தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான க. அதியமான், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் ராஜ்குமார் பழனிச்சாமி, கள்ளர் சட்டப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தேவன் ஆகியோர் தடையை மீறி ஜல்லிக் கட்டு நடத்த முயன்ற காரணத்திற்காக கடந்த 16/01/2016 அன்று பாலமேட்டில் வைத்து கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் ஜனவரி 21ம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டு 22ம் தேதி மதுரை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையிலிருந்து விடுதலை செய்ப்பட்ட அவர்களை மறத்தமிழர் சேனைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், முத்துக்குமார், வீரகுல அமரன் இயக்கத் தலைவர் கி.ரா. முருகன் ஆகியோர் சிறை வாசலில் வைத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.
https://www.youtube.com/watch?v=MlDH2FCbs6Q