Sunday, November 22, 2020

ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்


 ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம் நேற்று 21- 11-2020 திருவரங்கம் திருச்சியில் இனிதே துவக்கப்பட்டது! இது பிறப்புவழி சாதிக்கு முந்தைய நிலையையும், திணைவழி குடிகளுக்கு பிந்தைய நிலையில் உள்ள குடிகளை, 18 குடிகளாக கொண்டு உருவாக்கம் செய்து,இது அனைத்து தமிழருக்குமான அடிப்படை அமைப்பாக செயல்படும் ஒரு மன்றம் அமைக்கப்பட்டு,அனைத்து குடிகளின் குறைபாடுகளுக்கும் தீர்வை தரும் உச்சநீதி குடிகளின் மன்றமாக செயல்படும், இன்னும் நிறைய விடையத்தை பற்றிய கொள்கைகள் முன்மொழியப்பட்டு தீர்மானங்களாக ஏற்கப்பட்டது....இதை ஒவ்வொன்றாக பிறகு வெளியிடுவேன்..... இதன் முழுவிபரத்தை மாநாடு போட்டு வெளியிடுவோம்......

ரெ.ரவிராசாளியார்
நிறுவனர் & தலைவர்
ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்
உலக மக்கள் இயற்கை வாழ்வியல் கழகம்

Tuesday, November 17, 2020

பத்திரம் பிழைத்திருத்தல்

 பத்திரம் பிழைத்திருத்தல்

பற்றிய தகவல்..!
கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல்
பத்திரத்தின் 20 தகவல்கள்....
1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.
2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.
4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.
5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.
6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.
7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.
8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 100/- மொத்த செலவும், 500 க்குள் முடியும்.
9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.
11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.
12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.
14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.
15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.
16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.
17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்
18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.
20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.
நன்றி :Mr.
Murugappan Muruga

Sunday, November 15, 2020

ராஜேந்திர சோழன் காலத்து தஞ்சை கள்ளர் வீரன்

கிபி 1015 ஆம் ஆண்டு சோழ பேரரசை மாமன்னர் ராஜேந்திர சோழத்தேவர் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லை வாயில் மாசிலாமணி ஈசுவரர் கோயிலுக்கு அச்சரப்பாக்கம் இசக்க நறிவாளன் என்பவர் 1200 குழி நிலத்தை தானமாக அளித்தார்.

கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை அதே பகுதியில் வாழ்ந்த நிலவுடைமையாளர்களிடம் இருந்து இசக்க நறிவாளன் விலைக்கு வாங்கியுள்ளார். நிலத்தை விலைக்கு அளித்தவர்கள்:-
"தஞ்சை வீரன் சூற்றி கள்ளன்"
'தஞ்சை வீரன் நாகன் அறியான்"
"அம்பத்துழான் சதுரன் ஒற்றி"
இம்மூவர் வசம் இருந்து 1200 குழி நிலம் பெறப்பட்டு திருமுல்லைவாயில் நாதருக்கு திருப்பணியாக கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகளில் வரும் "தஞ்சை வீரர்கள்" தஞ்சையில் இருந்து குடிபெயர்ந்து தொண்டை மண்டலத்தில் வாழ்ந்தாலும், தங்களது பெயர்களில் தஞ்சையையும் சேர்த்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இவர்களை வீரன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் , சோழப்படையில் பணியாற்றிய முக்கிய தளபதிகள் என அறியலாம். கள்ளன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் இவர்கள் கள்ளர் மரபினர் என்பது தெளிவாகும்
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் கள்ளர்களின் தனி படைபற்று இருந்ததை முதலாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு " காடும் நாடும் நகரங்களும் கள்ளப் பற்றும்" என குறிப்பிடுகிறது. (கல்வெட்டு எண் : 103 of 1897)
தஞ்சையில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலவுடைமை கொண்டவர்களாகவும், படைத் தளபதிகாளவும் இருந்துள்ளதை இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.
( கல்வெட்டு எண்: 684 of 1904)
தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்




Sunday, October 4, 2020

கள்ளர் போர்முறை


கள்ளர் என்ற பெயர் கள்ளர் சமூகத்துக்கு எதனால்?
___________
போரில் திருடுவது திருட்டுச் சமூகம் அல்ல. போர் சமூகம்.
வடுகப்புத்தி என்ன பன்னும்னா தமிழர்களின் முழு வரலாற்றை வெளிப்படுத்தாமல் தாங்கள் தமிழ்நாட்டை ஆண்டதில் இருந்து தமிழ்குடிகளின் வரலாற்றைத் தோண்டும். வடுகர்கள் காலத்தில் ஒரு தமிழ்க்குடி செய்த தொழிலை தமிழர்களின் குலத்தொழில் போல் சித்தரித்து தங்கள் ஆட்சியில் இருந்து செய்யப்பட்ட மாற்றங்களை தமிழர்களின் ஆரம்பக்காலம் தொட்டு செய்துவருவதாக பூச்சாண்டி காட்டி தமிழரின் மொத்த வரலாறே அதுதான் எனத் திரித்துக்காட்டும்.
இந்த முறையைப்பயன்படுத்தி தான்
1. ஆகவர் போர்முறை கள்ளரை திருட்டுக்கூட்டம் என்றும்
2. பார்ப்பார் பறையரை பறையடிப்பவன் என்றும்
3. மருத நிலப்பள்ளரை பண்ணை அடிமை என்றும்
4. போர்கலை பயிற்றுனர் சான்றாரை பணையேறி என்றும் கூறி திரித்தது.
இதுக்கு முன்னர் போட்ட பதிவுகளில் பறையர் பார்ப்பனர் என்றும் சான்றார் போர் கலைப் பயிற்றுனர் என்றும் அவர்கள் வடுகர் காலத்தில் முறையே பறை அடிப்போராக்கியும் பணையேறிகளாக்கியதையும் பதிவிட்டிருப்பேன். இப்போது கள்ளர் சமூகத்துக்கான மானுடவியல் காரணியை சொல்லியாக வேண்டும்.
கள்ளர் என்ற சமூகம் திருட்டுச் சமூகம் என்று சொல்வது போலியான காரணம். கள்ளர் சமூகம் உருவாக்கப்பட்ட போர் காரணியை தற்போது நடந்த போர்களோடு ஒப்பிட்டால் கள்ளர் சமூகம் உருவாக்கப்பட்டதற்கான காரணி புரியும்.
1. ஆனையிறவு இரண்டாம் முற்றுகையின் போது வதிரையண் ஃபாக்சு நடவடிக்கைக்காக பால்ராஜ் தலைமையில் புலிப்படை நீரில் இறக்கிவிடப்படுகிறது. சிங்களர் படை எண்ணிக்கை அதிகம். தமிழர்களின் புலிப்படை எண்ணிக்கை குறைவு. அதாவது 300 படத்தைப் போல. இந்நேரத்தில் புலிகள் செய்ய வேண்டியது சிங்களரின் படைத் தளவாடங்களை எல்லாம் கவர்வது. தங்களுடையாக்குவது. இப்போது இந்த கவர்தலை திருட்டுத்தொழில் எனலாமா?
2. மருதநாயகத்தின் போர் நுட்பங்களில் சில. போர்தொடுக்கும் முன்னர் எதிரி நாட்டின் சந்தை, நீர்நிலைகள், உணவு உற்பத்தி செய்யும் இடங்கள் அனைத்தையும் சூறையாடி அங்குள்ள பொருட்களை கவர்ந்து எதிரியின் பொருளாதார பலத்தை வீழ்த்துவது. அதுக்குப்பிறகு தான் போரே நடக்கும். இது போர் நுட்பமா? திருட்டுத்தொழிலா?
3. ஆனால் மருதநாயகத்தால் ஆப்பநாட்டு கொண்டயங்கோட்டை மறவர் சமூகத்தில் வந்த புலித்தேவனை மட்டும் எளிதில் வீழ்த்த முடியவில்லை. ஏன் எனத் தெரியுமா? புலித்தேவன் இந்த போர் நுட்பத்தை வழி வழியாக செய்துவந்த ஆநிரை மீட்கும் மறவர் வழிவந்த அரசன். அதனால் தன்னிடம் உள்ள பொருளாதார வளங்களை எதிரி திருடாமல் காக்கவும். எதிரி திருடிய பொருட்களை மீட்கவும் தெரிந்தவன். ஏன் புலித்தேவனே ஆநிரை கவர்ந்து எதிரியின் பொருளாதார பலத்தை வீழ்த்திய வரலாறுண்டு. அதனால் புலித்தேவன் என்ன திருடனா?
சங்காலத்தில் இருந்து (தமிழகம் முழுவதும்) மறவர் பாளையங்களின் காலம் வரை (புலித்தேவன் கீழிருந்த பாளையங்கள் மட்டும்) தமிழர் மரபில் ஆநிரை, யானை, எதிரி நாட்டின் பொருளாதார பலத்தை கவர்வதற்கென்றே தனி நுட்பங்களை தெரிந்த ஒரு போர் சமூகத்தை உருவாக்கி வைத்திருந்தனர் தமிழர். அதுதான் கள்ளர் சமூகம். ஆனால் வந்தேறி வடுகன் ஆட்சியில் தமிழ் வேந்தனான மும்முடிப் பாண்டியன் (சேர சோழ பாண்டிய நாடுகளை ஆழ்பவன்) வீழ்த்தப்படுகிறான்.
அதனால் தமிழகம் எங்கும் அரசமரபினர் தேடித்தேடி வீழ்த்தப்படுகின்றனர். இப்போது ஆநிரை கவர்தல், எதிரியின் பொருளாதாரத்தை வீழ்த்துதல் போன்ற நுட்பமான போர்முறைகளை செய்து வந்த சமூகம் என்னாகும்?
1. ஒன்று புதிய ஆட்சியாளர்களை எதிர்க்கும்.
2. அல்லது அவர்களுக்கு பணியும்.
3. அல்லது பக்கத்தில் இருக்கும் தமிழர் நாடுகளிலும் குட்டிக் கிராமங்களிலும் புகுந்து சூரையாடும்.
4. இல்லையெனில் சில கூட்டங்கள் புதியவர்களை எதிர்த்தும் சில கூட்டங்கள் ஆதரிக்கவும் செய்யும்.
நான்காவது காரணம் தான் வடுகர் ஆட்சிக்காலங்களில் நடக்கிறது.
புலித்தேவன் பரம்பரையும் வடுக கெட்டிபொம்முவும் பரம்பரைப் பகைவர். தென்பாண்டி நாட்டின் கீழக்குக் கடற்கரை பரதவ அரசியான டான் குரூசு பாண்டிமாதேவி படை மறவரும் ஈழ மறவரும் விசுவநாத நாயுடுவை ஓட விட்டு அடித்தவர்கள்.
ஆனால் இந்த வரலாற்றை மறைத்து சங்ககாலம் முதல் மறவர் பாளையங்களின் காலம் வரை அங்கீகரிக்கப்பட்ட ஆகவர் போர்தொழிலை செய்து வந்தோரை திருடரெனவும் அவர்களுக்கு தாங்கள் தான் ஆட்சியைக் கொடுத்து ஆள வைத்ததாகவும் சொல்லி வரலாற்றைத் திரிக்கிறது வடுகர் கூட்டம்.
______________
சங்ககாலத்தில் தமிழகத்தில் இருந்த கள்ளர் போர்முறைகள்
1. ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருஙு குறும்பு எறிந்த ஆற்றலொடு - அகநானூறு 342
விளக்கம்: ஆநிரை கவரும் பொருட்டு ஆகொள்ளுக்கு சிறந்த பெயரைப் பெற்ற மூதூரின் கள்வர் பெருமகன் என்பவன் ஏவிவிட இளையர் படைத் தலைவன் எதிரியின் குறும்பு ஆடுகளை கவர்கிறான். இதனால் எதிரியின் பொருளாதார பலம் அழிய கள்வர் படை வென்றது.
2. ஆயிடை அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
பிற்படு பூசலின் வழிவழ யோடி - அகநானூறு 7
ஆநிரை கவர்ந்து கள்ளர் சென்றுவிட அவரை துரத்திச் சென்று ஆநிரை மீட்கும் மறவர் போல் பின்னே சென்றதாக உவமை சொல்கிறது.
இதுதான் கள்ளரின் போர்முறை. 2500 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கள்ளரின் போர்முறை காரணமாக அவர்களுக்கு வந்த பெயர்கள் தான் கள்வர், கள்ளர். இதை திருட்டுத்தொழில் செய்த கள்ளர் என்று திரித்துக் கூறும் வடுக வந்தேறி பாசிசுடுக்களை நம்பினால் தமிழர் வீழப்போவது உறுதி.
கள்ளருக்கு வடுக வந்தேறி ஒன்றும் ஆட்சியைக் கொடுக்கவில்லை.
________________
கீழுள்ளது வடுக வந்தேறியான இராஜா நாயுடு போரில் ஆநிரை கவரும் போர்குடிக் கள்ளரை திருட்டுத் தொழில் செய்பவர் எனப் போட்டுள்ள பதிவு. இந்த வடுகனுக்கு காவ்லதுறையில் இருக்கும் கள்ளர் சமூகத்தின் சதவீதத்தை காட்டினால் தான் வாயடைப்பான் போலும்.
//*களவு தொழிலை செய்து வந்த தேவர் சமுகத்தை அடிக்கியதொடு மட்டும் இல்லாமல் அவர்களை ஆள செய்த பெருமை .//

http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html 


Friday, October 2, 2020

இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம்

 இன்று (02-10-2020) தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில்  சீர்மரபினர் நலச்சத்தின் சார்பில் விகிதாச்சார இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பழகன், மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, தேவதானப்பட்டி பகுதி பொறுப்பாளர்கள் அ.பெருமாள் தேவன், ஆர்.கே. தங்கராஜா, மணிகண்டன், சுபாஷ், ரத்தினசாமி, செல்வபாண்டி, சரவணன், சரத்குமார், பாண்டிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





Saturday, September 5, 2020

திருச்சி கள்ளர் பற்று




பிரஞ்சு படைகள் பாண்டிச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு படையெடுத்து வந்த போது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது விசங்கி நாட்டு திருச்சி கள்ளர்கள்.


பிரஞ்சு படையை தமிழகத்தை விரட்டிய பங்கில் அதிகம் போற்றக்கூடியதும் கூட, அப்படிப்பட்ட கள்ளர் பற்று, பிரஞ்சு படைகளை தாக்கி அவர்களிடம் இருந்து மீட்ட பொருட்களின் மதிப்பு


2,00,000 பிரஞ்சு பணம்.


ஆனால் இதனை பிரஞ்சு அரசு, கவர்ந்ததாக கூறியுள்ளது. அவர்கள் செய்தால் படையெடுப்பு, அதை எதிர்கொண்டு போர் செய்த மன்னின் மைந்தர்கள் கொள்ளையர்கள்........


நன்றி

Dairy of ananda ranga Pillai


அன்புடன்

சோழபாண்டியன்

ஏழுகோட்டை நாடு 

Sunday, August 23, 2020

மும்பையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்

 2012-ம் ஆண்டு மும்பை தாராவி பகுதியில் நடைபெற்ற கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்.



Friday, July 17, 2020

மதுரையை காத்த தேவர்கள்


மதுரையை காத்த தேவர்கள்
--------------------------------------------
* கிபி 1650 ல் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
* தென்னகத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவிய அந்த சமயத்தில் கோல்கொண்டா சுல்தானியர்கள், தமிழகத்தில் படை எடுத்து, வேலூர் மற்றும் செஞ்சியை கைப்பற்றினர்.
* அடுத்ததாக தஞ்சையை தாக்கினர், தஞ்சை நாயக்கர் சுல்தானிடம் சரணடைந்தார்.
* கண்ணில் படும் இடமெல்லாம் சூரையாடப்பட்டன.
திருமலை நாயக்கரின் போர் ஒப்பந்தம்
-----------------------------------------------------------
* சுல்தானியர்களை கண்டு அஞ்சி தஞ்சை நாயக்கர் சரணடைந்த போதும், திருமலை நாயக்கர் முகமதியரை எதிர்க்க துணிந்தார்.
* பீஜபூர் சுல்தான்களிடம் போர் ஓப்பந்தம் செய்த திருமலை நாயக்கர் , கொல்கண்டா சுல்தான்களை ஒடுக்க 17000 போர் வீரர்களை அளித்து, 30000 போர் வீரர்களுடன் நாயக்கரும் போரிட்டு, செஞ்சியை மீட்டனர்!
இனம் இனத்தோடு சேர்ந்தது
--------------------------------------------
* செஞ்சிக்கோட்டையை கைப்பற்றிய பின் பீஜபூர் சுல்தன்கள், கொல்கண்டா சுல்தான்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு,அவ்விருவரும் ஒர் அணியாயினர்
* சுல்தானியர்கள் செஞ்சியை வசப்படுத்தினர்
மதுரையை சூரையாடிய சுல்தான்கள்
----------------------------------------------------------
* எதிர்பாராத ஆபத்தை உணர்ந்த திருமலை நாயக்கர் செய்வதறியாது திகைத்தார்
* சுல்தானியர்கள் தஞ்சையை கைப்பற்றியபின், மதுரையை சூரையாடத் தொடங்கினர்
தன்னரசு கள்ளர்கள்
-------------------------------
* திருமலை நாயக்கர் தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் மதுரை கள்ளர்களிடம் வரி செலுத்த நிர்பந்தம் செய்து வந்தார்.
* கள்ளர் நாடுகளை பாளையமாக மாற்ற முயற்சி செய்தார்.
* ஆனால் கள்ளர் நாடுகள் apos;வானம் பொழிகிறது பூமி விளைகிறது, உனக்கேன் வரி தர வேண்டும் என வரி கட்ட மறுத்து தன்னரசு நாடுகளாக திகழ்ந்தனர்.
* கள்ளர்களை அடக்க நடந்த முயற்சிகள் தோல்வியை தழுவிய பின்,அவர்களை நட்பு நாடுகளாக மாற்றிக்கொண்டார் திருமலை மன்னன்.
சுல்தான்களிடம் இருந்து மதுரையை காப்பாற்றிய தேவர்கள்
----------------------------------------------------------------------------------------------
*இந்த இக்கட்டான நிலையில் மதுரை கள்ளர்களின் உதவியை திருமலை நாயக்கர் நாடினார்.
* கள்ளர்களின் உதவியோடு சுல்தானியர்கள், செஞ்சி வரை விரட்டப்பட்டனர்.
* இந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓலைச்சுவடிகள் M taylor என்பவரால் தொகுப்பட்டுள்ளது.
* அதிலுள்ள வரிகள்"Tirumala nayakar by the assistance of collories( kallars), routed and expelled the muhammadans who returned discomfited to gingi"
( History of nayaks of madura-p-130)
(Manuscripts collection - m taylor)
( jesuit letters - madura)
தொகுப்பு- சியாம் சுந்தர் சம்பட்டியார்

Thursday, July 9, 2020

நுட்பவியல் கலைச் சொற்கள்

*மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :*

WhatsApp - புலனம்
youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twtter - கீச்சகம்
Telegram - தொலைவரி
skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
GPS - தடங்காட்டி
cctv - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
printer - அச்சுப்பொறி
scanner - வருடி
smart phone - திறன்பேசி
Simcard - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
Thumbnail சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப் பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி

Saturday, July 4, 2020

இனமானத்தை இழக்கத் தயாராக உள்ள தெலுங்கர்கள்



ஒரு கூகிள் குழுமத்தில் தமிழராக நடித்து வந்தவர் தானும் தமிழர்தான் என்று கூற அவருக்கு தமிழர் ஒருவர் பரிந்து பேச அவருக்கு நான் எழுதிய மடல் இது...

“தெலுங்கர்கள் உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும்”  என்று நான் எழுதிய மடலுக்கு பதிலளிக்கும் முகமாக ஒரு தெலுங்கர் தன்னை தமிழர் என்று சொன்னார்.
அனுதினமும் வேந்தர் என்பவர் தமிழில் மூச்செடுத்தாலும் அவர் பிறப்பால் ஒரு தெலுங்கர் என்பதே உண்மை. அதை அவரே ஒப்புக் கொண்டார். நீங்கள் கனடாவில் வாழ்ந்தாலும் ஒருக் காலத்திலும் கனடா இனத்தவர் (வெள்ளையர்) ஆக முடியாது. கனடா குடி உரிமை பெற்றவராக வேண்டுமானால் ஆகலாம். அதுவே இந்திய தேசிய இனத்தவருக்கும் பொருந்தும்.

ஒரு தெலுங்கரை தெலுங்கர் என்று சொல்வதில் என்ன இகழ்வு இருக்கிறது என்று குழுமத்தினர்தான் சொல்ல வேண்டும். இழையின் நோக்கமே தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் தாங்கள் தெலுங்கர்தான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக உயிர் துறந்த பொட்டி ஸ்ரீராமுலு போன்ற எண்ணற்ற இனமான தெலுங்கு இனம் இன்று இனமானத்தை இழந்து நின்று கொண்டிருக்கிறது. அதனால்தான் தெலங்கானா தெலுங்கர்கள் ஆந்திர தெலுங்கர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டியதாயிற்று. அதிலும் தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் தாங்கள் வாழும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்தவித விசுவாசமும், உண்மையும், நேர்மையும் இன்றி நாங்களும் தமிழர்தான் என்று நடிக்க முற்படுகின்றனர். மேலும் நாங்கள்தான் தமிழகத்தை ஆளப்பிறந்தவர்கள் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இது தெலுங்கு இனத்திற்கே பெரும் அவமானமாகும்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பது தமிழின அரசியலாகும். இதில் எந்த இனத்தையும் பகையாகவோ, வெறுப்பாகவோ, பிணக்கு கொண்டோ பார்க்க வில்லை. தமிழினம் தனக்கான அரசியலைக் கட்டமைத்துக் கொள்ள அதற்குள்ள நியாயமான உரிமையைப் பேசுகிறோம். இது ஜனநாயக ரீதியானது. தமிழ்நாடு ஒன்றும் தனித் தீவு அல்ல. அது ஒரு நாடு. அந்த நாட்டின் அருமை பாரதத்தவருக்குத் தெரியவில்லை. எனவே பாரத நாட்டவர் அந்த நாட்டை தங்கள் காலில் போட்டு நசுக்கும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர். அதன் உரிமையை காற்றில் பறக்கவிட்டு மகிழ்கிறார்கள்.

10000 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு தமிழகம் பாரதம் போன்ற கலாச்சாரத்தைப் பின்பற்றி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், பாரதத்திற்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. பாரத விடுதலையை முன்னெடுத்ததில், பாரதம் விடுதலை பெற்றதில் தமிழரின் பங்கு அளப்பரியது. அது நேதாஜியின் தலைமையில் செயல்பட்டது குறையாக அமைந்தது. அதனால்தான் தமிழகம் பாரதத்தில் இழந்துதான் அதிகம். பெற்றது குறைவு. இன்னமும் தமிழகம் பாரதத்திற்கு சோறு போட்டு வருகிறது. ஆனால், பாரதம் சோறுபோடும் தமிழகத்தின் கையை முறுக்குகிறது. இது எங்கள் ஆதங்கம். அதற்காக நாங்கள் இந்திய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றோ, தனித் தமிழகம் அமைக்க வேண்டும் என்றோ பிரச்சாரம் செய்யவில்லை. நாங்கள் இந்திய ஒன்றியத்திற்குள்ளாகவே எங்களது அதிகபட்ச உரிமைகளைப் பெற விரும்புகிறோம். ஆனால், உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான பாரதம் ஒரு காலத்தில் மேற்கு உலகைப் போல மேம்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். அப்போது எங்கள் உரிமைகள் மீட்கப்படும் என்று நம்புகிறோம்.

நாளுக்கு நாள் தமிழ்த் தேசிய உணர்வு அதிகரித்து வருவதை எல்லாரும் உணர்ந்து வருகிறார்கள். பாவம் அப்பாவித் தெலுங்கர்கள் ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள். மாறிவரும் அரசியல் சூழலில் அவர்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. அதற்கு வேந்தன் அரசு போன்ற ஒவ்வொரு தெலுங்கரும் எடுத்துக்காட்டாகவே இருக்கின்றனர். மற்றபடி நான் அவரையோ அவர் சார்ந்த இனத்தையோ, பாரதம் என்ற இந்திய தேசியத்தையோ அவமதிக்கவோ, இகழவோ இல்லை என்று நான் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கள்ளர் ரெஜிமெண்ட் எந்த நேரமாயினும் தாக்குவதற்கு தயார்



கிபி18ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த் ஃபுல்லர்ட்றான் என்கிற அறுவை சிகிச்சை நிபுணர், கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அன்றைய தென்னிந்திய மக்களிடம் நெருங்கி பழகிய ஒரு மனிதம் மிக்க மனிதர்.
18ஆம் நூற்றாண்டு இறுதியில் பிரிட்டிஸாருக்கும், தென்னிந்தியாவில் உள்ள புரட்சியாளர்களுக்கும் போர் யுத்தம் மிக உக்கிரமாக வெடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், மதுரையில் தங்கியிருந்த ஃபுல்லர்ட்றான் சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் அதில் :-
“தொண்டி கடற்கரையில் இருந்து மதுரை மேலூர் எல்லைக்குள் சுமார் 105கிலோமீட்டர் நிலப்பரப்பில் தன்னரசாக வாழ்ந்து வரும் கள்ளர்களில் 30,000 முதல் 40000 கள்ளர்கள் அடங்கிய கள்ளர் படைகள்,தங்களுடைய பல கள்ளர் தலைவர்களுடன் தாக்குவதற்கு கிழக்கிந்திய படைகளை தாக்குவதற்கு தயாராக உள்ளனர் என்று எழுதியுள்ளார்.
17ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டு இறுதிவரை வெள்ளையர்களின் சிம்மசொப்பனமாக திகழ்ந்த கள்ளர் நாட்டார்களின் வீரத்தையும்,தியாகத்தையும் எத்தனை யுகம் மாறினாலும் காலத்தால் அழிக்க முடியாத இரத்தம் சரித்திரம்💐
நன்றி
B.C Law volume
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...