Saturday, December 7, 2019

நாட்டார் {தென் கவிர் நாடு}


நாட்டார் பற்றிய பதிவில் கானாடு - கோனாடு நாட்டவர்கள் பற்றி அறிந்தோம் . தற்போது தென்கவிர்நாட்டின் நாட்டார்களை வாசிப்போம்.
ஜெயசிங்க குலகால வளநாட்டில் அமைந்திருந்த தென்கவிர் நாட்டில் தேவதான நிலத்திற்கு ஆட்சியாளரால் வழங்கப்பட்ட இறையிலிச் சலுகையை அறிவிக்கும் திருவப்பூர் கல்வெட்டில் {IPS: 155}
1.வேளான் சுந்தரத்தோளுடையான்
2.கேரளன் பொற்சாத்தன்
3.அழகியசோழத் தென்கவி நாட்டு மூவேந்த வேளான்
4.அரயன் கூத்தன்
5.திருமங்கை நம்பி
6.சாந்தி ஐய்யாறு தேவன்
7.வேளான் சிறுச்சந்தன்
8.பிச்சன் பெரியான்
9.வேளான் அரசன்
10.தென்னவன் பல்லவதரையன்
11.கங்கைகொண்ட சோழக்காடவதரையன்
12.செம்பியன் பல்லவதரையன்
13.வேளான் பக்கன்
14.வல்லநாட்டுக்கோன்
-ஆகியோர் ஒப்பமிட்டவர்களாக வருகின்றனர்.
நாயனார் சேமப்பிள்ளையாரின் ஆணைப்படி இறையிலி திருவிடையாட்ட நிலக்கொடை தென்கவிநாட்டாரால் வழங்கப்பட்டதாகக் கூறும் கல்வெட்டில் {IPS: 371}
1. கவிநாட்டு வேளான்
2. ஜயங்கொண்ட சோழப் பல்லவதரையன்
3. அரையன் ஆட்கொண்டான்
4.அரையன் வேளான்
5.வல்லத்து வேளான்
6.வேளான் எழுபோதழகியான்
7.வேளாநாத(ன்?)
8.செம்பியன் கோனார்
9.வில்லவராயன்
10.வல்லநாட்டு வேளான்
11.பெரியான் சாத்தன்
12.அச்சன் பட்டன்
13. மும்முடிசோழவேள் தென்கவிநாட்டு வேளான்
14.அருள்மொழி வளவதரையன்
15.ஜெயங்கொண்ட வேளான்
16.நாட்டுக்கணக்கு ஸ்ரீராமதேவன்
17.திருவைய்யாறு உடையான்
என இரண்டு பட்டர்கள் தவிர்த்து மற்றவர்கள் வரிசைப்படி ஒப்பமிட்டுள்ளனர்.
சாமந்தனாரின் திருநக்ஷ்த்ர நாளன்று திருவரங்குளச் சிவாலயத்தில் நிறுவப்பட்ட அரசகண்டராமன் சந்திக்குரிய செலவிற்காகக் கவிநாட்டுக் குளத்தூரின் வரித்தொகை வழங்கப்படுவதாகக் கூறப்படும் கல்வெட்டில் {IPS:428} தென்கவிநாட்டாராக,..
1.முடிகொண்டசோழத் தென்கவிநாட்டு வேளான்
2.செம்பியன் தென்கவிநாட்டுக்கோன்
3.குலோத்துங்கசோழ வேளான்
4.மும்முடிச்சோழ வல்லநாட்டு வேளான்
5.அரவன் வேளான்
6.வில்லவராயன்
7.பெரியரசன்
8.வேளான் பெரியான்
9.அரவன் இடங்கொண்டான்
10.பிள்ளையான் பெரியான்
11.வேளான் தேவன்
12.மும்முடிச்சோழ தென்கவிநாட்டு வேளான்
13.ஸ்ரீராமதேவன் முத்தன் சீருடையான்
14.இராச சுந்தரன்
15. வேளான் மன்றன்
16.திருவாயக்குலநாதன்
17.திருவரங்கமாணி
18.நாட்டுக்கணக்கு திருவப்பூருடையான்
-ஆகியோர் அரவன் பட்டன் நீங்கலாக ஒப்பமிட்டுள்ளனர்.
மேற்கூறப்பட்ட மூன்று கல்வெட்டுகளும் 13ம் நூற்றாண்டிற்குரியனவாகும். இவற்றில் அரையர் ஓரிருவரே காணப்பட, வேளான்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். 14ம் நூற்றாண்டிற்கான கல்வெட்டுகளில் {IPS:590-691} தென்கவிநாட்டாரின் செயல்பாடுகள் கூறப்படுகிறது. இவற்றில் வேளான்-அரையர் எண்ணிக்கையில் காணப்படும் இடைவெளி குறைந்து காணப்படுகிறது. மேலும் வேளான்களும் அரையர் எனச் சுட்டப்பெறுவதை {IPS: 371, அரையன் வேளான்} கவனத்தில் கொண்டால் அரையரின் ஆதிக்கம் வலுவடைந்ததை உணரலாம். "தென்சிறுவாயில் நாட்டு வேளான் நல்லூருடையான் குருகுலத்தரையன்" {IPS:636} -எனும் குறிப்பு உடையான்- வேளான்-அரையன் தொடர்பைத் தெளிவாக உணர்த்தும். கவிநாட்டுக் கள்ளர்பால் {கள்ளருக்குரியது அல்லது கள்ளரைச் சார்ந்தது} எனும் குறிப்பு தென்கவிர்நாட்டில் கள்ளர் சமூகத்தவரே அரையர்களாகக் காணப்படுகின்றனர் என்பதைச் சுட்டி நிற்கும். இடையரின் பிரதிநிதிகளாக "கோன்" எனும் பின்னொட்டுடன் ஓரிருவர் நாட்டார்களாக இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கது.
அடுத்ததாக நாட்டார் பற்றியும் நாடுகள் பற்றியும், இத்துடன் செய்த மூன்று பதிவுகளின் ஆய்வையும் காண்போம்.
Reference..
1. IPS: 155, 371, 428, 590, 691
2.புதுக்கோட்டை 1600 வரை, {Dr. Manickam}
Thanks to,
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
{கல்வெட்டுப்படங்கள்}
நன்றி!,
அன்பன்: கி.ச.முனிராஜ்வாணாதிராயன்.






No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...