Friday, November 25, 2011

தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க

தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க
தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க


உலகின் தொன்மையான நாடு
தொல்காப்பியம் தந்த நாடு
ராஜராஜன் ஆண்ட பூமி
தஞ்சைக் கோவில் அதற்கு சாட்சி

தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க
தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க

வள்ளுவன் வாழ்ந்த நாடு
உலகப் பொதுமறை தந்த நாடு
கரிகாலன் வாழ்ந்த பூமி
கல்லணை அதற்கு சாட்சி

தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க
தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க

அவ்வைக் கிழவி வாழ்ந்த நாடு
ஆத்தி சூடி தந்த நாடு
பாண்டியன் ஆண்ட பூமி
பைந்தமிழ் வளர்த்த பூமி

தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க
தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க


சங்கத் தமிழை வளர்க்கும் நாடு
சிங்கத் தமிழர் வாழும் நாடு
வெற்றி எங்கே நீ தேடு
நாள்தோறும் பூமாலை நீ சூடு

தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க
தமிழ்நாடு வாழ்க எங்கள் தமிழ்நாடு வாழ்க

ஒரு பிரச்சனையை பிரச்சனையாக ஏற்றுக் கொள்ளாத வரை அதற்கு தீர்வு காண முடியாது.

Tuesday, November 22, 2011

பணம் – ஓஷோ


அமெரிக்க பத்திரிகைகளை பார்த்தால் நீங்கள் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை தவறவிடுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள். அது மகிழ்ச்சியை பணத்தின் மூலம் வாங்கிவிடலாம் என்பதே ஆகும். அவை நீங்கள் எதையோ தவறவிட்டு விட்டீர்கள் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன. அதன் பின் நீங்கள் அதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கிறீர்கள். அதற்காக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறீர்கள். பின்னர் அதனை வாங்குகிறீர்கள். அதன் பின் நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருகிறீர்கள். அந்த உணர்வு ஆழமான உணர்வு அல்ல. ஏனெனில் நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருவதற்கு முன்பே சில புதிய ஏமாற்றங்கள் உங்கள் மனதில் பதிந்து விட்டன. இப்போது அவை முன்னோக்கி இழுத்துச் செல்கின்றன. நீங்கள் கண்டிப்பாக ஒரு மலைவாசஸ்த் தலத்தில் ஒரு வீடு வைத்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் கண்டிப்பாக ஒரு கோடை ஓய்வு இல்லம் வைத்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் கண்டிப்பாக ஒரு படகு வைத்திருக்க வேண்டும். எப்போதும் எதையாவது சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். அவை உங்களை மரணம் வரை இழுத்துச் செல்லும். நீங்கள் இறக்கும் வரை, அந்த விளம்பரங்கள், அந்த பரப்புரை உங்களை இழுத்துச் செல்லும்.

பொருள் சார்ந்த (உலக ஆதாய) வாழ்க்கை முறையில் பணம் எல்லாவற்றும் மேலானதாக உள்ளது. பொருள் சாராத வாழ்க்கை முறையில் பணம் என்பது ஒரு வழிமுறையாக உள்ளது. சந்தோஷம் மேலானதாக உள்ளது. மகிழ்ச்சி மேலானதாக உள்ளது. உங்களது சுய தனித் தன்மையே மேலானதாக உள்ளது. நீங்கள் யார் என்று அறிந்திருப்பீர்கள் மற்றும் எங்கே நீங்கள் போகிறீர்கள் என்று அறிந்திருப்பீர்கள். அப்போது உங்களை திசை திருப்ப முடியாது. திடீரென உங்களது வாழ்க்கை தியானம் செய்யக்கூடிய தரம் கொண்டிருப்பதை பார்ப்பீர்கள்.

பணம் உருவாக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், மற்றவர்கள் உங்கள் மீது பணம் செலுத்துகிறார்களா அல்லது உங்களது பணத்தின் மீது அன்பு செலுத்துகிறார்களா, நீங்கள் விரும்பத் தக்கவராக இருக்கும்போது நீங்கள் விரும்பத்தக்கவராக இருக்கிறீர்களா அல்லது உங்களது பணம் விரும்பத்தக்கதாக உள்ளதா என்பதை கண்டறிய முடியாமல் போவதே ஆகும். இது தெரிந்தாலாவது வாழ்க்கை எளிமையானதாக ஆகிவிடும்.

உண்மையான ஆன்மீகம் பூமியில் வேரூன்றியதாக இருக்க வேண்டும். உலகத்தை ஒதுக்கும் ஆன்மீகம், உலகத்தை மறுக்கிறது. அது பண்பாக மாறிவிடுகிறது. அது அழகிய கற்பனையாக மாறிவிடுகிறது. அதில் ரத்த ஓட்டம் இருப்பதில்லை. அதில் உயிரோட்டம் இருப்பதில்லை. யூதர்கள் மிகவும் உலக ஆதாயத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர் என்பது உண்மையே. பணம் வைத்திருப்பதில் என்ன தவறு? ஆனால் யாரும் அதனை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுபவராக இருக்கக் கூடாது. அவர்கள் அதனை பயன்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூதர்கள் அறிந்துள்ளனர். யாரும் கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது. பணத்தை உருவாக்கி பயன்படுத்த வேண்டும். சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் பணம் என்பது அழகிய கண்டுபிடிப்பு, ஒரு பெரும் ஆசீர்வாதம் ஆகும். பணம் பல சாதனைகளை சாதித்து சாட்டுகிறது. பணம் என்பது ஒரு மாயமந்திம் போன்றது.

உங்களது சட்டைப் பையில் பத்து ரூபாய் தாள் இருந்தால், நீங்கள் உங்களது சட்டைப் பையில் ஆயிரக்கணக்கான பொருட்களை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அந்த பத்து ரூபாயை வைத்து எதையும் வாங்கலாம். நீங்கள் ஒரு மனிதனைக் கொண்டு இரவு முழுவதும் உங்களுக்கு மசாஜ் செய்ய வைக்கலாம். அல்லது நீங்கள் அதனை கொண்டு உணவை வாங்கலாம். அல்லது நீங்கள் அதனைக் கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யலாம். அந்த பத்து ரூபாய் தாள் பல விஷயங்களை சாத்தியமாக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆனால் அந்த தாள் இல்லாவிட்டால் உங்களால் அந்த சாத்தியங்களை எடுத்துச் செல்ல முடியாது. அப்போது உங்களது வாழ்க்கை வரம்புக்குட்பட்டதாக ஆகிவிடுவிறது. நீங்கள் மசாஜ் செய்யும் ஒருவரை வேலைக்கு அமர்த்தலாம். ஆனால் அது உங்களிடம் உள்ள சாத்தியம் மட்டுமே. திடீரென உங்களுக்கு பசிக்கிறது அல்லது தாகமெடுக்கிறது. அப்போது ஒரு மனிதனால் எதையும் செய்ய முடியாது. ஆனால் பத்து ரூபாய் தாள் பல விஷயங்களை செய்யக் கூடியது. லட்சக்கணக்கான விஷயங்கள். அதில் முடிவில்லாத சாத்தியங்கள் உள்ளன. இது மனிதனின் கண்டுபிடிப்புக்களில் மிகச் சிறந்த ஒன்று. எனவே அதனை எதிர்க்கத் தேவையில்லை. நான் அதனை எதிர்ப்பவன் இல்லை.

அதனை பயன்படுத்துங்கள். அதனை பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு அழுத்தமாக அதனை பிடித்துக் கொள்கிறீர்களோ, உங்களது அழுத்தத்தைப் பொறுத்து உலகம் ஏழையாகிவிடும். ஏனெனில் பணம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்லும்போதுதான் அது பெருகுகிறது. ஆங்கிலத்தில் பணத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சொல் ஒன்று உள்ளது. அது “கரண்சி” ஆகும். அதற்கு என்ன பொருள் என்றால் பணம் நீரோட்டம் போல ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே. எப்போதுமே அது ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் சென்றவாறு இருக்க வேண்டும். அது எவ்வளவு அதிகமாக செல்கிறதோ அவ்வளவு சிறப்பானது.

உதாரணமாக, என்னிடம் ஒரு பத்து ரூபாய் தாள் இருந்து அதனை நானே வைத்துக்கொண்டால், அப்போது உலகிலேயே ஒரேயொரு பத்து ரூபாய் தாள்தான் இருக்கும். அதனை நான் உங்களுக்கு கொடுக்க, நீங்கள் அதனை மற்றொருவருக்கு கொடுத்தால், அது பத்து கைகளின் வழியே சென்றால் அப்போது நம்மிடையே நூறு ரூபாய் இருக்கும். நாம் நூறு ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பயன்படுத்தியுள்ளோம். பத்து ரூபாய் பத்தால் பெருக்கப்படுகிறது. பணத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூதர்கள் அறிந்திருந்தார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் பேராசை தீயது. பேராசை என்பதற்கு நீங்கள் எப்போதும் பணத்தைப் பற்றியே நினைக்கிறீர்கள், அதனை பயன்படுத்துவது இல்லை என்று பொருள். அது ஒரு முற்றுப்புள்ளியாகி விடுகிறது. அது கெட்டது. நீங்கள் ஒரு யூதராக இருக்கிறீர்களா, ஜைனராக இருக்கிறீர்களா, இந்துவாக இருக்கிறீர்களா அல்லது முஸ்லீமாக இருக்கிறீர்களா என்பது பிரச்சனையில்லை.

மனது எப்போதுமே இன்னும் இன்னும் என்று கேட்ட வண்ணம் உள்ளது. உங்களிடம் பணம் இருந்தால், அது அதிக பணத்தை விருமபுகிறது. உங்களுக்கு கௌரவம் இருந்தால், அது அதிக கௌரவத்தை எதிர்பார்க்கிறது. உங்களிடம் அறிவு இருந்தால் அது அதிக அறிவுக்காக ஏங்குகிறது. மனது எப்போதுமே “இன்னும்” வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

வாழ்க்கை பற்றிய நமது மனப்போக்கு முழுவதுமாகவே பணம் தொடர்பானதாக உள்ளது. பணம் என்பது படைப்பு சக்தியே இல்லாத ஒன்றின் மீது ஒருவர் ஆர்வம் கொள்ளும் பொருளாக உள்ளது. அணுகுமுறை முழுவதுமே அதிகாரம் சார்ந்ததாக உள்ளது. அதிகாரம் அழிவை ஏற்படுத்தக் கூடியது. அது ஒன்றை படைக்கக் கூடியதல்ல. பணம் கொள்ளையடிக்கக் கூடிய ஒன்றாக, சுரண்டக் கூடிய ஒன்றாக இருப்பதால் பணத்தின் பின்னால் ஓடும் ஒருவர் அழிவை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார். அது பலரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் அது உங்களிடம் இருக்கும். அதிகாரத்தை பெறவேண்டும் என்றால் நீங்கள் பலரை சக்தியற்றவராக ஆக்க வேண்டும் என்று பொருள். நீங்கள் அவர்களை அழிக்க வேண்டும். அதன் பின்னால்தான் நீங்கள் சக்திவாய்ந்தவராக ஆக முடியும். சக்தி பெற்றவராக இருக்க முடியும். நினைவிருக்கட்டும் – இவை அழிவுக்குரிய செயல்கள். படைப்பாற்றல் உலகை அழகு படுத்துகிறது. அது உலகிற்கு ஒன்றை கொடுக்கிறது. அது எதையும் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு படைப்பாளி உலகிற்கு வந்தால் அவன் உலகின் அழகிற்கு மெருகேற்றுகிறான்.

இங்கே ஒரு பாடல், அங்கே ஒரு ஓவியம் என்று உருவாக்குகிறான். அவன் உலகை நளினமாக நடனமாடச் செய்கிறான். அழகாக அனுபவிக்கிறான். ஆழமாக அன்பு செலுத்துகிறான். அமைதியாக தியானம் செய்கிறான். அவன் உலகை விட்டுச் செல்லும்போது. அவன் தனக்குப் பின்னால் ஒரு சிறந்த உலகை விட்டுச் செல்கிறேன். அவனை யாருக்காவது தெரியுமா அல்லது சில பேருக்காவது அவனை தெரியுமா என்பது பிரச்சனையில்லை. சிறிது இயற்கை மதிப்பு உள்ள காரணத்தால் அது அருமையாக நிரம்பியிருக்கும்.

பணம், அதிகாரம், கௌரவம் ஆகியவை படைப்பு இல்லாதவை. உருவாக்க முடியாதவை மட்டுமல்லாமல் அழிக்கும் நடவடிக்கைகளையும் கொண்டது. இவற்றிடம் எச்சரிக்கையாக இருங்கள். இவற்றிலிருந்து எச்சரிக்கையாக இருந்தால் நீங்கள் எளிதாக படைப்பாளியாகி விடலாம். உங்களுக்கு படைக்கும் திறன் சக்தி, கௌரவம், பணத்தை கொடுக்கும் என்று நான் சொல்லவில்லை. உங்கள் வழியெல்லாம் பூந்தோட்டம் அமையும் என்று நான் சொல்லவில்லை. இது உங்களுக்கு தொல்லையை ஏற்படுத்தலாம். இது நீங்கள் ஒரு ஏழையைப்போல வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளலாம். நான் உங்களுக்கு என்ன வாக்குறுதி கொடுக்கிறேன் என்றால், நீங்கள் உங்களுக்குள்ளே மிகப்பெரிய பணக்காரனாக இருப்பீர்கள். மிக ஆழத்தில் நிரம்பியவராக இருப்பீர்கள். ஆழத்தில் நீங்கள் சந்தோஷமாக, கொண்டாட்டமாக இருப்பீர்கள். நீங்கள் கடவுளிடமிருந்து தொடர்ந்து அதிகமாக மற்றும் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள்.

வெளிப்புறமாக நீங்கள் புகழ் பெற சாத்தியமில்லாமல் போகலாம். உங்களிடம் பணம் இல்லாமல் போகலாம். நீங்கள் இந்த உலகத்தில் வெற்றி பெறுவது என்பது பெருந்தோல்வியாக போகலாம். இது உள்ளேயுள்ள உலகத்தில் தோற்பதாகும். நீங்கள் உங்களது சுயத்தை இழந்து விட்டால் முழு உலகைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த உலகம் முழுவதையும் சொந்தமாக்கிக் கொண்டு உங்களை இழந்து விட்டால் என்ன ஆகும்? ஒரு படைப்பாளி தனது சுயத்தை தனதாக்கிக் கொள்கிறான். அவன்தான் குரு. அதனால்தான் கிழக்கில் நாங்கள் ‘ஸ்வாமி’ என்று அழைக்கிறோம். ‘ஸ்வாமி’ என்பதற்கு குரு என்று பொருள். பிச்சைக்காரர்களும் ஸ்வாமி - குரு என்று அழைக்கப்படுகிறார்கள். பேரரசர்கள், தங்களது வாழ்க்கையின் இறுதியில், அவர்கள் பிச்சைக் காரர்கள்தான் என்பதை நிரூபித்ததுள்ளனர். பணம், அதிகாரம், கௌரவத்தின் பின்னால் ஓடும் மனிதன் பிச்சைக்காரன். ஏனெனில் அவன் தொடர்ச்சியாக பிச்சைக்காரனாக இருக்கிறான். உலகிற்கு கொடுக்க அவனிடம் எதுவும் இல்லை.

ஒவ்வொருவரும் அளவுகடந்த தெய்வீகத் தன்மையை பெற்றிருப்பதால் அளவுகடந்த வலிமை பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவரும் உயிர்வாழ்தலின் தோற்றமான கடவுளிலேயே வேர் பதித்து இருப்பதால் ஒவ்வொருவரும் வலிமையாக இருப்பார்கள். மனிதனின் மனது அதனை மறக்க முற்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் அதை மறக்கும்போது பலவீனமாகிறீர்கள். நீங்கள் பலவீனமாகும்போது செயற்கையான முறையில் நீங்கள் வலிமை பெற முயற்சிக்கிறீர்கள். பணத்தை தேடுவதன் உண்மையில் மூலம் எதை தேடுகிறீர்கள்? நீங்கள் அதிகாரத்தை தேடுகிறீர்கள், நீங்கள் பலத்தை தேடுகிறீர்கள். கௌரவத்தை, அரசியல் அதிகாரத்தை தேடுவதன் மூலம் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? நீங்கள் அதிகாரம், பலத்தை தேடுகிறீர்கள். ஆனால் பலம் என்பது எப்போதும் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறது. நீங்கள் தவறான இடங்களில் தேடுகிறீர்கள்.

சந்தோஷத்தை பெறுவதிலிருந்து அதிக இடையூறு ஏற்படுத்துவதால் பணத்தைப் பற்றி மிகவும் கவலைப்படாதீர்கள். ஆனால் அதற்கு மாறாக என்ன நடக்கிறது என்றால் எல்லாரும் பணம் இருந்தால் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறார்கள். பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதனை சந்தோஷத்திற்காக பயன்படுத்தலாம். நீங்கள் கவலையாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதிக கவலையைப் பெற பணத்தை பயன்படுத்துவீர்கள். ஏனெனில் பணம் என்பது ஒரு நடுநிலையான சக்தி என்பதால் ஆகும்.

நினைவிருக்கட்டும், நான் பணத்திற்கு எதிரானவன் கிடையாது. நான் சொல்வதை தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். நான் எதற்கும் எதிரானவன் கிடையாது. பணம் என்பது ஒரு வழிமுறை. நீங்கள் சந்தோஷமாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதிக சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களது பணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்ற நிலை ஏற்படுவதன் காரணமாக நீங்கள் கவலையாக இருந்து பணம் வைத்திருந்தால் மிகவும் கவலைப்படுவீர்கள்.

உங்களது வாழ்க்கை முறை எதுவாக இருந்தாலும் உங்களது பணம் அதை மாற்றிவிடும். நீங்கள் கவலையாக இருக்க உங்களிடம் அதிகாரம் இருந்தால், நீங்கள் உங்களது அதிகாரத்தை வைத்து என்ன செய்வீர்கள்? உங்களது அதிகாரத்தை கொண்டு உங்களுக்கு நீங்களே விஷம் வைத்துக் கொள்வீர்கள். ஆனால் பணம் சந்தோஷத்தை தரும் என்று எல்லாரும் பணத்தையே தேடுகின்றனர். மரியாதை சந்தோஷத்தை தரும் என்று மரியாதையை தேடுகின்றனர். ஏதாவது வழியில் அதிக பணம் கிடைக்கும் என்றால் மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள, வழியை மாற்றிக்கொள்ள எப்போதும் ஆயத்தமாக உள்ளனர்.

நீங்கள் பணத்தை சம்பாதிக்கலாம். ஒருநாள் பணம் கிடைத்துவிடும். அப்போது ‘நீ என்ன பெற்றுவிட்டாய்?’ என்று வாழ்க்கை கேட்கும். ஆனால் நீங்கள் கேட்பதில்லை. இப்போது நீங்கள் உங்களது பணத்தை அரசியலுக்காக செலவிட நினைப்பீர்கள். நீங்கள் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவராக ஆக விரும்புகிறீர்கள். அதன் பின் எல்லாம் வேறொன்றும் வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். ஒருநாள் நீங்கள் பிரதமராக ஆகிவிடுகிறீர்கள். இப்போது, ‘நீ என்ன பெற்றுவிட்டாய்?’ என்று வாழ்க்கை மீண்டும் கேட்கிறது. நீங்கள் அதை கேட்பதில்லை. நீங்கள் வேறு எதையாவது யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள். வேறு ஏதாவது வேண்டும். வாழ்க்கை பரந்தத ஒன்று. அதனால்தான் பல வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது.

நாம் இயற்கை அல்லாத பணம், கௌரவம், அதிகாரம் என்று பல நகர்வுகளால் திசை திருப்பப்படுகிறோம். குயில் பாடுவதை கேட்பதால் பணம் கிடைக்கப் போவதில்லை. குயில் பாடுவதை கேட்பதால் உங்களுக்கு அதிகாரம், கௌரவம் கிடைக்கப் போவதில்லை. பட்டாம்பூச்சியை பார்ப்பது உங்களுக்கு பொருளாதார, அரசியல், சமூக ரீதியாக உதவப் போவதில்லை. இந்த விஷயங்கள் உங்களுக்கு பணம் அளிப்பதில்லை, ஆனால் இந்த விஷயங்கள் உங்களை சந்தோஷமாக்கும்.

எல்லாரும் அர்த்தமுள்ள விஷயங்களை தள்ளிப் போட்டுக்கொண்டே போகின்றனர். நாளை அவை சிரிக்கும், இன்னும், பணம் சேர்க்க வேண்டும்... நிறைய பணம், அதிக கருவிகள். நாளை அவர்கள் அன்பு செலுத்துவார்கள். இன்று நேரமில்லை. ஆனால் நாளை என்பது ஒருபோதும் வருவதில்லை. ஒருநாள் அவர்கள் அனைத்துவிதமான கருவிகளை வைத்திருப்பர். நிறைய பணமும் வைத்திருப்பர். அவர்கள் ஏனியின் கடைசிப் படிக்கு வந்துவிட்டனர். குளத்தில் குதிப்பதை தவிர வேறு வழியில்லை.

நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் உலகிலேயே பெரிய பணக்காரனாகலாம். நீங்கள் (அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலலுமான) ஆண்ட்ரூ கார்னீஜி ஆகலாம். ஆனால் இறுதியில் நீங்கள் உலகிலேயே பெரும் பணக்காரராகும்போது, வாழ்க்கை முழுவதும் வீணாகி விட்டதே என்று நீங்கள் நினைக்க ஆரம்பிக்கிறீர்கள். பணம் இருக்கிறது. ஆனால் அதன் உள்ளே உட்பொருள் எதுவும் இல்லை. வாழ்க்கை நீர்த்துப் போய்விட்டது.

http://www.messagefrommasters.com/Spiritual_Quotes/Osho/osho_money_quotes1.htm

Wednesday, November 16, 2011

இனப்படுகொலை - ஐநாவின் மனித உரிமை கழகத்திலும் இலங்கைக்கு மறைமுக ஆதரவளிக்கும் இந்தியா

தமிழினப் படுகொலையின்போது அனுபவித்த சொல்லவொண்ணா துயரத்திற்காக இலங்கை மீது ஐநாவின் மனித உரிமை கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த கூட்டம் 2011 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 2009ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் கழகத்திற்கு (யூஎன்எச்ஆர்சி) கொழும்பு/ இந்தியா அழுத்தம் கொடுத்ததைப்போல அல்லாமல் தற்போது ராஜபக்சேவுக்கு எதிராக ஏராளமான இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு விக்கிலீக்ஸ் இணையதளம் (போர்க்குற்றத்திற்கு உடந்தையாக ஏராளமான ஆவணங்களை வெளியிட்டு வருகிறது), ஐநா ‘நிபுணர் குழு‘ அறிக்கை, சேனல்4-ன் ‘கொலைக்களங்கள்‘ மற்றும் ஹெட்லைன்ஸ் டுடேயின் ஆவணப்படம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களின் சமநிலையான செய்திகளுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

இது சர்வதேச சமுதாய அமைப்புகளுடன் உலகின் மனச்சாட்சியை கிளர்ந்தெழச் செய்தது. இது இலங்கையின் இனப்படுகொலை அரசை தனிமைப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளிகளை நிறுத்த ஒரே குரலில் அறைகூவல் விடுத்தது. மனித உரிமைகளை மதிக்காத வரலாறு கொண்ட நாடுகள் மற்றும் யூஎன்எச்ஆர்சி-க்கு எதிரான புவிசார் அரசியல் கொள்கைகளை கொண்ட மற்ற நாடுகளின் இடையூறு இருந்தபோதிலும் இன்று ஐநா மனித உரிமைக் கழகம் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கக் கூடிய நிலையில் உள்ளது.

யூஎன்எச்ஆர்சி ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் மீது எடுக்க வேண்டிய உண்மையான நடவடிக்கை ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாக அழிக்கப்படாமல் இருக்க மற்றும் மனித குலம் பெரும்பயன் அடைய வேண்டும் என்பதற்காக முக்கியமானதாகும். காட்டுமிராண்டித்தனமான அரசாங்கங்கள், அதிகார ஆசையில் கிளர்ச்சியை அடக்க மனித உரிமைகளை காற்றில் பறக்கவிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும். இறையாண்மைக்கு பங்கம் என்று ராஜபக்சே புலம்புவதால் நடைபெற்ற மனித உரிமை பிரச்சனைகளில் (காரணமில்லாமல் கைது செய்வது, சிறைவைப்பை நீட்டிப்பது, சட்டப்பூர்வமான கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல்வாதிகளை கொலை செய்வது) சர்வதேச நாடுகள் தலையிடுவதை தடுக்க முடியாது. முபாரக், கடாஃபி, அஸாத் போன்றோர் மனித உரிமை குற்றங்களால்தான் சர்வதேச தலையீட்டை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் இதற்கு மாறாக இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஆட்சியாளர்கள் இலங்கையின் சிறிய, பெரிய (40,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால்) படுகொலையை கண்டிப்பவர்களை மிரட்டுகின்றனர். இவர்கள் ராஜபக்சே இனப்படுகொலை விசாரணையிலிருந்து தப்பிக்க போதுமான செயல்முறை மற்றும் கால இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் சோனியாவின் கூட்டமான மன்மோகன் சிங், எஸ்எம் கிருஷ்ணா, மீரா குமாரியை உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் அறநெறி தவறாத வரலாறு கொண்ட இந்தியா மீது கறை படியச் செய்கின்றனர்.

யூதர்களை கொலை செய்ய கொடூரமான ருடால்ஃப் ஹோஸ் விஷவாயு அறையையும், ஹென்ரிச் ஹிம்லெர் சுட்டுக்கொல்லும் படையினரையும் வைத்திருந்தனர் என்பதை வாசகர்கள் அறிவர். ராஜபக்சே, ‘தாக்குதல் இல்லாத பகுதி‘ என்று கூறி அப்பாவி தமிழ் மக்களை அதற்குள் அழைத்து பின்னர் துப்பாக்கிகளாலும் விமானத்திலிருந்தும் சுட்டு ஹிட்லரின் இன அழிப்பை மீண்டும் அரங்கேற்றியுள்ளான். இந்த கொலைகளுக்கு பச்சைக் கொடி காட்டியவர்கள் மேனன்/ நாராயணன் ஆவர். இன்னமும் இந்த சோனியா கூட்டத்தினர் அமைதி காத்து பொய்க்கு இசைபாடி வருகின்றனர். இலங்கை ராணுவத்தினர் ஒருகையில் துப்பாக்கியும் மறு கையில் மனித உரிமை சாசனத்தையும் கொண்டு, முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை என்று செல்லும் ராஜபக்சேயின் கருத்தை ஆமோதிப்பவர்களாக உள்ளனர். மேனன் மற்றும் நாராயணன் குழு அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்ல உதவியாக விமானங்களையும் ராவின் உளவுத் தகவல்களையும் கொடுத்தனர்.

வெற்றிக் களிப்பில் துடித்த இலங்கை ராணுவத்தினர் தங்களது புகைப்படம் ‘கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தில் வரும் என்று தெரியாமல் முள்ளிவாய்க்காலில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ராஜபக்சேவின் வெற்றிக்கோப்பை பெருமிதம் அவரிடம் டிபியூ-கள் (ஆழமாக ஊடுறுவிச் செல்லும் பிரிவு) இருக்கின்றன என்பதை காட்டுவதாகவும். இவற்றை தமிழின் திரிபு மொழி பேசும் இந்தியர்கள் ‘தாக்குதல் இல்லாத பகுதியில்‘ இருந்தவாறு இந்த பிரிவை வழிநடத்தினர் என்பதை காட்டுகிறது. இது இலங்கை போர்க்குற்றத்திற்கு புதிய பரிமாணத்தை தருவதாக உள்ளது. சேனல் 4-ன் ஆய்வாளர்கள் இந்த டிபியூக்கள் எந்த அளவு தாக்குதல் இல்லாத பகுதியில் மக்கள் கொலை செய்யப்பட உதவியாக இருந்தனர் என்பதை நிரூபிக்கக் கூடும். ராஜபக்சேயின் ராணுவம் பொதுமக்களை கொல்ல யூஏவி-களையும் (ஆளில்லாத விமானம்) பயன்படுத்தியது. இது மனித கேடயமாக பிடித்து வைத்துள்ள பொதுமக்களை புலிகள் (அந்த பகுதியில் இருந்த ஒரே ஆயுதக் குழு) கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் பொய் என நிரூபிக்கிறது. புலிகளின் மீது பலி போடுவதற்காகவே ராஜபக்சே கூட்டத்தினர் இந்த டிபியூக்களை வைத்து மக்களை மனித கேடயமாக பிடித்து கொலை செய்ததாக பெருமை பேசிக் கொள்கின்றனர். சேனல் 4-ன் ‘கொலைக்களங்கள்‘ குற்றச்சாட்டை மறுப்பதற்கான வீடியோக்களை இந்த டிபியூ மற்றும் யூஏவிகளே வீடியோக்களை வழங்கின. சேனல் 4 தற்போது இந்த டிபியூ மற்றும் யூஏவி வீடியோக்களை ஆராயலாம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாஸிகள் செய்த இனக்கொலைகளுக்கு இணையானது அல்லது அதற்கும் அதிகமானது. ராஜபக்சேயும் மற்றும் அவனைப் போன்றோரும் இனஅழிப்பில் ஈடுபட ஏதுவாக ராஜபக்சே, அவனது இனப்படுகொலை கூட்டாளி இந்தியாவால் ஐநா/ ஐநா மனித உரிமைக் கழக அமைப்புகள் சீர்குலைக்கப்படுமா? ராஜபக்சே மீது உலகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலை கடாஃபிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர் ராஜபக்சேவைப் போல லிபியாவில் எதிர்ப்போரை அழிக்க திட்டமிட்டார். ஆனால் சர்வதேச நாடுகள் இதனை புரிந்துகொண்டு அந்நாட்டு மக்களை பாதுகாத்தன. இறையாண்மை ஒருமைப்பாடு என்ற கருத்தை புறந்தள்ளிய சர்வதேச சமூகம் மிலோஸ்விச்-க்கு (ராஜபக்சே போல இனப்படுகொலை செய்தவன்) எதிராக நடவடிக்கை எடுத்தன. ராஜபக்சேவின் ஏமாற்று வேலைகளும், குற்றப் பங்காளிகளும் சர்வதேச நடவடிக்கையை தவிர்க்க ராஜபக்சேவுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி கொடுக்க முடியுமா?

ஹிட்லரின் இனப்படுகொலை இஸ்ரேல் என்ற நாடு பிறக்க வழி செய்தது. ஆனால் ராஜபக்சேவும் இந்திய பாதுகாவலர்களும் தமிழீழத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடான சைப்ரஸில் துருக்கியர் அழிக்கப்படுவதை தடுக்க துருக்கி இறையாண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு துருக்கியர் கொண்ட சைப்ரஸை உருவாக்க செயல்பட்டது. அதேபோல கொடுங்கோல் ராணுவ ஆட்சியின் இன அழிப்பு கொள்கை மற்றும் கொடூரமான கொலைகளையும் தடுக்க ஆஸ்திரேலியா தலையிட்டு கிழக்கு திமோர் உருவாக உதவியது. கிழக்கு திமோர் இனப்படுகொலையில் 300 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் தமிழீழத்தில் ஒரு இடத்தில் (முள்ளிவாய்க்கால்) / ஒரு தாக்குதலில் மட்டுமே 40,000 பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் டெல்லி சோனியா கூட்டத்திற்கு எந்த கொடுமையும் தெரியவில்லை. அதுபோன்ற கொடுமை இலங்கையில் நடைபெற்றதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை.

ஈழத் துயரத்திற்கான மையப்புள்ளி தமிழருக்கு எதிரான சிங்களவாதத்தின் தவறான புரிந்துணர்வு ஆகும். இது யூத எதிர்ப்பு நாஸியின் மனநிலையை மிஞ்சும் மனநிலையாகும். 1947ம் ஆண்டு தமிழர்களுக்கு 30 சதவீதம் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் சிங்கள பேரினவாதம் தற்போது அதனை 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக ஆக்கிவிட்டது. இலங்கை சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே (1948) பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் தமிழகத்திற்கு (இந்தியா) அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தமிழர்களின் தலைவிதியை எண்ணி இந்தியா வருத்தப்படவில்லை. ஜேஆர் ஜெயவர்தனே பல ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களது குடியுரிமையை பாதியை மட்டுமே அங்கீகரித்தார். அதுவும் தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காகவே செய்தார். இந்த தமிழர்களுக்கு இரண்டாம்பட்ச வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களின் புலம்பல் என்னவென்றால், “இந்த விஷயங்களை இந்தியா புரிந்துகொள்ளும்போது (வடக்கு இலங்கை உட்பட) இலங்கையில் சிங்கள ராணுவத்தினரின் வாரிசுகளைத் தவிர ஒரு தமிழரும் இருக்க மாட்டார்கள். இந்தியா காரணமாகவே தோட்டத் தொழிலாளர்கள் விலைபோனார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அவர்கள் நாஸிகளால் யூதர்களுக்கு ஒதுக்கப்பட்டது போன்ற முகாம்களில்தான் வாழ்ந்தனர். அவர்கள் அந்த பகுதியை விட்டுப் வெளியே போக முடியாது. குறைந்த சம்பளத்தில் 10 x 10 அளவுள்ள அறையில் வாழ்ந்து சாக வேண்டும். அவர்கள் அடிமைகளைப் போலவே வாழ்ந்தனர்.“ இது போன்ற மனநிலை படைத்த இலங்கை தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை பறித்து வருகிறது. இதற்கு காரணம் இந்தியாவின் அலட்சியம்தான்.

அதேபோல சிங்களவரின் இலங்கை தொழில்வளம் பெற்ற பகுதியாகவும், தமிழர்கள் வீடில்லாத பரதேசிகளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கம் தெற்கில் ஆரம்பித்து தற்போது வடக்கிலும் தனது கைக்கூலிகளை வைத்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி போலீஸ் வன்முறையையும் அரங்கேற்றி வருகிறது. தெற்கு பகுதியில் உள்ள தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டு தங்களுக்கு பாதுகாப்பான வடக்குப் பகுதிக்கு துரத்தப்படுகின்றனர். எஞ்சியுள்ளவர்கள் அடிமை போல வாழ்ந்து வருகின்றனர். இதுவே தெற்கு இலங்கையின் நிலை. தார்ஸி விட்டாச்சியின் “எமர்ஜென்சி 1958" இந்த துயரத்தை படமாக சித்தரிக்கிறது.

1958ம் ஆண்டு அரசாங்கத்தால் வடக்கு இலங்கைக்கு துரத்தப்படுதல் அல்லது இனப்படுகொலை அரங்கேற்றப்படுகிறது. தெற்கு பகுதியிலிருந்து சரக்கு கப்பல்களில் வந்து சேர்ந்ததை இன்னமும் பல தமிழர்கள் நினைவு கூர்கின்றனர். அவர்கள் தொடர்ந்து இந்த துயரத்தை சஹித்து வந்தனர். இலங்கையின் எந்த பகுதியிலும் எந்த இனத்தவரும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர் என்று ராஜபக்சே சொல்வது பச்சைப் பொய். 1983ம் ஆண்டு அரசாங்கம் தூண்டிவிட்ட கலவரத்தால் பத்து லட்சத்திற்கும் மேலான மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு இலங்கை எந்த செலவும் இல்லாமல் இருபது லட்சம் மக்களை துரத்தியடித்தது. இலங்கை செய்த ஒரே வேலை ஈழம் – சிங்களம் என்ற பிளவை ஆழப்படுத்தியதாகும். 30 ஆண்டுகளாக நடந்த அமைதிப் போராட்டம் மக்கள் மத்தியில் ஈழத்திற்கான பரவலான அர்ப்பணிப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிங்களவர் மத்தியில் இன அழிப்பு ஆழமாக பதிந்துவிட்ட நிலையிலேயே தமிழர்களை கொல்லும் முறை மிகவும் கொடூரமாக மாறியுள்ளது. இனப்படுகொலைக்காக சிங்களவர்கள் வடக்குப் பகுதியிலிருந்த தமிழ் மக்களை ஒன்று சேர்த்து பட்டினிபோட்டு கண்மூடித்தனமாக சுட்டு குண்டுவீசித் தாக்கினர். உயர் பாதுகாப்புப் பகுதி என்று கூறி தமிழர்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அவர்களை துரத்தினர். பின்னர் அவற்றை சிங்களவருக்கு வழங்கினர். அதேபோல தமிழர்களின் மீன்வளமும் பறிக்கப்பட்டது. சிங்கள கடற்படையின் பாதுகாப்பு மற்றும் ஊக்கத்தால் சிங்கள மீனவர் தமிழர்களின் பகுதியில் வந்து மீன் பிடிக்கின்றனர்.


இந்த சிங்கள மீனவர்கள்தான் தொடர்ந்து கப்பற்படையின் உதவியுடன் இந்திய தமிழர்களை தாக்குகின்றனர். இந்த செயல்கள் ஆக்கிரமிப்பை காட்டினாலும் கூட இந்திய கப்பற்படையினர் தங்களது நாட்டினருக்குப் பதிலாக சிங்களவருக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். இது போன்ற கொடுமைகள் எல்டிடிஈ ஆட்சி செய்த காலத்தில் நடைபெறவில்லை. இது சோனியா கூட்டத்திற்கு தெரியாமல் இல்லை. இது போன்ற கொடுமைகளை இலங்கை பத்திரிகைகளே உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக வெளியிடுகின்றன. அச்சம் காரணமாக தெற்கில் உள்ள தமிழர்களின் நிலை 1983ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையில் உள்ளது, 2009 மே மாத தோல்விக்குப் பின்னர் அவர்களது நிலை மிக மோசமாகிவிட்டது என்பது சோனியா கூட்டம் அறிந்ததே.

ராஜபக்சேயின் பயங்கரவாதத்தின் நோக்கம் வாழ்க்கை நிலையை மாற்றி, வடக்கு இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான பகுதி என்ற எண்ணத்தை மாற்றுவதே ஆகும். இந்த எண்ணம் தாய்நாட்டிலிருந்து தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதற்கானதாகும். போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியை இனப்படுகொலை மனநிலை கொண்ட ராஜபக்சேயிடம் ஒப்படைப்பது ஈழத் தமிழர்களை எப்போதும் அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமமானதாகும்.

இருந்தாலும் ராஜபக்சேவின் டெல்லி கூட்டாளிகள் (மன்மோகன் சிங், எஸ்எம் கிருஷ்ணா, மேனன்கள்), வட இலங்கையில் தொடர்ந்து தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவர்கள், ராஜபக்சே சொல்வதை போலவே, நீண்ட உள்நாட்டுப் போருக்கு முடிவுக்கு கொண்டு வந்து இலங்கை சாதாரண நிலை திரும்பி விட்டது, தமிழர்கள் வாழ்வில் அமைதி திரும்பி விட்டது என்று சொல்லி வருகின்றனர். இந்த யுத்தி முழுப் பூசனியை சோற்றில் மறைக்கும் பொய் என்று ஹெட்லைன்ஸ் டுடேயின் ஆவணப்படும் வெளிக்காட்டியது.

நரகத் தீவு என்று கூறுமளவு சித்ரவதை, கொலை, கற்பழிப்பு, கடத்தல், விசாரணையின்றி, சுட்டுக்கொள்ளுதல், தீவிரவாதம் (?) இல்லாத நிலையிலும் ராணுவ தளங்களின் விரிவாக்கம் என்று கூறி பலவந்தமான குடியேற்றங்களை செய்து வருகிறது. மிகவும் ஆபத்தான இந்த அரசாங்கத்திற்கு உதவியாக தான் செய்த திரைமறைவு வேலைகளை கோத்தபயா ராஜபக்சே வெளிக் கொண்டு வந்து தன்னையும் சிக்க வைத்துவிடுவாரோ என்ற அச்சமே இலங்கை படுகொலை விஷயத்தில் இந்தியாவின் நிலைக்கு காரணம். மன்மோகன் சிங்கின் கருத்து என்னவென்றால் நல்லதோ அல்லது கெட்டதோ தீவிரவாதம் இருக்க கூடாது என்பதாகும். இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஜிஹாதி போன்ற ‘தீவிரவாதிகளே‘ அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டியவர்களே.

ராஜபக்சே பற்றிய மன்மோகன் சிங்கின் கருத்து என்னவென்றால், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், ரெட் கிராஸ் மற்றும் இன்னும் பல மனிதாபிமான அமைப்புகள் மற்றும் ஒபாமா, டேவிட் மிலிபேண்ட், ஹிலாரி கிளின்டன் மற்றும் வேறு மேற்கத்திய தலைவர்கள் மற்றும் ஆர்2பி (பாதுகாப்பதற்கான பொறுப்பு) கருத்துக் கொண்டிருப்போர் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் ஆவர். டெல்லி இவ்வளவு பலவீனமான அறிநெறி கொண்ட தலைவர்களை கொண்டிருப்பது வருந்தத் தக்கதே. இனப்படுகொலையில் இப்போது டெல்லி சோனியா கூட்டத்திற்கு ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர வேறு வழியில்லை.

இன்னொரு கேரள மஃபியா உறுப்பினரான நம்பியார் ஐநாவின் ஆர்2பி விதிமுறைகளை பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் படுகொலையை தடுக்க உலக பாதுகாவலனான ஐநாவுக்காக வேலை செய்யவேண்டியவர் ஆவார். ஆனால் இவர் தனது கேரள நண்பர்களான நாராயண் மற்றும் மேனனுடன் சேர்ந்து திரைமறைவு வேலை செய்து இனப்படுகொலையில் கோத்தபயாவுக்கு உதவினார். இதையே ஐநாவின் நிபுணர் குழுவே ‘அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன‘ என்று குறிப்பிட்டுள்ளது. நம்பியார் காரணமாகவே வெள்ளைக் கொடி கொண்டு வந்த தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஐநா அலுவலகங்களில் சிங்கள அதிகாரிகளுடன் இணைந்து நம்பியார் செயல்பட்டக்கொண்டே அவர் இன்னமும் ஐநாவில் முக்கிய பதவி வகித்துவருவது பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் அவர்களது கூக்குரலை கண்டுகொள்ளாமல் இருந்த பற்றிய மர்மங்களை சர்வதேச குற்றவியல் நிதிமன்றம் மட்டுமே வெளிக்கொணர முடியும் என்று ஈழத்தமிழர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நம்பியார் இலங்கை ராணுவத்தின் ஆலோசகராக உள்ள தனது சகோதரர் சதீஷ் நம்பியாரின் வேலை வாய்ப்பு பரிபோய்விடக் கூடாதே என்பதிலேயே அதிக கவலைப்பட்டார்.

யுஎஸ், நார்வே மற்றும் ஈயூ உறுப்பினர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்ததற்கு காரணமும் இந்த கேரள மஃபியாவே காரணம். இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதற்குள் போரை தீவிரமாக நடத்தி முடிக்குமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது நம்பியாரும்/ நாராயணனுமே. இதன் காரணமாகவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்றது. காப்பாற்றப்பட்டதாக கூறப்படும் 3,20,000 மக்கள் திறந்தவெளி மனித பண்ணைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான கேரள மஃபியா, நாராயணன்/ மேனன்/ சோனியாவை பாதுகாக்கவே படுகொலை செய்திகள் வெளியேறாமல் தடுத்தது. ஏனெனில் கோத்தபயா ஐசிசி விசாரணையில் நிறுத்தப்பட்டால் அவர் உண்மைகளை வெளியே சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் ஆகும். இனப்படுகொலை பற்றிய செய்திகள் வெளியானதும் சிங்கள இலங்கை கலக்கமடைந்து ‘பயங்கரவாதம் மீதான போர்‘ என்று கூறி ‘மனிதாபிமான நடவடிக்கை‘ என்று கூறத்தொடங்கியது. ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க மறுப்பதன் மூலம் இலங்கை, ஐநா ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவிறிவிட்டதோ என்ற கேள்வியை அமுக்க முயற்சிக்கிறது.

துருக்கி சைப்ரஸில் உள்ள தனது மக்களை காப்பாற்றியபோது, தமிழ் மக்களுக்கு ஆதரவு அளித்த இந்திரா காந்தியின் வழியிலிருந்து மாறி சோனியா கூட்டம் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தது. இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் சர்வதேச அமைப்பான ஐநாவை நோக்கி திரும்பியுள்ளனர். அவர்கள் ஐநா அமைப்புகளே தங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர்.

நிபுணர் குழுவின் அறிக்கை, விக்கிலீக்ஸின் வெளியீடுகள், சேனல் 4-ன் கொலைக்களங்கள் ஆவணம் மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே ஆவணங்கள் மற்றும் உலகம் முழுவதும் சமநிலையான செய்திகளை வழங்கும் ஊடகங்களுக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டவர்கள் ஆவர். சர்வதேச சமுதாயம் இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா இருக்கும் நிலையிலிருந்து விலகுமாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். வெற்றிகரமான போர்க்குற்ற நடவடிக்கைகள் இலங்கையின் தமிழின படுகொலைகளை குறிப்பாக மக்கள் கூட்டமாக கொல்லப்படுவதை தடுக்கும்.

இலங்கையின் இனப்படுகொலை வரலாற்றை பார்க்கும்போது, தமிழர்களிள் உயிர்களுக்கு கிடைக்கும் சிறந்த பாதுகாப்பு என்பது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் ஐநா போர்க்குற்ற மன்றங்கள் எடுக்கும் நடவடிக்கையே ஆகும். ஆற்றல் மிக்க அதிகார பரவலாக ராஜீவ் காந்தியின் 13 வது திருத்தம் அல்லது இனப்படுகொலை சிங்களவருடனான கூட்டாட்சி அமைப்பு என்று கிடைத்தாலும் கூட சர்வதேச சமுதாயம் ஐநா அமைப்பை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

எந்தவித அரசியல் தீர்வு ஏற்பட்டாலும், சர்வதேச அமைப்புகள் உயிர்ப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உத்தரவாதம் தரவேண்டும். இனியொரு முள்ளிவாய்க்கால் படுகொலையை தாங்க ஈழத்தமிழர்களிடம் மனவலிமையோ, திராணியோ இல்லை. சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள இலங்கை ஏற்கனவே உலக நாடுகளின் மத்தியில் ஒதுக்கப்பட்டுள்ளதை காட்டுவதாக உள்ளது. இது இன்னமும் தெளிவாக இலங்கைக்கு புரிய வைக்கப்பட வேண்டும்.

இதற்கு இங்கிலாந்து மற்றும் கனடாவின் எம்பிகள் பரவலாக புறக்கணிப்புக்களை நடத்த வேண்டும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரீன்கள் பெர்த்தில் நடக்கும் அரசாங்க சந்திப்பின் பொதுநலன் (காமன்வெல்த்) தலைவர்களின் அடுத்த மாநாட்டில் இலங்கையை தடை செய்ய கோரவேண்டும். 1987க்கு பிறகு ஃபிஜி நான்கு ஆட்சிக் கவிழ்ப்புகளை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் சர்வதேச தடை விதிக்கப்பட்டது. பொதுநலன் நாடுகள் அமைப்பிலிருந்து இருமுறை தடை செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு அவசர நிலை அறிவித்ததால் பாகிஸ்தான் மீதும் தடை விதிக்கப்பட்டது. இரு விஷயங்களிலுமே இந்தியா தடைகளை முன்னெடுத்து விதித்தது. இலங்கையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட இனப்படுகொலையுடன் ஒப்பிடுகையில் அந்த நாடுகளில் நடைபெற்றவை பெருங்குற்றங்கள் கிடையாது. பொதுநலன் நாடுகள் இனப்படுகொலை செய்த இலங்கையை வெளியேற்றி தங்களது தார்மீக பொறுப்பை காட்ட வேண்டும்.

- விஎஸ் சுப்ரமணியம்
தமிழில் - தேவன்
நன்றி – கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17376:2011-11-11-22-32-48&catid=1:articles&Itemid=264
நன்றி – கிரவுண்ட் ரிப்போர்ட்

http://www.groundreport.com/World/DELHI-s-COVERT-SUPPORT-FOR-SRI-LANKA-GENOCIDE-AGAI/2941588

Tuesday, November 15, 2011

உடலுறவு மனிதனை முட்டாளாக்குகிறது – ஓஷோ



மதம் உடலுறவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொன்னூற்று ஒன்பது சதவீதம் முட்டாள்த் தனமானது. ஆனால் ஒரு சதவீதம் உண்மை இருக்கிறது. அதை என்னால் மறுக்க முடியாது. ஆனால் நான் அந்த ஒரு சதவீத உண்மை பற்றி நான் எப்போதும் உங்களிடம் பேசவில்லை. ஏனென்றால் அந்த ஒரு சதவீத உண்மை உங்களை ஏமாற்றலாம். அதனால் நான் அந்த தொன்னூற்று ஒன்பது சதவீதம் பற்றியே பேசி வருகிறேன். ஆனால் எனது சித்திரத்தை முழுமையாக்க... இவையே எனது கடைசி தீட்டுதல்களாகும். என்னால் எதையும் விட்டுவிட முடியாது.

ஒரு சதவீத உண்மை முக்கியமானது. உண்மையில் அந்த ஒரு சதவீதம் காரணமாகவே அனைத்து மதங்களும் பாலுணர்வுக்கு எதிராக மாறிவிட்டன. அந்த உண்மை என்னவென்றால் பாலுணர்வு மனிதனை முட்டாளாக்குகிறது என்பதுதான். அவன் ஒரு அடிமை என்றிருக்கும்போது, அது அவன் அந்த கலையில் திறமை வாய்ந்தவன் என்ற கருத்தை தருகிறது. இந்த அடிமைத்தனத்தை முறிக்க வேண்டும். இந்த குழியிலிருந்து அவனை வெளியே எடுக்க வேண்டும். ஆனால் அந்த குழியே அரண்மனை என்று அவன் நினைக்க ஆரம்பித்தால் அவனை அதிலிருந்து வெளியே தூக்க முடியாது. அதிலிருந்து வெளியே வருமாறு நீங்களும் அவனிடம் சொல்ல முடியாது. எனவேதான் அனைத்து மதங்களும் பாலுணர்வை கண்டிக்கின்றன.

ஆனால் மதங்கள் அதனை அளவுக்கதிகமாக கண்டித்து விட்டன. அவர்கள் அந்த ஒரு சதவீதத்திற்காக தொன்னூற்று ஒன்பது சதவீத அபாயத்தை மறந்து விட்டனர். தொன்னூற்று ஒன்பது சதவீத பொய்யின் அபாயத்தை கையிலெடுக்காமல் அதனை எளிதாக செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் மனிதனின் அபாயத்தை ஒரு எளிய வழிமுறையாகவே பார்த்தனர். அதுவே சாத்தியமாகும் மிகத் தாழ்ந்த நிலையாகும். நீங்கள் வெறும் வழிமுறை மட்டுமே. தீர்வு அல்ல. உங்களுக்கு தெரியாத ஒரு சக்தியால் நீங்கள் பயன்படுத்தப் படுகிறீர்கள். காலில் விழும் அனைவரும் உங்களுக்குத்தான் காலுக்கு விழுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இயற்கை அளவில் வாழும் மனிதன் உடலுறவு என்ற பிரமையை கொண்டிருக்கிறான். அந்த பிரமை இயற்கை, உயிரியல், ரசாயனத்தால் உருவாக்கப்படுகிறது. நீங்கள் உடலுறவு கொள்ளும்போது உங்களது உடலில் உள்ள போதைப்பொருட்கள் வெளிப்படுகின்றன. அது உங்களுக்கு இன்பத்தை ஏற்படுத்துகிறது. போதைப் பழக்கங்களுக்கு ஆளாகுபவர்கள் மெள்ள மெள்ள உடலுறவில் ஆர்வமில்லாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

போதை மருந்துகளை அதிகம் விரும்பும் ஹிப்பிகள், யிப்பிகள், மற்ற அனைவரும் உடலுறவில் முழுவதுமாக நாட்டமிழக்கின்றனர். ஏனெனில் இப்போது இன்பத்தை அடைய சிறந்த வழி கிடைத்துவிட்டது. இப்போது இதனுடன் ஒப்பிடும்போது உடலுறவு ஒன்றுமில்லாததாக தோன்றுகிறது. இது இவை இரண்டுமே போதையை ஏற்படுத்தக் கூடியவை என்ற உண்மையை உங்களுக்கு புரிய வைக்கலாம்.

இயற்கை அந்த போதைப் பொருளை மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தி வருகிறது. இதுவரை அதிகமாக்கும் தேவை ஏற்படவில்லை. ஒருவேளை இயற்கை சிறந்த போதைப்பொருளை, சிறந்த ரசவாதத்தை உருவாக்க, அதனுடைய தரத்தை இன்றைய தேவைக்கு ஏற்ப உருவாக்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் இது மனித தேவைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வெகு தொலைவில் உள்ளது. சிறந்த போதைக்காக மனித மனம் எல்எஸ்டி போன்ற போதைப் பொருட்களை உருவாக்கியது. கபீர், புத்தர், ரூமி போன்ற அனைத்து ஞானிகளும் அதைப் பற்றித்தான் பேசி வந்தனர். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய மாட்டு வண்டி பயணத்தை மேற்கொண்டனர்.

ஆனால் அறிவியல் மிகவும் மேம்பட்ட போதைப்பொருட்களை நமக்கு கொடுத்துள்ளது. எனவே யோகாசனம், தந்த்ரா, போன்ற இதர விஷயங்கள் தேவையில்லை. நீங்கள் ஒரு ஊசியை போட்டுக்கொண்டால் போதும். அதனைச் செய்ய வேறொருவர் தேவையில்லை. பல மணிநேரம் இன்பமாக இருப்பதால் இது பாலுறவு உச்சநிலையை விட மேம்பட்ட ஒன்றுதான். ஏனெனில் உச்சநிலை சில நொடிகளே நீடிக்கக் கூடியது. இது அதற்கான அதிக ஆசையை மட்டுமே உருவாக்குகிறது. ஆனால் ஒருபோதும் திருப்தி அளிப்பதில்லை.

இரண்டாவது அறிகுறி என்னவென்றால் போதை மருந்து அடிமையாக்கும் சக்தி படைத்தது- மக்கள் உடலுறவுக்கு அடிமையாகி விடுகின்றனர். அடிமையாகுவதில் ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், உங்களிடம் அந்த போதை மருந்து இருந்தால் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் உங்களிடம் இல்லையென்றால், அது இல்லையே என்று ஏங்க ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்கள் வைத்திருக்கும்போது அதற்கான ஏக்கமே ஏற்படுவதில்லை. ஏக்கம் என்பதே வருவது கிடையாது. அது உங்களிடம் இருக்கும்போதெல்லாம் அது வெறும் வீணான முயற்சி என்று உணருகிறீர்கள். அதனால் ஒன்றும் கிடைப்பதில்லை என்று நினைக்கிறீர்கள். நீங்கள் பரிணாமத்தில் ஒரு அங்குலம் கூட நகர்வதில்லை. நீங்கள் ஒரு கணத்திற்கு வானத்தில் குதிக்கிறீர்கள். ஆனால் திரும்பி பூமியில் விழுந்து விடுகிறீர்கள்.

அதனால்தான் யாரும் பொதுவான இடங்களில் உடலுறவு வைத்துக் கொள்வது கிடையாது. அதற்கு வேறு காரணமே கிடையாது. காரணம் என்னவென்றால் யாருமே முட்டாள்த்தனமாக காட்சியளிக்க விரும்புவதில்லை. இப்போது இந்த உலகத்திலேயே முன்னேறிய முட்டாள்த் தனமான இடமான கலிஃபோர்னியாவில் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பவர்களுக்காகவே ஹோட்டல்களை நடத்துகின்றனர். அதற்காக பணம் கொடுக்க வேண்டும். உள்ளே இரண்டு முட்டாள்கள் உடலுறவு கொள்கிறார்கள். அந்த அறையில் அவர்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் முட்டாள்கள் இந்த முட்டாள்கள் எப்படி அனுபவிக்கின்றனர் என்று பார்க்கின்றனர். அந்த ஜோடி எப்படி தாங்களாகவே முட்டாளாகிக் கொள்கின்றனர் என்பதை அவர்கள் பார்த்து அனுபவிக்கிறார்கள். அதற்காக பணம் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் அந்த இருவருக்கும் பணம் கொடுக்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.
முதல் நாளில் ஒருவர் அந்த அறைக்குள் இருந்தார். வெளியே வந்ததும் பலரும் சந்தோஷமாக இருப்பதை கண்டார். “என்ன விஷயம்?“ என்று அவர் அவர்களிடம் கேட்டார். “ஷோ பிரமாதமாக இருந்தது“ என்று அவர்கள் சொன்னார்கள். “எந்த ஷோ?“ என்று கேட்டார். “உனக்குத் தெரியாதா? அருமையான ஷோ நாளைக்கு வந்து பாரு“ என்று சொன்னார்கள்.


மகாமடையனான அவன் ஷோவில் மிகவும் முட்டாள்த்தனமான வேலைகளை செய்து கொண்டிருந்தான். அதனால் பார்க்க வேண்டிய ஷோவாக இருந்தது. அடுத்தநாள் அவர் தனது நண்பர்களை உடன் அழைத்து வந்திருந்தார். இப்போது அவர் அறைக்கு வெளியே இருந்து பார்த்தார். அப்புறம்தான் என்ன விஷயம் என்று அவருக்கு புரிந்தது. முந்தைய நாள் இவர் அறைக்கு உள்ளே இருந்தார். வெளியே இருந்த அனைவரும் அவரைப் பார்த்து ரசித்துள்ளனர். இது ஒரு தந்திரமான வேலை. இப்போது அவர் மற்றொருவரை அனுபவித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.


பொது இடங்களில் உடலுறவு கொள்வதற்கு உலகம் முழுவதும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் ஏதாவது ஒரு வழியில் தடை பிறப்பித்துள்ளன. அதற்கான ஒரே காரணம் முட்டாள்த் தனமான வேலைகளை அந்தரங்கமாகத்தான் செய்யவேண்டும் என்பதாகும். தேவையில்லாமல் நீங்கள் மற்றவர்களின் இலவச பார்வைப் பொருளாக ஆகாதீர். ஒரு கூட்டம் கூடி நின்று உங்களை ரசிக்கும். யாராலும் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாது. அங்கேயே நின்று விடுவார்கள். தாங்களும் இதே போன்ற வேலையைத்தான் செய்கிறோம் என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது ஒரு சுய நினைவற்ற நிலை.

இயற்கையான நிலையில் உடலுறவு கொள்வது கீழான நிலையாகும். இது இயற்கையால் உருவாக்கப்பட்ட கனவு. உங்களால் இந்த கடினமான வேலையை கடந்து செல்ல முடியும். அது சந்தோஷமாக நிலையாக இல்லாதிருந்தால், நீங்கள் அதனை மறுக்கப் போகிறீர்கள். “நானே என்னை முட்டாளாக்கிக் கொள்ள மாட்டேன்“ என்று சொல்லி விடுவீர்கள். நிச்சயமாக இயற்கை உங்களுக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆதாரம் – ஓஷோவின் புத்தகம் “ஃப்ரம் மிஸரி டூ என்லைட்மென்ட்“ சேப்டர் 5-லிருந்து

நன்றி- மெஸேஜ் ஃப்ரம் மாஸ்டர்ஸ்


http://www.messagefrommasters.com/Shiva-Shakti/sex_fool.htm

Monday, November 14, 2011

ஈனமலரே

சேற்றில் தோன்றும்
செந்தாமரை பல இருக்க
சேற்றை பூசிக்கொள்ளும்
மலர் தினமும் பிறக்கிறது

ஒரு மொழியை, இனத்தை,
உணர்வை கேலி பேசும்
காகித சருகே
உன்னை நீயே கேட்டுப்பார்

நீ பழிக்கும் மொழிபேசும்
மக்கள் பணத்தை
உண்டு கொழுத்த
நீ செய்ததென்ன?

உனக்கு துணிவிருந்தால்
கன்னித்தாயின் வரலாறை
காதல் திருமணத்தை
பெற்ற குழந்தையை எழுதுவாயா?

மதச்சார்பற்ற நாளிதழென
பேரு பெற்ற இந்து கூட
ஏனோ(?) தமிழன் விஷயத்தில்
சோரம் போனபோது

கரிக்கொட்டையால் எழுதும்
கழிவறை எழுத்துக்களை
அச்சிலேற்றும் நீ மட்டும்
விதிவிலக்கா?

நிச்சயம் நீ ஈன வரலாறு
படைக்கிறாய்,
உன் ரத்தத்தில்
பெருமை சேர்க்கிறாய்

பாவம் இந்த மக்கள்
பொறுமைசாலிகள்
தமிழின வரலாற்றில்
உனக்கும் இடமுண்டு

வல்லரசெல்லாம் போனதெங்கே?
பாழாய் நீயும் போவதெங்கே?

ஆனாலும் நான் உன்னை
வாழ்த்துகிறேன்
உன் சேவையால் என் இனத்தை
தட்டி எழுப்புவதற்காக

Thursday, November 10, 2011

ஜீவநதிகள் வற்றி விட்டனவா?

பழம்பெருமை படைத்த இந்தியாவே
இமயத்தில் உள்ள ஜீவநதிகள்
வற்றிவிட்டனவா?

இல்லை, அங்கே மின் நிலையங்கள்
அமைக்க இடமில்லையா?
இல்லை அமைப்பதற்கான
மனமில்லையா?

அழித்து வரும் தண்ணீரை
வறண்டு கிடக்கும் பூமிக்கு
திருப்பிவிட வெள்ளையன்
வழி சொன்னானே

அதை நிறைவேற்ற
அக்கறை இல்லாத உங்களுக்கு
அணுமின் தயாரிக்கும்
ஞானோதயம் எப்படி வந்தது?

Wednesday, November 9, 2011

விளைநிலம் விற்று

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாம்
ஓவியம் வைக்க வீடு சிறக்கலாம்
கேளிர் கண்டு களிக்க
கலை வளர்க்கலாம்

விளைநிலம் விற்று
விவசாயம் வளர்க்கலாம்.
உழவனை தூக்கிலிட்டு
கூட்ட நெரிசலை குறைக்கலாம்

இமாலய தண்ணீர் எல்லாம்
கடலில் கலக்கலாம்
வறண்டு கிடக்கும் பூமியெல்லாம்
வானம் பார்த்து ஏங்கலாம்

அணுவில் மின்னலெடுத்து
ஆலைகள் வளர்க்கலாம்
உலகெல்லாம் ஒதுக்கும்
தந்திரம் வளர்க்கலாம்

மக்கள் ஐயம் தீர்க்கா
மாக்களாட்சி வளர்க்கலாம்
பொல்லா அதிகாரம் பெற்று
வல்லாட்சி அமைக்கலாம்

தமிழனை மட்டும் நாயென
கொன்று குவிக்கலாம்
இந்தியருக்கு என்றுமவன்
சூத்திரனாக இருக்கலாம்

ஈழப்போரின்போது என் இனத்தின்
கூக்குரலை அடக்கினாயே?
இந்த குரலுக்கு மட்டும்
ஏன் இத்தனை சால்ஜாப்பு?

தமிழன் ஈனப்பிறவியென
எண்ணி இருந்துவிடாதே.
வல்லரசெல்லாம் சுவடே இல்லாமல்போன
பெருமை கொண்டது இந்த உலகு

Saturday, November 5, 2011

போதிதர்மர் என்ற ஜென் குரு – ஓஷோ


போதிதர்மருக்கு நான் என் இதயத்தில் ஆழமான இடத்தை கொடுத்துள்ளேன். அது அவரைப் பற்றி பேசுவதை மிக முக்கியமான தருணமாக்குகிறது. ஒருவேளை அவர் ஒருவர்தான் நான் மிகவும் ஆழமாக அன்புசெலுத்துபவராக இருக்கலாம். அவரைப் பற்றி பேசுவது நான் என்னைப் பற்றி பேசுவதைப் போன்றதாகும். இது பெரிய சிக்கலையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் இவர் தன் வாழ்நாளில் எதையுமே எழுதியது கிடையாது. ஞானிகளைப் பற்றி எப்போதுமே எழுதப்படுவதில்லை. இதற்கு போதிதர்மரும் விதிவிலக்கல்ல. ஆனால் பாரம்பரிய  முறையில் நான் பேசப்போகும் மூன்று புத்தகங்கள் போதிதர்மரைப் பற்றியவை.

போதிதர்மர் பற்றி மாற்றுக் கருத்துக்கள் கூறப்படவில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக இந்த புத்தகங்கள் போதிதர்மரைப் பற்றி பேசிவந்துள்ளன. நாம் அவற்றை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு காரணமும் சொல்ல முடியாது. நான் ஒரு அறிஞன் இல்லை. நிச்சயமாக போதிதர்மரைப் பற்றிக் கூறிய தகவல்கள் குறைபாடு உள்ளவையாக இருக்கலாம். ஏனெனில், இவை அவரால் எழுதப்பட்டவை இல்லை. அவரது சீடர்கள் குறிப்புகளை கொடுத்துள்ளனர். ஒரு சீடர் தனது குருவிடமிருந்து குறிப்புகளை எடுக்கும்போது அவர் தனது பெயரை அதில் குறிப்பிடக் கூடாது என்பது பண்டைக்கால மரபு. ஏனெனில் அதில் அவருக்கு சொந்தமானது எதுவும் கிடையாது. அது அவரது குருவிடமிருந்து வந்தது.

ஆனால் நான் புரிந்திருப்பதைப் போல போதிதர்மரை நெருக்கமாக புரிந்துகொள்வது... அவரைப் பற்றி பல தவறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. வேறொருவர் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்து தனது மனதை அதில் செலுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். அவர் போதிதர்மர் சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறார். ஆனால் அதிகம் புரிந்துகொள்ளாமல் சொல்லியிருக்கிறார்.  

நாம் இந்த சூத்திரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக, போதிதர்மரைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது. அது அவரைப்பற்றி அறிந்து கொள்வதற்கு வசதியாக அமையும். மேலும் இந்த புத்தகங்களில் எது அவர் சொன்னவை மற்றும் எது அவர் சொல்லாதவையாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளும் வழியாக இருக்கும். இது மிகவும் வினோதமான கருத்தாக இருக்கும்.

போதிதர்மர் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பாக தென்னிந்திய அரசனுக்கு மகனாக பிறந்தவர். அங்கு பல்லவர்கள் என்ற பெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அவர் தனது தந்தைக்கு மூன்றாவது மகன் ஆவார். அதிபுத்திசாலியாக இருந்த அவர் உலக விஷயங்களை கண்டு தனது ராஜ்யத்தை துறந்தார். அவர் உலக விஷயங்களுக்கு எதிரானவர் கிடையாது. ஆனால் அவர் முக்கியத்துவம் இல்லாத உலக விஷயங்களில் தனது நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை. அவரது முழுக் கவனமும் தன்னுடைய சுய தன்மையைப் பற்றி அறிவதாகவே இருந்தது. ஏனென்றால் அது தெரியாத நிலையில் நீங்கள் இறப்பை முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் ஆகும்.    

உண்மையில் உண்மையைத் தேடிய அனைவருமே இறப்பை எதிர்த்துப் போராடினர். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், “இறப்பு இல்லையென்றால், மதமும் இருக்காது“ என்று அறிவித்தார். அதில் சிறிது உண்மையும் இருக்கிறது. நான் இதனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் மதம் என்பது ஒரு பரவலான அமைப்பாகும். இது இறப்பை மட்டுமல்லாமல் பேரின்பம், உண்மை, வாழ்க்கையின் பொருள், இன்னும் பிற பொருள்களை தேடுவதாக உள்ளது. ஆனால் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொன்னதும் சரியே. இறப்பு இல்லையென்றால், மிகச் சிலரே, மிக அரிதாகவே மக்கள் மதத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருந்திருப்பர். மரணம் என்பது மதத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்தது.


போதிதர்மர் தனது ராஜ்யத்தை துறந்தார். அதற்கு முன்னதாக தன் தந்தையிடம், “உங்களால் என்னை மரணத்திலிருந்து பாதுகாக்க முடியாது என்றால், தயவுசெய்து என்னை தடுக்காதீர்கள். மரணத்திற்கு பின்னால் என்னவென்று தேடுவதற்கு என்னை அனுமதியுங்கள்“ என்று சொன்னார். அந்தக் காலம் மிகவும் அழகிய காலமாகும். குறிப்பாக கிழக்கு நாடுகளில் அழகிய காலமாக இருந்தது. அவரது தந்தை ஒரு நிமிடம் யோசித்தார். “நான் உன்னை தடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னால் உனது மரணத்தை தடுக்க முடியாது. நீ எனது ஆசீர்வாதத்தோடு உனது தேடுதலை துவக்கலாம். என்னுடைய பற்று காரணமாகவே நீ எனக்குப் பின்னால் இந்த பல்லவ சாம்ராஜ்யத்தை அரசாள்பவனாக இருப்பாய் என்று நினைத்தேன். ஆனால் நீ அதற்கு மேலான ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளாய். நான் உன் தந்தை, என்னால் எப்படி உன்னை தடுக்க முடியும்?“ என்று சொன்னார்.

மேலும், “நீ நான் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறு கேள்வியை கேட்டுவிட்டாய். ‘உங்களால் எனது மரணத்தை தடுக்க முடியும் என்றால் நான் அரண்மனையை விட்டு போகமாட்டேன். ஆனால் எனது மரணத்தை தடுக்க முடியாது என்றால், என்னை தடுக்காதீர்கள்‘ என்று சொல்லிவிட்டாய். இதன் மூலம் யாரும் போதிதர்மரின் புத்திசாலித்தனத்தை புரிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் அவர் கௌதம புத்தரை பின்பற்றுபவர் ஆவார். சில விஷயங்களில் இவர் புத்தரையும் மிஞ்சிச் செல்கிறார். உதாரணமாக புத்தர் தனது சன்னியாசிகளாக பெண்களைச் சேர்த்துக்கொள்ள அஞ்சினார். ஆனால் போதிதர்மர் ஒரு ஞானம் பெற்ற பெண்ணாலேயே தூண்டப்படுபவராக இருந்தார். அவரது பெயர் பிரக்யதாரா. ஒருவேளை மக்கள் அவரது பெயரை மறந்திருக்கலாம். போதிதர்மர் காரணமாகவே மக்கள் இன்றும் அவரை நினைவில் வைத்துள்ளனர். ஆனால் பெயர் மட்டும்தான் உள்ளது. அவரைப் பற்றி வேறு எந்த விஷயமும் நமக்குத் தெரியவில்லை. அவர்தான் போதிதர்மரை சீனாவிற்கு செல்லச் சொன்னார். புத்த மதம் போதிதர்மர் செல்வதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டது. இதனை ஒரு அதிசயம் என்றே சொல்லலாம். இதுபோல முன்பு எப்போதும் நடந்ததே இல்லை. புத்தரின் போதனைகளை சீன மக்கள் அனைவருமே உடனே ஏற்றுக்கொண்டனர்.

அப்போது சீன மக்கள் கன்ஃபூசியஸின் கருத்துக்களை கொண்டிருந்தனர். அவற்றை அவர்கள் வெறுக்கும் நிலையில் இருந்தனர். ஏனெனில் கன்ஃபூஸியஸ் ஒரு நீதிமான், சுத்திகரிக்கும் கருத்துக்கொண்டவர் ஆவார். அவருக்கு வாழ்க்கையின் உட்புற ரகசியங்களைப் பற்றி எதுவும் தெரியாது. உண்மையில் உள்ளே எதுவும் இருக்கிறது என்பதையே அவர் மறுத்தார். எல்லாமே புறம்தான். அதனை சுத்திகரித்து, மெருகேற்றி, பண்படுத்தி முடிந்தவரை அதனை அழகாக்குங்கள் என்பதே அவரது போதனை.

கன்ஃபூஸியஸ் காலத்தில் லவோ த்சு, சுவாங் த்சு, லீய த்சு போன்றவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவருமே துறவிகளே ஒழிய குருக்கள் இல்லை. அவர்களால் கன்ஃபூஸியஸுக்கு எதிராக மக்களின் மனதில் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க முடியவில்லை. எனவே அங்கு ஒரு வெற்றிடம் இருந்தது. ஆத்மா இல்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது. நீங்கள் அவ்வாறு நினைக்க ஆரம்பித்தால் உங்களது வாழ்க்கை அனைத்து அர்த்தங்களையும் இழக்க ஆரம்பிக்கும். ஆத்மா என்பது மிகவும் ஒருங்கிணைந்த கருத்தாகும். அது இல்லையென்றால், நீங்கள் உயிர்வாழ்தல், முடிவில்லா வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். இது ஒரு மரத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் கிளை செத்து விடுவதைப் போன்றதாகும். அது தனக்குள்ள ஊட்டச்சத்து ஆதாரத்தை இழந்து விடுகிறது. இதுபோன்றதே உங்களுக்குள்ளே ஆத்மா, மனச்சாட்சி என்ற ஒன்று இல்லை என்பது. இது உங்களை உயிர்வாழும் நிலையிலிருந்து விலக்கிவிடுகிறது. இவ்வாறு ஒருவர் தானாகவே சுருங்க ஆரம்பித்து மூச்சுத் திணறலை உணர ஆரம்பிக்கிறார்.           


ஆனால் கன்ஃபூஸியஸ் மாபெரும் பகுத்தறிவாளர் ஆவார். லாவோ த்சு, சுவாங் த்சு, லிய த்சு போன்ற துறவிகள் கன்ஃபூஸியஸ் சொல்வது தவறு என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் ஞானிகளாக இருக்கவில்லை. அவர்கள் தங்களது ஒருசில சீடர்களுடன் தங்களது மடங்களில் வசித்து வந்தனர்.

புத்தமதம் சீனாவிற்கு சென்ற உடனேயே அது நூற்றுக் கணக்கான ஆண்டுகள் தாகமாக இருந்த மக்களின் ஆத்மாவிற்குள் இறங்கியது. புத்தமதம் மழை மேகம் போல வந்தது. அது அவர்களது தாகத்தை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தணித்தது.


கிறிஸ்தவ மதம் ஏராளமானோரை மதம் மாற்றியது. ஆனால் மதமாற்றத்தை, மதத்தை ஏற்பதாக சொல்ல முடியாது. அது ஏழைகள், பசியாக இருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், அனாதைகளை மதமாற்றம் செய்கிறது. இதனை அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி போன்றவற்றை கொடுத்துச் செய்கிறது. ஆன்மீக தாக்கத்தால் செய்வதில்லை. இஸ்லாம் எண்ணற்ற மக்களை மதமாற்றம் செய்தது. ஆனால் கத்தி முனையில் மாற்றியது. நீங்கள் முஸ்லீமாக இருந்தால் உயிர்வாழலாம், இல்லாவிட்டால் உயிர்வாழ முடியாது. முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.


ஆனால் சீனாவில் ஏற்பட்ட மதமாற்றம் மனித வரலாற்றிலேயே மதத்தை ஏற்றுக் கொண்ட மதமாற்றமாகும். புத்த மதம் தன்னைப் பற்றி மட்டுமே விவரித்தது. அதனுடைய அழகிய கருத்துக்களை மக்கள் புரிந்து கொண்டனர். அவர்கள் அந்த கருத்துக்களுக்காக தாகத்துடன் காத்திருந்தனர். உலகத்திலேயே மிகப்பெரிய நாடான சீனா முழுவதுமாக புத்த மதத்திற்கு மாறியது. அறுநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் போதிதர்மர் சீனா சென்றபோது, அங்கு ஏற்கனவே முப்பதாயிரம் புத்த ஆலயங்கள், மடங்கள் இருந்தன. இருபது லட்சம் புத்த துறவிகள் இருந்தனர்.  இருபது லட்சம் என்பது சிறு எண்ணிக்கை கிடையாது. அது சீன மக்கள்த் தொகையில் ஐந்து சதவீதம் ஆகும்.

போதிதர்மாவின் குருவான பிரக்யதாரா, அவருக்கு முன்னர் சீனா சென்ற எல்லாரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் ஞானம் பெற்றவர்கள் கிடையாது என்று சொன்னார். அவர்கள் மாபெரும் அறிவாளிகள், மிகவும் ஒழுக்க சீலர்கள், மிகவும் அன்பான, அமைதியான, இரக்கம் கொண்டவர்கள். ஆனால் அவர்களில் யாரும் ஞானம் பெற்றவர்கள் இல்லை. எனவே இப்போது சீனாவுக்கு இன்னொரு புத்தர் தேவைப்பட்டது. களம் தயாராக இருந்தது.

சீனாவை அடைந்த முதல் ஞானி போதிதர்மர் ஆவார். நான் இங்கு தெளிவு படுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌதம புத்தர் தனது சன்னியாசியாக ஒரு பெண்ணை சேர்த்துக்கொள்ள அஞ்சிய அதேவேளையில் ஒரு பெண்ணே போதிதர்மரை புத்தரின் வழியில் செல்லத் தூண்டினார் என்பதாகும். அப்போது ஞானம் பெற்ற பலர் இருந்தனர். ஆனால் அவர் ஒரு காரணத்திற்காகவே அந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். அந்த காரணம் ஒரு பெண்ணும் ஞானம் பெறலாம் என்பதை காட்டுவதற்காக அவ்வாறு செய்தார். அது மட்டுமல்லாமல் அவரது சீடர்களும் ஞானம் பெறமுடியும் என்பதையும் காட்டுவதற்காக அவ்வாறு செய்தார். போதிதர்மரின் பெயர் அனைத்து ஞானம் பெற்ற புத்த துறவிகளுக்கு மத்தியில் புத்தருக்கு அடுத்த நிலையில் அறியப்படுகிறது.


அவரைப் பற்றி பல கதைகள் உள்ளன. அவை அனைத்துமே சில முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. முதல் கதை. அவர் சீனாவிற்கு செல்ல மூன்று ஆண்டுகள் ஆனது. சீனப் பேரரசர் வூ அவரை வரவேற்க வந்தார் என்பதாகும். அவரது புகழ் அவருக்கு முன்பே அங்கு சென்றுவிட்டது. பேரரசர் புத்தரின் போதனைகளுக்கு சேவை செய்ய பெரும் சேவை புரிந்திருந்தார். ஆயிரக்கணக்கான அறிஞர்கள் புத்தரின் போதனைகளை பாலி மொழியிலிருந்து சீன மொழிக்கு மொழியாக்கம் செய்து கொண்டிருந்தனர். பேரரசரே அந்த மொழியாக்கத்திற்கு நிதியுதவி செய்தார். அவர் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் மற்றும் மடங்களை நிறுவினார். ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவளித்து வந்தார். அவர் புத்தருக்கு சேவை செய்வதற்காகவே தனது கருவூலம் முழுவதையும் செலவிட்டார். உண்மையில் போதிதர்மருக்கு முன்னர் அங்கு சென்றிருந்த புத்த துறவிகள் அவர் மாபெரும் புண்ணியம் பெற்று வருவதாக கூறிவந்தனர். அவர் சொர்க்கத்தில் கடவுளாக பிறப்பார் என்றும் கூறினர்.

அதனால் இயல்பாகவே, அவர் போதிதர்மரை  பார்த்ததும் முதல் கேள்வியாக, “நான் ஏராளமான மடங்களை நிறுவியுள்ளேன், ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்தரைப் பற்றி படிப்பதற்காகவே ஒரு பல்கலை கழகத்தை திறந்துள்ளேன், நான் புத்தரின் போதனைகளுக்காகவே எனது ராஜ்யம் மற்றும் கருவூலம் முழுவதையும் ஈடுபடுத்தி வருகிறேன். எனக்கு மாறாக என்ன கிடைக்கும்?“ என்று கேட்டார்.

போதிதர்மர் இதனை விரும்புவாரா என்று தெரியாத காரணத்தால் அவரைப் பார்த்து சிறிது குழப்பமடைந்தார். போதிதர்மர் மிகவும் கோபமாக காணப்பட்டார். அவரது கண்கள் மிகப் பெரிய கண்களாக இருந்தன. ஆனால் அவரது இதயம் தாமரை போல மிகவும் மென்மையானது. அவரது முகம் நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் அபாயகரமானதாக இருந்தது. சன்கிளாஸ்கள் மட்டும் இல்லை. அது இருந்திருந்தால் அவர் ஒரு கடத்தல்க் காரனைப்போல இருந்திருப்பார்.

இதனால் பெரும் அச்சத்துடன், பேரரசர் வூ கேட்ட கேள்விக்கு போதிதர்மர், “ஒரு புண்ணியமும் கிடைக்காது. மாறாக, நரகத்திற்கு செல்ல தயாராக இரு“ என்றார்.

பேரரசர் விடவில்லை, “நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? எதற்காக நரகத்திற்கு செல்ல வேண்டும்? புத்த துறவிகள் சொல்வதை எல்லாம் நான் செய்து வருகிறேன்.“ என்று சொன்னார்.   
  
“நீ உன் குரலை கேட்க ஆரம்பிக்கவிட்டால், புத்தமதத்தவரோ அல்லது புத்தமதத்தை சேராதவரோ உனக்கு உதவ முடியாது. நீ இன்னமும் உனது உள்ளே எழும் குரலை கேட்கவில்லை. நீ கேட்டிருந்தால் இது போன்ற முட்டாள்த் தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய்“ என்று போதிதர்மர் சொன்னார்.

“புத்தரின் வழியில் பிரதிபலன் என்பதே கிடையாது. ஏனெனில் பிரதிபலனுக்கான பேராசையே மனதால்த்தான் வருகிறது. புத்தரின் முழுப்போதனையுமே ஆசையை துறப்பதே. ஆனால் மனதில் ஆசையுடன் நீங்கள் ஆலய்ங்கள், மடங்கள் கட்டி ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவளித்து புண்ணிய காரியங்களை அனைத்தையும் செய்து வந்தாலும் கூட நீங்கள் நரகத்திற்குச் செல்ல தயாராகிறீர்கள் என்றுதான் பொருள். நீங்கள் சந்தோஷத்தின் காரணமாக, உங்களது ராஜ்யம் முழுவதுமாக உங்களது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள இவற்றை செய்து வந்தால், பிரதிபலனுக்கான சிறிதளவு ஆசை கூட இல்லாமல் இருந்தால், அந்த செயலே பெரும் பலன் ஆகும். இல்லையென்றால் நீங்கள் எல்லாத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று பொருள்.“


பேரரசர் வூ, “என் மனம் குழப்பமாக உள்ளது. என் மனதை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறேன். ஆனால் இந்த சிந்தனைகள் மற்றும் அவர்களது சத்தம் காரணமாக நான் அமைதி பெற முடியவில்லை. உள்ளேயுள்ள குரல் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை“ என்று சொன்னார்.

“அப்படியானால், அதிகாலை நான்கு மணிக்கு, உங்களது பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் நான் தங்கியுள்ள, மலைமேல் உள்ள ஆலயத்திற்கு வந்துவிடுங்கள். நான் நிரந்தரமாக உங்களுக்கு மனஅமைதியை தருகிறேன்“ என்று போதிதர்மர் சொன்னார்.

இந்த மனிதர் வினோதமாகவும் பயங்கரமானவராகவும் இருக்கிறாரே என்று பேரரசர் நினைத்தார். அவர் பல துறவிகளை பார்த்திருந்தார். அவர்கள் மிகவும் பவ்யமாக இருந்தனர். ஆனால் இவர், நான் ஒரு மாபெரும் நாட்டின் பேரரசர் என்பதைக் கூட பொருட்படுத்தவில்லையே. அதிகாலை நான்கு மணிக்கு அவரிடம் தனியாகச் செல்வது என்றால்... இந்த மனிதரை பார்த்தால் பயங்கரமானவராக இருக்கிறாரே. பேரரசர் எப்போதுமே ஏராளமான வீரர்களை தன்னுடன் அழைத்துச் செல்பவராக இருந்தார்.

பேரரசரால் அன்று முழுவதும் தூங்கமுடியவில்லை. “போகவேண்டுமா? போக வேண்டாமா? ஏனெனில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர் நம்பமுடியாதவராக இருக்கிறார்.“ அதேவேளையில் அந்த மனிதரின் நேர்மையை மனதின் ஆழத்தில் நினைத்துப் பார்த்தார். அவர் நீ ஒரு பேரரசன் என்பதைப் பற்றி சிறிது கூட பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் ஒரு சாதாரண பிச்சைக்காரராக இருக்கிறார். ஒரு பேரரசரைப் போல நடந்துகொள்கிறார். அவருக்கு முன்னால் நீ ஒரு பிச்சைக் காரனாக இருக்கிறாய். அதுவும் அவர் சொன்ன விதம். “நான் நிரந்தரமாக உன் மனதில் அமைதி நிலவச் செய்வேன்.“

“வினோதமாக இருக்கிறது. ஏனெனில் நான் இதனை இந்தியாவிலிருந்து வந்த பல்வேறு அறிஞர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு பல முறைகளை, யுக்திகளை கற்றுக் கொடுத்தனர். நான் அவற்றை பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் இந்த மனிதர் வினோதமாக இருக்கிறார். பார்த்தால் பைத்தியம் போல அல்லது குடிபோதையில் இருப்பவர் போல இருக்கிறார். முகமே வினோதமாகத்தான் இருக்கிறது. பெரிய கண்கள் அச்சுறுத்துவதாக இருக்கிறது. ஆனால் உண்மையானவராகவும் தோன்றுகிறார். இவர் புரியாத புதிராக இருக்கிறார். இந்த விஷயத்தில் துணிந்து இறங்கலாம். அவர் என்ன செய்துவிடுவார்? அதிகபட்சம் என்னைக் கொல்ல முடியும்.“ இறுதியாக, “நான் உனக்கு நிரந்தர மன அமைதியை தருவேன்“ என்று சொன்னதால் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

பேரரசர் வூ அதிகாலை நான்கு மணிக்கு இருட்டில் அந்த ஆலயத்திற்கு தனியாகச் சென்றார். போதிதர்மர் அங்கு கைத்தடியுடன் படிகட்டிலேயே நின்றிருந்தார். “போகலாமா வேண்டாமா என்று ராத்திரி பூராவும் தர்க்கம் செய்தாலும் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். ஒரு சாதாரண துறவியைக் கண்டு அஞ்சும் நீங்கள் ஒரு பேரரசரா? இந்த கைத்தடியைத் தவிர வேறொன்றும் இல்லாத ஒரு ஏழைப் பிச்சைக்காரனான இந்த துறவியைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? இந்த கைத்தடியைக் கொண்டுதான் உங்களுக்கு மன அமைதித் தரப் போகிறேன்.“

பேரரசர், “அடக்கடவுளே, யாராவது கைத்தடியைக் கொண்டு யாருக்காவது மன அமைதியை ஏற்படுத்த முடியுமா? ஒரு ஆளைத் தீர்த்துக் கட்டலாம். மண்டையில் ஓங்கி அடித்து ஒருவரை அமைதியாக்கலாம். ஆனால் மனதை அமைதியாக்க முடியாது. ஆனால் இப்போது திரும்பிப் போகவும் முடியாதே“ என்று நினைத்தார்.

“ஆலயத்தின் மண்டபத்தில் உட்காருங்கள்“ என்று போதிதர்மர் சொன்னார். அங்கு சுற்றிலும் யாருமே இல்லை. “உங்களது கண்களை மூடுங்கள். நான் இந்த தடியோடு உங்கள் முன்பாக அமர்ந்திருப்பேன். நீங்கள் செய்ய வேண்டியது உங்களது மனதை பிடித்து நிறுத்த வேண்டியதே. உங்கள் கண்களை மூடிக்கொண்டு உள்ளே தேடிப்பாருங்கள். அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் பிடித்த உடனே, ‘இதோ இருக்கிறது‘ என்று என்னிடம் சொல்லுங்கள். மீதியை என் தடி  பார்த்துக் கொள்ளும்.

தேடுதலை மேற்கொள்ளும் எந்த ஒரு துறவிக்கும் அவர் கண்டிராத உண்மை அல்லது அமைதி அல்லது நிர்சலனமான இது ஒரு வினோதமான அனுபவமாக இருக்கும். ஆனால் இப்போது வேறு வழியில்லை. போதிதர்மர் தான் சொல்வது எல்லாத்தையும் காரணத்தோடுதான் சொல்கிறார் என்பதை முழுமையாக அறிந்துகொண்ட பேரரசர் வூ அங்கு கண்களை மூடி அமர்ந்தார். அவர் சுற்றறுமுற்றும் தேடிப் பார்த்தார். அங்கு மனது என்ற ஒன்று இல்லை. அந்த தடி தன் வேலையை செய்துவிட்டது. முதல் முறையாக அவர் அதுபோன்ற ஒரு சூழலில் இருந்தார். கொடுக்கப்பட்ட வாய்ப்பு... நீங்கள் மனதைக் கண்டால், இவர் இந்த தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. அந்த அமைதியான மலைப்பிரதேசத்தில், தனக்கென ஒரு ஈர்ப்பு சக்தியைக் கொண்ட போதிதர்மரின் முன்னிலையில்.... அங்கு பல ஞானிகள் இருந்திருக்கலாம். ஆனால் போதிதர்மர் அவர்களிடமிருந்து தனித்து இமயம் போல உயர்ந்து விளங்குகிறார். அவரது ஒவ்வொரு செயலும் உண்மையானது தனித்தன்மை வாய்ந்தது. அவரது குறிப்புகள் அவரது முத்திரையை பதிப்பதாக உள்ளன. அவை கடன் வாங்கியவை அல்ல.

அவர் மனதை கண்டுபிடிக்க கடினமாக தேடிப்பார்த்தார். முதல் முறையாக அவரால் மனதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறு யுக்தி. நீங்கள் எப்போதுமே அதனை தேடிப் பார்ப்பதில்லை என்ற காரணத்தால்த்தான் மனம் என்பதே இருக்கிறது. நீங்கள் அதனை அறிந்திருப்பதில்லை என்ற காரணத்தால்த்தான் அது இருக்கிறது. நீங்கள் அதனை தேடும்போது, அதனை அறியும்போது, விழிப்புணர்வு அதனை முழுமையாகக் கொன்று விடுகிறது. பலமணிநேரம் ஆனது. அமைதியான அந்த மலைகளுக்கு இடையே குளிர்ச்சியான தென்றலுடன் சூரியன் உதித்தது. பேரரசர் வூவின் முகத்தில் அமைதி நிலவுகிறது என்பதை போதிதர்மரால் காண முடிந்தது. அந்த அமைதி, அந்த அசைவற்ற நிலை அவர் ஒரு சிலையாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல இருந்தது. அவரை பிடித்து உலுக்கி, “நீண்ட நேரமாகிவிட்டது. மனதைப் பார்த்தீர்களா?“ என்று கேட்டார்.


“தடியை பயன்படுத்தாமலேயே நீங்கள் என் மனதை முழு அமைதிப் பெறச் செய்துவிட்டீர்கள். என்னிடம் மனம் இல்லை. நீங்கள் சொன்ன உள்ளே இருக்கும் குரலை நான் கேட்டேன். நீங்கள் சொன்னதெல்லாம் சரியே என்று இப்போது நான் புரிந்துகொண்டேன். நீங்கள் எதுவுமே செய்யாமல் என்னை மாற்றிவிட்டீர்கள். ஒவ்வொரு செயலுக்கும் அந்தச் செயலே பரிசு என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் அந்தச் செயலை செய்யாதீர்கள். உங்களுக்கு பரிசளிக்க யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைத் தனமான கருத்து. உங்களுக்கு தண்டனை அளிக்க யார் இருக்கிறார்கள்? உங்களது செயலே உங்களுக்கு தண்டனை, உங்களது செயலே உங்களுக்கு பரிசு. உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது நீங்களே.“ என்று பேரரசர் வூ சொன்னார்.     

“நீங்கள் அரிதான சீடர். நான் உங்களை நேசிக்கிறேன். மரியாதை செலுத்துகிறேன். ஒரு பேரரசர் என்ற காரணத்தால் அல்ல. ஒருமுறை அமர்ந்ததிலேயே மனதின் இருள் முழுவதையும் அகற்றக் கூடிய மிகப்பெரும் விழிப்புணர்வு, பிரகாசத்தை பெற்ற காரணத்திற்காக“ என்று போதிதர்மர் சொன்னார்.

அவரை அரண்மனைக்கு வருமாறு வூ வற்புறுத்தினார். “அது என்னுடைய இடம் அல்ல.  நான் காட்டிற்குச் சொந்தமானவன். நான் முன்பு தெரிந்திராத எந்தச் செயலையும் சுயமாகவே செய்கிறேன். நான் ஒவ்வொரு நொடியும் தொடர்ச்சியாக வாழ்கிறேன். நான் கணித்துக் கூறப்பட முடியாதவன். நான் உங்களது அரசவை, உங்களது மக்கள், உங்களுக்குத் தேவையில்லாத தொல்லைகளை உருவாக்கலாம். நான் அரசவைக்கு உரித்தவன் இல்லை. என்னை காட்டிலேயே விட்டுவிடுங்கள்.“

அவர் டாய் என்ற பெயர் உள்ள மலையில் வாழ்ந்தார்... போதிதர்மர் பற்றி கூறப்படும் இரண்டாவது கதை, தேயிலையை உருவாக்கிய முதல் மனிதர் போதிதர்மர் என்பதாகும். ‘டீ‘ என்ற வார்த்தை டாய் என்ற பெயரிலிருந்து வந்தது. ஏனெனில் அது டாய் மலையில் உருவாக்கப்பட்டதாலாகும். எல்லா மொழிகளிலும் உள்ள டீ என்ற வார்த்தை டாய் என்ற ஆதாரச் சொல்லிருந்தே உருவாக்கப்பட்டவை. ஆங்கிலத்தில் டீ என்றும் இந்தியில் சாய் என்றும் சொல்லப்படுகிறது. டாய் என்ற சீன வார்த்தையை சா என்றும் உச்சரிக்கலாம். அதேபோல மராத்தி வார்த்தையும் சா-தான். 

போதிதர்மர் தேனீர் தயாரித்த விதம்  வரலாற்று முக்கியத்தும் பெறாவிட்டாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் பெரும்பாலான நேரம் தியானம் செய்தவாறே இருந்தார். சிலசமயம் இரவுநேரத்தில் தியானம் செய்தவாறே உறங்கிப்போவார். எனவே, தூங்கக் கூடாது என்பதற்காக, அவரது கண்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அவர் தனது புருவ மயிர் எல்லாத்தையும் பிடுங்கி ஆலயத்தின் மைதானத்தில் எறிந்து விட்டார். அந்த புருவ மயிர்களே தேயிலைச் செடியாக வளர்ந்தது என்பது கதை. அவைதான் முதல் தேயிலைச் செடியாக இருந்தது. அதனால்த்தான் நீங்கள் தேனீர் அருந்தினால் உங்களால் தூங்க முடியாமல் போகிறது. புத்த மதத்தில் தியானம் செய்வது வழக்கமானது. இதற்கு தேனீர் மிகவும் உதவி செய்வதாக இருந்தது. எனவே தேனீர் விழிப்புணர்வுடன் வைத்திருப்பதால் புத்த துறவிகள் அனைவருமே தியானத்தின் ஒரு பகுதியாக அதனை அருந்துகின்றனர்.

சீனாவில் இருபது லட்சம் புத்த துறவிகள் இருந்த போதிலும், போதிதர்மர் தனது சீடர்களாக நான்கு பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது. உண்மையில் அவர் மிகவும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பவராக இருந்தார். அவர் தனது முதல் சீடரான ஹூய் கோ-வை தேர்ந்தெடுக்க அவருக்கு ஒன்பது ஆண்டுகள் ஆகின.

ஒன்பது ஆண்டுகள் ஆகின என்பது வரலாற்று உண்மை. ஏனெனில் இதுபற்றி போதிதர்மரின் காலத்தைச் சேர்ந்த பல்வேறு பண்டைக் கால குறிப்புகள் உள்ளன. இந்த உண்மையை அவை அனைத்தும் சொல்கின்றன. மற்றவற்றை சொல்லாவிட்டாலும் கூட, அவர் வூவை திருப்பி அனுப்பிய பிறகு ஒன்பது ஆண்டுகள் ஆலயத்தின் சுவரை நோக்கியே அமர்ந்திருந்தார். அவர் அதனை மாபெரும் தியானமாகச் செய்து வந்தார். அவர் வெறுமனே ஆலயச் சுவரை பார்த்தவாறே அமர்ந்திருந்தார். நீண்டகாலம் சுவற்றையே பார்த்துக் கொண்டிருப்பது என்பதை உங்களால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. மெள்ள மெள்ள அவர் அந்த சுவரை விரும்ப ஆரம்பித்தால் உங்களது மனத்திரையும் வெறுமையாகிவிடும்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. “எனக்கு ஏற்ற சீடர் வராவிட்டால் நான் யாரையும் பார்க்க மாட்டேன்“ என்று அறிவித்திருந்தார்.

வழக்கமாக மக்கள் வந்து அவருக்கு பின்னால் அமர்ந்துதான் அவர் சொல்வதை கேட்பர். இது வினோதமான சூழ்நிலை. யாருமே இதுபோல பேசியதே இல்லை. அவர் சுவரைப் பார்த்துதான் பேசுவார். மக்கள் பின்புறமாக அமர்ந்து அவரது சொற்பொழிவை கேட்பர். அதற்கு அவர், “பார்வையாளர்கள் என்னை மிகவும் புண்படுத்துகின்றனர். அவர்கள் சுவர் போலவே உள்ளனர். யாரும் புரிந்துகொள்வதில்லை. மனிதர்களை இதுபோன்ற ஒரு அறியாமையில் பார்க்கும்போது அது புண்படுத்துவதாக உள்ளது. ஆனால் சுவரைப் பார்த்தால் அந்த கேள்வியே எழாது. சுவர் என்பது ஒரு சுவர்தானே. அது கேட்காது, எனவே புண்படுவதற்கு அவசியமில்லை. யாராவது எனது சீடராக இருக்க தகுதி கொண்டிருக்கிறார்கள் என்று நிரூபித்தால் மட்டுமே நான் பார்வையாளர்களை பார்த்துப் பேசுவேன்“ என்று காரணம் சொன்னார்.

ஒன்பது ஆண்டுகள் கடந்தன. ஜனங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்ன செய்து அவரை திருப்திப் படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஹூய் கோ என்ற இளைஞன் வந்தான். கத்தியால் ஒரு கையை வெட்டி போதிதர்மரின் முன்னால் வீசினான். மேலும் அவன், “இதுதான் ஆரம்பம். நீங்கள் திரும்பாவிட்டால், என் தலை உங்கள் முன்பாக விழும். நான் என் தலையை வெட்டப் போகிறேன்.“ என்று சொன்னான்.
போதிதர்மர் திரும்பிச் சொன்னார், “நீதான் எனக்கேற்ற சீடன். நீ உன் தலையை வெட்டத் தேவையில்லை. நாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.“ ஹூய் கோ என்ற இந்த இளைஞன்தான் அவரது முதல் சீடரானான்.

இறுதியில் அவர் சீனாவை விட்டு கிளம்பியபோது, அல்லது சீனாவை விட்டு புறப்பட நினைத்தபோது அவர் தனது நான்கு சீடர்களை அழைத்தார். ஹூய் கோவிற்கு பின்னர் மேலும் மூன்று சீடர்கள் சேர்ந்திருந்தனர். “எளிய வார்த்தைகளில், சிறு வாக்கியங்களில், தந்திபோல எனது போதனையைச் சொல்லுங்கள். நான் நாளை இமயமலைக்குச் செல்ல இருக்கிறேன். நான் உங்கள் நால்வரில் ஒருவரை எனது வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்“ என்று சொன்னார்.         

“உங்களது போதனை மனதை கடந்து முழு அமைதி பெறுவதைப் பற்றிச் சொல்கிறது. அதன் பின் எல்லாமே அதன்படி நடக்க ஆரம்பிக்கிறது“ என்று முதல் சீடர் சொன்னார்.

“நீ சொன்னதில் தவறில்லை. ஆனால் உனது பதில் எனக்கு திருப்தி தரவில்லை. எனது தோல் உனக்கு வந்துள்ளது“ என்று போதிதர்மர் சொன்னார்.

“நான் என்பது இல்லை, வெறுமனே இருப்பது மட்டுமே உள்ளது என்பதே உங்களது அடிப்படை போதனை“ என்று இரண்டாம் சீடர் சொன்னார்.

“கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் எனது தரத்திற்கு இல்லை. உன்னிடம் எனது எலும்பு உள்ளது. உட்கார்“ என்று போதிதர்மர் சொன்னார்.

“எதையும் சொல்ல முடியாது. எதையும் சொல்லும் திறன் எந்த வார்த்தைக்கும் இல்லை“ என்று மூன்றாவது சீடர் சொன்னார்.

“நல்லது, ஆனால் நீ ஒன்றைப் பற்றி சொல்லிவிட்டாய். நீயே உனக்கு மாறாக நடந்துகொண்டாய். உட்கார். உன்னிடம் எனது எலும்பு மஜ்ஜை உள்ளது“ என்று போதிதர்மர் சொன்னார்.

எஞ்சியுள்ளவர் அவரது முதல் சீடரான ஹூய் கோ ஆவார். அவர் ஒன்றுமே பேசாமல் போதிதர்மரின் காலில் விழுந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. “நீதான் அதைச் சொன்னாய். நீதான் என் வாரிசாக இருக்கப் போகிறாய்“ என்று போதிதர்மர் சொன்னார்.


ஆனால் அன்றிரவு தன்னைத் தேர்ந்தெடுக்க வில்லை என்பதால் பழிவாங்கும் நோக்கத்தோடு சில சீடர்கள் போதிதர்மருக்கு விஷம் கொடுத்தனர். எனவே அவர்கள் அவரை புதைத்து விட்டனர். அதைவிட வினோதமான கதை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது கைத்தடியில் ஒரு செருப்பை தொங்கவிட்டபடி இமயமலையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்ததை ஒரு அரசாங்க அதிகாரி பார்த்தார் என்பதாகும். அவர் வெறும் காலில் நடந்து சென்றதாக கூறினார்.

அந்த அதிகாரி அவருக்கு பழக்கமானவராவார். பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறார். அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர் மீது அன்பு வைத்திருந்தார். “இந்த செருப்புக்கு என்ன அர்த்தம்? ஒரு செருப்பை மட்டும் ஏன் தொங்க விட்டிருக்கிறீர்கள்? என்று அவர் கேட்டார். “சீக்கிரமே நீ தெரிந்துகொள்வாய். எனது சீடர்களை சந்தித்தால் நான் நிரந்தரமாக இமயமலையில் தங்கப் போவதாக சொல்லுங்கள்“ என்று போதிதர்மர் சொன்னார்.

அந்த அதிகாரி முடிந்த வரை விரைவாக போதிதர்மர் வாழ்ந்த மடம் உள்ள மலைக்குச் சென்றார். அவருக்கு விஷம் கொடுத்து புதைக்கப்பட்டதாக அங்கு இருந்தவர்கள் சொன்னார்கள்... அங்கு ஒரு கல்லறையும் கட்டியிருந்தார்கள். அந்த அதிகாரி எல்லையில் பணியிலிருந்ததால் அவர் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வில்லை. “அடக்கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் பார்த்தது பொய் இல்லை. நான் பலமுறை அவரை பார்த்திருப்பதால் எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அதே கோபமான கண்கள், அதே காட்டுத்தனமான தோற்றம். அதற்கும் மேலாக, அவர் தன் கைத்தடியில் ஒற்றைச் செருப்பை மாட்டியிருந்தார்“ என்று அவர் சொன்னார். 

சீடர்களால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. அவர்கள் அந்த கல்லறையை திறந்தனர். அங்கே இருந்தது ஒரேயொரு செருப்பு மட்டுமே. அப்போது அந்த அதிகாரி, “சீக்கிரமே தெரிந்துகொள்வாய்“ என்று போதிதர்மர் சொன்னதை புரிந்துகொண்டார்.  

ஏசுநாதர் உயிர்த்தெழுந்தது பற்றி நாம் அதிகம் கேள்விப் பட்டிருக்கிறோம். போதிதர்மர் உயிர்த்தெழுந்தது பற்றி யாருமே பேசவில்லை. ஒருவேளை அவர்கள் புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்க வேண்டும். அவர் சுயஉணர்வை அடைந்த போது கல்லறையிலிருந்து வெளியேறிவிட்டார். ஒரு செருப்பை கல்லறையில் விட்டுவிட்டு ஒரு செருப்பை கைத்தடியில் மாட்டிக் கொண்டார். திட்டமிட்டபடியே அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

அவர் இமயமலையின் எல்லையில்லாத பனிக்குவியலில் இறக்க விரும்பினார். அங்கு அவருக்கான கல்லறையோ, ஆலயமோ, சிலையோ இருக்கக் கூடாது என்று அவர் விரும்பினார். அவர் மக்கள் வணங்குவதற்காக பாதச் சுவடுகளை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அவர் மீது அன்பு செலுத்துபவர்கள் தங்களது சுய ஆன்மாவில் இருக்க வேண்டும். “என்னை யாரும் வணங்கக் கூடாது“ என்று விரும்பினார். சொல்லப்போனால் அவர் மாயமாக மறைந்து விட்டார். அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார் என்பது பற்றி யாருமே கேள்விப்படவில்லை. அவர் இமயமலையின் எல்லையற்ற பனிக்குவியலில் புதைபட்டிருக்க வேண்டும்.    

இதுதான் அவர். நம்மிடம் புத்தகம் என்று கூறக்கூடிய மூன்று சிறிய தொகுப்புகளே உள்ளன. அவை அவரது எழுத்துக்கள் அல்ல. ஏனென்றால் அவை அவரது தன்மையை காட்டவில்லை. அவை அவரது சீடர்களாக இருந்த அறிஞர்களால் விட்டுச் செல்லப்பட்ட குறிப்புக்கள். எனவே அவை அடிப்படையில், முக்கியமான தவறுகளையும், தவறான கருத்துக்களையும், தவறான பொருள்களையும் தரக்கூடியவையாக உள்ளன. அவர்கள் மனம் இல்லாதவர்கள் அல்ல. அவர்களது மனங்களே குறிப்புகளை எடுக்கின்றன. அவர்களது மனங்களே வார்த்தைகளை தேர்ந்தெடுக்கின்றன.


போதிதர்மர் வார்த்தைகளை சொல்லும் மனிதனாக இல்லாமல் செயலைச் செய்யும் மனிதனாக இருந்தார். அவர் ஒரு புத்தகம் எழுத வாய்ப்பே இல்லை. தன்னை வணங்கக் கூடாது என்ற கருத்துக்கொண்ட, தன்னை பின்தொடர பாதச் சுவடுகளை விட்டுச் செல்ல விரும்பாத மனிதன் புத்தகத்தையும் எழுதப் போவதில்லை. ஏனெனில் அது அவர் தன்னை பின்பற்ற பாதச் சுவடுகளை விட்டுச் செல்வதற்கு சமமாக ஆகிவிடும்.

ஆனால் நான் அவற்றைப் பற்றி பேசுவதை தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் இந்த மூன்று தொகுப்புக்களும் போதிதர்மரால் எழுதப்பட்டவை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்ததே ஆகும். அவற்றில் மற்றவர்கள் விட்டுச் சென்ற குறிப்புகளே இங்கும் அங்குமாக போதிதர்மர் பற்றி சொல்கின்றன. ஏதோ குறிக்கப்பட்டுள்ளது. இதில் எது போதிதர்மரின் வார்த்தைகள், எது குறிப்பெடுத்தவரின் வார்த்தைகள் என்பதை கண்டுபிடிப்பது எந்தவொரு அறிஞருக்கும் கடினமானதே. 


எனது அனுபவத்தின் மூலமாக எது போதிதர்மரின் வார்த்தைகளாக இருக்க முடியும், எது அறிஞர்களால் புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தைகளாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். எனவே இவை வெறும் சாதாரண கருத்துக்கள் அல்ல. இதனை பதறிலிருந்து நெல்லை பிரித்தெடுப்பது போன்ற போதிதர்மரின் கருத்துக்களை பிரித்தெடுக்கும் முதல் முயற்சி ஆகும்.

ஆதாரம் “போதிதர்மர் மாபெரும் ஜென் குரு“ ஓஷோ
நன்றி - மெசேஜ் ஃப்ரம் மாஸ்டர்ஸ்

                          







      



Friday, November 4, 2011

இனப்படுகொலைக்காக ஐநா மீது யாராவது குற்றம் சொல்ல முடியுமா?


"முயலுடன் ஓடிக் கொண்டே வேட்டை நாய்களை வைத்து வேட்டையாட முடியாது"

 நடராஜா பாலசுப்ரமணியம் (பிஎஃப்எல்டி -யுகே)
"அரசாங்க தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக மேற்கு நாட்டு அரசியல் தலைவர்கள் தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர், ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர், இருந்தாலும் த்ங்களது சுயநல அரசியலை மறப்பதில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்" என்று 2011 செப்டம்பர் 19ம் தேதி ஜெனீவா லயோலா பல்கலை கழகத்தில் ஈழத்தமிழர் பற்றி பேசிய சமூகவியல் அறிஞரும் பேராசிரியருமான ஜான் பி. நீல்சன் பேசினார். மேற்கு நாடுகளின் அரசாங்கங்கள் மீது தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையின் அனுபவம் பற்றிப் பேசிய அவர், "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (டிஜிடிஈ) அல்லது குளோபல் தமிழ் ஃபோரம் (ஜிடிஎஃப்) ஆகிய அமைப்புகள் மேற்கு நாடுகள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால் நீங்கள் அவ்வாறு செயல்படாதீர்கள் என்று நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அழுத்தம் திருத்தமாக பேசினார்.
"இலங்கைக்கு ஆதரவாக, உங்களது போராட்டத்தை குற்றமாக்குவது உங்களை மடக்குவதற்காக செய்வதாகும். ஆனால் நீங்கள் அதற்கு மடங்கிவிடாதீர்கள்", என்று பேராசிரியர் நீல்சன் தக்க தருணத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"என்னைப் பொறுத்தவரை நாடுகள் என்பவை உலக ஆதிக்கத்திற்காக சதுரங்க அட்டையில் ஆடப்படும் மாபெரும் ஆட்டத்தில் நகர்த்தப்படும் காய்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று இந்தியாவின் வைசிராயான கர்ஸான் பிரபு 1898-ம் ஆண்டு கூறினார். சதுரங்கத்தில் போர்வீரன் பதவி உயர்வு பெறும் நிலை உண்டு. அமெரிக்ககா, டிஜிடிஎஃப் மற்றும் ஜிடிஎஃப் ஆகிய இரண்டையும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான அடுத்தகட்ட பதவி உயர்வாக நகர்த்த பயன்படுத்த உள்ளது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இதற்கு பலிகடாவாக ஆகும் வரை அல்லது யுஎஸ், யுகே நிதியளிக்கும் குழுக்களில் இருக்கும் வரை அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதோடு மற்ற தமிழர்களையும் ஏமாற்றுவார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தற்போது இந்த பிரச்சனையில் என்ன நிலை எடுக்கிறார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய உச்சகட்ட நேரம் இதுவே. நீங்கள் முயல்களுடன் ஓடிக்கொண்டே வேட்டை நாய்களை வைத்து வேட்டையாட முடியாது. ஈழத்தமிழர்கள் போரால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் போருக்குப் பின்னரான இலங்கை அரசாங்க அரசியல் நடவடிக்கைகளுக்கும் பலிகடாவாகி வருகின்றனர். உண்மையில் இது மாற்று வடிவிலான போரின் தொடர்ச்சி அல்லது இது வெளிப்படையான இனப்படுகொலையின் தொடர்ச்சியே ஆகும். மேலும் இனப்படுகொலையின் பங்குதாரர்கள், கிழக்கு மற்றும் வடக்கு இலங்கையில் அது தமிழர்களின் தாய்நிலம் என்பதற்கான அனைத்து தடயங்களையும் அழித்து, இலங்கை தனது இனப்படுகொலையை அலட்சியப்படுத்தி இன அழிப்பை முழுமையாக அரங்கேற்ற ஊக்கமளித்து வருகின்றன.
எல்டிடிஈயின் ராணுவ பலம் தோற்கடிக்கப்பட்ட பின், ஈழத்தமிழர்களின் உணர்வுகள் சிதறடிக்கப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்களாகிய நாம் நமது அறியாமை மற்றும் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறோம். உண்மையில் நாம் தோல்வி மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆனால் தமிழர்களான நாம் வலிமையானவர்கள், நம்முடைய நண்பர்களும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும். நீதியும் தார்மீக காரணங்களும் நம்பக்கமே உள்ளன. தமிழினப் படுகொலையைச் செய்த இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் குற்ற உணர்வால் ஆட்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கான நம்பகமான விளக்கத்தை அவர்களால் கொடுக்க இயலவில்லை.
ஈழ நாடு, என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகவோ அல்லது அங்கீகரிக்கப்படாதாகவோ ஒரு தேசமாக உள்ளது. 26-11-2003 அன்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சரான திரு கிரிஸ் பேட்டன் வன்னிக்கு சென்று நமது தலைவர் பிரபாகரனை சந்தித்தது இதனை அரசாங்க ரீதியாக அடையாளம் காட்டியதாகவே உள்ளது. இந்த உண்மை நமது நினைவலைகளில் நிற்கிறது. இதுவே நமக்கு ஊக்கத்தை தருவதாக உள்ளது. தாய்நாட்டில் உள்ள நமது உறவுகள், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றுள்ள வெற்றி வீரனான இலங்கை அரசாங்கம் அளிக்கும் லஞ்சத்தையும் அச்சுறுத்தலையும் அலட்சியப்படுத்தி நமக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுத் தந்துள்ளனர்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்த பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்கு பற்றிய கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. என்டிடிவியின் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர விவகார ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலேயின் புத்தகமான ஸ்ரீ லங்கா- ஃப்ரம் வார் டூ பீஸ் இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறது. இந்தியா இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை அளித்து உளவுத்துறை தகவல்கள் மற்றும் இந்திய கப்பற்படையின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்க்க உதவி புலிகளின் வாசல்க் கதவுகளை மூடியது. புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா எத்தனை சதவீதம் உதவியது என்ற கேள்வியை எழுப்பும்போது 'சுமார் 25 சதவீதம்' என்று பதில் வருகிறது. மேலும் அவர் துணிச்சலாக, "சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வெறுமனே படைக்கருவிகளை மட்டுமே வழங்கியபோது, இந்தியா இலங்கைக்கு புலிகளை வீழ்த்தும் இறுதி அடியை (நாக் அவுட் பஞ்ச்) கொடுத்தது" என்று கூறுகிறார்.
"நாங்கள் ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ-17 ஹெலிகாப்டர்களை கொடுத்து, அவற்றை அவர்களது நாட்டு வண்ணத்தில் இயக்க சொன்னோம்" என்று அவர் குறிப்பிடுகிறார். போரில் சிங்களவர் ராணுவமாக செல்ல விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அவர்களுக்கு மனித சகிப்புத்தன்மை, விடாமுயற்சி மற்றும் தைரியத்திற்கான உச்சக் கட்ட சோதனைக்கு உட்பட்ட ஒரு ராணுவத்தை கொடுத்து அவர்களது சீருடையில் போர்புரியச் சொன்னோம்" என்பதை அவர் சொல்லவில்லை. எந்தவொரு நாட்டையும் விட தாய்நாட்டுக்கான போரில் உயிர்த்தியாகம் செய்துள்ள, உலக ராணுவத்தில் தலைசிறந்த ஒன்றாக கருதப்படும் இந்திய ராணுவத்தை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது என்பது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் யூகிக்க முடியும். அதனை தவிர்க்கவே இந்தியா முயன்று வருகிறது.
இலங்கை விஷயத்தில் இந்தியா மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் கோழைத்தனமானவையும் தீர்மானமில்லாதவையும் உள்ளன. 'ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை ஒருபுறம் மனதில் வைத்துக் கொண்டு, மறுபுறம் இலங்கை, துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் சீனா-பாகிஸ்தான் ஆதரவுக்கு எதிராக குள்ளநரித்தனமாக செயல்பட்டது.
"குறுகிய கால ஓட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய பெருங்கடலில் நடைபெறும் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டால் நீண்ட கால அடிப்படையில் அது பெரிதும் அவதிப்பட வேண்டியிருக்கும். அவர்கள் சீன டிராகனை விட மாபெரும் இந்தியா தீங்கில்லாதது என்பதை இன்னமும் உணராமல் இருக்கலாம்" என்று ஓய்வு பெற்ற கர்னல் (டாக்டர்) அனில் அத்தாலே கூறுகிறார்.
2008 பிப்ரவரி 20ம் தேதி "ஸ்ரீ லங்கா'ஸ் ரிடர்ன் டூ வார்- லிமிட்டிங் த டேமேஸ்" என்ற தலைப்பிடப்பட்ட சர்வதேச சிக்கல்கள் குழு அறிக்கையை படித்தால், யாரும் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தில் வல்லரசுகளின் சதித் திட்டம் என்னவென்று புரிந்துகொள்ள முடியும்.
புலிகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அவர்கள் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது –
"....அமைதிக்கு ஆதரவு தெரிவிப்போர் தனிநாடு கோரிக்கையை துறக்க ஒரு காலக்கெடு வைக்க வேண்டும். அதன் பின் அவர்கள் தற்போதைய புலித் தலைவர்கள் மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது மும்முரமாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்...."
ஆக புலித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வல்லரசுகளின் முகவர்கள் இனப்படுகொலைக்கு முன்பே திட்டமிட்டு விட்டனர். எனவே இனப்படுகொலைக்காக ஐநா மீது யாராவது குற்றம் சொல்ல முடியுமா?
தமிழில் தேவன்
நன்றி - கீற்று

Wednesday, November 2, 2011

இரட்டைக் கோபுரங்களும் தமிழ் இனப்படுகொலையும்

நடராஜா பாலசுப்பிரமணியம் (பிஎஃப்எல்டி, யுகே)
அல்கய்தா தீவிரவாதிகள் அமெரிக்க பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பெண்டகன் மீது தாக்குதல் நடத்தி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த தாக்குதலில் 3,000 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
யாரும் கடந்த காலம்-நிகழ்காலம் குறித்து உணர்ச்சிவசப் படலாம். ஆனால் காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. பொதுவாக 2001 செப்டம்பர் 11 எவ்வாறு உலகை வரையறை செய்தது, தொடர்ந்து எதிர்காலத்தையும் வரையறை செய்யும் என்பதை திறந்த மனதுடன் பார்க்கும்போதுதான் தொல்லை ஆரம்பிக்கிறது.

பிபிசிக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல்
செப்டம்பர் 18, 2001 செவ்வாய்க்கிழமை, ஆஃப்கானிஸ்தானில் ஆட்சி செய்த போராளிகள், அமெரிக்காவுக்கு எதிராக புனிதப் போர் அறிவித்துள்ளனர். அதற்குப் பின் சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு நவம்பர் 10, 2001 அன்று பிபிசியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. தலைப்பு “டெய்சி க்ளஸ்டர் பாம்ப், இயலாமையின் அறிகுறி“.(questiontime@bbc.co.uk, night-blindness)  

துணை அமைச்சர்களுக்கான பாராளுமன்ற செயலாளரும் ரோதர்ஹாமின் லேபர் உறுப்பினருமான திரு மாக் ஷேன், குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். நான் இந்த வரிகளை சொன்னபோது, எனது கருத்தை மின்னஞ்சலில் அனுப்பும்படி சொன்னார்கள். அதற்கு காரணம் நான் சொன்ன பொருள். ஆனால் அவர்கள் சொன்ன காரணம் நேரமில்லை என்று சொன்னார்கள். இன்னமும் என்னால் அந்த மின்னஞ்சலின் அச்சுப் பிரதியை கொடுக்க முடியும்.

மேற்கோள். “இது திரு டெனிஸ் மேக் ஷேனின் கருத்துக்கான பதில், “அவர்கள் மனிதர்கள் மீது அதிகபட்ச அழிவை ஏற்படுத்தினார்கள்”.

“ஐயா, நீங்கள் சொல்வது தவறு என்று நான் நினைக்கிறேன். மீண்டும் நாம் அன்றைய தினம் என்ன நடந்தது என்று அலசி ஆராய்வோம். அமெரிக்கா சவால்விடுக்க முடியாத மாபெரும் பொருளாதார மற்றும் ராணுவ சக்தியாக உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க ஒரு முடிவில்லாத முரட்டுத்தனத்தை கொண்டுள்ளது. அதனுடைய வெளியுறவுக் கொள்கை என்பது இரட்டை வேடம் போடுவதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. இது உலகம் முழுவதையும் பாதித்தது. குறிப்பாக மூன்றாம் உலக ஏழைநாடுகளை பாதித்தது. உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்காவிடம் மற்றவர்கள் எதிர்பார்க்கும்  பெருந்தன்மை கிடையாது.

எனவே இது அமெரிக்காவின் கைஓங்கியதனம் மற்றும் முரட்டுத்தனத்திற்கு புகட்டப்பட்ட ஒரு பாடம் என்றே சிலர் நினைத்தனர். செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் அவ்வாறான பாடமே. இந்த தாக்குதல் சுத்த முட்டாள்த்தனமானது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்திய தாக்குதல் அதன் பொருளாதார சக்தி மற்றும் பெண்டகன் மீது நடத்திய தாக்குதல் அதனுடைய ராணுவ பலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இது தாக்கியவர்கள் பொதுமக்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பயங்கரமான, மாபெரும் அழிவுச் செயலாகும். “தாக்குதல் நடத்தியவர்கள் அமெரிக்காவின் 5-7 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை கொன்றனர் என்று அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அது ஏன் நடந்தது என்று யாரும் நம்பகமாக ஆய்வு செய்து கூறவில்லை.
      
   இத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. அவர்களுக்காக ஏழை பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். குறைந்தபட்சம் அந்த துரதிர்ஷ்டசாலிகளுக்காவும் அவர்களது குடும்பத்தினருக்காவும் வருத்தப்பட்டனர். இந்த துயரச் செயல் அமெரிக்கா மீதான வெறுப்பின் காரணமாகவே செய்யப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் 25% பேர் தங்களது கவனத்தை பெண்டகன் மீது காட்டினாலும் கூட, அங்கு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மிகச் சிலரே பேசினர். 

மற்றவர்களைப் போலவே திரு மாக் ஷேனும் தவறான கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். அமெரிக்கா குண்டு வீசும்போது அது யார் மீது குண்டு வீசுகிறது என்று கவலைப்படுகிறதா? இப்போது பாருங்கள், நாங்கள் துல்லியமான இலக்குகளின் மீது 94% துல்லியத் தன்மை கொண்ட குண்டுகளைத்தான் பயன்படுத்துகிறோம் என்று உலகிற்கு சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்கனவே மக்களை மொத்தமாக கொன்று குவிக்கக் கூடிய டெய்சி கட்டரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். அவர்களுடைய ஒரே குறிக்கோள் அமெரிக்கர் யாரும் பிணமாக நாடு திரும்பக் கூடாது என்பதுதான். ஆனால் நூற்றுக் கணக்கான ஆஃப்கானியர்கள் வெடித்துச் சுக்கு நூறாக சிதறலாம். நான் ஒரு இஸ்லாமியர் இல்லை.

நான் தொலைக்காட்சியில் நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள் நொறுங்கி விழுந்தபோது, அது தொலைவில் நடக்கும் துயரச் சம்பவமாக நினைத்தேன். செப்டம்பர் 11, 2001 நிகழ்வு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடைபெறும் நமது மனித உரிமை போராட்டத்தை ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில் முடிக்கும் என்று ஈழத்தில் உள்ள அல்லது வேறு எங்கும் வசிக்கும் ஒரு தமிழராலும் கூட கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.

இனப்படுகொலையை நவீன ஊடகம், வார்த்தைகள், படங்கள் மற்றும் குரல்கள் உலகுக்கு உணர்த்தின. மேலும் உரிமைக் கழகங்கள் மற்றும் உரிமைக் குழுவினர், மூத்தவர்கள் மற்றும் சான்றோர், தெரிந்தோ தெரியாமலோ இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு ஆதரவு தெரிவித்து அல்லது கண்டு கொள்ளாமல் இருந்தது பற்றி உலக மக்களின் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தினர். தனது குற்றங்களை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் என்ற பெயரில் மறைக்க இலங்கை அரசாங்கம் போட்ட வெளிவேசம் வெளுத்து விட்டது.   

எப்போதும் உறுதியான உரிமைகோரல்களுக்கு துணை நிற்கும் பிரபல பத்திரிகையாளரான ரான் ரைடெனோர் தக்க நேரத்தில் ஒரு சரியான பிரகடனம் அல்லது வேண்டுகோளை முன் வைத்தார். “இனவாதத்தை அழித்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் போர் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, நான் போர்கள், இனவாதம், ஆதிக்கத்திற்கு எதிராக மற்றும் சமூக ஒற்றுமைக்காக போராடும் தொண்டனாக இருந்து வருகிறேன். என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு மனித உரிமைகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தாக்கத்திற்கு ஆளான சில உண்மையான சோஷலிச நாடுகளில் வரவேற்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். 2009ம் ஆண்டு ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த நாடுகள் மீண்டும் அந்நாட்டிற்கு ஆதரவளிக்கும் முன்பாக இருமுறை யோசிக்கும் என்று நம்புவோம்.

“இந்த ஜூலை 26ம் தேதி கொண்டாட்டங்களின்போது, “நான் க்யூபா நாடும் மற்றும் அனைத்து ஆல்பா நாடுகள் கூட்டணியும் ஃபிடல் மற்றும் சே வெளிப்படுத்திய தார்மீக நெறிகளுக்கு திரும்பி தமிழ் மக்களுக்கு உரியதை செய்ய வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்என்று ரான் ரைடெனோர் என்று கூறினார்.
உலக அமைப்புகளில் உள்ள நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளவற்றை அமல்படுத்த இந்தியா ஆதரவளிக்குமா? நவீன இந்தியாவை கட்டியமைத்த மாபெரும் தலைவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் இன அழிப்புக்கு ஆளானவர்களின் அழுகுரலுக்கு செவிமடுக்குமா? அல்லது உலக மக்களுக்காக ஒரு ஏமாற்று வலையை பின்னும் ராஜபக்சே அரசாங்கத்தை மீண்டும் நம்புமா?      
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி விசாரிக்க ஒரு பொருத்தமான சர்வதேச குழுவை நியமிக்க வேண்டும் என்று ஐநா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. தக்க தருணத்தில் வெளியான விக்கி லீக்ஸ் ஆவணங்கள் உலகத்திற்கு உண்மையை சொல்லியுள்ளன. அதே போல பான் கி மூன் ஒன்றும் அந்த அளவிற்கு மோசமான மனிதர் இல்லை. சேனல்4-ன் ஆவணப்படத்தை பார்க்க நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து பிரதமர் எந்தவித முடிவும் எடுப்பதற்கு முன்பாக இந்த ஆவணப்படத்தின் மறு பகுதியை பார்க்க வேண்டும். 

இங்கிலாந்து இந்த பரிந்துரைக்கு முழு ஆதரவு தரவேண்டும். மேலும் இலங்கை உருவாக்கியுள்ள அனைத்து வகையிலும் குறைபாடுள்ள எல்எல்ஆர்சியை பயன்படுத்த அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் சர்வதேச விசாரணை நடத்த வேண்டி சர்வதேச நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும். 


தமிழில் தேவன்

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...