"பெரியார்" தனிமனிதர் இல்லை...!
அநேக நெருக்கடியான சூழலில் இதை எழுத வேண்டாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் சிலவற்றை உணர்வதற்கும், உணர்த்துவதற்கும் இந்த பதிவு தேவையாகிறது.
இன்றைய சூழலில் பெரியார் மீது வைக்கப்படுகின்ற விமர்சனம் தேவையா ? தேவையற்றதா ? என்பதை உங்களில் பார்வையில் இருந்தே விளக்குறேன். பெரியாரை நீங்கள் இறந்துபோன ஒரு நபராக, ஒரு தத்துவத்தை பிடித்து நடந்து, அவரின் தத்துவ வாரிசுகளை தமிழர் அரசின் அதிகாரத்து உயர்த்திய தனிமனிதனாக பார்க்கிறீர்களா ? இல்லை இறந்துபோன ஒரு தத்துவத்தை உயிர்ப்பிக்க, அந்த தத்துவத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட, பொய்யான வரையறைகளின் படி புனிதப்படுத்தப்பட்ட, அந்த தத்துவத்தின் நீட்சி இந்த இனத்திற்கு செய்த, செய்துகொண்டு இருக்கிற துரோகங்களை எல்லாம் பத்திரமாக மூடி மறைக்கிற ஒரு கேடயமாக பார்க்கிறீர்களா ?
உண்மையில் எனது பார்வை இரண்டாவது. ஏன்எனில் ஐம்பது ஆண்டுகாலமாக இந்த மண்ணில் திராவிட அரசியல் செய்த துரோகங்கள் விமர்சிக்கப்படும் போதெல்லாம், மண்ணுரிமை நாம் இழந்துபோனது திராவிடர்களால் மட்டுமே என்று பேசும் போதெல்லாம், தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் முற்றிலுமாக சீரழிக்க பட்டுவிட்டதே அதற்கு காரணம் திராவிட அரசியலே என்று நாம் பேசுகிற போதெல்லாம், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் உறவுகள் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸும் அதனுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் மட்டுமே என்று நாம் பேசுகிற போதெல்லாம், நமது பேச்சுக்கு தொடர்பற்று "பெரியார் மட்டும் இங்கு இல்லாவிட்டால், நீங்கள் ?" என்று திராவிட கூடாரங்கள் கூக்குரல் எழுப்பும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது பெரியார் ஒரு தனிநபரல்ல, திராவிடர்களின் துரோகங்களை, திராவிடம் செய்த அயோக்கியதனைகளை மூடி மறைக்கின்ற பேராயுதம்.
இப்போது சொல்லுங்கள், போர்க்களத்தில் நிற்கின்ற ஒருவன், நூற்றாண்டுகால எதிரியை போர்க்களத்தில் வெல்லவேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற ஒருவன், எதிரியின் பலவீனங்களையெல்லாம் மூடி மறைக்கும், அவர்களை சரியவிடாமல் பாதுகாக்க அவர்கள் பயன்படுத்தும் பொய்யாக புனிதமாக்கப்பட்ட கேடயத்தை கட்டுடைக்க வேண்டாமா ? இல்லையா ?.
எமது பெரியாரிய விமர்சனகள் கூட, தனிநபரை நோக்கியது அல்ல, எதிர்த்தளத்தின் தத்துவமாக முன்னிறுத்தப்படுகிற தனித்த பெயரினை மட்டுமே.
பெரியார் இந்த மண்ணில் புனிதமாக்கப்படுவதால் என்ன நிகழப்போகிறது ? என்று நமது உறவுகள் கூட சிந்திக்கலாம். ஆம் அது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. ஏன் என்றால், ஏற்கனவே புனிதமாக்கி கட்டமைக்கப்பட்ட ஒன்றை, ஒரு தத்துவத்தின் குறியியிடாக இருக்கும் ஒன்றை உண்மையான விமர்சனத்தை கூட வைக்காமல் நகர்ந்துவிட முடியாது. எதிர்கால சந்ததிக்கு உண்மையான அரசியலை நாம் அடையாளம் காட்டவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது, நமது அண்ணன் சீமான் நமக்கு காட்டியது போல.
உங்கள் ஆழ்மனதில் ஒன்றை கேட்டுக்கொள்ளுங்கள், 1970 களில் நமது தந்தையர்கள் அரசியல் அறிவில் தெளிவுபெறாமல் இருந்தது போல, இன்று நாம் இருந்திருந்தால் இன்று பெரியாரை இவர்கள் கொண்டாடத்தேவையில்லை, கருணாநிதியையே கொண்டாடி இருப்பார்கள். ஆனால் காலச்சூழலில் இப்போதை தலைமுறையாகிய ஓரளவிற்கு அரசியல் அறிவுபெற்று வருகின்ற இந்த சூழலில், கருணாநிதியை புனிதப்படுத்ததுதலில் எந்த பயனும் இல்லை, எவரும் நம்பப்போவதுமில்லை. திராவிட அரசியலில், நிகழ்காலத்தில் புனிதப்படுத்த எந்த அடையாளங்களும் இல்லாத சூழலில் திராவிடம் தனது இருப்பை தக்கவைத்து கொள்ள ஏற்கனவே புனிதப்படுத்தப் பட்ட ஒன்றை தனது அடையாளமாக கட்டமைத்து தனது துரோகங்களை மறைக்க நினைக்கிறது. திராவிட அரசியலில் இந்த மண்ணில் நிகழ்ந்த துரோகங்களுக்கெல்லாம் மறைக்க பயன்படுத்தும் புனிதப்படுத்தப்பட்ட அடையாளம் "பெரியார்"
உண்மையில் பெரியார் மட்டும் "போலி கடவுள் மறுப்பு" கொள்கையை முன்மொழியாமல் இருந்திருந்தால் இன்றைய சூழலில் திராவிட தளகர்த்தர்கள் அனைவரும் பெரியாருக்கு ஊருக்கு ஊர் கோவிலை கட்டி, ஆறுகால பூஜை செய்து, திராவிடத்தை தனி மதமாக அறிவித்து இந்நேரம் பல்கி பெருகி இருப்பார்கள். ஆனால் கடந்தகால வாழ்க்கை அதற்கும் இடம்தரவில்லை.
எனவேதான் இந்த பெரியார் புனிதப்படுத்தும் படலம் முழுவீச்சாக இங்கே நடக்கிறது. திருச்சியில் "கருஞ்சட்டை ஊர்வலம், மாநாடுகூட" பெரியார் புனிதப்படுத்துதலின் வந்த தொடர்ச்சிதான்.
ஸ்டாலினிடம் இருந்து கட்டளை திராவிட இயக்கங்களுக்கு வருகிறது, திராவிட இயக்கங்கள் ஏற்கனவே திமுகவின் இரண்டாவது பிரிவு என்பதால் இந்த இயக்கங்களால் பொதுவான ஒரு ஒருங்கிணைப்பை செய்ய இயலவில்லை. அதை செய்ய ஒரு ஆள் தேவைப்படுகிறது. 160 இயக்கங்கள், அவற்றில் பெரும்பாலான இயக்கங்களிடம் அவர்களின் பெயரை பயன்படுத்த முறையான அனுமதி பெறவில்லை. தமிழகத்தில் பெரிய ஆளுமைகள் அனைவரையும் அவர்களிடம் ஒப்புதல் பெறாமலேயே அவர்களின் பெயரினை போட்டு துண்டுசீட்டுகள் பிரசுரிக்கப்பட்டது (இன்று ஊர்வலத்திற்கு வராதவர்கள் எவரிடமும், அவர்களின் பெயரினை பயன்படுத்த அனுமதி பெறவில்லை என்பதே உண்மை). இப்படியான அவசரகதியாக கருஞ்சட்டை ஊர்வலத்தையும், கைத்தடியும் தூக்கவேண்டிய அவசியம் என்ன ?
காவிகளை எதிர்க்கவா ? காவிகள் இங்கே எங்கு இருக்கிறார்கள் ? உண்மையில் காவிகளை எதிர்க்கவே இந்த கருஞ்சட்டை பயணம் என்றால், முறைப்படி காவிகள் கொட்டாரமடிக்கிற மாநிலங்களில் இதை செய்து இருக்கலாமே ? குறைந்த பட்சம் இந்த கருஞ்சட்டை பயணத்தை காவிகளை எதிர்க்கும் பொருட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலிலாவது அவர்கள் செய்திருக்கலாமே ? இது உண்மையில் காவிகளை எதிர்க்கும் பேரணியல்ல.
மாறாக எல்லா எலிக்களையும் மயக்கி இசைவாசித்து, ஆற்றில் இறங்கிவிடும் சூதகம்தான், ஸ்டாலின் அரசியலுக்கு பலியிடப்படும் கறுப்பாடுகள் அவை. இவைகளை முன்னின்று நடத்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் வாழும் வல்லபாய் படேல் திருமுருகன் காந்தி.
இந்த கருஞ்சட்டை ஒருங்கிணைவு முழுக்க முழுக்க தமிழ்த்தேசியத்தின் எதிர்நிலை தத்துவமான ஆரியம் போலவே திராவிடம் செய்கின்ற இன்னொரு சூது. உண்மையில் திராவிட அரசியல், தமிழ்த்தேசியத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற பயத்தின் வெளிப்படையான வெளிப்பாடு.
இன்றைய கருஞ்சட்டை மாநாட்டில் ஆரிய-பார்ப்பன அரசியல் அதிகாரத்தை எதிர்த்து ஏதேனும் தீன்மானம் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை தீர்மானம் காவிகளுக்கு எதிராக நிறைவேற்ற பட்டிருந்தால், அந்த பார்ப்பன எதிர்ப்பு தன்னைத்தானே காஸ்மீர் பார்ப்பனன் என்று பேரறிவுப்பு செய்து கொண்ட காங்கிரசின் தலைவர் ராகுல் காந்திக்கும் பொருந்துமா ? ஒருவேளை பொருந்தினால் நாளை காங்கிரசோடு திமுக கூட்டணி அமைத்தால் இந்த கருஞ்சட்டை கூட்டம் எதிர்க்குமா ?
அப்படியெல்லாம் நிகழவில்லை என்றால் இன்று புனிதப்படுத்தப்படும் பெரியாரும் அவரின் தடியும் ஆரிய-பார்ப்பனர்களை எதிர்க்க இல்லை என்பது உண்மைதானே ?.
கருஞ்சட்டையின் நோக்கம் ஆரிய-பார்ப்பன எதிர்ப்பு இல்லை என்ற பட்சத்தில்,அவர்களின் இந்த நோக்கமற்ற ஒன்றுகூடலின் நோக்கமென்ன ?
இந்த மண்ணில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியலை எதிர்க்கத்தானே இந்த ஒன்றுகூடல்?
அப்படியெனில் அங்கே புனிதப்படுத்தப்பட்டு, கட்டமைக்கப்படும் பெரியார் எனும் பிம்பம் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கத்தானே ?
இந்த கேள்விகளின் தொடர்ச்சி, பெரியார் என்ற புனிதப்படுத்தட்ட பிம்மம், மேலும் புனிதப்படுத்த படுவதன் நோக்கம் தமிழ்த்தேசியத்தின் களங்களை சமாளிக்கவே. எனவே களத்தில் தடைகளை உடைப்பதே நமக்கான வெற்றியாக இருக்க முடியும்.
தமிழ்த்தேசியத்தின் அடையாளத்தை தவிர, இந்த மண்ணில் புனித்தபடுத்தப்படும் எந்த அடையாளங்களும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதே. எனவே நாம் இந்த மண்ணில் விழிப்போடு இருக்கவேண்டும்.
இங்கே துரோக அரசியல்கள் சில புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் பின்னே மறைந்துகொண்டு தப்பிக்க நினைக்கிறது.
காவிகளும் - கருஞ்சட்டைகளும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களே...!
இன்னும் பெரியார் வழியில் உங்களுக்கு சொல்லப்போனால்...
எப்படி ஆரிய-பிராமண எதிர்ப்பை, அதன் புனிதப்படுத்தப்பட்ட வடிவமாக இருந்த பிள்ளையாரை எதிர்த்து தனது பகுத்தறிவை பெரியார் நிலைநாட்டினாரோ...
அதேபோல திராவிட அரசியலின் எதிர்ப்பை, அந்த திராவிட அரசியலின் புனிதப்படுத்தப்பட்ட பிம்பமாக திராவிடர்கள் கட்டமைக்கும் "பெரியார்" எனும் பிம்பத்தை எதிர்ப்பதும் ஒருவகையான, இந்த நேரத்தில் மிகவும் அவசியமான செயல்பாடு என நான் உளமார நம்புறேன்.
அதை மிகவும் நெகிழ்ச்சியோடு செய்வேன்.
பெரியார் தனிமனிதர் இல்லை, தமிழ்த்தேசியத்திற்கு எதிரான தத்துவக் குறியீடு.
Senthilnathan Dhurai
https://www.facebook.com/senthilnathan.dhurai.3/posts/124128801949083
அநேக நெருக்கடியான சூழலில் இதை எழுத வேண்டாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் சிலவற்றை உணர்வதற்கும், உணர்த்துவதற்கும் இந்த பதிவு தேவையாகிறது.
இன்றைய சூழலில் பெரியார் மீது வைக்கப்படுகின்ற விமர்சனம் தேவையா ? தேவையற்றதா ? என்பதை உங்களில் பார்வையில் இருந்தே விளக்குறேன். பெரியாரை நீங்கள் இறந்துபோன ஒரு நபராக, ஒரு தத்துவத்தை பிடித்து நடந்து, அவரின் தத்துவ வாரிசுகளை தமிழர் அரசின் அதிகாரத்து உயர்த்திய தனிமனிதனாக பார்க்கிறீர்களா ? இல்லை இறந்துபோன ஒரு தத்துவத்தை உயிர்ப்பிக்க, அந்த தத்துவத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட, பொய்யான வரையறைகளின் படி புனிதப்படுத்தப்பட்ட, அந்த தத்துவத்தின் நீட்சி இந்த இனத்திற்கு செய்த, செய்துகொண்டு இருக்கிற துரோகங்களை எல்லாம் பத்திரமாக மூடி மறைக்கிற ஒரு கேடயமாக பார்க்கிறீர்களா ?
உண்மையில் எனது பார்வை இரண்டாவது. ஏன்எனில் ஐம்பது ஆண்டுகாலமாக இந்த மண்ணில் திராவிட அரசியல் செய்த துரோகங்கள் விமர்சிக்கப்படும் போதெல்லாம், மண்ணுரிமை நாம் இழந்துபோனது திராவிடர்களால் மட்டுமே என்று பேசும் போதெல்லாம், தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் முற்றிலுமாக சீரழிக்க பட்டுவிட்டதே அதற்கு காரணம் திராவிட அரசியலே என்று நாம் பேசுகிற போதெல்லாம், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் உறவுகள் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸும் அதனுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் மட்டுமே என்று நாம் பேசுகிற போதெல்லாம், நமது பேச்சுக்கு தொடர்பற்று "பெரியார் மட்டும் இங்கு இல்லாவிட்டால், நீங்கள் ?" என்று திராவிட கூடாரங்கள் கூக்குரல் எழுப்பும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது பெரியார் ஒரு தனிநபரல்ல, திராவிடர்களின் துரோகங்களை, திராவிடம் செய்த அயோக்கியதனைகளை மூடி மறைக்கின்ற பேராயுதம்.
இப்போது சொல்லுங்கள், போர்க்களத்தில் நிற்கின்ற ஒருவன், நூற்றாண்டுகால எதிரியை போர்க்களத்தில் வெல்லவேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற ஒருவன், எதிரியின் பலவீனங்களையெல்லாம் மூடி மறைக்கும், அவர்களை சரியவிடாமல் பாதுகாக்க அவர்கள் பயன்படுத்தும் பொய்யாக புனிதமாக்கப்பட்ட கேடயத்தை கட்டுடைக்க வேண்டாமா ? இல்லையா ?.
எமது பெரியாரிய விமர்சனகள் கூட, தனிநபரை நோக்கியது அல்ல, எதிர்த்தளத்தின் தத்துவமாக முன்னிறுத்தப்படுகிற தனித்த பெயரினை மட்டுமே.
பெரியார் இந்த மண்ணில் புனிதமாக்கப்படுவதால் என்ன நிகழப்போகிறது ? என்று நமது உறவுகள் கூட சிந்திக்கலாம். ஆம் அது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. ஏன் என்றால், ஏற்கனவே புனிதமாக்கி கட்டமைக்கப்பட்ட ஒன்றை, ஒரு தத்துவத்தின் குறியியிடாக இருக்கும் ஒன்றை உண்மையான விமர்சனத்தை கூட வைக்காமல் நகர்ந்துவிட முடியாது. எதிர்கால சந்ததிக்கு உண்மையான அரசியலை நாம் அடையாளம் காட்டவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது, நமது அண்ணன் சீமான் நமக்கு காட்டியது போல.
உங்கள் ஆழ்மனதில் ஒன்றை கேட்டுக்கொள்ளுங்கள், 1970 களில் நமது தந்தையர்கள் அரசியல் அறிவில் தெளிவுபெறாமல் இருந்தது போல, இன்று நாம் இருந்திருந்தால் இன்று பெரியாரை இவர்கள் கொண்டாடத்தேவையில்லை, கருணாநிதியையே கொண்டாடி இருப்பார்கள். ஆனால் காலச்சூழலில் இப்போதை தலைமுறையாகிய ஓரளவிற்கு அரசியல் அறிவுபெற்று வருகின்ற இந்த சூழலில், கருணாநிதியை புனிதப்படுத்ததுதலில் எந்த பயனும் இல்லை, எவரும் நம்பப்போவதுமில்லை. திராவிட அரசியலில், நிகழ்காலத்தில் புனிதப்படுத்த எந்த அடையாளங்களும் இல்லாத சூழலில் திராவிடம் தனது இருப்பை தக்கவைத்து கொள்ள ஏற்கனவே புனிதப்படுத்தப் பட்ட ஒன்றை தனது அடையாளமாக கட்டமைத்து தனது துரோகங்களை மறைக்க நினைக்கிறது. திராவிட அரசியலில் இந்த மண்ணில் நிகழ்ந்த துரோகங்களுக்கெல்லாம் மறைக்க பயன்படுத்தும் புனிதப்படுத்தப்பட்ட அடையாளம் "பெரியார்"
உண்மையில் பெரியார் மட்டும் "போலி கடவுள் மறுப்பு" கொள்கையை முன்மொழியாமல் இருந்திருந்தால் இன்றைய சூழலில் திராவிட தளகர்த்தர்கள் அனைவரும் பெரியாருக்கு ஊருக்கு ஊர் கோவிலை கட்டி, ஆறுகால பூஜை செய்து, திராவிடத்தை தனி மதமாக அறிவித்து இந்நேரம் பல்கி பெருகி இருப்பார்கள். ஆனால் கடந்தகால வாழ்க்கை அதற்கும் இடம்தரவில்லை.
எனவேதான் இந்த பெரியார் புனிதப்படுத்தும் படலம் முழுவீச்சாக இங்கே நடக்கிறது. திருச்சியில் "கருஞ்சட்டை ஊர்வலம், மாநாடுகூட" பெரியார் புனிதப்படுத்துதலின் வந்த தொடர்ச்சிதான்.
ஸ்டாலினிடம் இருந்து கட்டளை திராவிட இயக்கங்களுக்கு வருகிறது, திராவிட இயக்கங்கள் ஏற்கனவே திமுகவின் இரண்டாவது பிரிவு என்பதால் இந்த இயக்கங்களால் பொதுவான ஒரு ஒருங்கிணைப்பை செய்ய இயலவில்லை. அதை செய்ய ஒரு ஆள் தேவைப்படுகிறது. 160 இயக்கங்கள், அவற்றில் பெரும்பாலான இயக்கங்களிடம் அவர்களின் பெயரை பயன்படுத்த முறையான அனுமதி பெறவில்லை. தமிழகத்தில் பெரிய ஆளுமைகள் அனைவரையும் அவர்களிடம் ஒப்புதல் பெறாமலேயே அவர்களின் பெயரினை போட்டு துண்டுசீட்டுகள் பிரசுரிக்கப்பட்டது (இன்று ஊர்வலத்திற்கு வராதவர்கள் எவரிடமும், அவர்களின் பெயரினை பயன்படுத்த அனுமதி பெறவில்லை என்பதே உண்மை). இப்படியான அவசரகதியாக கருஞ்சட்டை ஊர்வலத்தையும், கைத்தடியும் தூக்கவேண்டிய அவசியம் என்ன ?
காவிகளை எதிர்க்கவா ? காவிகள் இங்கே எங்கு இருக்கிறார்கள் ? உண்மையில் காவிகளை எதிர்க்கவே இந்த கருஞ்சட்டை பயணம் என்றால், முறைப்படி காவிகள் கொட்டாரமடிக்கிற மாநிலங்களில் இதை செய்து இருக்கலாமே ? குறைந்த பட்சம் இந்த கருஞ்சட்டை பயணத்தை காவிகளை எதிர்க்கும் பொருட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலிலாவது அவர்கள் செய்திருக்கலாமே ? இது உண்மையில் காவிகளை எதிர்க்கும் பேரணியல்ல.
மாறாக எல்லா எலிக்களையும் மயக்கி இசைவாசித்து, ஆற்றில் இறங்கிவிடும் சூதகம்தான், ஸ்டாலின் அரசியலுக்கு பலியிடப்படும் கறுப்பாடுகள் அவை. இவைகளை முன்னின்று நடத்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் வாழும் வல்லபாய் படேல் திருமுருகன் காந்தி.
இந்த கருஞ்சட்டை ஒருங்கிணைவு முழுக்க முழுக்க தமிழ்த்தேசியத்தின் எதிர்நிலை தத்துவமான ஆரியம் போலவே திராவிடம் செய்கின்ற இன்னொரு சூது. உண்மையில் திராவிட அரசியல், தமிழ்த்தேசியத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற பயத்தின் வெளிப்படையான வெளிப்பாடு.
இன்றைய கருஞ்சட்டை மாநாட்டில் ஆரிய-பார்ப்பன அரசியல் அதிகாரத்தை எதிர்த்து ஏதேனும் தீன்மானம் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை தீர்மானம் காவிகளுக்கு எதிராக நிறைவேற்ற பட்டிருந்தால், அந்த பார்ப்பன எதிர்ப்பு தன்னைத்தானே காஸ்மீர் பார்ப்பனன் என்று பேரறிவுப்பு செய்து கொண்ட காங்கிரசின் தலைவர் ராகுல் காந்திக்கும் பொருந்துமா ? ஒருவேளை பொருந்தினால் நாளை காங்கிரசோடு திமுக கூட்டணி அமைத்தால் இந்த கருஞ்சட்டை கூட்டம் எதிர்க்குமா ?
அப்படியெல்லாம் நிகழவில்லை என்றால் இன்று புனிதப்படுத்தப்படும் பெரியாரும் அவரின் தடியும் ஆரிய-பார்ப்பனர்களை எதிர்க்க இல்லை என்பது உண்மைதானே ?.
கருஞ்சட்டையின் நோக்கம் ஆரிய-பார்ப்பன எதிர்ப்பு இல்லை என்ற பட்சத்தில்,அவர்களின் இந்த நோக்கமற்ற ஒன்றுகூடலின் நோக்கமென்ன ?
இந்த மண்ணில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியலை எதிர்க்கத்தானே இந்த ஒன்றுகூடல்?
அப்படியெனில் அங்கே புனிதப்படுத்தப்பட்டு, கட்டமைக்கப்படும் பெரியார் எனும் பிம்பம் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கத்தானே ?
இந்த கேள்விகளின் தொடர்ச்சி, பெரியார் என்ற புனிதப்படுத்தட்ட பிம்மம், மேலும் புனிதப்படுத்த படுவதன் நோக்கம் தமிழ்த்தேசியத்தின் களங்களை சமாளிக்கவே. எனவே களத்தில் தடைகளை உடைப்பதே நமக்கான வெற்றியாக இருக்க முடியும்.
தமிழ்த்தேசியத்தின் அடையாளத்தை தவிர, இந்த மண்ணில் புனித்தபடுத்தப்படும் எந்த அடையாளங்களும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதே. எனவே நாம் இந்த மண்ணில் விழிப்போடு இருக்கவேண்டும்.
இங்கே துரோக அரசியல்கள் சில புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் பின்னே மறைந்துகொண்டு தப்பிக்க நினைக்கிறது.
காவிகளும் - கருஞ்சட்டைகளும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களே...!
இன்னும் பெரியார் வழியில் உங்களுக்கு சொல்லப்போனால்...
எப்படி ஆரிய-பிராமண எதிர்ப்பை, அதன் புனிதப்படுத்தப்பட்ட வடிவமாக இருந்த பிள்ளையாரை எதிர்த்து தனது பகுத்தறிவை பெரியார் நிலைநாட்டினாரோ...
அதேபோல திராவிட அரசியலின் எதிர்ப்பை, அந்த திராவிட அரசியலின் புனிதப்படுத்தப்பட்ட பிம்பமாக திராவிடர்கள் கட்டமைக்கும் "பெரியார்" எனும் பிம்பத்தை எதிர்ப்பதும் ஒருவகையான, இந்த நேரத்தில் மிகவும் அவசியமான செயல்பாடு என நான் உளமார நம்புறேன்.
அதை மிகவும் நெகிழ்ச்சியோடு செய்வேன்.
பெரியார் தனிமனிதர் இல்லை, தமிழ்த்தேசியத்திற்கு எதிரான தத்துவக் குறியீடு.
Senthilnathan Dhurai
https://www.facebook.com/senthilnathan.dhurai.3/posts/124128801949083