Monday, September 30, 2019

பாண்டிய மன்னரை அரியனையில் அமர்த்திய கள்ளர் குல பல்லவராயர்


வரலாற்று சுவடுகளில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் அதிகாரத்தின் மறுபெயர் பல்லவராயர்.

கிபி1169ஆம் ஆண்டு பாண்டிய மன்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவருடைய சகோதரரான குலசேகர பாண்டியனுக்கும் மதுரை அரச உரிமை சண்டை வருகிறது,

இச்சண்டையில் குலசேகர பாண்டியனை சமாளிக்க பராக்கிரம பாண்டியன், இலங்கையில் உள்ள சிங்கள மன்னரான முதலாம் பராக்கிரம பாகுவிடம் உதவியை நாடுகிறார்.

இதனை அறிந்த குலசேகர பாண்டியன் சிங்கள படை மதுரை வருவதற்கு முன்பு மன்னர் பராக்கிர பாண்டியனையும், அவரது மனைவியான இராணியையும்,சில இளவரசர்களையும் கொன்று விடுகிறார்.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு இலங்கை மன்னர் பராக்கிரம பாகு தன்னுடைய சிங்களப் படையை லங்கப்புரா என்கிற வலிமையான தளபதியின் தலைமையில் மதுரையை நோக்கி அனுப்புகிறார்.

ஆரம்ப காலத்தில் குலசேகர பாண்டிய மன்னர் கள்ளர், மறவர் படைகளை கொண்டு இராமநாதபுரம், இராமேஸ்வரத்தில் சிங்களப் படைகளை உள்ளே நுழையவிடாமல் தடுத்து வெற்றி பெறுகிறார்.

ஆனால் லங்கப்புராவின் பெரும்படை அனைத்து தடைகளையும் உடைத்தும், பல தமிழ் சிற்றரசர்கள் உதவியுடன் மதுரையை கைப்பற்றி பராக்கிரம பாண்டிய மன்னரின் மகனான வீர பாண்டியனை சிங்கள மன்னர் ஆதரவின் பெயரில் மதுரையில் முடி சூடுகின்றனர்.

நிலமையை உணர்ந்த குலசேகர பாண்டியன், சோழ மன்னர் இரண்டாம் இராஜ இராஜ சோழரிடம் உதவியை நாடுகிறார்.

இரண்டாம் இராஜ இராஜ சோழரும், சிங்களர் ஆதரவுடன் மதுரையில் பாண்டியர் அரசாட்சி நடப்பதை விரும்பவில்லை.

அதனால் குலசேகர பாண்டியனின் கோரிக்கை ஏற்று சிங்கள படைகளுக்கு பாடம் புகட்ட தன்னுடைய கள்ளர் தளபதியான பல்லவராயர் தலைமையில் சோழர் படையை குலசேகர பாண்டியனுக்கு ஆதரவாக அனுப்புகிறார்.

பல்லவராயரின் சோழர் களப்படை மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை இருந்த லங்கப்புராவின் சிங்களப் படைகளை அடித்து, துவைத்து தமிழ் நாட்டை விட்டு விரட்டி மீண்டும் இலங்கைக்கே துரத்து அடிக்கிறார்.

குலசேகர பாண்டியனை மதுரை பாண்டிய தர்பாரில் பல்லவராயர் அமர வைக்கிறார்.

இலங்கையில் உள்ள முதலாம் பராக்கிரபாகுவை நேரிடையாக மோத இலங்கைக்கு பல்லவராயர் தன்னுடைய களப்படையுடன் இலங்கைக்கு செல்கிறார்.

இலங்கையில் பராக்கிரபாகுவின் மைத்துனர் ஶ்ரீவல்லபா இலங்கையில் பராக்கிரம பாகுவிற்கு பாடம் எடுக்க வந்துள்ள பல்லவராயரிடம் உதவியை நாடுகிறார்.

பல்லவராயரும் தன்னுடைய ஆதரவை ஶ்ரீவல்லபாவிற்கு தெரிவித்து களத்தில் இறங்குகிறார்.

பல்லவராயரின் களப்படை இலங்கையில் உள்ள சிங்களர் கோட்டைகள், படைபற்று பெரும்பாலனவற்றை கைப்பற்றி பராக்கிர பாகுவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் பல்லவராயர்.

இதே நிலைமை நீடித்தால் தன்னுடைய அரசு பல்லவராயரால் உடைத்தெரியப்படும் என்பதால் ''மதுரையில் இரண்டாம் இராஜ இராஜ சோழரின் ஆனைக்கிணங்க பல்லவராயரால் அமர்த்தப்பட்ட குலசேகர பாண்டியனிடம், பராக்கிரபாகுவின் சிங்களப் படையுடன் குலசேகர பாண்டியன் இணைந்து சோழ தேசத்தை வீழ்த்தலாம்'' என ஓலை அனுப்புகின்றனர்.

குலசேகர பாண்டியரும், இரண்டாம் இராஜ இராஜ சோழரை சிங்களப் படையுடன் இணைந்து போரிட தயாராகின்றனர்.

ஆபத்தை உணர்ந்த பல்லவராயர், சோழ எல்லை பகுதிக்கு உடனடியாக தன்னுடைய களப்படையுடன் விரைகிறார்.

குலசேகர பாண்டியரின் கூட்டுப் படைக்கும் பல்லவராயரின் களப்படைக்கும் பல இடங்களில் போர் நடக்கிறது.

ஆனால் பல்லவராயர் அனைத்து போர்களிலும் வென்று சிங்களப் படையை மீண்டும் இலங்கைக்கு விரட்டுகிறார்.

சோழ மன்னருக்கு எதிராக சிங்கள மன்னருடன் கைகோர்த்து துரோகம் செய்த குலசேகர பாண்டியனை மதுரையின் அரியணையில் இருந்து இறக்கி மீண்டும் பராக்கிரம பாண்டியரின் மகன் வீர பாண்டியனை மதுரையின் அரியணையில் அமர வைக்கிறார் பல்லவராயர்.

குலசேகர பாண்டியன் மதுரையை விட்டு பல்லவராயரால் விரட்டியடிக்கப்படுகிறார்.

இந்த ஒட்டு மொத்த நிகழ்வில் பல்லவராயர் மதுரையின் 'கிங் மேக்கராக' இருந்தது வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இராஜ இராஜ சோழருக்கு கட்டுக்கடங்காத வீரம், இராஜ விசுவாசம் ஒரு சேர கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்தான் பல்லவராயர்.

குலோத்துங்க சோழருக்கு எப்படி கருணாகர தொண்டைமானோ,
அதேபோல் இரண்டாம் இராஜ இராஜ சோழனுக்கு பல்லவராயர்👍

குறிப்பு: கள்வன் இராஜன் (இரண்டாம் இராஜ இராஜன்) தன்னை கள்ளர் என்று மெய்கீர்த்தியில் குறிப்பிட்டுள்ளது கூடுதல் தகவல்.

நன்றி
A history of South India by Nilakanta Sastri
Tamil and Ceylon by C.S Navaratnam

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு


Saturday, September 28, 2019

தமிழ்மொழியில் இல்லாததா பிற மொழிகளில் இருக்கிறது


எட்டுத்தொகை சங்க நூல்கள்

1.நற்றிணை 
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை 

பத்துப்பாட்டு சங்க நூல்கள்

1.திருமுருகாற்றுப்படை
2.சிறுபாணாற்றுப்படை
3.பெரும்பாணாற்றுப்படை
4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் 

உலகினர் வியந்து  போற்றும்   பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.கைந்நிலை

ஐம்பெரும் காப்பியங்கள்

1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4.வளையாபதி 
5.குண்டலகேசி

இலக்கண நூல்கள்

1.அகத்தியம்
2.தொல்காப்பியம் 
3.இறையனார் களவியல் உரை
4.புறப்பொருள் வெண்பாமாலை
5.நன்னூல்
6.பன்னிரு பாட்டியல் 

உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்

1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருப்பாவை
4.திருவெம்பாவை
5.நாச்சியார் திருமொழி
6.ஆழ்வார் பாசுரங்கள்

சிற்றிலக்கிய வகைகள்

1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா
6.முத்தொள்ளாயிரம்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்

1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு

இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்.... !!

உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் நாங்கள்

உலகிற்கே மொழி என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள்

தமிழ்மொழியை பழித்து பிற மொழிகளை தலையில் தூக்கி கொண்டாடும் தமிழர்களுக்கும் மாற்றான்களுக்கும் இது சமர்ப்பணம்

எல்லா மொழிகளையும் கற்போம்..!
தாய்மொழி தமிழ்மொழியை காப்போம்..!

Wednesday, September 25, 2019

Monday, September 23, 2019

சீர் மரபு பழங்குடியினர் சான்றிதழ்


மத்திய அரசின் சலுகைகளை மட்டும் பெற தமிழக அரசு குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு சீர் மரபினர் சாதிச் (DNC) சான்றிதழ் வழங்கி வந்த சாதிகளுக்கு சீர் மரபு பழங்குடியினர் (DNT) சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னமும் ஆன்லைனில் இந்தச் சாதிச் சான்றிதழ் வழங்க வகை செய்யப்படவில்லை. எனவே வட்டாட்சியர்கள் இந்தச் சான்றிதழ் வழங்க மறுத்து அல்லது தாமதித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் சான்றிதழை கையால் எழுதிக் கொடுக்கிறார்கள். சான்றிதழ் பெற விரும்புபவர்கள் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை தரவிறக்கம் செய்து சான்றிதழ் பெறலாம். வட்டாட்சியர் தாமதப் படுத்தினால் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தால் ஓரிரு நாட்களில் கொடுத்து விடுவார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் இந்தச் சான்றிதழைப் பெற்று வைத்துக் கொள்வது மத்திய அரசு சலுகைகளைப் பெற உதவும். இந்த உத்தரவைத் தொடர்ந்து எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது.

***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்***


கிபி1645ல் திருநெல்வேலியில் உள்ள புதுப்பட்டியில் உள்ள பாளையக்காரர் ஒருவரால் 1000 இடையர் சமூக குடும்பங்களை பல இன்னல்களுக்கு உட்படுத்தி ஒடுக்கி வைத்திருந்துள்ளார்
இதனை அறிந்த திருமலை நாயக்கர் பிறமலைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த பின்னத்தேவரை அழைத்து அந்த பாளையக்காரரை அடக்கி அந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு வரும் படி ஆனையிடுகிறார்.
இதனை ஏற்றுக்கொண்ட பின்னத்தேவர் மதுரையில் இருந்து தனது படைகளுடன் திரு நெல்வேலியை நோக்கி படையெடுக்கிறார்.
பின்னத்தேவர் திருநெல்வேலி புதுப்பட்டியை அடைந்தவுடன் அங்கு இருந்த பாளையக்காரருடன் போரிடுகிறார், போரில் அந்த பாளையக்காரை வெற்றியும் அடைகிறார்.
பின்பு அந்த பாளைக்காரரின் ஒடுக்குதலில் இருந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு அவர்களை பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்து வருகிறார் பின்னத்தேவர்.
பின்னத்தேவரின் இத்தகைய வீரத்தை பார்த்த திருமலை நாயக்கர் இடையர் சமூகத்தை மீட்டதால் மதுரையை சுற்றியுள்ள இடையர் சமூகத்தவர்களின் பாடிக்காவல் உரிமையை பின்னத்தேவருக்கும் அவர்தம் வாரிசுகளுக்கும் அளிக்கிறார்.
இதன் மூலமாக பின்னத்தேவர் மதுரை இடையர் சமூகத்தவரின் அன்புக்குரிய ஆஸ்தான காவல்காரராக ஆகிறார்.
பின்னத்தேவர் குடும்பத்தினரின் இந்த காவல் உரிமை பிற்காலத்தில் பிரிட்டீஸாரால் பறிக்கப்பட்டு பிரிட்டீஸார் அவர்களுடைய நேரடி நிர்வாகத்திற்கு அந்த இடையர் கிரமாங்களை கொண்டுவந்தனர்.
குறிப்பு: குற்றப்பரம்பரை சட்டம் பிறமலைக்
கள்ளர்கள் மீது புகுத்த முக்கிய காரணம்
அவர்களது மதுரை சுற்றிய காவல்
உரிமையை பறிப்பதற்கே.........!
நன்றி
A SOUTH INDIAN SUB CASTE BY
DR.LOUIS DUMONT (French Anthropologist)
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா?




கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என ஒருவர் கேட்பது எந்த
அளவிலான மூடத்தனம், என்பதை நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம்
இல்லை! கீழே...தேதி வாரியாக கள்ளர்கள் போரிட்டதற்கு ஆதாரம் தந்துள்ளேன்.
மறுக்க முடிந்தால் மறுத்து பாருங்கள்!

1.அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் மதுரையை கொள்ளையடித்து
திரும்பும்போது கள்ளர்கள் நாகமலை கணவாயில் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

2. 1330-ம் ஆண்டு சுல்தானியர்கள் மதுரையை தாக்கியபோது மதுரையையும், மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலையும் அழிவிலிருந்து காத்தவர்கள் கள்ளர்கள்.

3. 1378-ம் ஆண்டு குமாரகம்பண்ணா, தன்னரசு கள்ளர் படையுடன் இணைந்து
சுல்தானியர்களை விரட்டி அடித்துள்ளார்.

4. 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நாயக்கர் மதுரையை ஆண்டபொழுது பிரமலைக்
கள்ளர்கள் மதுரையை கைப்பற்றிக் கொண்டனர் என்ற விவரத்தை போர்த்துக்கீசிய
மொழியில் யேசு சபை துறவி பல்தார்-டி-கோஸ்டா எழுதியுள்ளார்.

5. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர்களை அடக்க முயன்று
தோற்று இறுதியில் சமரசம் செய்து கொண்டதே வரலாறு.

6. 1739-ம் ஆண்டு பிரஞ்சு கவர்னர் டியூப்ளே தன்னரசு கள்ளர்களுக்கு கடிதம்
எழுதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் கூட்டணி சேரக் கேட்டுக் கொண்டார்
என்று ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

7. 23.03.1754-ல் அப்போதைய தாலுகா தலைநகரான உசிலம்பட்டி அருகில் உள்ள
ஆனையூரில் தன்னரசு கள்ளர்கள்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக
வெள்ளையர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை துவக்கினர்.

8. 1755-ம் ஆண்டு வெள்ளையனுக்கு எதிராக பூலித்தேவன் நடத்திய போருக்கு
தன்னரசு கள்ளர்கள் படை ஆதரவு கரம் நீட்டினர்.

9. 20.05.1756-ல் கான் சாகிப் கள்ளர்களை கருவறுக்க திட்டமிட்டு தோற்றுப்போனார்.

9. 12.11.1760-ல் பீட்டர்மாட்ரின் பாதிரியார் விகேயின் பாதிரியாருக்கு
எழுதிய கடிதத்தில் கள்ளர்கள் மதுரையை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்து
இருந்தனர் என்று எழுதியுள்ளார்.

10.1784-ல் கள்ளர்கள் மராட்டிய தளபதி முராரிராவை கொலை செய்து விட்டு
மதுரை மாநகரை பரிபாலனம் செய்தனர்.


இந்திர_குலம்


கரியவன்@இந்திரனை தேடிய எனது பயணத்தில் முதல் வெற்றியாக சுமார் 72வருட பழமையான பத்திரத்தில், கள்ளர் சமூகத்தவர்கள் தங்களை இந்திர குலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கள்ளர்களில் அதுவும் குறிப்பாக பிரமலைக்கள்ளர்களில் போன தலைமுறை வரைக்கும் தனது வீட்டில் உள்ள ஒரு ஆண் குழந்தைக்கு தெய்வேந்திரன் என்கிற பெயர் சூட்டுவார்கள்.
தேவேந்திரன் என்கிற இந்திரனுடைய பெயரைத் தான் தெய்வேந்திரன் என்று வைத்துள்ளார்கள்.
கல்வெட்டுகளில் கூட தேவர் என்கிற பெயர் தெவர் என்றே இருக்கும்.
இந்திரனை பற்றி கடந்து முறை நான் பதிவு செய்ததை பார்த்து மதிப்பிற்குரிய அண்ணன் Thirumaranji அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு நிலப்பத்திரம் உள்ளது என்று எனக்கு அனுப்பினார்.
அதனுடைய காலம் கிபி1947ஆம் ஆண்டு, அது ஒரு நிலப்பத்திரம் திருமாறன் அண்ணன் தாயாரின் 3தலைமுறைக்கு முன்னாள் உள்ள பூர்வீக சொத்து.
அந்த பத்திரத்தில் மாயாண்டித்தேவர் இந்திரகுலம் என்று தெளிவாக உள்ளது.
இன்னும் இதற்கு முந்தைய பத்திரத்தில் இந்திர குலம் பிறமலைக் கள்ளர் சாதி என்று தெளிவாக உள்ளதாகவும், அதனை நகல் எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக ஆய்வு செய்தால் சில மடையர்களின் மண்ணாங்கட்டி புனைவுகளை உடைத் தெரியலாம்.
நன்றி
மதிப்பிற்குரிய அண்ணன்
Thiru Maran
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு



Wednesday, September 11, 2019

இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள்

Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்.
.
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .
.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . .
.
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??
என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . .
இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர்
.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்
.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது
.
அப்படி என்ன விஷயம் ??
.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும்
.
ஆரிய வருகையின் போது இந்தியாவில் சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்...
.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்
.
அவர்கள் பூர்வகுடியான தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்.
.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது
.
அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்.
இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . .
.
இந்த மண்ணில் தமிழர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும்
.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது
.
How genetics is settling the Aryan migration

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...