Wednesday, January 8, 2014

பிரதிநிதித்துவமும் இட ஒதுக்கீடும்



இடஒதுக்கீடு எவளோ நாள் இருக்கனும் என்பதுதான் பெருமாள் தேவன் அண்ணன் கேள்வி

யாரோ எப்பயோ வாங்கிய தேவர் பட்டத்தை போடாமல் அல்லது பயன்படுத்தாமல் இருக்க கால வரம்பு எதும் இருக்கா அண்ணா

அப்படியே அந்த கோவில மணிஆட்டி வாழ்ரானுங்களே அவங்களயும் பார்த்து இப்படி எதாவது கேளுங்க எப்பதாண்ட கருவறையில் உள்ளே விடுவிங்கனு

- நண்பர்களுக்கு, நான் “தலித்“ என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறேன். இங்கு திரு கௌதமனின் வார்த்தை பிரயோகத்திற்கு பதில் அளிக்கும் முகமாக மட்டுமே இந்த வார்த்தையை, அதன் பின்னணியில் உள்ள அரசியலை குறிப்பிடுவதற்காக பயன்படுத்துகிறேன் என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

தேவர் என்ற பட்டம் எங்களுக்கு கிடைத்த பட்டம் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால் தலித் என்று உங்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

அடையாளமும் உரிமையும் ஒன்றுதான் என்றால் நீங்கள் உங்கள் அடையாளத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு அதன் மூலம் லாபம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்றுதான் பொருள்.

அதாவது மற்றவர்கள் அவர்களது அடையாளத்தை மட்டும் வைத்துக்கொள்ள நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் அதை வைத்து லாபம் சம்பாதிக்க நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தை வைத்து எந்தவித முதலீடும் இல்லாமல் லாபம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அது அவர்களின் வாழ்வுரிமை. உங்கள் தொழில் இழிவானது என்றும் அவர்களின் தொழில் புனிதமானது என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது. அந்த கற்பிதத்தை நீங்கள் நம்புகிறீர்கள். அதனால்தான் நீங்கள் உங்கள் தொழில்களை விட்டுவிட்டு மற்றவர்களின் தொழில்களை கைப்பற்ற முனைகிறீர்கள். அதோடு அவர்கள் தங்களின் தொழில்களை விட்டுவிடுவதுதான் நியாயம் என்றும் சொல்கிறீர்கள்.

நாங்கள் தேவர் பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும் வரை நீங்கள் உங்கள் தலித் பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இதன் மூலம் மறைமுகமாக நாங்கள் ஆதிக்கம் செய்பவர்கள் தொடர்ந்து ஒப்புக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு விஷயத்தை நண்பர்கள் கவனிக்க வேண்டும், பார்ப்பனர்கள் வருமானம் உள்ள பொதுவான ஆலயங்களில் மட்டுமே பார்ப்பனர்கள் பூசாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். மற்ற சாதிகளுக்கான ஆலயங்களில் அவர்கள் விரும்பினால்தான் பார்ப்பனர்களை பூசாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். எங்கள் ஊர் கோவிலுக்கு எங்கள் சாதி பூசாரிதான் இருக்கிறார். அங்கு கருவறை பிரச்சனையே இல்லை.

இதில் இன்னொரு விஷயத்தை நீங்கள் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறீர்கள் அதாவது எக்காலத்திலும் இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மை பலனளிக்காது, அல்லது போதாது என்பதே அது. அதேபோல இடஒதுக்கீடு என்பது வாழ்க்கை அடிப்படையிலானது அல்ல அது ஆதிக்கத்தின் அடிப்படையிலானது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். அப்படியானால் மக்களாட்சி முறையிலான ஆதிக்கத்தையும் இந்த வகையில் சேர்க்கலாமா?

ஒரு சமுதாய மக்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்களோ அத்தனை சதவீதம் அனைத்து துறைகளிலும் பிரதிநிதித்துவம் கொடுத்துவிட்டால் இட ஒதுக்கீடு என்ற ஒன்று தேவையே இல்லை.

ஆனால் இன்று இட ஒதுக்கீட்டை விரும்பும் நபர்கள் 100 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தாலும் போதாது என்று சொல்லும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

சதவீத பிரதிநிதித்துவத்தில் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள், தங்கள் மக்கள் தொகையை பெருக்குவதன் மூலம் அதிக பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்பலாம்.

அப்படியானால் தற்போது உள்ள மக்களின் சதவீதத்தை அப்படியே வைத்திருக்க அனைத்து சமுதாயப் பிரிவுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதில் மதப் பிரச்சனையும் ஏற்படலாம். ஏனெனில் இஸ்லாம் கிறிஸ்தவம் போன்ற மதங்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதை வலியுறுத்துவதில்லை. அப்போது இவர்கள் இந்த கொள்கை தங்கள் மதத்திற்கு எதிரானது என்று சொல்வார்கள்.

கற்பழிப்பின் மூலம் ஒரு கரு உருவானாலும் அதை பெற்றெடுக்க வேண்டும் என்பதே கிறிஸ்தவ மதக் கருத்தாக உள்ளது. இவர்கள் கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்துவதையும் ஏற்பதில்லை. தற்போது எய்ட்ஸ் நோயின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக மட்டுமே இவர்கள் கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதேபோல இஸ்லாம் மதத்தில் பலதார மணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்திற்கும் தடை விதிப்பதில்லை. எனவே இவர்கள் தங்கள் சதவீதத்தை தக்க வைக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே.

அதேபோல, தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த இரண்டு மதத்தவருமே திராவிடச் சிந்தனையில் ஊறியவர்களாக, இந்து மதத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். திராவிடச் சிந்தனையாளர்கள் சமூக பிரச்சனைகளையும் மதத்தையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொண்டார்கள். திராவிட ஆட்சியாளர்கள் அதை வைத்தே மத அரசியல் செய்தார்கள். இந்த சிந்தனையே கிறிஸ்தவ-இஸ்லாமிய சிந்தனையாளர்களிடமும் காணப்படுகிறது.

எனவேதான் சில நூறு ஆண்டுகளாக இதே இந்து மதத்துடன், அதில் உள்ள சாதிகளுடன் இணக்கமாக வாழ்ந்து வரும இவர்கள் தற்போது அவர்களுக்கு எதிராகவே பேசி வருகிறார்கள்.

ஆனால்அரசியல் பிரதிநிதித்துவம் என்று வரும்போது இவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

இது பிரநிதித்துவ அரசியலின் அடிப்படையில் செயல்படும் தமிழ்தேசியக் கருத்துக்கு ஒரு சவாலாக அமையும்.

அதுபோன்ற நிலையில் மதங்கள் ஒரு தங்கள் நிலையை விட்டுவிட்டு ஒரு மையப் புள்ளிக்கு வந்து சேர வேண்டும். இல்லாது போனால் சமூக பிளவுகள் மேலும் விரிவுபடும்.


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...