பகிர்வு
முதலமைச்சர்
பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ளலாம். உதாரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில்
முக்குலத்தோர் 20%, வன்னியர் 20%, கவுண்டர் 20%, பள்ளர் 20%, பறையர் 20% என்று அறியப்படுகிறது
என்று வைத்துக்கொள்வோம். முதல் ஆட்சிகாலத்தில் முதல்வர் பதவி முக்குலத்தோருக்கும் துணை
முதல்வர் பதவி வன்னியருக்கும் ஒதுக்கப்படலாம். கவுண்டர்களுக்கு தொழில்துறையும், பள்ளர்களுக்கு
நிதித்துறையும், பறையர்களுக்கு காவல் துறையும் ஒதுக்கப்படலாம்.
இதையே
இரண்டாம் ஆட்சி காலத்தில் வன்னியருக்கு முதல்வர் பதவியும் முக்குலத்தோருக்கு துணை முதல்வர்
பதவியும் ஒதுக்கப்படலாம். மூன்றாம் ஆட்சி காலத்தில் கவுண்டர்களுக்கு முதல்வர் பதவியும்
பள்ளர்களுக்கு துணை முதல்வர் பதவியும் முறையே மற்ற சாதிகளுக்கு தொழில்த் துறை, நிதித்துறை,
காவல்துறை என்று ஒதுக்கப்படலாம். இதே முறையில் இந்த 5 சாதிகளுக்கும் முதல்வர் பதவியும்
மற்ற பதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான சுழற்சி ஆட்சி முறையை ஏற்படுத்தலாம்.
இதற்கான கணினி திட்டத்தை வடித்து அதன் மூலம் தற்செயலாக (ரேண்டமாக) பதவிகளை தேர்வு செய்ய
வழிவகுக்கலாம்.
சுழற்சி
முறையில் அல்லது தற்செயல் முறையில் ஒதுக்கப்படும் பதவி, துறைகளை ஏற்கமாட்டோம் என்றும்
யாரும் மறுக்க முடியாது, மறுக்கக் கூடாது.
எஞ்சியுள்ள
சாதியினருக்கு அவர்களின் விகிதாச்சாரப்படி அவர்களுக்கான அதிகாரத்தை, துறைகளை பகிர்ந்தளிக்கலாம்.
முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித்
தகுதி, ஏற்கனவே வகித்த பதவியில் அவர் செயல்பட்ட விதம் போன்றவை கூடுதல் தகுதிகளாக எடுத்துக்
கொள்ளப்படும். முதலமைச்சர் வேட்பாளருக்கு வயதுத் தகுதி 38 ஆகவும். மாவட்ட ஆட்சியருக்கான
வயதுத் தகுதி 33 ஆகவும் இருக்கும். இந்த ஆட்சியாளர்களின் வயது வரம்பு 60 ஆகும். அதாவது
55 வயதுக்குப் பின்னர் ஒருவர் மேற்படி பதவிகளுக்குப் போட்டியிட முடியாது. இருமுறைக்கு
மேல் ஒருவர் இந்தப் பதவிகளை வகிக்க முடியாது.
6.
சாதியினருக்கான பொறுப்புக்கள், கடமைகள்
சாதிகளுக்கான
அதிகாரப் பகிர்வு என்பது அவர்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதே ஆகும். அது மற்ற சாதியினரை
அல்லது குறிப்பிட்ட சாதியினரை அடக்கியாள்வதற்கு, அல்லது ஆகாது. எனவே ஒவ்வொரு சாதியினரும்
தங்களுக்கு வழங்கப்படும் இறையாண்மை அதிகாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு,
அதைத் தவறாக பயன்படுத்தாமல் இறைவனுக்குக் கட்டுப்பட்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு
இல்லாமல் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்
என்று குற்றச் சாட்டு எழுந்து அது நிரூபிக்கப்பட்டால் பின்னர் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். ஒரு
சாதியினர் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால்
அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழக்க நேரிடும். அந்தத் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றப்படும்.
இதுபோன்ற
குற்றச் சாட்டை அந்தச் சமுதாயச் சங்கமே கொண்டு வரமுடியும். தனிநபர்கள் கொண்டு வரமுடியாது.
ஒரு சமுதாயம் மற்றொரு சமுதாயத்தின் மீது பொய்யான குற்றச் சாட்டைக் கூறினால் அதற்கேற்ற
வகையில் அதன் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும். இந்த அதிகாரக் குறைப்பு தற்காலிகமானதாக,
சிறிது காலம் நீடிப்பதாக இருக்கலாம்.
*****