ஈழ இன அழிப்புக்குப் பிறகு இதற்கு காரணம் யார் என்று தேட ஆரம்பித்த தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் மாற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருப்பதை உணர்ந்துகொண்டர்.
இது
அவர்கள் மீது வெறுப்பேற்றியது. எனவே தமிழர்களின இனப் பற்று இனச் சுத்திகரிப்பு என்ற
விரும்பா நிலையை எட்டியுள்ளது. அவர்கள் மாற்று மொழிபேசுவோரை வந்தேறிகள் என்று சுட்டும்
நிலை ஏற்பட்டுள்ளது.
இது
தவறான போக்காகும்.
ஆட்சி அதிகாரம் என்று வரும்போதுதான் நாம் மற்றுமொழி
பேசுவோரை “வந்தேறி“ என்று பார்க்க வேண்டியுள்ளது. வந்தேறி என்ற வார்த்தைக்கு பதிலாக
மாற்று மொழித் தோன்றல்கள் என்று சொல்லலாம். மாற்று மொழிபேசுவோர் தலைமை அரசியல் அதிகாரத்தை
தமிழரிடம் விட்டுவிட வேண்டும்.
ஆட்சிப்
பொறுப்பிலிருக்கும் சிறு எண்ணிக்கையாளர்கள் காரணமாக ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டோரை
ஒரே மாதிரியாகப் பார்ப்பது தவறு. தமிழ் நாடு தனி நாடு அந்தஸ்தைப் பெற்றாலும் அது காலம்காலமாக
தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் மாற்று மொழிபேசுவோருக்கும் தாயமாகவே திகழும், திகழ
வேண்டும்.
எனவே
மாற்று மொழி பேசுவோரை வந்தேறிகள் என்று சுட்டுவது அவர்களின் மனதைப் புண்படுத்தும்.
தமிழர்கள் அவர்களை மாற்றுமொழி வழித்தோன்றல்கள் அல்லது மாற்று இன வழித்தோன்றல்கள் என்று
குறிப்பிடுவது நாகரீகமாகவும் மனிதாபிமானம் கொண்டதாகவும் இருக்கும்.
உங்கள்
கருத்து என்ன?
No comments:
Post a Comment