தினகரன்தான் அதிமுகவின் தலைவராகும் உரிமை, தகுதி பெற்றவர் என்பதை நான் ஏற்கனவே பலமுறை எழுதியுள்ளேன். ஆர்.கே. நகர் தேர்தல் அதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பொதுவாக முறையாக மக்களை அணுகத் தெரியாதவர்கள் மக்களை முட்டாள்கள் என்று சொல்வார்கள். ஆனால் அது தவறு, மக்கள் எப்போதும் விழிப்புடன் இருந்து தங்கள் தீர்ப்பை வாக்குகள் மூலமாக வழங்கி வருகிறார்கள்.
தினகரனின் வெற்றிக்கு பலரும் பல காரணத்தைச் சொல்லி வருகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ திராவிட ஆட்சியாளர்கள் மக்களுக்கு பணம், கொடுத்து, சாராயம், உணவு கொடுத்து செய்யும் வழக்கத்தை துவக்கி அதை அவர்களுக்கு பழக்கமாகவும் ஆக்கி விட்டார்கள். எனவே இவையெல்லாம் கொடுப்பது இன்று அத்தியாவசியமான ஒன்று.
இவற்றையெல்லாம் கொடுத்தாலும் கூட மக்கள் தங்கள் விருப்பப்படியே பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள் என்பதை ஆர்.கே. நகர் தேர்தல் நிரூபித்துள்ளது. தினகரன் பணம் கொடுத்து வெற்றி பெற்றார் என்று குற்றம் சாட்ட எந்த அரசியல்வாதிக்கும் தகுதி இல்லை. கொடுக்க இயலாதவர்கள் தங்களுக்கு அந்த தகுதி இல்லாத காரணத்தால் வேண்டுமானால் அந்தக் குற்றச் சாட்டை வைக்கலாம்.
மற்றபடி பணம் கொடுத்து வெற்றி பெற முடியும் என்பது உண்மையானால் சில கட்சிகள் தோல்வியை தழுவவே மாட்டார்கள். அவர்களிடம் அவ்வளவு பணம் உள்ளது.
மற்றபடி அவர் மாயமான், மாயாஜாலத்தில் வெற்றிபெற்றார் என்று சொல்வது இந்திய மக்களாட்சியையும், தேர்தல் முறையையும் அவமதிக்கும் செயலாகும். அப்படி சொல்பவர்கள்
தங்களுடைய கையாலாகாத தன்மையையும், போலித்தனத்தையும் மக்கள் உணர்ந்து விட்டார்களே என்று அறிந்து வெட்கப்பட வேண்டும்.