தமிழ்
ராணுவம் பற்றி, டி.
சிவ்ராம்
- பாகம்
8
இருபதாம்
நூற்றாண்டின்
துவக்கத்தில்
தமிழர்களின்
அடையாளம்
இரண்டு
வேறுபட்ட
கருத்துக்களுடன் வாதம்
செய்யப்பட்டது.
இரண்டு
வேறுபட்ட
இயக்கங்களால்
பிரச்சாரம்
செய்யப்பட்டது.
இந்த
இயக்கங்கள்
அரசியல்
ரீதியாக
எதிர்
எதிரானவையாகும்.
ஒன்று
திராவிட
பள்ளிக்கூடம்.
மற்றொன்று
இந்திய
புரட்சி
(விடுதலை)
இயக்கம்.
முந்தையது
ஆங்கில
மிஷனரிகளுடன்
நெருக்கமான
தொடர்புகொண்டது.
ஆங்கிலேய
ஆட்சிக்கு
முழு
ஆதரவை
கொடுக்கக்
கூடியது.
பிந்தையது
ஆங்கிலேயர்களின் அரசாங்கத்தை
கடுமையாக
எதிர்த்தது.
அது
அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற
வன்முறையே
சரியானது
என்று
சொன்னது.
இந்த
இரண்டு
கருத்துக்களின் அடிப்படையில்தான் இன்றைய
தமிழ்த்
தேசியம்
பேசப்படுகிறது என்பதை
அடையாளம்
காணலாம்.
அல்லது
மிகவும்
பொருத்தமாகச்
சொன்னால்
‘நிறுவன’
கருத்துக்கள்
தமிழர்களின்
கடந்தகாலம்
மற்றும்
நிகழ்காலம்,
‘உண்மையில்’
தமிழர்களின்
அடையாளம்
என்பது
என்ன
என்பது
பற்றிய
ஒரு
நம்பகமான
செய்தியை
தரக்கூடியதாக
இருக்கிறது.
திரவிடப்
பள்ளிக்கூடம்
மொழி
இன
தேசிய
வடிவிலான
அரசியல்
மற்றும்
கல்வியை
கொடுத்தது.
புரட்சி
(விடுதலை)
இயக்கம்,
பாரம்பரிய
தமிழ்
ராணுவத்தை
விடுதலை
கருத்தாக
மாற்றியது.
இது
ராணுவ
இன
தேசியமாக
மாறியது.
இருபதாம்
நூற்றாண்டில்
ராணுவ
கருத்து
தமிழின
தேசியத்தை
வடிவமைத்தது.
இது
“நலன்களில்
முன்னேற்றம்
அடைய
கட்டமைக்கப்பட்டு களம்
இறக்கப்பட்டது மற்றும்
ஒன்றிணைந்து
உரிமைகோருதல்,
ஒன்றிணைந்து
அழுத்தக்
குழுக்களாக”
மாறியதன்
காரணமாக
மட்டுமல்லாமல் தமிழ்
நாட்டின்
கிராமிய
கலாச்சாரம்
மற்றும்
மதத்தின்
மூலமாக
மறுஆக்கம்
செய்யப்பட்டது மற்றும்
ஆக்கத்தின்
அனுபவத்தின்
கட்டமைப்பு
காரணமாகவும்
வடிவமைக்கப்பட்டது.
இதையே
இந்த
ஆய்வு
கண்டறிய
விரும்புகிறது.
இதுவே,
எம்ஜிஆரை
தமிழகத்தில்
பெரியார்
மாவட்டத்தில்
பல
அட்டவணை
சாதிகளின்
போர்க்கடவுளான மதுரை
வீரன்
ஆக்கியது.
இதனை
நாம்
பின்னர்
பார்ப்போம்.
ஜெயலலிதா
கடந்தகால
தேர்தலில்
(அதாவது
1991 பொதுத்
தேர்தல்)
அங்கே
போட்டியிட்டார்.
எனினும்,
தற்கால
தமிழ்
ராணுவ
எழுச்சியை
பரிசோதிக்க
முந்தைய
திராவிடப்
பள்ளிக்
கூடத்தில்
தமிழ்
புனரமைப்பு
மற்றும்
‘வரலாற்று
தொகுப்பின்’
உரிமைகோரல்
மற்றும்
அமைதிக்குப்
பின்னால்
உள்ள
அரசியலை
புரிந்துகொள்வது முக்கியமானது.
கால்டுவெல்லும் அவரைத்
தொடர்ந்து
வந்தவர்களும்
தமிழர்களை
அமைதியானவர்களாக காட்ட
முயற்சித்து
தமிழ்
கலாச்சாரம்
மற்றும்
வரலாறு
பற்றி
பேசினார்கள்.
இந்தியத்
துணைக் கண்டத்திற்கு
“ஆரியர்கள்”
வரும்
முன்னர்
தமிழர்கள்
முக்கியமாக
அமைதியான
மற்றும்
உச்ச சுதந்திரமான சமுதாயமாக
வாழ்ந்தனர்
என்று
காட்டினர்.
இதுதான்
ஒப்பற்ற
திராவிட
நாகரீகம்.
எனவே
திராவிட
மொழி
மற்றும்
கலாச்சார
சுதந்திரம்,
தமிழர்களை
அமைதியான
விவசாயிகளாக
காட்டின.
கால்டுவெல்லின் கருத்தியல்,
இந்தக்
கருத்தை
தனது
எழுத்துக்களில் காட்ட
கட்டாயப்படுத்தியது.
(ஆங்கிலேய
ஆட்சியாளர்கள் மறவர்கள்
மீது
என்ன
விதமான
நடவடிக்கையை
மேற்கொண்டார்கள் என்பதை
பகிர்ந்து கொண்டதிலிருந்து இது ஏற்பட்டது
என்பது
முன்பு
விளக்கப்பட்டது.)
பாதிரியார்
கால்டுவெல்லின் கருத்துக்கள்
வர்ணாசிரம
சாதி
படிநிலையில்
உயர்
இடத்தை
பெறத்
துடித்து
வந்த
வேளாள
சாதியினருக்கு உயர்ந்த
சாதியாக
புதிதாக
உருபெற
பெரிதும்
பயனுள்ளதாக
அமைந்தது.
ஆகவே,
(20-ம்)
நூற்றாண்டின்
துவக்கத்தில்
திராவிட
பள்ளிகளில்
தமிழ்
ஆய்வுகளால்
எழுதப்பட்ட
‘வரலாறுகள்’
அனைத்துமே
கீழ்க்கண்டவர்களால் குறைத்து
மதிப்பிடப்பட்டன,
(ஏ) கால்டுவெல்லின்
அரசியல்
மற்றும்
மத
நலன்கள்
மற்றும்
ஹென்றி
மார்ட்டின்
ஸ்கட்டர்
மற்றும்
ஜி.யூ.போப்
போன்ற
இதர
மிஷனரிகள்
(பி) உயர
முயற்சிக்கும் வேளாளர்களின்
சாதி
அரசியல்.
இவர்கள்
இருவரின்
நலன்களும்
ஒன்றோடு
ஒன்று
பின்னிப்
பிணைந்தவை.
இவர்களின்
அரசியல்
நலனின்
வெளிப்பாடு
ஆரியர்களுக்கு முந்தைய
தமிழர்களின்
கலாச்சாரம்
ராணுவமல்லாத
கலாச்சாரம்
என்று
சொல்வதாக
இருந்தது.
பிராமணர்கள்
அல்லாதோர்
வேளாளர்களின்
கடந்த
காலத்தை
தமிழர்களின்
காலமாக
ஆய்வு
செய்ய
புராட்டஸ்டன்ட் மிஷனரிகள்
(சில
சமயங்களில்
ஆங்கில
நிர்வாகமும்)
ஆதரவும்
ஊக்கமும்
அளித்தன.
திருவனந்தபுரம் பல்கலை
கழகத்தின்
பேராசிரியரான
சுந்தரம்
பிள்ளையின்
படைப்புகள்
அவரது
சாதியைச்
சேர்ந்த
பலரால்
ஊக்கமளிக்கப்பட்டவையாகும். அவர்கள் பிராமணர்கள்
தங்களை
சூத்திரர்கள்
என்று
குறிப்பிட்டதால் ஆத்திரமடைந்தவர்கள் ஆவர்.
அவர்கள்
ஆங்கிலேயரின்
மக்கள்
தொகை
கணக்கெடுப்பு
மற்றும்
நீதிமன்றங்களை மோசமாக உணர்ந்ததவர்கள் ஆவர்.
இவ்வாறு
திராவிடப்
பள்ளியின்
வரலாற்று
ஆய்வுகள்
“சமூகங்களின்
இயக்கங்கள்,
மக்கள்
தொகை
கணக்கெடுப்பை
நோக்கியதாக
அமைந்தன.
1870 மற்றும்
1930 ஆகிய
ஆண்டுகளுக்கு
இடைப்பட்ட
காலத்தில்
நடந்த
மக்கள்
தொகை
கணக்கெடுப்புகள்,
சாதிகளுக்கு
இடையேயான
பதவிப்
போட்டியில்
கவனம்
செலுத்தச்
செய்தன.
‘ஆயிரத்து
எண்ணூறு
ஆண்டுகளுக்கு
முன்பு
தமிழர்கள்’
என்று
முதல்
திராவிட
வரலாற்று
புத்தகத்தை சென்னையில் சிவில் சேவையில்
இருந்த
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
வி.
கனகசபை
பிள்ளை எழுதுகிறார்.
“தென்னிந்தியாவின் சாதிகளும்
பழங்குடிகளும்”
என்ற
புத்தகத்தை
எழுதிய
எட்கர்
தர்ஸ்டன்
வேளாளர்
சாதி
பற்றி
எழுதும்போது
கனகசபையின்
புத்தகத்திலிருந்து,
கீழ்க்கண்ட
வாசகத்தை
எடுத்து
எழுதுகிறார்.
“சுத்தமான
தமிழர்களிடையே,
மிகவும்
கௌரவமான
சாதி,
அறிவார்
அல்லது
துறவிகள்
ஆவர்.
அறிவாருக்கு
அடுத்த
நிலையில்
இருப்பவர்
உழவர்
அல்லது
விவசாயிகள் ஆவர்.
அறிவார்
என்பவர்கள்
துறவிகள்
ஆவர்.
ஆனால்,
சமூகத்தில்
விவசாயிகள்
உயர்ந்த
நிலையில்
இருந்தார்கள்.
அவர்களுக்கு
நாட்டில்
பிரபுத்துவம்
அல்லது
நிலப்பிரபுத்துவம் இருந்தது.
அவர்கள்
வேளாளர்கள்
என்றும்
அழைக்கப்பட்டனர்.
நீர்மேலாண்மை
செய்தவர்கள்
காராளர்கள்
ஆவர்.
தமிழகத்தின்
சேர,
சோழ,
பாண்டிய
சிற்றரசர்கள்
பெரும்பாலும்
வேளாள
சமுதாயத்தை
சேர்ந்தவர்கள் ஆவர்”
(தர்ஸ்டன்,
1906: ப. 367-368)
துவக்க
கால
திராவிட
தமிழ்ப்
பள்ளியின்
முயற்சிகள்,
மறைமலை
அடிகளின்
தூய
தமிழ்
இயக்கத்தில்
முடிவுபெற்றன.
1928-ம்
ஆண்டில்
நடைபெற்ற
இந்தி
எதிர்ப்பு
போராட்டங்களின் மூலம்
இந்த
இயக்கம்
சக்தி
வாய்ந்த
அமைப்பாக
மாறியது.
அவர்
‘வேளாளர்
நாகரீகம்’
என்ற
புத்தகத்தை
வெளியிட்டார்.
இந்தப்
புத்தகம்
1922-ம்
ஆண்டு
ஜனவரி
மாதம்
1-ம்
தேதி
யாழ்ப்பாணம்
டவுன்ஹாலில்
“தமிழர்களின்
நாகரீகம்”
என்ற
தலைப்பில் அவர் ஆற்றிய
உரையாகும்.
அவரது
உரையை
புத்தகமாக
வெளியிட
அவருக்கு
ரூ.
200 நிதியுதவி
அளிக்கப்பட்டது.
அந்தக்
காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
வேளாளர்கள்,
அடிகளாரின்
முயற்சி
தென்னிந்தியாவில் தங்கள்
மீது
சுமத்தப்பட்ட
சூத்திரப்
பட்டத்தைப்
போக்க
உதவும்
என்று
கருதினர்.
இருந்தாலும்,
வேளாளர்கள்
சூத்திரர்கள்
என்ற
காரணத்தால்தான் நாட்டுக்கோட்டைச் செட்டியார்
சாதியினர்
வேளாளர்களிடம் பெண்
எடுப்பதில்லை
என்ற
கருத்திற்கு
எதிர்ப்புத்
தெரிவிக்கவே
மறைமலை
அடிகள்
தனது
உரையை
ஒரு
புத்தகமாக
வெளியிட
முடிவு
செய்தார்.
தனது
புத்தகத்தின்
ஆங்கில
முன்னுரையில்
மறைமலை
அடிகள்
இதனை
கீழ்க்கண்டவாறு சொல்கிறார்,
“இந்த
புத்தகம்
தமிழர்களின்
சமூக,
மத
மற்றும்
வரலாற்றுக்
கருத்துக்களை
புரட்சிகரமான
தன்மையில்
பயபக்தியுடன்
சுத்த
தமிழில்
சொல்கிறது.
முதலில்
தமிழர்களில்
நாகரீகமான
வேளாண்
சமுதாயமான
வேளாளர்கள்
குறித்து
கவனம்
செலுத்தி
அவர்களின்
தோற்றம்
கட்டமைப்பு
குறித்து
கூறுகிறது.
பூமத்திய
ரேகைப்
பகுதியில்
வாழ்ந்த
அனைத்து
சமுதாயங்களும் வேட்டைக்காரர்களாக,
நாடோடிகளாக
வாழ்ந்து
வந்த
காலத்தில்
வேளாளர்கள்
விவசாயம்
செய்யும்
கலையை
அறிந்திருந்தனர் என்று
சொல்கிறது.
அவர்கள் கடற்
பயணங்களின்
மூலமாக
இந்தியா
முழுவதையும்
ஆக்கிரமித்திருந்தனர்.
பஞ்சாபின்
வடமேற்கு
பகுதியிலிருந்து ஆரியர்கள்
வந்தபோது
அவர்கள்
நாட்டின்
உட்பகுதியை
நோக்கி
படையெடுக்கிறார்கள்.
அப்போது
வடக்கே
ஆட்சி
செய்து
கொண்டிருந்த
பத்து
வேளாள
அரசர்கள்
அவர்களை
தடுத்து
நிறுத்தினர்.
தங்களுக்கு
பணிபுரிவதற்காக வேளாளர்கள்
பதினெட்டு
சாதிகளை
உருவாக்கியதாக மறைமலை
அடிகள்
சொல்கிறார்கள்.
சைவ
வேளாளர்களே
உயர்ந்த
அறம்
வாய்ந்தவர்கள்.
சைவ
சித்தாந்தத்தை வேளாளர்கள்
3,500 ஆண்டுகளுக்கும் மேலாக
கட்டிக்
காத்தனர்.
இதுவே
ஆரியர்களுக்கு முந்தைய
தமிழர்களின்
மதபாரம்பரியமாக இருந்தது.
வேளாளர்களை
சூத்திரர்கள்
என்று
வகைப்படுத்தியது ஆரிய
பிராமணர்களின் சதி
என்று
கூறினார்.
தமிழ்
பிராமண
அறிஞரான
ஸ்ரீநிவாச
ஐயங்கார்
மீது
சக
வேளாள
திராவிட
அறிஞர்கள்
தொடுக்கும்
தாக்குதல்கள்
மற்றும்
குற்றச்
சாட்டுகளுக்கும் மறைமலை
அடிகள்
ஆதரவு
தெரிவித்தார்.
ஸ்ரீநிவாச
ஐயங்கார் சென்னை மாகாணத்தின்
மக்கள்
தொகை
கணக்கெடுப்பிற்கு தலைமை
அதிகாரியாக
இருந்தவர்
ஆவார்.
பாதிரியார்
கால்டுவெல்லின்
‘அறிவியல்’
இலக்கணத்தை
அடிப்படையாகக் கொண்டு
உருவான
திராவிடப்
பள்ளியின்
தமிழ்
வரலாற்று
கதைகளுக்கு
திரு
ஸ்டூவர்ட்
கடும்
எதிர்ப்பு
தெரிவித்தார்.
மக்கள்
தொகை
கணக்கெடுப்பு
அதிகாரி
என்ற
முறையில்
தமிழ்நாட்டின் கிராமப்புற
மதம்
மற்றும்
கலாச்சாரத்தை
ஆய்வு
செய்ததன்
அடிப்படையில்
அவர்,
தமிழ்க்
கலாச்சாரம்
என்பது
அமைதியை
விரும்பும்
பண்டை
தமிழினம்
பற்றிய
உயர்
ஒழுக்கங்களை
கொண்டது
என்ற
கருத்தை
எதிர்த்தார்.
தூய
தமிழ்
படைப்புகள்
அனைத்தும்
19-ம்
நூற்றாண்டின்
பிற்பகுதியிலான கண்டுபிடிப்புகள் என்று
கூறினார்.
‘தமிழ்
ஆய்வுகள்’,
புதிய
தமிழ்ப்
பள்ளி
அறிஞர்கள்
கடந்த
பதினைந்து
ஆண்டு
காலமாகத்தான்
தோன்றியுள்ளனர்.
அவர்கள்
திருவனந்தபுரத்தை சேர்ந்த
பேராசிரியர்
சுந்தரம்
பிள்ளையை
பாராட்டுவோர்
மற்றும்
அவரது
சாதி
மக்களை
சேர்ந்தவர்களாக மட்டுமே
இருக்கிறர்கள் என்று
ஸ்ரீநிவாஸ
ஐயங்கார்
கூறினார்.
மேலும்,
அவர்களின்
கூற்றுக்கு
மாறாக
தமிழர்கள்
கடுமையான
போர்
வீரர்களாக இருந்தவர்கள் என்று கூறினார். அவர்கீழ்க்கண்டவாறு
எழுதுகிறார்,
“சில
தமிழ்
மாவட்டங்களில் பெருமளவில்
‘வீரக்கற்கள்’
என்ற
கல்லறை
கற்கள்
கிடைத்துள்ளன.
அவை
பெரும்பாலும்
போர்க்களங்களில் கொல்லப்பட்ட
வீரர்களின்
கல்லறைகள்
ஆகும்.
அவர்களின்
பெயர்கள்
அந்தக்
கற்களில்
பொறிக்கப்பட்டிருக்கும். அவை மயிலிறகு அல்லது
சிவப்பு நிற
மலர்கள்
கொண்டு
அலங்கரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக அவற்றின்
மீதாக
உருமால்
கட்டப்பட்டிருக்கும்.
அதுபோன்ற
பதிவுகளின்
எடுத்துக்காட்டை கீழே
கொடுத்திருக்கிறோம்.
புறப்பொருள்
வெண்பா
மாலையை
கவனமாக
படித்துப்
பார்த்தால்
தமிழர்கள்
அஸிரியர்கள்
மற்றும்
பாபிலோனியர்களைப் போன்ற
போர்
வீரர்கள்
என்பதை
வாசகர்கள்
புரிந்துகொள்ளலாம்.
அவர்கள்
வெறுமனே
மகிழ்ச்சிக்காக மட்டுமே கொலை,
அட்டூழியங்களும்,
கொள்ளைகளும்
செய்யக்
கூடியவர்களாக
வில்களையும்
ஈட்டிகளையும்
ஏந்தியவர்களாக இருந்தார்கள்.
அவர்கள்
சாவைப்
பற்றி
கவலைப்பட்டவர்கள் இல்லை.
அந்த
பயங்கரமான
இனத்தின்
தன்மைகள்
பற்றி
கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் வர்ணனைகளே சாட்சியாகும்.
(1)
எதிரிகளின்
குடல்களை
மாலையாக
அணிந்து
தலைகீழாக
பிடித்திருக்கும் ஈட்டிகளுடன்
நடனமாடினர்.
(2) அவர்கள்
தங்கள்
எதிரிகளின்
வளமான
கிராமங்களை
தீக்கிரையாக்கினர்.
(3) அவர்களின்
நாட்டை
கொள்ளையடித்து வீடுகளை
இடித்துத்
தள்ளினர்.
(4) கொல்லப்பட்ட
அரசர்களின்
தலைகள்
தீயில்
எறியப்பட்டன. கொல்லப்பட்டவர்களின் தசைகள்
கலக்கப்பட்ட
பேய்ச்
சோறு
வினியோகிக்கப்பட்டது.
இந்த
வரிகளுடன்
அஸிரியர்களின் பிரச்சாரக்
கதைகளை
ஒப்பிடலாம்: ‘என் முன்னே அவர்களில் சிலர் வந்து விழுந்தனர். சுவர்களில் அவர்களின் தோல்கள் தொங்கின. நான் அவர்களின் தலைகளை அடுக்கி வைத்தேன். அவர்களின் கிராமங்களை நான் அழித்தேன், எரித்தேன். நான் அந்த நாட்டை பாலைவனமாக்கிறேன்.’ இருந்தாலும் கூட துவக்க கட்ட திராவிடர்கள் சிறந்த நடைத்தை கொண்ட விவசாயிகள் என்று டாக்டர் கால்டுவெல் மற்றும் ஆரியர் அல்லாத தமிழ் அறிஞர்களால் கருதப்பட்டது.
“வேளாளர்கள் தூய திராவிடர்கள் வேளாளர்கள் என்று நமக்கு சொல்லப்பட்டது. அவர்கள் ராணுவ ஆதிக்கம் பெற்றவர்கள் என்று நமக்குச் சொல்லப்பட்டது. அப்படியானால், ‘அமைதியான விவசாயிகளின் முன்னோர்கள் எவ்வாறு போரை விரும்பும் இனமாக இருந்திருக்க முடியும்?” என்ற கேள்வி தானவே எழுகிறது என்று ஐயங்கார் குறிப்பிடுகிறார். வேள் என்ற சொல்லின் மூலம் போர்க்கருவியான வேல் உடன் தொடர்புகொண்டது என்று அவர் சொல்கிறார். நாயர், பிள்ளை, பந்த் போன்றோர் பண்டைக் காலத்தில் வேளாண் குடிகளாக இருந்துகொண்டே போர்க்குடிகளாகவும் இருந்தது அசாதாரணமானதாக இருக்கவில்லை. மேலும் சென்னை மாகாணத்தில் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், மொத்த தமிழர்களில் தங்களை போர்க்குடிகளாக சொல்லிக்கொண்டவர்கள் இருபத்தாறு சதவீதம்பேர்தான் என்பதையும் அவர்குறிப்பிடுகிறார். (ஸ்ரீநிவாஸ ஐயங்கார், 1915, ப. 40-58)
கால்டுவெல்லின் திராவிட கருத்தியல் மற்றும் வேளாள பிரச்சாரகர்களின் மீதான ஐயங்காரின் தாக்குதல் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தது. படித்த பிராமணர்கள் துவக்க கால திராவிட பள்ளியின் கருத்துக்களுக்கு பின்னணியில், அரசியல் நலன் உள்ளது என்பதை அறிந்திருந்தார்கள். தமிழ் வேளாளர்களின் மறுமலர்ச்சி மற்றும் திராவிடர்களின் உயர்ந்த தன்மை ஆகிய இரண்டும் ஆங்கில ஆதரவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக மற்றும் 1916-ம் ஆண்டு பிராமணர் அல்லாதோர் உருவாக்கிய தென்னிந்திய சுதந்திர கூட்டமைப்பு என்ற அரசியல் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்தவையாக இருந்தன. எனவே அதனுடைய கட்டமைப்புகள், ‘உயர்வான’ பண்டை இலக்கியங்களில் தமிழர்களின் ராணுவ புகழை அல்லது கிராமப்புற தமிழகத்தில் உள்ள மக்களின் கலாச்சாரத்தை பேசக் கூடாது என்பதில் கவனமாக இருந்தன. (தமிழ் மறுமலர்ச்சியை புராட்டஸ்டன்ட் மிஷனரிகளும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய அதிகாரிகளும் ஊக்குவித்தனர். அது தமிழர்களின் ராணுவத் தன்மையை குறைத்து அவர்கள் மீது பிராமணர்கள் கொண்ட ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கத்தில் சமூக, பொருளாதார மற்றும் மத நோக்கங்களை நிறைவேற்ற ஏதுவாக செய்யப்பட்டது என்றே பார்க்கப்பட்டது.)
வேளாள சாதியினரின் கலாச்சாரமே தமிழர்களின் கலாச்சாரம் என்று முன்னெடுக்க விரும்பியதால் மட்டுமே இது செய்யப்படவில்லை. தமிழ் கலாச்சார மறுமலர்ச்சி என்பது ‘ராஜதுரோகம்’ என்று கருதப்பட்டு அது ‘தீவிரவாதம்’ என்று ஆங்கில அரசாங்கத்தால் பிரச்சாரம் செய்த ஆங்கிலேய அரசின் கவலையையும் உள்ளடக்கியே செய்யப்பட்டது. பொதுவாக தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்ட ‘பண்டை போர் வெறி’ குறிப்பாக ராணுவ சாதிகளிடையே காணப்பட்ட போர் பற்றை குறைக்கும் வகையில் செய்யப்பட்டது. மறவர்களின் சாதிப் பாரம்பரியங்களில் பொறிக்கப்பட்ட ராணுவ கொள்கைகள் மற்றும் பெருமைமிகு பண்டை தமிழ் பாரம்பரியத்துடன் தங்களுக்குள்ள தொடர்பு மற்றும் அதன் ஒப்பற்றதன்மையை குறைக்கும் விதமாக இது செய்யப்பட்டது. தாங்கள் சொல்வதுதான் தமிழர்களின் ஒப்பற்ற மற்றும் சக்தி வாய்ந்த ராணுவ பாரம்பரியம் என்று சொல்ல விரும்பினார்கள். இந்தச் சூழலில்தான் இந்திய புரட்சி (விடுதலை) இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு பிராமணர்கள் தமிழர்களின் ராணுவ இலக்கியமான புறநானூற்றின் அரசியல் வாழ்க்கையை துவக்கினர். (ஒருவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார். மற்றொருவர் ராமநாதபுரம் அரசவையில் புலவராக இருந்த மாபெரும் தமிழ் அறிஞரான எம். ராகவ ஐயங்கார்.)
இந்தக் கவலைகள் ஆங்கிலேய அரசாங்கத்தை தீவிரவாதிகள் மற்றும் ராணுவ சாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தின. ஒன்று தமிழ் மறுமலர்ச்சி பிரச்சாரத்தை கவனமாக மாற்றுவதன் மூலம் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக
சந்தேகப்படும் நபர்கள் மீது ராஜதுரோக குற்றம் சாட்டுவது. மற்றொன்று 1911-ம் ஆண்டு குற்றப்பரம்பரை சட்டத்தை கொண்டு வந்து அவர்களை கொள்ளையர்களாகவும் திருடர்களாகவும் சித்தரிப்பது. அதன் கீழாக கள்ளர் மற்றும் மறவரை கண்காணித்து அவர்களைப் பற்றிய முழுத் தகவல்களை சேகரிப்பது. தமிழ் ராணுவ சாதிகள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டன. இந்த நகர்வுக்கு தீவிரவாதப் பிரிவுத் தலைவர்களே முன்னின்று நடத்தினர். இந்தச் சூழலில்தான் நவீன தமிழ் ராணுவம் அரசியல் சக்தியாக உருவெடுத்தது.
நாம் பின்னால் பார்க்கப் போவதைப் போல கருணாநிதி, தொண்டைமான், காசி ஆனந்தன் மற்றும் பிரபாகரன் ஆகிய அனைவரும் இந்தச் சூழலில்தான் பல்வேறு நிலைகளில் தமிழ் அடையாள கருத்துக்களால் வெளிவருகின்றனர். தற்போதைய கட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய மாணவர்கள், தமிழர்களின் கடந்த கால மற்றும் தற்போதைய ராணுவ விளக்கங்களை தமிழ் அரசியல் அலைவரிசையின் இரண்டு முனைகளாக இருப்பதை கண்டுகொள்ளலாம். கடந்த மாதம் விடுதலைப்புலிகள் ஒரு ஆடியோ கேசட்டை வெளியிட்டனர். அதேபோல சிங்கப்பூரில் தொண்டைமானை கௌரவிக்கும் வகையில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த இரண்டுமே இரண்டு தலைவர்களின் தேசிய திட்டங்களை பாராட்டும் வகையிலான அரசியல் உணர்வுகொண்ட முயற்சிகளாகும். இவை சோழப் பேரரசில் தமிழ் ராணுவ பாரம்பரியம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தது என்பதை காட்டுவதற்காக செய்யப்பட்டன.
விடுதலைப்புலிகளின் கேசட் பிரபாகரனின் பெருமை மிகு கடந்த காலத்தை சோழப் பேரரசை நிறுவிய கரிகாலனுடன் ஒப்பிட்டது. கௌரவிக்கும் புத்தகம், சிடபிள்யூசியின் தலைவர் மற்றும் சோழப் பேரரசின் தளபதியான கருணாகர தொண்டைமான் இடையே உள்ள ராணுவ பாரம்பத்தின் ‘தொடர்ச்சியை’ வலியுறுத்துவதாக உள்ளது. தமிழ்த் தேசியத்தின் சுய வெளிப்பாடு இவ்வாறு மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை கவர முடியுமா? என்று இந்த ஆய்வில் தமிழ் ராணுவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
http://tamilnation.co/forum/sivaram/920801lg.htm