Friday, January 31, 2020

யார்_அந்த_ஆதித்தமிழன்

சென்ற பாகத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை, தமிழர் நாகரிகம் என நிறுவிய மதிப்பிற்குரிய ஐராவதம் மகாதேவன் ஐயாவை பற்றிய சிறுகுறிப்பை பார்த்தோம்.
இனி அவருடைய ஆய்வில் யாரை ஆதித்தமிழராக சுட்டிக் காட்டுகிறார் என்று பார்ப்போம்.
சிந்துசமவெளியில் கிடைத்த குறியீடு எழுத்துக்களின் வளர்ச்சியில் தமிழ் எப்படி உருப்பெறுகிறது என்பதை தமிழ்நாட்டில் உள்ள ஒரு பூர்வீக பழங்குடியின் பெயரையும் அவர்தம் பண்பாட்டின் அடிப்படையை வைத்து மிகவும் நேர்த்தியாக பினைத்துள்ளார்.
தமிழ் மொழி என்பது இயற்கையின் மொழி என உலக ஆய்வாளர்கள் அனைவரின் கூற்று:-
அதனால் தான் தமிழ் மொழியை, தொல் மொழி என வர்ணிக்கின்றனர்.
தமிழ் மொழியில் #வலிமையை உணர்த்தும் வார்த்தைகளை நாம் பட்டியல் எடுத்துக் கொண்டால், நம்மால் தவிர்க்க முடியாத வார்த்தை #கள_கல_கழ
என்பதாகும்.
மேற்கோள் காட்டிய வார்த்தையில் ள,ல,ழ என்பது எழுத்துகள் உருவாகும் முன்பு அது ஒலியின் அடிப்படையில் ஒரே வார்த்தையை குறிக்கும்...!
பிற்காலத்தில் எழுத்துகள் உருவாகிய போது அதுவும் 2000வருடத்திற்கு முன்பு தான் ல,ழ,ளகரம் கல்வெட்டுகளில் வருகிறது.
ஆக அடிப்படை வார்த்தையாக #கள என்று எடுத்துப் பார்த்தால் அதிலுள்ள வலியையையும்,நாகரிகத்தின் வேரையும் நாம் உணரலாம்.
கள் :-
தமிழரின் ஆகச்சிறந்த உணவு,நடுகற்களில் வீரர்களின் கையில் இருக்கும்
களபம்:-
வலிமையான உயிரினம் யானை
களம் :-
நாகரிகத்தின் நிலைத்த தினை மருத நிலத்தின் வேளாண் நிலத்தின் பெயர்
களை :-
மருத நிலத்தின் உயிர் நாடிச் சொல்
களைஞர் :-
களை எடுப்பவர்
களரி :-
போர்க்களம்,அரங்கம்
களர்:-
நாகரிகத்தின் இடையில் கண்டுபிடிக்கப்பட்ட உப்பு நிலத்தின் பெயர்
களமர்:-
களத்தில் உழுத மருத நில மக்களின் பெயர்
களவி :-
உலகம் தொடர்ந்து இயக்க காரணமான தலைவன்,தலைவி கூடுதல்....!
களாசம் :-
பிரம்பு
களி :-
செருக்கு,இன்பம்
களேபரம் :-
உடல்
கலகம் :-
போர்
கலப்பை :-
மருத நில வேளாண் கருவி
கலம் :-
கப்பல்
கலவர் :-
பரதவர்
கலியன் :-
சனீஸ்வரர்
கழி :-
கடல்
கழியர் :-
பரதவர்
என நாகரிகத்தை வளர்த்தவர்களின் பெயர்களும், வலிமையின் பெயர்களும் கள,கல,கழ போன்ற சொற்களில் இடம்பெறும்...!
சரி இதற்கும் சிந்துசமவெளி நாகரிகத்திற்கும்,தமிழ் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்.....?
இந்த நாகரிகத்தை எடுத்த சென்ற மக்களின் வேராக இரண்டு தமிழ் பழங்குடிகள் அடையாளப்படுகிறார்கள்...!
களவர்,மழவர்
ஏன் இவ்விரு பழங்குடிகளை எடுத்தார் என்றால்...!
சிந்துசமவெளியில் கிடைத்த குறியீடு எழுத்துகளின் அதிகமாக உள்ள எழுத்துகளின் அடுத்த பரிணாமம்.
கள,மழ என்றே ஆரம்பிக்கிறது. அதற்கான குறியீடு விளக்கத்தை இனைத்துள்ளேன்.
இலக்கியரீதியாகவும் இரு பழங்குடிகளாக களவர்,மழவர் அடையாளம் காணப்படுகிறார்கள்.
மூவேந்தர்களில் மூத்தவராக அறியப்படும் பண்டையனாகிய பாண்டியனை, ஆகோள் மூதூர் கள்வர் என்று அகநானூறில் பாண்டிய மன்னரை பசுக்களை கவர்ந்து செல்லும் கள்வர் தலைவர் என்று அகநானூறு குறிப்பிடுகிறது
கிபி50ல் வாழ்ந்த மதுரை கணக்காயர் “கள்வர் பெருமகன் தென்னன்” என்று பாண்டிய மன்னனை கள்வர் தலைவர் என்று பாடியுள்ளார்.
வேங்கடத்தை ஆண்ட வலிமைமிக்க மன்னரான புல்லி அரசரை “கள்வர் கோமான் புல்லி” என்று கள்வர் தலைவர் என்று அகநானூற்றில் அறியப்படுகிறார்.
களவர் தலைவராக புல்லி எப்படி வருகிறாரோ...!
அதேபோல் மழவர் தலைவராக ஓரி வருகிறார்.
அதனை அகநானூறில் “மழவர் பெருமகன் மாவள் ஓரி” என மழவர் தலைவராக ஓரி அடையாளம் காட்டப்படுகிறார்.
மேலும் அகநானூறு 61ல் மழவர்களுக்கென்று தனி நாடு இருந்ததை #மழபுலம் என கூறுகிறது. இளம்பூரணாரும் மழவர் நாடு என்றே சுட்டிக்காட்டுகிறார்.
மழவர்களே வெட்சி மற்றும் கரந்தை எனப்படும் ஆகோள் பூசல்களில் ஈடுபடும் வீரர்களாக வருகிறார்.
அம்மழவர்களை அடக்கிய களவர் தலைவர் புல்லி என அகநானூறு உரைக்கிறது.
“மழபுலம் வணங்கிய மாவண் புல்லி”
மழவர் என்போர் இளையர் என தொல்காப்பியர் விளக்கம் கொடுக்கிறார்.
கள்வர் கோமான் புல்லி அகநானூறு 83ல்
“இளையர் பெருமகன் புல்லியாகவும் அறியப்படுகிறார்.
சோழனையும்:-
இளையர் பெருமகன் - தொகுபோர்ச் சோழன்
ஆக களவர்,மழவர் இருவரும் ஒரே புள்ளியில் தான் வருகிறார்கள்.
இன்றும் கள்ளர்களில் இளம்பூண்டார்,மழவர்,மழவரார்,மழவராயர்,அதியமார்,கோவலர் பட்டம் உள்ளதை நினைவில் கொள்ளவும்.
இவ்விரு பழங்குடியின் கள,மழ என்ற சொல்லில் இருந்தே சிந்துசமவெளி நாகரிகத்தின் குறியீடு எழுத்துக்கள் பரிணாமம் அடைகிறது.
கள :- களம்,களவர்,களமர்,களபம்
மழ :- மலை,மட்டி,மழவர்
இவ்விரு மக்களும் மனித நாகரிகத்தின் அடிப்படை தினைகளான குறிஞ்சி,முல்லையில் பெரும்பான்மையாக அடையாளப்படுகின்றனர்.
இலக்கியரீதியாக :- களவர்,மழவர்,கோவலர்,ஆயர்
கலாச்சாரரீதியாக :- ஏறுதழுவுதல்,ஆநிரை கவர்தல்
இன்றும் தமிழ் நாட்டில் ஏறுதழுவுதல் 119கள்ளர் நாடுகளிலும் தொடர்ச்சியாக இன்றும் விளையாடப்படுவது அனைவரும் அறிந்ததே...!
இதற்கு முன்பாக ஏறுதழுவுதல் பதிவை பார்க்கவும்.
ஆக ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்கள் சிந்துசமவெளி நாகரிகம் என்ற ஆதித்தமிழர் நாகரிகம் தற்போது வாழும் கள்ளர் சமூகம் என்று ஆணித்தனமாக ஊன்றியுள்ளார்.
இதற்கு வழுசேர்க்கும் விதமாக ஆசியாவின் மிகப்பழமையான டிஎன்ஏவான M130y மதுரையில் உள்ள கள்ளர் சமூகத்திற்கு உள்ளதை அறிவியல்ரீதியாகவும் உறுதி செய்தது.
சரி களவர்,மழவர் இன்னொரு பெயரில் அழைக்கப்பட்டனர்.
அது யார்...?
அடுத்த பாகத்தில் சந்திப்போம்....!
நன்றி
அகநானூறு
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Jonathan Mark Kenoyer Felicitation Volume
மற்றும்
விக்னேஸ்வர் பா மாளுசுத்தியார்
சியாம் சுந்தர் சம்பட்டியார்
Sambandamoorthi Mazhavarayar
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு












No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...