மாட்டிறைச்சியை உண்பவர்கள் பொதுவாக பட்டியல் சாதியினர்
என்ற கருத்து உள்ளது. இஸ்லாமியரும் வெளிப்படையாக மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்.
அதேபோல மாட்டிறைச்சியை உண்ணாதே என்று சொல்பவர்கள்
பார்ப்பனர்கள் அல்லது இந்துக்கள். பார்ப்பனர்கள் இறைச்சி சாப்பிடாதவர்கள்.
இதிலிருந்தே இதன் பின்னணி என்னவென்று புரிந்துகொள்ளலாம்.
அதாவது இதுவும் ஒரு வித பார்ப்பன, இந்து மத எதிர்ப்புதான்.
ஆனால் இவர்கள் பன்றி இறைச்சி உண்பது பற்றி பேசமாட்டார்கள்.
ஏனென்றால் பன்றி இறைச்சி உண்பதை பார்ப்பனர்களோ, இந்துக்களோ கண்டுகொள்ள மாட்டார்கள்.
இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சியை உண்பதில்லை என்றால்
அவர்கள் மாடுகளை உழைக்கும் விலங்காகப் பார்க்கிறார்கள். பசு தரும் பாலை குழந்தைகளுக்கு
கொடுப்பதால் அதனை அன்னையாக பார்க்கிறார்கள். காளையை சிவபெருமானின் வாகனமாக பார்க்கிறார்கள்.
வேறு எந்த விலங்கின் பாலையாவது குழந்தைகளுக்கு கொடுக்க
முடிகிறதா? எனவேதான் இந்துக்கள் பசுவை புனித விலங்காக கருதுகிறார்கள். குழந்தைகளுக்கு
இறைச்சியைக் கொடுக்க முடியுமா? முடியாது.
தமிழர்களும் பசுக்களை, மாடுகளை இதே பார்வையில்தான்
பார்க்கிறார்கள். அது இறந்தால் அதன் இறைச்சியை உண்பதில்லை. அதை அப்புறப்படுத்தி விடுகிறார்கள்.
பன்றி இறைச்சியை உண்பது பற்றி இவர்கள் பேச மாட்டார்கள்.
ஏனெனில் இவர்களின் கூட்டாளிகளான இஸ்லாமியருக்கு பன்றியைப் பற்றி பேசக் கூட கூடாது.
எனவே இதுவும் இந்து மதம், பார்ப்பனர் எதிர்ப்பு அல்லது
பட்டியல் சாதி ஆதரவு அரசியலே தவிர வேறொன்றுமில்லை.
3 comments:
உயர்திரு பெருமாள் தேவன் அவர்களுக்கு,
நல்ல கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
இரண்டு கேள்விகள்:
1. பார்ப்பனர்கள், இந்துக்கள் என்று எழுதி இருக்கிறீர்களே, அப்படியானால் பார்ப்பனர்கள் இந்துக்கள் இல்லையா?
2. தமிழ் பேசும், தமிழ் நாட்டிலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஐயர், அய்யங்கார் போன்ற பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று கருதுகிறீர்களா, அல்லது திராவிடக் கழகத்தார் மாதிரி "பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்லர்" என்கிறீர்களா? தமிழர்கள் அல்லர் என்று கருதினால் தக்க விளக்கம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம்.
திரு டிஎஸ் மகாதேவனுக்கு,
தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். தங்களது கேள்வியை இன்றுதான் கவனித்தேன். எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை.
முதல் கேள்வியில் பார்ப்பனர் இந்துக்களா என்று கேட்பதற்காக அப்படி எழுதவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்களும் இந்துக்களாக இருக்கிறார்கள் என்பதாலேயே அவ்வாறு எழுதி இருக்கிறேன்.
இரண்டாவது கேள்வி தமிழகத்தில் வாழும் பார்ப்பனர்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழர்கள்.
மற்றபடி தமிழர் கூட தமிழர் அல்லாதவராக போய்விட வாய்ப்புள்ளது. அது பற்றிய விளக்கம் கீழேயுள்ள இணைப்பில் உள்ளது.
நன்றி.
http://perumalthevan.blogspot.in/2015/11/blog-post.html
Post a Comment