ஹிந்தி என்பது ஒரே மொழி அல்ல. ராஜஸ்தானிலிருந்து பிஹார் வரைக்குமாகப் பேசப்படுகிற மொழி ஹிந்தி என்று சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.
பாரதேந்து ஹரிஸ்சந்திரா என்கிற ஒரு கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாசிரியர், மொழி ஆராய்ச்சியாளர், அவர், கிட்டத்தட்ட 1750வாக்கில் மீரட், கான்பூர் போன்ற குறிப்பிட்ட சில பகுதிகளில் பேசப்படக்கூடிய கடிபோலி என்கிற மொழிக்கு - இந்தியா முழுமைக்குமான மொழியாக இருந்து ஆளுமை செய்யக்கூடிய வல்லமை, சாத்தியக்கூறு இருப்பதாக நம்பினார். அவரது கோட்பாடுகள் மொழிக்கொள்கைகளை கிட்டத்தட்ட காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார். இன்றைய மய்ய அரசு சொல்லக்கூடிய ஹிந்தி இந்தக் கடி போலிதான். ஆனால் இது பெரும்பான்மையான மக்களால் பேசப்படவில்லை.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அடையாளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படுகிற மொழிகளும் வெவ்வேறு பின்னணியைக்கொண்டதாக இருக்கிறது.
உதாரணமாக - ஹிமாச்சலப் பிரதேசம் ஒரு ஹிந்திப்பிரதேசம் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு கிராமமும் கிட்டத்தட்ட ஒவ்வொரு மொழியைப் பேசக்கூடிய பகுதி அது.
பிஹாரில், மைத்திலி, போஜ்பூரி,பிஹாரி மொழிகள் பேசப்படுகின்றன.போஜ்பூரி நான்கு முதல் நான்கரைக்கோடி மக்களால் பேசப்படுகிறதென்கிறார்கள். 23 தேசியமொழிகள் அறிவிக்கப்பட்ட எட்டாவது அட்டவணையில் தங்கள் மொழியும் இணைக்கப்படவேண்டுமென அவர்கள் வலுவானப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அதைப்போலவே மைத்திலி பேசும் மக்களும் கோரி வருகிறார்கள்.
ராஜஸ்தானிலும், ராஜஸ்தானி, ஜெய்ப்புரி, மார்வாரி என்று பலமொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுக்கும் இன்று பேசப்படுகிற கடி போலி ஹிந்திக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்றால், இல்லை.
ஹரியானாவில் பேசப்படுகிற மொழி ஹரியானவி. ஒருமாதம் ஒரு பயிற்சிக்காக நான் ஹரியானாவில் தங்கியிருந்தபோது - நான் பேசிய ஹிந்தியை அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்கள் பேசும் ஹரியானவி கலந்தமொழி என்னால் விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. ஹிந்தி தெரிந்த எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், இப்போது நீங்கள் ஆக்ரா போய் இறங்கினீர்களென்றால், அங்கு நீங்கள் கேட்கும் மொழி வ்ரஜ பாஷா. ஹிந்தி கவிஞர் சூர்தாஸின் கவிதைகளெல்லாம் இந்த வ்ரஜ பாஷாவில்தான் எழுதப்பட்டன. அந்த மொழியையும் கடி போலியுடன் இணைத்து அதுவும் ஹிந்திதான் என்று இவர்கள் சொல்கிறார்கள்.
ரஷ்யாவில் மொழிப்பிரச்சனை வந்தபோது
லெனின் தலைமையில் கூடிய ஒரு கூட்டத்தில் ஏறத்தாழ 43 சதவீதம்பேர் பேசக்கூடிய ரஷ்யமொழியைத்தான் தேசியமொழியாக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
லெனின் தலைமையில் கூடிய ஒரு கூட்டத்தில் ஏறத்தாழ 43 சதவீதம்பேர் பேசக்கூடிய ரஷ்யமொழியைத்தான் தேசியமொழியாக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
"அதுவா பெரும்பான்மை ? ரஷ்ய மொழி பேசாத
57 சதவீதம்தானே பெரும்பான்மை!?" என்றார் லெனின்.
57 சதவீதம்தானே பெரும்பான்மை!?" என்றார் லெனின்.
அந்த ரஷ்ய அடிப்படைதான் நமக்கும் தீர்வாக இருக்கமுடியும் - பிரிந்துபோகும் உரிமை உட்பட.
------------------------------------------
ஒரே நாடு ஒரே மொழி I
பேராசிரியர் சீனி மோகன்
நன்றி | 'தழல்' சேனல்.
ஒரே நாடு ஒரே மொழி I
பேராசிரியர் சீனி மோகன்
நன்றி | 'தழல்' சேனல்.
No comments:
Post a Comment