1. நமது மீனவர்கள் எல்லை தான்டி மீன் பிடிக்கிறார்கள்
என்ற உண்மையை ஏன் நமது அரசும், அரசியல்வாதிகளும் மறுக்கிறார்கள், மறைக்கிறார்கள்?
மீனவர்கள் எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறார்கள் என்பதே தவறான நிலைப்பாடு .... தமிழக இலங்கை மீனவர்கள் இரு கடல் பகுதிகளிலும் மீன் பிடித்துக்கொள்ள அனுமதி இருக்கிறது, ஒப்பந்தமும் இருக்கிறது ...
மீனவர்கள் எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறார்கள் என்பதே தவறான நிலைப்பாடு .... தமிழக இலங்கை மீனவர்கள் இரு கடல் பகுதிகளிலும் மீன் பிடித்துக்கொள்ள அனுமதி இருக்கிறது, ஒப்பந்தமும் இருக்கிறது ...
தமிழக மீனவர்கள் அனுமதி இல்லாத இயந்திர வலையை பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை, இது தவறான செயல் ... இதனால் மீன் வளம் பாதிக்கப்படும் ....
2. நமது கடல் எல்லையில் ஏன் மீன் வளம் குறைந்தது அல்லது ஏன் இல்லை?
மீன்பிடி தொழில் ஒரு லாபகரமான தொழிலாக இருந்த காரணத்தால், அதிகபடியான முதலீடு இதில் செய்யப்பட்டது ... இதை அரசாங்கம் முறைபடுத்த தவறு செய்து விட்டது ... இதனால் மீனவர்கள் அல்லாதவர்கள் கூட தங்கள் பணத்தை முதலீடு செய்து இருகிறார்கள் ...
கடலில் இருந்த மொத்த மீன்வளத்தையும் சுரண்டி விட்டோம் ... மீன் இனபெறுக்கத்திற்கு ஒரு மாத காலம் மட்டுமே அவகாசம் கொடுக்கிறோம், இது போதுமானது இல்லை ... மீனவர்களுக்கு என்று ஒரு சரியான வாரியம் இல்லை,
மொத்தத்தில் மீன்பிடி தொழிலை அரசாங்கங்கள் முறைபடுத்த தவறி விட்டன...
3. மீனவர்களை பழைய முறையில் இருந்து புதிய முறை மீன்பிடிப்புக்கு மாற்றுவதிலோ, பயிற்சி அளிப்பதிலோ அரசுக்கு என்ன சிக்கல்? (அதாவது மீன்வளம் குறையாமல் நவீன முறையிலோ அல்லது மிக பழைய முறையிலோ?)
அரசாங்கம் இதுவரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை ... மீனவர்கள் ஒட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்த படுகிறார்கள் ... மீனவர்கள் பொதுவாக புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்யவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள் .. இதை இந்த அரசியல்வாதிகள் நன்றாக பயன்படுத்தி கொள்கிறார்கள் .....
4. மீனவர்கள் கடல் எல்லை தாண்டும் வரை (அல்லது) தாண்டி இலங்கையிடம் பிடிபடும் வரை அல்லது (அல்லது) தாண்டி மீன் பிடித்து திரும்பும் வரை நமது கடலோர காவல் படையும், கடற் படையும் எங்கே போய் பூ பறித்து கொண்டிருக்கிறது?
மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டு திரும்பும் வரை நமது கடற் படையும், கடலோர காவல் படையும் ஒரு பகல் முழுவதும் காணவில்லை என்றால் தென் பகுதி கடல் எல்லையின் பாதுகாப்பு என்ன? அதாவது தமிழகம் தாக்கப் பட்டால் பரவாயில்லையா?
ராமேசுவரம் - யாழ்ப்பாணம் கடல் பகுதியை தமிழக மீனவர்கள் அனைவரும் பயன்படுத்துவதை, இலங்கை தமது பாதுகாப்பு காரணங்களுக்காக விரும்பவில்லை .. இதை இந்தியாவும் ஆதரிக்கிறது ...
ராமேசுவரம் - யாழ்ப்பாணம் கடல் பகுதியை அனைத்து ராமேசுவர மீனவர்களும் பயன்படுத்த தொடங்கினால் இவர்கள் அனைவரையும் கண்காணிப்பது இயலாத விஷயம் ...
அனைத்து மீனவர்களும் இந்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டால், தமிழீழ பகுதிக்கு ஆயுதங்களும் மற்ற தளவாடங்களும் எளிதாக கடத்தப்படலாம் என்ற காரணத்தால் தமிழக மீனவர்கள் இந்த கடல் பகுதியை பயன்படுத்துவதை குறைப்பதற்காகவே மீனவர்கள் தாக்க படுகிறார்கள். இதை இந்தியாவும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது, அல்லது தமிழக மீனவர்களை தாக்க இலங்கைக்கு இந்தியா அனுமதி கொடுக்கிறது ....
(இதனால் கடலோர காவல்படை, கப்பல்படை என்ன செய்கிறது என்ற கேள்வி அவசியமற்றதாக போகிறது)
- மாணிக்க வாசகம்
No comments:
Post a Comment