கிபி1773-ல் சிவகங்கை அரசை கைப்பற்றுவதில் நவாப் மற்றும் பிரிட்டிஸ் கூட்டுப் படை மிகத் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்த நேரம்.
அந்த நேரத்தில் கிபி1773 மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசுக்கு அவர்களின் பிரதிநிதி முத்து கிருஷ்ண முதலியார் சென்னையில் உள்ள இராபர்ட் பால்க் என்கிற அதிகாரிக்கு சிவகங்கை நிலவரத்தை பற்றி கடிதம் மூலமாக தெரிவிக்கிறார்.
அதில் சிவகங்கை கள்ளர் நாடுகள் புரட்சியில் ஈடுபட்டு நமக்கு எதிரான புரட்சியில் உள்ளனர் என்றும் மேலும் அவர்களின் ஆதி சொந்தமான சிவகங்கை அரசுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபடுவதாகவும் எழுதியுள்ளார்.
அதேபோல் இராபர்ட் பால்க் பிரிட்டிஸ் கவுன்சிலுக்கு சிவகங்கை கள்ளர் நாடுகள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கடிதம் எழுதியுள்ளார்.
சிவகங்கையின் இரத்த சரித்திர வரலாற்றை எழுதிய பிற்கால ஆசிரியர்கள் கள்ளர் படையின் வீரத்தையும், தியாகத்தையும் மூடி மறைப்பது ஏனோ?
வரலாற்று ஆசிரியர் கே.இராஜய்யன் அவர்கள் மட்டுமே சிவகங்கை சரித்திரத்தில் கள்ளர் நாட்டின் பங்கை எந்தவித சமரசம் இல்லாமல் பதிவிட்டவர்!
இந்த புரட்சியின் தொடர்ச்சியே பிற்காலத்தில் சிவகங்கை கள்ளர் படை நாயகன் தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி வரை தொடர்ந்தது!
சிவகங்கை பயணம் தொடரும்....
நன்றி
Reports on palk manuscripts
அன்புடன்
சோழபாண்டியன்
No comments:
Post a Comment