தமிழர்கள்
பண்டைக் காலத்தில் எந்தவித கட்டமைக்கப்பட்ட மதங்களிலும் இல்லாமல் இருந்தனர். அவர்கள்
தங்கள் முன்னோர்களை, இயற்கையை வழிபட்டு வந்தனர். குலதெய்வங்களை வழிபட்டு வந்தனர். பின்னர்
அவர்கள் படிப்படியாக கட்டமைக்கப்பட்ட மதங்களுக்குள் சென்றார்கள். அப்படி சென்ற மதங்கள்தான்
ஆசீவகம், புத்தம், சைவம், வைணவம். உண்மை இப்படி இருக்க, நாம் தற்போது அவர்கள் எந்த
பிரிவில் இருக்கிறார்கள் என்பதை வைத்து அவர்களை குறை சொல்ல முடியுமா? குறிப்பாக முஸ்லிம்கள்,
கிறிஸ்தவர்கள் ஆட்சியாளர்களாக ஆனபோது கணிசமான அளவு தமிழர்கள் அந்த மதங்களையும் தழுவினார்கள்.
இதற்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழரிடையே நிலவிய தீண்டாமை அல்லது
வேறு ஏதாவது கட்டாய மத மாற்றம், தேவை கருதிய மதமாற்றம் போன்ற வேறு ஏதாவது காரணங்களுக்காக
அவர்கள் மதம் மாறி இருக்கலாம். அதற்காக அவர்களை என்று குறை சொல்ல முடியாது. அதற்காக
அவர்களை “பழைய மதத்திற்கு திரும்பு” என்று சொல்ல முடியாது. தமிழர் ஒருவர் எவ்வாறு
இந்து மதத்தில் இருக்கிறாரோ, அதுபோலவே கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களிலும் இருக்கிறார்கள்.
தற்போதைய பிரச்சனை என்னவென்றால், கிறிஸ்தவ, இஸ்லாமிய தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்
கூடிய இந்து தமிழர்களை தங்கள் மதத்திற்கு மாற்ற விரும்புவதுதான். அதேபோல அவர்களை வெறுப்பது,
அவர்களை தாக்குவது, கொலை செய்வது போன்றவையும் நடக்கின்றன. இதற்கு காங்கிரஸ், திராவிடக்
கட்சிகள் கடைப்பிடித்த போலித்தனமான மதச்சார்பின்மையும், வாக்கு வங்கி அரசியலும் காரணமாகவே
அமைகின்றன. மத அடிப்படையில் இவ்வாறு ஏற்பட்டுள்ள வெறுப்பை மாற்ற வேண்டியது அரசின் கடமை.
ஆனால், அந்த அரசை செலுத்தும் கட்சிகளின் தவறான நடவடிக்கைகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ தமிழர்களிடையே
தவறான போக்கையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஈழப்போருக்குப் பின்னர் தமிழர் மத்தியில்
தமிழ்த் தேசிய உணர்வு எழுச்சி பெற்று வருகிறது. இந்த உணர்வு இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ
தமிழர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இனத்தின் முக்கியத்துவத்தை
உணர்த்தி வருகிறது. இதுபோன்ற விழிப்புணர்வு தமிழின மதக் குழுக்களிடையே ஒரு இணக்கமான
போக்கை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். அவர்கள் ஒருவர் மற்றொருவரின் மத உணர்வுக்கு
மதிப்பளித்து அவர்களை சகோதரர்களாக நடத்த வேண்டும். தமிழினம் போலியான மதச்சார்பின்மையைக்
கடைப்பிடிக்காது. அதேபோல மதப் பாகுபாடும் காட்டாது. ஆனால், தமிழின ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கு
ஊறு விளைவிக்கும் வகையில் எந்த மதத்தவர் செயல்பட்டாலும் அவர்கள் சமமாக நடத்தப்பட்டு
சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவார்கள். அதேபோல கடுமையான மதமாற்ற, மதப் பரப்புரைச்
சட்டங்கள் அமலாக்கப்படும். மத ரீதியான பிரச்சனைகள் தொடர்வதாக இருந்தால் அனைத்து மதங்களும்
அரசுடமை ஆக்கப்படும். தமிழ்த் தேசிய அரசியலுக்கு தமிழினப் பாதுகாப்பே முக்கியமானது.
அதற்கேற்றவாறு தமிழரின் மத உரிமைகள் அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment