முடிவுரை
யார் அந்த ஆதித்தமிழன் என்கிற தலைப்பில் இதற்கு முன்பு, இரண்டு பாகங்களாக எழுதியுள்ளேன். அதனுடைய இணைப்பு கீழே உள்ளது.
https://www.facebook.com/100026716305728/posts/474917933408746/
https://www.facebook.com/100026716305728/posts/478637583036781/
சென்ற பதிவில் ஐயா ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து சம்வெளி நாகரிகத்தை தோற்றுவித்தவர்களாக களவர்,மழவர் என இரண்டு பழங்குடிகள் என ஆதாரத்துடன் உரைத்துள்ளதை பதிவிட்டுருந்தேன்.
அதேபோல் களவரும்,மழவரும் தங்களுடைய வீரத்தால் இருவரும் மறத்தின் அடிப்படையில் மறவர் என அழைக்கப்பட்டனர்.
ஆகோள் பூசலில் ஈடுபட்ட பெரும்பாலான நடுகற்கள் களவர்,மழவர் என்றே வழங்கப் பெருகிறது.
களவர்,மழவர் மறவர் என அழைக்கப்பட்டதன் இன்னொரு காரணமாக, முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் இரா பூங்குன்றன் அவர்கள் அகநானூறு இலக்கிய பாடல் மூலமாக விளக்குகிறார்:-
ஆகோள் பூசலில் மழவர்கள் வெட்சி மழவராகவும்,கரந்தை மழவராகவும் நின்று போரிடுகிறார்கள். அப்பாடலில் மழவர்கள் நிரை கவர்ந்த போது மறவர்கள் அதனை மீட்டனர் என்று கூறுகிறது. மழவர் என்பதின் ழகரம் கெட்டு றகரமாக திரரிந்து மறவர் என வழங்கப் பெறுகிறது. ஆக மழவர் என்பதின் போலியாக மறவர் என்னும் சொல்லாடல் வருகிறது.
ஆகையால் ஆகோள் பூசலில் அதாவது வெட்சி,கரந்தையை மறவர்,மழவர் என்பதன் போலி உறுதிபடும் போது மழவரே ஈடுபட்டுள்ளார்கள் என்பது இங்கு உறுதியாகிறது.
பாடல் வரிகள்:-
நுழைநுதி நெடுவேல், குறும்படை #மழவர்
முனைஆத் தந்து முரம்பின விழித்த
வில் ஏர் வாழ்க்கை விழுந்தொடை #மறவர்
இதேபோல் அகநானூறு பாடலில்:-
ஆகோள் மூதூர் கள்வன் என பாண்டிய மன்னனை கள்ளர் குடியாக குறித்து பின்பு அதே பாண்டிய மன்னனை மறத்தினால் தென்னவன் மறவன் என்று அழைக்கப் பெறுகிறார்.
ஆக களவர்,மழவர் இருவரும் மறத்தினால், மறவராக அழைக்கப் பெற்று பின்பு மறவர் என்ற ஜாதி நிலைக்கப் பெற்றது என்ற ஐராவதம் மகாதேவன் ஐயாவின் கூற்று உறுதியுடன் ஊன்றி நிலைத்துவிட்டது.
அதேபோல ஆகோள் பூசலில் ஈடுபட்டு நடுகல்லில் நிற்கும் களவர்களை தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகளையும் இனைத்துள்ளேன்.
மேலும் மூவேந்தவரின் முதற் போர் முறையான வெட்சி,கரந்தை போர்கள் இங்கு களவராகவும்,மழவராகவும் அறியப்பெற்று, அவர்கள் மூதின் மறவராக உள்ளார்கள் என்ற இரா பூங்குன்றனாரின் கருத்து இங்கு மேலும் வலுப்பெறுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஆகோள் பூசலில் ஈடுபட்ட சோழ அரச மரபினருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
#ஶ்ரீகள்ளச்சோழன் என்றே 10ஆம்நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டில் கிடைக்கப் பெறுகிறது.
மழவர் என்போர் இலக்கியம் முதல் கல்வெட்டு வரை இன்றும் கள்ளராக அறியப்படுகின்றனர்.
புல்லி அரசரை இளையர் பெருமகன் என்று மழவர் தலைவராக அறியப்படும், கள்ளர் பெருமகனாக வருகிறார்.
மேலும் கள்ளர் குல கொடும்பாளூர் வேளிர் தங்களின் மறத்தினால் ஒரு கல்வெட்டில் மறவன் என்று அழைக்கப்பட்டனர்.
ஆக களவர்,மழவர் இருவரும் கள்ளர் குடியாக நிலைக்கப் பெருகின்றனர்.
இன்றும்
மழவர்
மழவராயர்
அதியமார்
மலையமான்
இளம்பூண்டார்
என கள்ளர் பெருங்குடிகள் தங்கள் பட்டமாக வரலாறை தாங்கி நிற்கிறார்கள்.
முதல் ஆகோள் பூசல் கல்வெட்டான புலிமான் கோம்பை கல்வெட்டு ஆசியாவில் குடியேறிய முதன் மாந்தராக M130y அறியப்பெறும் பிறமலைக் கள்ளர்களின் பூமியிலே கிடைக்கப் பெறுகிறது.
மேலும் மதுரையில் கிடைத்த 2000வருடம் பழமையான ஜல்லிகட்டு ஓவியம் கூட பிறமலைக் கள்ளர் நாட்டில் வரும் மேட்டுப்பட்டியிலே கிடைக்கப் பெருகிறது.
பழமையான ஜல்லிக்கட்டு கூட உறங்கான்பட்டி,கரடிக்கல் ஜல்லிகட்டு என ஆவணங்களுடன் உயிர்ப்புடன் உள்ளது.
உறங்கான்பட்டி : மத்தம் மேல் நாட்டு கள்ளர்களும்
கரடிக்கல் : பிறமலைக் கள்ளர்களாலும் நடத்தப்படுகிறது.
அதேபோல் களவரும்,மழவரும் தங்களை தொழில் அடிப்படையில் அகம்படியர் என்றும் அழைத்துள்ளனர்.
அகம்படியர்:-
இச்சமூகத்தை பலரும் பல கருத்துகளை எழுதி வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய உன்மையான வரலாறாக சேரரிடம் இருந்து ஶ்ரீஅருண் மொழித் தேவர் காலத்தில் எளிதாக அறியப் பெறலாம்.
ஏனென்றால் முதன் முதலில் அகம்படி என்ற வார்த்தையை பயன்படுத்தி, அதனை ஒரு தனித்துறையாக கட்டமைத்தவர் இராஜ இராஜ சோழரே...!
ஆம் அகம்படி அணுக்க வில்லி என இராஜ இராஜ சோழரின் மெய்காவல் அதிகாரிகளாக கல்வெட்டில் வருகிறார்கள்.
மேலும் #அகம்படி_நியாயங்கள் என்று ஒரு தனித்துறையை உருவாக்கினார் இராஜ இராஜ சோழர், அத்துறையில்:-
நிர்வாகம்
கோவில் கருவூல நிர்வாகம்
கடற்படை வில்லிகளாகவும் வருகிறார்கள்.
ஏன் இவர்களுக்கு அருண் மொழித் தேவர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்றால், சேர நாட்டை முழுமையாக கைப்பற்றியவுடன் பல சேர அரையர்கள் சோழ நாட்டில் படைத்தலைவர்களாகவும்,நிர்வாக அதிகாரிகளாகவும் தஞ்சை சோழ நாட்டில் ஐக்கியமாகினர்.
அவ்வாறு ஐக்கியமான அரையர்களும்,படைத் தலைவர்களும் தொழில் அடிப்படையில் தங்களை அகம்படி என்று அழைக்கப் பெற்றனர்.
மழவர் வழி வந்த மலையமான் வம்சத்தினர் சோழர்களிடம் அகம்படி தொழிலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அகம்படி மலையமான் என்று கல்வெட்டு கிடைக்கப் பெறுகிறது.
அதேபோல் பல்லவராயரில் ஒருவர் சோழரின் அகம்படியராக குறித்துள்ளார்.
ஏன் இராஜ இராஜர் அகம்படியர்களுக்கு இவ்வளவு சலுகைகளை கொடுத்தார் என்றால், அவருடைய தாய் அதே மழவர் குல தோன்றல் என்பதாலே மற்றும் தன்னுடைய கிளை மரபினர் என்பதாலே ஆகும்.
சரி இதற்கு களவர் குலத்திற்கும் என்ன சம்பந்தம் என்றால்...!
எந்த சேரர் குழுவினர் தங்களை சோழ நாட்டில் அகம்படி தொழிலில் நின்றார்களோ, அதே சேர குல மன்னன் தன்னை #கள்வன்_இனமான_கோக்கண்ட_ரவி என கள்ளர் இனமாகவே, கல்வெட்டு மெய்கீர்த்தியில் குறிக்கிறார்.
அதேபோல் பல்லவராயர் மரபு இன்றும் கள்ளராக பெருங்களூரில் வாழ்கிறார்கள்.....!
ஆகையால் தால் கள்ளர்,மறவர் கனத்ததோர் அகம்படியர் என பழமொழி உருவானது...!
இன்றும் சேர தலைநகரான கரூர் மற்றும் சேர மண்டலமான கோவை,திருப்பூரில் போர் மற்றும் அரசகுல தோன்றலான அகம்படியர்கள் தான் வாழ்கிறார்கள்.
மறவரும்,அகம்படியர்களும் கள்ளரில் இருந்து கிளைத்தவர்கள் என்பது என்னுடைய கூற்று மட்டும் அல்ல.
பல ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலின் கூற்றும் (M130y) அப்படித்தான்....!
இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் M130y விருமாண்டித் தேவரின் உறவினருக்கு பெரு நாட்டில் உள்ள மாயன் இனத்தை சேர்ந்தவரின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போவது கள்ளர்களின் உலகளாவிய நாகரிகத்தின் தொட்டிலாக வருவது, தமிழ் சமூகத்தின் பெருமை உலகளவில் கொடி கட்டிப் பறப்பது மகிழ்ச்சியே....!
நன்றிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
தர்மபுரி மாவட்ட கல்வெட்டுகள்
விழுப்புர மாவட்ட கல்வெட்டுகள்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
அகநானூறு
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Jonathan Mark Kenoyer Felicitation Volume
திருச்சி பார்த்தி
விக்னேஸ்வர் பா மாளுசுத்தியார்
Sambandamoorthi Mazhavarayar
Anan Karthick
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
தர்மபுரி மாவட்ட கல்வெட்டுகள்
விழுப்புர மாவட்ட கல்வெட்டுகள்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
அகநானூறு
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Jonathan Mark Kenoyer Felicitation Volume
திருச்சி பார்த்தி
விக்னேஸ்வர் பா மாளுசுத்தியார்
Sambandamoorthi Mazhavarayar
Anan Karthick
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment