Saturday, January 23, 2016

தடையை மீறி ஜல்லிக் கட்டு நடத்த முயன்று கைது






தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான க. அதியமான், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் ராஜ்குமார் பழனிச்சாமி, கள்ளர் சட்டப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தேவன் ஆகியோர் தடையை மீறி ஜல்லிக் கட்டு நடத்த முயன்ற காரணத்திற்காக கடந்த 16/01/2016 அன்று பாலமேட்டில் வைத்து கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் ஜனவரி 21ம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டு 22ம் தேதி மதுரை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலை செய்ப்பட்ட அவர்களை மறத்தமிழர் சேனைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், முத்துக்குமார், வீரகுல அமரன் இயக்கத் தலைவர் கி.ரா. முருகன் ஆகியோர் சிறை வாசலில் வைத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

https://www.youtube.com/watch?v=MlDH2FCbs6Q

முக்குலத்தோர் அரசியல் - புதுமலர் பிரபாகரனின் பேட்டி

மறத்தமிழர் சேனை கட்சியின் மாநில அமைப்பாளராக இருந்து வரும் புதுமலர் பிரபாகரனின் பேட்டி. 


https://www.youtube.com/watch?v=wXHC9F5L8t8




Friday, January 1, 2016

முக்குலத்தோர் அரசியல் - ராஜா மறவன் பேட்டி


தென் தமிழகத்தில் முக்குலத்தோர் நலன்களை பாதுகாக்கும் அரசியலை முன்னெடுக்கும் ராஜா மறவன் தனது தீ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி 40 இடங்களில் போட்டியிடும் என்று அறிவித்து 10 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். அவரது பேட்டியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=vPXJhyPQ8eM
https://www.youtube.com/watch?v=GiCF5f-rqD4
https://www.youtube.com/watch?v=_l3F89BxpeU

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...