கடந்த 2015-ம் ஆண்டு நிலப்பிரச்சையில் என் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழாக வழக்குத் தொடுக்கப்பட்டது. என்னோடு சேர்ந்து அப்போது 89 வயதான என் தந்தை, என் தம்பி, தம்பி மனைவி மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது. புகாரின் சாராம்சத்தில், பழங்காலத்தில் ஜமீன்தார்கள், சாதிப் பெயரைச் சொல்லி திட்டிக் கெண்டே கொலை செய்ய முயற்சிப்பது போன்ற காட்சி உருவாக்கப்பட்டு இருந்தது. புகார் நேரடியாக ஆட்சியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் செய்யப்பட்டதால் காவல் துறை நடவடிக்கை எடுக்க வில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் உயர் நீதிமன்ற ஆணை பெற்றனர். அதன் பின்னர் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் காவல்துறை எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனால் என்ன ஆனது? எங்களுக்கு பண விரயமும், அலைச்சலும் ஏற்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் பொய்யான புகார் என்று கூறி வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் என்ன விசேஷம் என்றால் சம்பந்தப்பட்ட கிராம பள்ளர் சமுதாயத்தவர் பலரும் எங்கள் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர்கள் ஆவர். அவர்களில் சிலர் எங்களுக்காக சாட்சியும் சொன்னார்கள் என்பதுதான். ஆனால் புகார்தாரர்களுக்கு ஆதரவாக யாரும் (பொய்) சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை. இப்படி ஆசாமிகள் எல்லா சமுதாயங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். அதற்காக அவர்கள் சார்ந்த சமுதாயத்தவரை ஒட்டுமொத்தமாக வெறுப்பது தவறானது. மேற்படி நிலப்பிரச்சனை விசாரணையில் இருந்து வருகிறது. முடிந்ததும் அது பற்றியும் எழுதுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment