வரலாற்று சுவடுகளில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் அதிகாரத்தின் மறுபெயர் பல்லவராயர்.
கிபி1169ஆம் ஆண்டு பாண்டிய மன்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவருடைய சகோதரரான குலசேகர பாண்டியனுக்கும் மதுரை அரச உரிமை சண்டை வருகிறது,
இச்சண்டையில் குலசேகர பாண்டியனை சமாளிக்க பராக்கிரம பாண்டியன், இலங்கையில் உள்ள சிங்கள மன்னரான முதலாம் பராக்கிரம பாகுவிடம் உதவியை நாடுகிறார்.
இதனை அறிந்த குலசேகர பாண்டியன் சிங்கள படை மதுரை வருவதற்கு முன்பு மன்னர் பராக்கிர பாண்டியனையும், அவரது மனைவியான இராணியையும்,சில இளவரசர்களையும் கொன்று விடுகிறார்.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு இலங்கை மன்னர் பராக்கிரம பாகு தன்னுடைய சிங்களப் படையை லங்கப்புரா என்கிற வலிமையான தளபதியின் தலைமையில் மதுரையை நோக்கி அனுப்புகிறார்.
ஆரம்ப காலத்தில் குலசேகர பாண்டிய மன்னர் கள்ளர், மறவர் படைகளை கொண்டு இராமநாதபுரம், இராமேஸ்வரத்தில் சிங்களப் படைகளை உள்ளே நுழையவிடாமல் தடுத்து வெற்றி பெறுகிறார்.
ஆனால் லங்கப்புராவின் பெரும்படை அனைத்து தடைகளையும் உடைத்தும், பல தமிழ் சிற்றரசர்கள் உதவியுடன் மதுரையை கைப்பற்றி பராக்கிரம பாண்டிய மன்னரின் மகனான வீர பாண்டியனை சிங்கள மன்னர் ஆதரவின் பெயரில் மதுரையில் முடி சூடுகின்றனர்.
நிலமையை உணர்ந்த குலசேகர பாண்டியன், சோழ மன்னர் இரண்டாம் இராஜ இராஜ சோழரிடம் உதவியை நாடுகிறார்.
இரண்டாம் இராஜ இராஜ சோழரும், சிங்களர் ஆதரவுடன் மதுரையில் பாண்டியர் அரசாட்சி நடப்பதை விரும்பவில்லை.
அதனால் குலசேகர பாண்டியனின் கோரிக்கை ஏற்று சிங்கள படைகளுக்கு பாடம் புகட்ட தன்னுடைய கள்ளர் தளபதியான பல்லவராயர் தலைமையில் சோழர் படையை குலசேகர பாண்டியனுக்கு ஆதரவாக அனுப்புகிறார்.
பல்லவராயரின் சோழர் களப்படை மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை இருந்த லங்கப்புராவின் சிங்களப் படைகளை அடித்து, துவைத்து தமிழ் நாட்டை விட்டு விரட்டி மீண்டும் இலங்கைக்கே துரத்து அடிக்கிறார்.
குலசேகர பாண்டியனை மதுரை பாண்டிய தர்பாரில் பல்லவராயர் அமர வைக்கிறார்.
இலங்கையில் உள்ள முதலாம் பராக்கிரபாகுவை நேரிடையாக மோத இலங்கைக்கு பல்லவராயர் தன்னுடைய களப்படையுடன் இலங்கைக்கு செல்கிறார்.
இலங்கையில் பராக்கிரபாகுவின் மைத்துனர் ஶ்ரீவல்லபா இலங்கையில் பராக்கிரம பாகுவிற்கு பாடம் எடுக்க வந்துள்ள பல்லவராயரிடம் உதவியை நாடுகிறார்.
பல்லவராயரும் தன்னுடைய ஆதரவை ஶ்ரீவல்லபாவிற்கு தெரிவித்து களத்தில் இறங்குகிறார்.
பல்லவராயரின் களப்படை இலங்கையில் உள்ள சிங்களர் கோட்டைகள், படைபற்று பெரும்பாலனவற்றை கைப்பற்றி பராக்கிர பாகுவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் பல்லவராயர்.
இதே நிலைமை நீடித்தால் தன்னுடைய அரசு பல்லவராயரால் உடைத்தெரியப்படும் என்பதால் ''மதுரையில் இரண்டாம் இராஜ இராஜ சோழரின் ஆனைக்கிணங்க பல்லவராயரால் அமர்த்தப்பட்ட குலசேகர பாண்டியனிடம், பராக்கிரபாகுவின் சிங்களப் படையுடன் குலசேகர பாண்டியன் இணைந்து சோழ தேசத்தை வீழ்த்தலாம்'' என ஓலை அனுப்புகின்றனர்.
குலசேகர பாண்டியரும், இரண்டாம் இராஜ இராஜ சோழரை சிங்களப் படையுடன் இணைந்து போரிட தயாராகின்றனர்.
ஆபத்தை உணர்ந்த பல்லவராயர், சோழ எல்லை பகுதிக்கு உடனடியாக தன்னுடைய களப்படையுடன் விரைகிறார்.
குலசேகர பாண்டியரின் கூட்டுப் படைக்கும் பல்லவராயரின் களப்படைக்கும் பல இடங்களில் போர் நடக்கிறது.
ஆனால் பல்லவராயர் அனைத்து போர்களிலும் வென்று சிங்களப் படையை மீண்டும் இலங்கைக்கு விரட்டுகிறார்.
சோழ மன்னருக்கு எதிராக சிங்கள மன்னருடன் கைகோர்த்து துரோகம் செய்த குலசேகர பாண்டியனை மதுரையின் அரியணையில் இருந்து இறக்கி மீண்டும் பராக்கிரம பாண்டியரின் மகன் வீர பாண்டியனை மதுரையின் அரியணையில் அமர வைக்கிறார் பல்லவராயர்.
குலசேகர பாண்டியன் மதுரையை விட்டு பல்லவராயரால் விரட்டியடிக்கப்படுகிறார்.
இந்த ஒட்டு மொத்த நிகழ்வில் பல்லவராயர் மதுரையின் 'கிங் மேக்கராக' இருந்தது வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இராஜ இராஜ சோழருக்கு கட்டுக்கடங்காத வீரம், இராஜ விசுவாசம் ஒரு சேர கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்தான் பல்லவராயர்.
குலோத்துங்க சோழருக்கு எப்படி கருணாகர தொண்டைமானோ,
அதேபோல் இரண்டாம் இராஜ இராஜ சோழனுக்கு பல்லவராயர்👍
குறிப்பு: கள்வன் இராஜன் (இரண்டாம் இராஜ இராஜன்) தன்னை கள்ளர் என்று மெய்கீர்த்தியில் குறிப்பிட்டுள்ளது கூடுதல் தகவல்.
நன்றி
A history of South India by Nilakanta Sastri
Tamil and Ceylon by C.S Navaratnam
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு