Wednesday, January 22, 2014

உறுதிமொழி


தேசத்திற்காகவும் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் பாடுபட்ட
உங்கள் கொள்கையையும் சிந்தனையையும்
ஏற்றுக் கொண்டு உறுதியோடு இருக்கிறேன்.

அரசியல் சதியால் பரப்பப்பட்ட உங்கள் மீதான
சாதிச் சாயத்தை அழிக்க மக்களுக்கு உண்மையான
உங்கள் வரலாற்றை ஊர்தோறும் சென்று எடுத்துரைப்பேன்.

ஏழை எளியவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளையும் செய்து
அநீதிகளை உங்கள் வழியில் எதிர்த்துப் போராடுவேன்.

உங்கள் பெயரைச் சொல்லி எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன் என்றும்

உங்கள் பெயரைப் பயன்படுத்தி தவறாக பொருள் ஈட்டமாட்டேன் என்றும்

உங்களை உண்மையாக நேசிக்கும் மனிதர்களை தோழர்களை நான் இதயப்பூர்வமாக நேசிப்பேன் என்றும்

உங்கள் பெயரை தேவையில்லாத செல்வாக்கிற்காகவும் விளம்பரத்திற்காகவும் பயன்படுத்த மாட்டேன் என்றும்


என்னுடம்பில் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை உங்களுக்காக உண்மையாக உழைப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். 

(கடந்த 19ம் தேதி பசும்பொன்னில் தேவர் சமாதியில் வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட படம்)

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...