Thursday, June 20, 2019

கள்ளரிடம் இருந்து மாறுவேடத்தில் தப்பித்து ஓடிய மராட்டிய படையினர் - கிபி 1745


பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவாளனாகிய சந்தாசாகிபு கி.பி.1739 இல் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் சாகுஜியைக் கைது செய்து, துக்கோஜியின் ஐந்தாவது மகனாகிய பிரதாப் சிங் என்பவரைத் தஞ்சை அரியணையில் ஏற்றினான். பிரதாப் சிங் காலத்தில் தான் தஞ்சை உள் நாட்டு விவகாரத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் தலையிட ஆரம்பித்தார்கள்.

கிபி 1745-ல், மராத்தியரின் சதாரா இராச்சியத்தின் மன்னரின் படை தளபதி முராரி ராவ் தலைமையில் திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளை தாக்கியது. மராத்தியர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து தங்களது சூரையாடலை தொடங்கினர்.

கிபி 1745-ல் மார்ச் மாதம், ஆவூரில் இருந்த பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ மத பரப்புரை செய்பவர்கள் மராத்தியரிடம் இருந்து தப்பித்து , தஞ்சையிலுள்ள குண்ணம்பட்டி கிராம கள்ளர்களிடம் சரணடைந்தனர்.

புதுக்கோட்டை சமஸ்தான எல்லையில் உள்ள மலையடிப்பட்டி கிராம மக்கள் தங்களது ஆடு மாடுகளுடன் நார்த்தாமலை பக்கம் சென்று விட்டனர்.

ஒரு மாதம் கழித்து திருச்சியில் இருந்த முகாலயர்கள், மராத்தியரை தாக்க தொடங்கினர். இதே சமயத்தில் கள்ளர்களும் மராத்திய படையை தாக்கினர். மராத்திய படையின் படைபற்றுகளை சூரையாடினர்.

கிட்டதட்ட 3000 மராத்திய குதிரை படை வீரர்கள் கள்ளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தனர். மராத்தியபடையின் போர்கருவிகள் கள்ளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

கள்ளர்களின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு, கள்ளர்களிடம் மீண்டும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மாறுவேடமிட்டு நடைபயணமாக தங்களது சதாரா நாட்டிற்கு தப்பி ஒடினர் மராட்டியர்கள்.

மராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1758-ல் கள்ளர்கள் துணைக் கொண்டு பிரஞ்ச் கூட்டுப்படைகளை வெற்றிக்கொண்டதை நாம் அறிந்ததே

நூல் : General history of Pudukkottai State R iyar pg 86

நன்றி : உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...