Sunday, February 24, 2019

பாண்டிய மன்னரை அரியனையில் அமர்த்திய கள்ளர் குல பல்லவராயர்








வரலாற்று சுவடுகளில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் அதிகாரத்தின் மறுபெயர் பல்லவராயர்.

கிபி1169ஆம் ஆண்டு பாண்டிய மன்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவருடைய சகோதரரான குலசேகர பாண்டியனுக்கும் மதுரை அரச உரிமை சண்டை வருகிறது,

இச்சண்டையில் குலசேகர பாண்டியனை சமாளிக்க பராக்கிரம பாண்டியன், இலங்கையில் உள்ள சிங்கள மன்னரான முதலாம் பராக்கிரம பாகுவிடம் உதவியை நாடுகிறார்.

இதனை அறிந்த குலசேகர பாண்டியன் சிங்கள படை மதுரை வருவதற்கு முன்பு மன்னர் பராக்கிர பாண்டியனையும், அவரது மனைவியான இராணியையும், சில இளவரசர்களையும் கொன்று விடுகிறார்.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு இலகங்கை மன்னர் பராக்கிரம பாகு தன்னுடைய சிங்களப் படையை லங்கப்புரா என்கிற வலிமையான தளபதியின் தலைமையில் மதுரையை நோக்கி அனுப்புகிறார்.

ஆரம்ப காலத்தில் குலசேகர பாண்டிய மன்னர் கள்ளர், மறவர் படைகளை கொண்டு இராமநாதபுரம், இராமேஸ்வரத்தில் சிங்களப்படைகளை உள்ளே நுழையவிடாமல் தடுத்து வெற்றி பெறுகிறார்.

ஆனால் லங்கப்புராவின் பெரும்படை அனைத்து தடைகளையும் உடைத்தும்,பல தமிழ் சிற்றரசர்கள் உதவியுடன் மதுரையை கைப்பற்றி பராக்கிரம பாண்டிய மன்னரின் மகனான வீர பாண்டியனை சிங்கள மன்னர் ஆதரவின் பெயரில் மதுரையில் முடி சூடுகின்றனர்.

நிலமையை உணர்ந்த குலசேகர பாண்டியன், சோழ மன்னர் இரண்டாம் இராஜ இராஜ சோழரிடம் உதவியை நாடுகிறார்.

இரண்டாம் இராஜ இராஜ சோழரும், சிங்களர் ஆதரவுடன் மதுரையில் பாண்டியர் அரசாட்சி நடப்பதை விரும்பவில்லை.

அதனால் குலசேகர பாண்டியனின் கோரிக்கை ஏற்று சிங்கள படைகளுக்கு பாடம் புகட்ட தன்னுடைய கள்ளர் தளபதியான பல்லவராயர் தலைமையில் சோழர் படையை குலசேகர பாண்டியனுக்கு ஆதரவாக அனுப்புகிறார்.

பல்லவராயரின் சோழர் களப்படை மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை இருந்த லங்கப்புராவின் சிங்களப்படைகளை அடித்து, துவைத்து தமிழ் நாட்டை விட்டு விரட்டி மீண்டும் இலங்கைக்கே துரத்து அடிக்கிறார்.

குலசேகர பாண்டியனை மதுரை பாண்டிய தர்பாரில் பல்லவராயர் அமர வைக்கிறார்.

இலங்கையில் உள்ள முதலாம் பராக்கிரபாகுவை நேரிடையாக மோத இலங்கைக்கு பல்லவராயர் தன்னுடைய களப்படையுடன் இலங்கைக்கு செல்கிறார்.

இலங்கையில் பராக்கிரபாகுவின் மைத்துனர் ஶ்ரீவல்லபா இலங்கையில் பராக்கிரம பாகுவிற்கு பாடம் எடுக்க வந்துள்ள பல்லவராயரிடம் உதவியை நாடுகிறார்.

பல்லவராயரும் தன்னுடைய ஆதரவை ஶ்ரீவல்லபாவிற்கு தெரிவித்து களத்தில் இறங்குகிறார்.

பல்லவராயரின் களப்படை இலங்கையில் உள்ள சிங்களர் கோட்டைகள்,படைபற்று பெரும்பாலனவற்றை கைப்பற்றி பராக்கிர பாகுவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் பல்லவராயர்.

இதே நிலைமை நீடித்தால் தன்னுடைய அரசு பல்லவராயரால் உடைத்தெறியப்படும் என்பதால் மதுரையில் இரண்டாம் இராஜ இராஜ சோழரின் ஆனைக்கிணங்க பல்லவராயரால் அமர்த்தப்பட்ட குலசேகர பாண்டியனிடம்,

பராக்கிரபாகுவின் சிங்களப்படையுடன் குலசேகர பாண்டியன் இனைந்து சோழ தேசத்தை வீழ்த்தலாம் என ஓலை அனுப்புகின்றனர்.

குலசேகர பாண்டியரும்,இரண்டாம் இராஜ இராஜ சோழரை சிங்க படையுடன் இணைந்து போரிட தயாராகின்றனர்.

ஆபத்தை உணர்ந்த பல்லவராயர் சோழ எல்லை பகுதிக்கு உடனடியாக தன்னுடைய களப்படையுடன் விரைகிறார்.

குலசேகர பாண்டியரின் கூட்டுப்படைக்கும் பல்லவராயரின் களப்படைக்கும் பல இடங்களில் போர் நடக்கிறது.

ஆனால் பல்லவராயர் அனைத்து போர்களிலும் வென்று சிங்களப்படையை மீண்டும் இலங்கைக்கு விரட்டுகிறார்.

சோழ மன்னருக்கு எதிராக சிங்கள மன்னருடன் கைகோர்த்து துரோகம் செய்த குலசேகர பாண்டியனை மதுரையின் அரியணையில் இருந்து இறக்கி மீண்டும் பராக்கிர பாண்டியரின் மகன் வீர பாண்டியனை மதுரையின் அரியனையில் அமர வைக்கிறார் பல்லவராயர்.

குலசேகர பாண்டியன் மதுரையை விட்டு பல்லவராயரால் விரட்டியடிக்கப்படுகிறார்.

இந்த ஒட்டு மொத்த நிகழ்வில் பல்லவராயர் மதுரையின் king makerஆக இருந்தது வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இராஜ இராஜ சோழருக்கு கட்டுக்கடங்காத வீரம், இராஜ விசுவாசம் ஒரு சேர கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் பல்லவராயர்.

குலோத்துங்க சோழருக்கு எப்படி கருணாகர தொண்டைமானோ, அதேபோல் இரண்டாம் இராஜ இராஜ சோழனுக்கு பல்லவராயர்.

குறிப்பு:
கள்வன் இராஜன் (இரண்டாம் இராஜ இராஜன்) தன்னை கள்ளர் என்று மெய்கீர்த்தியில் குறிப்பிட்டுள்ளது கூடுதல் தகவல்.

நன்றி
A history of South India by Nilakanta Sastri
Tamil and Ceylon by C.S Navaratnam

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Sunday, February 10, 2019

தமிழினம் மதவாதத்தை வெல்லும்


அறிவியல் வளர வளர உலகம் சுருங்கிக் கொண்டே செல்கிறது. மனிதன் நாகரீகமாக மாற மாற அவன் காட்டுமிராண்டியாக மாறிக் கொண்டே செல்கிறனான். மனித மனங்கள் சுருங்கிக் கொண்டே செல்கின்றன. அதனால் மனித இனம் பல்வேறு வகைகளிலான அழிவுகளைத் தனக்குத் தானே தேடிச் சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலும் மனிதர்கள், நன்மை செய்யாதவர்களாக, தீயவர் ஆக வாய்ப்புக் கிடைத்தால் தீமை செய்யக் கூடியவர்களாக மாறி வருகிறார்கள். இருந்தாலும் மனிதர்களை, ஒரு பெருங்கூட்டத்தை ஒரு வட்டத்திற்குள் அடைப்பது சரியாகாது. இவ்வாறான சூழலில் திருபுவனம் ராமலிங்கம் கொலை பற்றியும், தமிழினம் மதவாதத்தால் எதிர்நோக்கியுள்ள அபாயங்கள், அல்லது பயணிக்க வேண்டிய பாதை குறித்தும் அலசி ஆராயும் நோக்கத்தில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தமிழினம் உலகின் ஆகச் சிறந்த இனமாக இருந்து வருகிறது. அது தனது அனுபவ அறிவால் பரந்த மனப்பான்மையால் சமுதாயத்தை, அரசாங்கத்தை கட்டியமைத்து அறநெறிகளை வளர்ந்த இனமாக இருந்து வருகிறது. என்னதான் மா.பொ.சி., பாவானர், கி..பெ. விஸ்நாதம் பிள்ளை, பாரதிதாசன், ஆதித்தனார் போன்றோர் தமிழ்த் தேசியம் குறித்து பேசி பிரச்சாரம் செய்திருந்தாலும், தமிழர் நாத்திக கவர்ச்சியால் அரசியல் விழிப்புணர்வு இன்றி மயங்கிக் கிடந்தனர். அந்தத் தமிழர்களின் மயக்கத்தைப் போக்கும் அதிர்ச்சி மருத்துவமாக ஈழப்போர் நடைபெற்றது. அதேநேரத்தில் இணையத்தின் வளர்ச்சி தமிழ் இனத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது. கூப்பிடு தூரத்தில் நடந்த இன அழிப்பைக் கண்டு தமிழினம் செய்வதறியாது திகைத்துப் போனது. அதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து தமிழரின் அரசியல் அதிகாரம் தமிழர் கையில் இல்லை என்பதை உணர்ந்தது. உன்னதமான அரசியல், பொருளாதர, சமூக சூழலில் வாழ்ந்த தமிழர்கள், அதன் பின்னர் தாங்கள் எவ்வாறு இந்தியத்தின் கீழும், திராவிடத்தின் கீழும் தமிழரின் அரசியல் அதிகாரம் சிறைப்பட்டுக் கிடக்கிறது என்பதை உணரத் துவங்கினர்.

போரை நிறுத்துவதாக நாடகமாடிய கருணாநிதி ஒரு தெலுங்கர் என்பதை உணர்ந்து கொண்டனர். தெலுங்கர்களால் நிறைந்த அவரது கட்சி தமிழினத்திற்கு எவ்வாறெல்லாம் துரோகம் இழைத்தது என்று உணர்ந்தனர். அந்தக் கட்சியின் பிதாமகரான தந்தைப் பெரியார் என்ற ராமசாமி நாயக்கர் எவ்வாறு தமிழினத்தை மடைமாற்றம் செய்யும் தமிழர் குலப் பகைவனாக இருந்து வந்திருக்கிறார் என்பதை கண்டு கொண்டனர். அவர் பேசிய திராவிடம் என்ற மாயக் கருத்து எவ்வாறெல்லாம் தமிழரை திசை திருப்பி ஏமாற்றி வந்தது என்பதை கண்கூடாக உணர்ந்தனர். பகுத்தறிவு என்ற பெயரில் அறிவுக்குப் புறம்பான நாத்திகத்தை பரப்பிய அவர் தமிழன்னையை காட்டுமிராண்டி மொழி என்று உரைத்தார். தமிழினத்தை பழித்தார். தமிழ் மக்கள் பெரும்பான்மையாகப் பின்பற்றி வரும் சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், காணபத்யம், சௌரம் போன்ற மதங்களை பழித்தார். அவற்றை இந்து மதம் (இது ஒரு அடையாளச் சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது) என்று சொல்லி அந்த மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார். அந்த மதத்தை பின்பற்றும் சாதிகள் தமிழினத்திற்கு எதிராக இருப்பதாகச் சொல்லி சாதிகளையும் ஒழிக்க வேண்டும் என்று சொன்னார்.
எப்படி வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால், “தலித், கிறிஸ்தவர், முஸ்லீம்களை பாதுகாக்கும் அரசியல்தான் நல்ல அரசியல் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டதோ அதுபோலவே தென்னாட்டில் உருவான திகவும் அதே கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது. உண்மையில் இது ஒரு வாக்கு வங்கி அரசியல் ஆகும். எனவே, அந்த மதங்களைச் சேர்ந்தார் திக இயக்கத்திலும் திமுக கட்சியிலும் சேர்ந்தார்கள். அவர்களும் தங்கள் தலைவர்களைப் போலவே இந்து மதத்தை ஒழிக்க வேண்டும், சாதியை ஒழிக்க வேண்டும் என்று பேசினார்கள். அது நல்ல கருத்துதான், அதைப் பேசுவதில் தவறு இல்லை என்று அவர்கள் நம்பினார்கள், நம்ப வைக்கப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள், இணையத்தில் இந்து மதம், சாதிகளில் இருப்போரிடம் இதைப் பேசும்போது அவர்களின் முன்னே அவர்கள் எதிர்பாராத கேள்விகள் வைக்கப்பட்டன. தலித்களிடம், அவர்கள் தங்கள் சாதியை எப்போது ஒழிப்பார்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. கிறிஸ்தவர், இஸ்லாமியரிடம், அவர்கள் எப்போது தங்கள் மதத்தை ஒழிப்பார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது? ஒரு சிலர் உடனடியாக தாங்கள் தவறான நிலைப்பாட்டில் இருப்பதை உணர்ந்தார்கள். பலரும் அந்த நிலையைச் சமாளித்தார்கள். ஆனால் இன்று இணையவெளியில் மத ஒழிப்போ, சாதி ஒழிப்போ அதிகமாகப் பேசப்படுவதில்லை. அவ்வாறு பேசுவோர் சிறு எண்ணிக்கையிலானவர்களாக ஆகி விட்டார்கள். தங்கள் தவறை உணர்ந்தவர்கள் சரியான திசை நோக்கி தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றினார்கள். அது அவர்களை தமிழ்த் தேசிய கருத்தியலை நோக்கி நகர்த்தியது. ஒரு சில கிறிஸ்தவர், இஸ்லாமியர் தங்கள் பெயர்களைக் கூட நல்லத் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டனர்.

தற்போது தமிழக இளைஞர்களிடையே தமிழ்த் தேசிய சிந்தனையும், கருத்தியலும், உணர்வும் வேகமாகப் பரவி வருகிறது. இது தமிழகத்தை ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னே பெரும் சமூக, அரசியல் சவால்கள் உருவாகி வருகின்றன. அவர்கள் இந்தியம், திராவிடம் என்ற பெயரில் கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தில் செய்த அட்டூழியங்கள் குறித்து மக்களை விழிப்படையச் செய்வதோடு தற்காலத்தில் நடந்து வரும் தமிழின உரிமைகளை இழத்தல், இயற்கை வளக் கொள்ளைகள், லஞ்ச-ஊழல், அரசியல் பெருமுதலீட்டு கொள்ளைத் தொழிலாக மாற்றப்பட்டிருப்பது, வாக்களார்களுக்கு கையூட்டு கொடுத்தல், மதப்பிரச்சாரம், மதமாற்றம், இளைஞர்களை டாஸ்மாக் என்ற விஷ சாராயத்தை அருந்தச் செய்து சம்பாதிப்பது, நாடகக் காதல், ஆணவக் கொலைகள், கள்ளக் காதல், கள்ளக் காதல் கொலைகள், வன் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல், சுடுகாட்டுப் பிரச்சனைகள், சாதி-மத மோதல்கள், போன்ற சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு சிக்கலில் இருக்கும்போது, தமிழ்த் தேசியவாதிகள் மாற்று மொழிபேசுவோர், திராவிடம் என்ற பெயரில் அரசியல் அதிகாரம் பெற்றோர், இந்தியதேசியவாதிகளுக்கு பகைவர்களாகத் தெரிகிறார்கள். தமிழ்த் தேசியம் பேசும் தமிழர் பலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் தேவை இங்கு உடனடி, அத்தியாவசியத் தேவையாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்த அரசியல், காட்டுத் தீயாய் பரவி வருகிறது. இந்தக் கருத்தியல் உலகின் ஒரு தொன்மையான, நாகரீகமான, அறிவான இனத்திற்கான அரசியலாக உள்ளது. இது தமிழ் மண்ணிற்கு மட்டுமல்லாமல் இந்தியத் துணைக் கண்டத்திற்கும் தேவையான அரசியலாக உள்ளது. இது துணைக்கண்டத்தின் அரசியலை மேம்படுத்தக் கூடியதாகவும் பாதுகாக்கக் கூடியதாகவும் உள்ளது. எனவே இந்த அரசியலுக்கு தமிழகத்தில் வாழும் தெலுங்கர் உட்பட தமிழகத்தில் வாழும் எல்லாத் தரப்பினரும் நிபந்தனையற்ற பேராதரவைத் தரவேண்டும். இதில் கட்டமைக்கப்பட்ட மதங்களாக கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கும் பொறுப்பு உள்ளது. இந்த மதங்களைச் சார்ந்த தனிநபர்கள், அமைப்புகள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.

ஆனால், எந்தவொரு சமூகப் பிரிவிலும் இருப்பதைப் போல இந்த மதங்களிலும் சிறு எண்ணிக்கையிலான தனிநபர்கள் தமிழர்களின் மதச் சகிப்புத் தன்மையைப் பயன்படுத்தி அறிவுக்கு அப்பாற்பட்ட வகையில் மதப் பிரச்சாரத்திலும் மத மாற்றத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் சென்னை நகரின் பல பேருந்து நிலையங்களில் கிறிஸ்தவ மதப் பிரிவுகளைச் சேர்ந்த நபர்கள், தனியாகவும் குழுவாகவும் நின்று உன்மத்தம் பிடித்தவர்களைப் போல கூச்சலிட்டு மதப் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழர்கள் கடந்த காலங்களில் எப்போதும் இதுபோன்ற மடைமையான மதப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வில்லை. சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிடுகிறார்கள். அது மிகவும் அறுவறுக்கத் தக்க வகையில் செய்யப்படுகிறது. தமிழருக்காகப் பேசுகிறோம் என்று சொல்லும் யாரும் இது பற்றி வாய் திறப்பதில்லை. ஆனால் இதுபோன்ற சிறு எண்ணிக்கையிலான நபர்கள் தாங்கள் சார்ந்த மதத்தவரையும், மாற்று மதத்தவரையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை அதுபோன்ற ஒரு செயலாகத்தான் தெரிகிறது. தமிழகத்தில் இதற்கு முன்பு இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழ்ச் சமுதாயம் பெரிதும் எதிர் வினையாற்றவில்லை. காரணம் இரண்டு மதவெறி பிடித்தவர்கள் மோதிக் கொள்கிறார்கள் என்றே கடந்து சென்றது. ஆனால், திருபுவனம் ராமலிங்கம் இஸ்லாமியரோடு தர்க்கம் செய்கிறார். தர்க்கம் இந்த மண்ணின் தன்மையாகும். அதை சற்று உரிமையோடு செய்திருக்கிறார். இவர் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர் அல்ல. பாமகவைச் சேர்ந்தவர். எனவேதான் தமிழ்ச் சமூகம் எதிர்வினை ஆற்றுகிறது. தமிழினம் இந்தச் சம்பவத்தையும் கடந்து சென்று விடும். ஆனால், இந்தச் சம்பவத்தை அலசி ஆராய வேண்டிய பொறுப்பு கிறிஸ்தவ, இஸ்லாம் அல்லாத பெரும்பான்மை தமிழர்களுக்கும், அந்த மதங்களைச் சேர்ந்த அந்தச் சிறிய குழுக்களுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும், அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. முதலில் இந்தச் சம்பவம், இந்த மக்களிடையே ஒரு ஆரோக்கியமான விவாத்தை உருவாக்க வேண்டும். அந்த விவாதம் எல்லாத் தரப்பினருக்கும் நன்மை பயக்கும் நிலைப்பாடுகளை எட்டச் செய்ய வேண்டும்.

சில இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது போல இந்தச் சம்பவம் மதமாற்றம் தொடர்பில்லாத கொடுக்கல் வாங்கல் பகையினால் செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆனால், இனிமேலும் மதமாற்றம் தொடர்பாக இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து விடக் கூடாது என்பது எல்லாருக்கும் நோக்கமாக இருக்க வேண்டும்.

நடந்த தர்க்கத்தின் காணொளி, அவன் எப்படி என் தொப்பியை எடுத்து விட்டு திருநீறு பூசலாம்? அதற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் கொலை செய்யப்பட்டதை காட்டுவதாக உள்ளது. அதனால்தான் அவர்கள் கைகளை வெட்டியுள்ளனர். அவரை கொல்வது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. கைகள் வெட்டப்பட்ட ராமலிங்கத்திற்கு தக்க மருத்துவச் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அலைக்கழிப்பில் ரத்தப்போக்கில் அவர் இறந்து விட்டார் என்று தெரிகிறது. மதமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று பாமக தலைவர் மரு. ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். இந்தச் சம்பவத்தை செய்தவர்கள் பாப்புலர் ஃப்ரன்ட் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டது. எனவே அவர்கள்தான் பதில் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடனடியாக பதில் அறிக்கை வெளியிட்டவர்கள் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் முஸ்லீம்களே கொலை செய்திருந்தாலும் கூட சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் வெறுப்புப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்கிறார்கள். நல்லதுதான். ஆனால், இந்தக் கொலையே வெறுப்புணர்வால் செய்யப்பட்டுள்ளது என்பதால்தனே விவாதமே நடைபெறுகிறது.

ஒப்பீட்டளவில் தென்னிந்தியரை விட, குறிப்பாக, கேரளா, தமிழகத்தை விட வட இந்தியாவில் இந்து மக்கள் முஸ்லீம் மக்களை அதிகம் வெறுப்பவர்களாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் 800 ஆண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கீழாக பல இன்னல்களை அனுபவித்துள்ளனர். அங்கு வாள் முனையில் இஸ்லாம் மதமாற்றம் நடைபெற்றது. இருந்தும் அது வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் இந்து மதத்தில் உள்ள சுதந்திர தன்மையே. ஆனால் கேரள-தமிழகத்தின் முஸ்லீம்களின் கதை வேறு. இங்கு இஸ்லாம் பரவியதற்கு காரணம் அரேபிய வியாபாரிகள் ஆவர். இதில் அத்தனை கடுமைத்தன்மை பின்பற்றப்படவில்லை. எனவே மதமாறியுள்ள இஸ்லாமியரை, இந்து சாதி மக்கள் தங்கள் உறவுகளாகவே பார்க்கிறார்கள். எனவேதான் வட இந்தியாவில் ஏற்பட்ட இந்து எதிர்வினை இங்கு காட்டப்படவில்லை.

ஆனால் இஸ்லாமியரில் மதம் சார்ந்த சிந்தனையாளர்கள், சிறு எண்ணிக்கையிலான குழுவினர் தீவிர அடிப்படைவாதத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்துக்கள் மீது முழு வெறுப்பைக் காட்டுகிறார்கள். அதன் மூலமாக அவர்கள் என்ன சாதித்து விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. உலகம் முழுவதும் 57 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. அந்த மக்களிடையே ஒற்றுமை காணப்படுகிறதா என்றால் இல்லை. சுதந்திர இந்தியாவில் இந்துக்களின் ஆட்சியின் கீழாக முஸ்லீம்களால் வசிக்க முடியாது முஸ்லீம்கள் நம்பிய காரணத்தால்தான் பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அப்போது, பல இனங்கள், மொழிபேசுவோரைக் கொண்ட இந்தியா விரைவில் உடைந்து விடும் என்று ஜின்னா முதலானோர் நம்பினார்கள். ஆனால் நடந்தது என்ன? பாகிஸ்தான் உருவாகிய 25 ஆண்டுகளுக்குள்ளாக உருது மொழித் திணிப்பு மேற்கு பாகிஸ்தானின் அத்துமீறல் காரணமாக பங்களாதேஷ் தனி நாடாக உருவாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. அங்கே அந்த மக்களை இஸ்லாம் மதம் இணைக்க வில்லை. ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவர்கள் பாமியான் மலையில் இருந்த புத்தர் சிலையை வெடி வைத்து தகர்த்தார்கள். அவர்கள் அப்படி இருக்க, எகிப்து நாட்டில் உள்ள முஸ்லீம்கள் பண்டைய பாரோ மன்னர்களின் நினைவுச் சின்னங்களையும் பிரமிடுகளையும் தங்கள் பாரம்பரியமாக போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். இவர்களிடையே எத்தகைய வேறுபாடு பாருங்கள்.

இஸ்லாம் சமத்துவத்தைப் பரப்பும் மதம் என்று சொல்லிக் கொண்டாலும் அரபு நாடுகள் அதை ஏற்றுக் கொள்வதில்லை கருப்பின, பழுப்பு இன இஸ்லாமியரை சமமாக மதிப்பதில்லை. ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டதை நாம் பார்க்கவில்லையா? இருநாடுகளுமே இஸ்லாமிய நாடுகள்தானே? மோத வேண்டிய காரணம் என்ன? இஸ்லாத்தின் சிறப்பம்சமாக விளங்கும் ஒற்றை இறைக் கொள்கையே அதன் குறைபாடாகவும் உள்ளது. அவர்களால் சிறிதளவு மாற்றத்தைக் கூட ஏற்க முடியவில்லை. அதனால்தான் ஷியா பிரிவினருக்கும் ஸுன்னி பிரிவினருக்கும் மோதல் நடைபெறுகிறது. குர்திஷ் மக்கள் கொன்று குவிக்கப்படவில்லையா?
ஆஸ்திரேலியாவில் இஸ்லாமியர், ஷரியத் சட்டம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்நாட்டுப் பிரதமர், “விருப்பமில்லா விட்டால் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என்று சொல்லி விட்டார். இந்த விஷயம் குறித்துப் பேசும் சுப்பிரமணிய சாமி, நபிகள் நாயகம் கூறியதாக ஒரு கருத்தைச் சொல்கிறார். உலகம் மூன்று வகையில் உள்ளது. முஸ்லீம்களின் நடத்தை அதற்கு தகுந்தவாறு வேறுபட வேண்டும் என்று நபிகள் சொல்கிறார். தாருல் இஸ்லாம் என்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்து அதிகாரத்தில் உள்ள நாடுகளில் அங்கு வேறு எந்த மதங்களுக்கும் எந்தவித சலுகையோ இருப்பிடமோ கொடுக்கக் கூடாது. அப்படியானால் ஒன்று அவர்கள் மதமாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது கொலை செய்யப்பட வேண்டும். அடுத்தபடியாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத உலக நாடுகளை நபி இரண்டாக பிரித்துச் சொல்கிறார். அதில் ஒன்று தாருல் ஹரப்”. இங்கு முஸ்லீம்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை மாற்று மதத்தவர் பிரிந்து கிடக்கிறார்கள். (இந்தியா போன்ற) அந்த நாடுகளில் முஸ்லீம்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு பல சலுகைகளைக் கேட்டு அவற்றின் மூலம் அந்த நாட்டை தங்கள் முஸ்லீம் நாடாக மாற்றுவது. இறுதியாக மாற்று மதத்தவர் பெரும்பான்மையாக ஒற்றுமையாக வாழும் நாடுகளில் முஸ்லீம்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்யக் கூடாது, அவர்களிடம் சரணடைந்து வாழ வேண்டும் என்று நபிகள் சொன்னதாகச் சொல்கிறார். இது உண்மையாக இருந்தால், உலக முஸ்லீம்கள் இதையே பின்பற்றுகிறார்கள் என்றால் இது அபாயகரமானதாகும். முஸ்லீம்களின் தீவிரத்தன்மையைப் பார்த்து சீனா ஐந்தாண்டுகளுக்குள் மாறிவிட வேண்டும் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கூட, வட மாநிலங்களில் பரேல்வி - தேவ்பந்தி முஸ்லீம்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஈழத்தில் சோனகர்கள் என்று அழைக்கப்படும் தமிழ் முஸ்லீம்கள் சிங்களவரோடு கூட்டுச் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.

இந்த விஷயங்களையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்கும்போது தமிழகத்தில் வாழக் கூடிய இஸ்லாமியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களும், அவர்களின் வாழ்க்கை முறையால் பாதிக்கப்படக் கூடிய பெரும்பான்மை இந்து மக்களும் இது குறித்து வெளிப்படையான விவாதங்களை மேற்கொண்டு ஒரு பொது முடிவை எட்ட வேண்டும். தமிழினம் இனத்தால் ஒரு பண்பட்ட அறிவார்ந்த இனமாக உள்ளது என்பதால், தமிழர்களில் இஸ்லாமியர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் உலக இஸ்லாமியர் அனைவரையும் வழிநடத்தும் பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும். தமிழ் கிறிஸ்தவரும் அவ்வாறே உலக கிறிஸ்தவரை வழிநடத்தக் கூடியவராக இருக்க வேண்டும். இவர்கள் தமிழர்களாக இருப்பதால் இவர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. அவ்வாறு இல்லாமல் தற்போதைய நிலை நீடித்தால் அது இரு தரப்பினருக்கும் கேடாய் முடியும். தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசு அமையும்போது இது போன்ற பிரச்சனைகளை களைய அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பார்வைக்கு :
https://www.thoughtco.com/australia-prime-minister-tells-muslim-immigrants-adapt-3299387



நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...