Sunday, February 16, 2020

குடியுரிமைச் சட்டமும் இந்து - முஸ்லீம் அரசியலும்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் திமுகவும் இந்து - முஸ்லீம் மக்கள் மத்தியில் தவறான அரசியலை முன்னெடுத்தனர். இது காந்தியின் முஸ்லீம்களை மகிழ்ச்சிப்படுத்துதல் அரசியலின் தொடர்ச்சியாக அமைந்தது. சுதந்திர இந்தியாவில் இந்துக்களுக்கு கீழே இரண்டாம்தர குடிமக்களாக இருக்க வேண்டிய சூழல் வரும் என்று அஞ்சித்தான் பாகிஸ்தான் தனிநாடு கோரப்பட்டது. பாகிஸ்தான் தனிநாடு கொடுத்தால்தான் தொடரும் இந்து- முஸ்லீம் கலவரம் நிற்கும். இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ஒரு தோல்வியுற்ற அரசாகி விட்டது. முஸ்லீம் என்ற உணர்வால் பாகிஸ்தான் நாடு பிளவுபடுவதை தடுக்க முடியவில்லை. உருது பேசும் பாகிஸ்தானியரால் பெங்காலி பேசும் முஸ்லீமை சமமாக நடத்த முடியிவில்லை. பங்களாதேஷ் விஷயத்தில் மதத்தை விட மொழியே வெற்றி பெற்றது. ஆனால், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தான் முஸ்லீம்களை விட சிறந்த வாழ்க்கை நிலையில் இருக்கிறார்கள். இப்படியான சூழலில், சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் முஸ்லீம் முகஸ்துதி அரசியலை பின்பற்றின. இது இந்துக்களை முகம் சுழிக்க வைத்தது. குறிப்பாக வட இந்தியாவில் இந்து - முஸ்லீம் இடையே ஒரு மறைமுக பகை தொடர்வது உண்மையே. ஆனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இந்து - முஸ்லீம் இடையே பகை கிடையாது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நாத்திகவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்த முஸ்லீம்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டு இந்து மதத்தை கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். அரசியல் ஓட்டத்தில் இந்துக்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இன்று நிலை மாறி விட்டது. உலகம் முழுவதும் வலதுசாரி அரசியல் வென்று வருகிறது. இந்தியாவில் இந்து அரசியல் கோலாேச்சத் தொடங்கி விட்டது. ஈழப்போருக்குப் பின் தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. திராவிடம் என்ற போலித்தனத்தின் முகமூடியை தமிழர்கள் சமூக வலை தளங்களில் கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் திராவிட கொள்கைகள் தவிடு பொடியாகி தெலுங்கர்கள் தமிழ் அரசியலில் செலுத்தும் ஆதிக்கம் பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்து அரசியல் என்ற பெயரில் இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்து வரும் பாஜக தமிழகத்தையும் கைப்பற்ற முயன்று வருகிறது. இவ்வாற நிலையில் நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பாஜக அரசியலமைப்புச் சட்டம் விதி 370 நீக்கியுள்ளது. உண்மையில் இந்த நடவடிக்கைக்கு எதிராகத்தான் இந்திய தேசிய இனங்கள் அனைத்தும் போராடியிருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்தபடியாக பாஜக குடியேற்ற உரிமைச் சட்டத்தை திருத்தியுள்ளது. இதில் தஞ்சம் கோரும் முஸ்லீம்கள், தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படாது என்று கூறியுள்ளது. இந்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் எந்த முஸ்லீமும் பாதிக்கப்பட மாட்டார் என்பது உறுதியான ஒன்று. அப்படி இருந்தும் முஸ்லீம் பாகுபாடு என்ற பெயரில் காட்டப்படும் எதிர்ப்பு போராட்டங்கள் வரவேற்கத் தக்கதே. ஆனால் அதற்க இந்த அளவுக்கு தீவிரம் காட்ட வேண்டுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. போராடும் முஸ்லீம்களுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உடனடி ஆதரவு வழங்கி வருகின்றன. ஆனால், ஏற்கனவே அரசு முஸ்லீம்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. முஸ்லீம்கள் இந்துக்கள் அளவுக்கு மத விவகாரங்களில் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில்லை என்ற கருத்து இந்துவாக உள்ள தமிழர்களிடையே நிலவுகிறது. எனவே, இந்த விஷயத்தில் முஸ்லீம்கள் அத்துமீறிப் போராடுவது இந்துக்கள் மத்தியில் முகச் சுழிப்பையே ஏற்படுத்தும். இதனால் யாருக்கு லாபம் பாஜகவுக்கே ஏற்படும். மனிதநேய மக்கள் கட்சித் தலைவரான ஜவஹிருல்லா தமிழக சட்டசபையில் குடியேற்ற உரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டத்தைக் கைவிடுவதாக கூறியுள்ளார். ஆனால், வீரியத்துடன் நடத்தப்படும் போராட்டத்தின் கோரிக்கை எவ்வளவு பலவீனமானது என்று யாரும் சொல்லத் தேவையில்லை. எனவே, முஸ்லீம்கள் தமிழர்கள் என்ற முறையில் இந்துத் தமிழர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழர்கள் முஸ்லீம்களின் செயல்களால் பாஜகவின் பக்கம் சாய்ந்து விடக் கூடாது. குடியேற்ற உரிமைச் சட்டம் எவ்வாறு தமிழக முஸ்லீம்களை பாதிக்கிறது என்பதை பற்றி வெளிப்படையாகப் பேசலாம் வாருங்கள்.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...