Wednesday, January 22, 2014

சாதிப் பெயரும் திராவிட அரசியலும்


ஒரு மனிதனின் உடலில் இரு கை, இரு கால், இரு கண் என இருக்கிறது. 
எதிர்பாரத விதமாக விபத்தை சந்திக்க நேரிடுகிறது விபத்தில் வலது கையை ஒருவன் இழக்கிறான். இன்னொருவன் வலது காலை இழக்கிறான் இருவரும் மருத்துவமனையில் பேசிக் கொள்கிறார்கள். 

ஒருவர் சொல்கிறார், உடைஞ்சதுதான் உடஞ்சது இடது கை உடைஞ்சதா பரவாயில்லை.  மற்றொருவர் என்ன பேசியிருப்பார், அவரும் இடது கால் உடைஞ்சாலும் பரவாயில்லை என்றுதான் பேசியிருப்பார் .

ஒரு பெண் பிரசவ வலியால் துடித்து, அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறாள்.  பரிசோதித்த மருத்துவர் சொல்கிறார். தாய் - சேய் இருவரில் ஒருவர்தான் பிழைப்பார். உங்களுக்கு தாய் வேண்டுமா, சேய் வேண்டுமா என கேட்பார். ஆசையாய் எதிர்பார்த்து காத்திருந்த பிள்ளையை பறிகொடுப்பது சிரமம்தான். ஆனாலும் மனைவியை இழக்க முடியுமா ? இந்நிலையில் சரியான முடிவாக, சரி மனைவியை காப்பாற்றுங்கள் என்றே பலர் கூறுவர். 

ஜாதி - மதம் நமக்கு இருந்தாலும், குடும்பம் என்ற கட்டமைப்பிற்காக மனைவி முக்கியம் என முடிவெடுப்பது போல, நாம் நம் இன நலனை முதல் நலனாக எடுத்துக் கொள்வது மிக முக்கியம். சாதிதான் முதன்மை என நினைக்கும் தமிழனும் மதம்தான் முதன்மை என எண்ணும் தமிழனும் இதை நன்கு உணர வேண்டும். உணர்வதோடு நில்லாது அதன்படி செயல்படுவது மிக மிக முக்கியம் ஏதாவது ஒன்றை முதன்மைப் படுத்தாது நாம் ஒன்று கூட முடியாது. 

இந்தியா முழுக்க ஜாதிப் பெயர்களுடன் பல தலைவர்கள் உலா வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அவர்களது பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயரைத் போடுவதில்லை. இப்படி அவர்கள் போடததால் இனம் நன்மை அடைந்ததா, தீமை அடைந்ததா என்ற ஆய்வு தேவைப்படுகிறது. பிற மாநிலங்களில் ஜாதிப்பெயருடன் உள்ள தலைவர்கள் சாதிப் பற்றுடன் என்னென்ன செய்தார்கள் ? ஜாதிபெயரிடாத தமிழக அரசியல்வாதிகள் என்னென்ன செய்தார்கள் என்ற ஆய்வும் தேவைப்படுகிறது 

தமிழனை அழிக்க திராவிடம் பயன்படுத்திய கருவிகளில் ஜாதிப் பெயர் வேண்டாம் என்பதும் ஒன்று. ஈழப்படுகொலை நடந்து. அது ஏன் நடந்தது என்ற ஆராய்ச்சிக்கு பிறகு வைகோ யார்? விஜயகாந்த் யார்? கருணாநிதி யார்? என்று தெரிய வருகிறது. ஜாதிப் பெயருடன் இவர்களது பெயர் இருந்திருக்குமானால் இந்த சிக்கல் இருந்திருக்காதல்லவா?

தனக்கு இதுதான் நன்மை என கருதி சாதியை மறைத்து தமிழனாக வலம் வந்த விஜகாந்துக்கு, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வார்த்தைக்கு வார்த்தை வாய் கிழியும்படி சொன்ன விஜயகாந்துக்கு இது மட்டும் ஏன் தெரியவில்லை?

தேமுதிக, தேசிய முற்போக்கு தமிழர் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைப்பது ஏன்? ஆக ஜாதியை மறைப்பதும் தமிழனை ஏமாற்ற... தமிழர் என்ற பெயரை மறைப்பதும் தமிழனை ஏமாற்ற ... 

ஒடுக்கப்பட்ட தமிழ் சாதியை ஆதித் தமிழர் என்றழைக்காது அவர்களை தமிழரே இல்லை என்பது போல ஆதி திராவிடர் ஆக்கியது சரியா? உண்மையாக இனத்தை ஒருவன் நேசித்தால் ஆதிதமிழர் என்றோ பழந்தமிழர் என்றுதானே வைத்திருக்க வேண்டும்? அவர்களை மட்டும் இதர தமிழர்களிலிருந்து திட்டமிட்டு பிரிக்கும் சூழ்ச்சி ஆகாதா? 

இனத்தை ஒன்று சேர்க்க புரட்சி செய்யத்தவறிய திராவிடம் இனத்தை பிப்பதில் பெரும் புரட்சி செய்துள்ளது. 

ஜாதியை வைத்துதான் இவன் தமிழன் இவன் தெலுங்கன் இவன் மலையாளி என அடையாளம் காட்ட முடியுமே தவிர, வேறு எப்படி முடியும்? இவன் தமிழன் என நிரூபிக்க முடியாது. ஜாதிய கட்டமைப்பிற்குள் இருந்தாலும் மதக் கட்டமைப்பிற்குள் இருந்தாலும் இனம் என்று வரும்போது எனக்கு முதன்மை என் இனம் என எவரெவர் தீர்க்கமாக முடிவெடுக்கின்றனறோ அவர் தன் பெயருக்கு பின்னால் சாதி அடையாளத்தை காட்டிக் கொண்டாலும், இனத்திற்கு சிக்கல் வரும்போது இன நலனையே முதன்மை நலனாக எண்ணிச் செயல்படுவர்.

- அதியமான், தலைவர், தமிழர் முன்னேற்றக் கழகம்

https://www.facebook.com/athiyamanthamuka/posts/646837568705627


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...