Sunday, November 28, 2021

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு






நேற்று (28-11-2021) உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழச்சி நடைபெற்றது. 1990-93 காலத்தில் படித்த நண்பர்கள் சந்தித்து உரையாடினோம்.

Tuesday, November 23, 2021

தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு ஆலோசகராக நியமனம்

 தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு ஆலோசகராக என்னை நியமித்திருக்கும் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 


Monday, November 15, 2021

இடுக்கி அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம்

 



முல்லைப் பெரியாறு அணைந்து விடும் என்று சொல்லி கேரளா அணையில் தண்ணீரை தேக்க விடாமல் தடுத்து வருகிறதுகேரள அரசியல்வாதிகள் தண்ணீரைத் தேக்கினால் அணை உடைந்து விடும் என்று புரளியைக் கிளப்பி வருகின்றனர். தண்ணீரை தேக்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும் என்பதில்லை, இடுக்கி அணையிலிருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரலாம் என்று ஓய்வு பெற்ற பொறியாளரான ரா. வேலுச்சாமி கூறியுள்ளார். அவர் இந்தத் தகவலை என்னிடம் கூறியதும் நான் இது பற்றி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளரான எஸ். ஆர். சக்கரவர்தியிடம் தெரிவித்தேன். உடனே அவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்றார். தேனி வந்த வேலுச்சாமியும் தமிழ்த் தேசிய ஆர்வலர் கோவை கண்ணனும் எஸ்.ஆர். சக்கரவர்த்தியை சந்தித்து திட்டம் பற்றி விவரித்தனர். உடனே அவர் இது பற்றி தேனி மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். அவர் திட்டம் எவ்வளவு சாத்தியமானது என்பது பற்றி முல்லை பெரியாறு பொதுப்பணித் துறை தலைமை அதிகாரியிடம் பேசச் சொன்னார். திட்டம் பற்றி விசாரித்த அதிகாரிகள் திட்டம் சாத்தியமான ஒன்றுதான் என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து இதனை ஒரு மனுவாக தன்னிடம் கொடுக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நேற்று (15-11-2021) மாவட்ட ஆட்சியரிடம் திட்டம் பற்றிய மனுக் கொடுக்கப்பட்டது. அவர் இதனை தமிழக அரசுக்குத் தெரிவிப்பதாக கூறினார். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த வேலுசாமி திட்டம் பற்றி விவரித்தார். திட்டத்தின்படி இடுக்கி அணையின் அடிமட்ட அளவிலிருந்து சுமார் 15 கிமீ சுரங்கப் பாதை அமைத்து கூடலூர் மொட்டையாண்டி கோவில் அருகே தண்ணீரைக் கொண்டு வந்து பதினெட்டாம் கால்வாய் வழியாக வைகை அணைக்கு தண்ணீரை கொண்டு வந்து விடலாம். இதில் கேரள அரசு தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கவும் செய்யலாம். ஏற்கனவே கேரள அரசு 1500 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவது பற்றிப் பேசி வருகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை 500 கோடி செலவில் செய்து விடலாம் என்று வேலுச்சாமி கூறினார்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...