Monday, January 6, 2014

பாஜக பற்றிய எனது நிலைப்பாடு


பாஜக, காங்கிரஸ்க்கான ஒரு தற்காலிக மாற்றாகத்தான் இருக்க முடியும். மற்றபடி இந்திய அதிகாரக் குவிப்பை சிறிதும் இழக்க விரும்பாத காங்கிரஸின் ஜெராக்ஸ் காப்பிதான் பாஜக.

பாஜகவிடம் விரும்பும் கருத்து அதன் வெளிப்படையான இந்து மக்களுக்கான ஆதரவே. ஆனால் அது தன்னுடைய இந்து ஆதரவை நிரூபித்ததா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லலாம்.

இந்தியாவைப் பொறுத்த வரை எந்தவொருக் கட்சியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த, இந்தியாவில் கூட்டாட்சி முறையை அமல்படுத்தி அதிகாரத்தை பரவல் செய்ய, அரசியல் சட்ட ரீதியான மேம்பாட்டை விரும்பவில்லை. அல்லது இதுவரை அதற்கான பேச்சைக் கூட யாரும் பேசவில்லை. 

பாஜக பேசிய “அனைவருக்கும் பொது சிவில் சட்டம்“ என்பது கூட ஒரு சமூகச் சமநிலையே அல்லாமல் அரசியல் சீர்திருத்தம் கிடையாது. 

இந்தியா உண்மையிலேயே ஒரு வல்லரசாக ஆக வேண்டும் என்றால் சுபாஷ் சந்திர போஸ் சொன்னதுபோல இந்தியா ஆசிய - ஆப்பிரிக்க மக்களின் உலக பிரதிநிதியாக திகழ வேண்டும் என்றால் அது முதலில் தன்னைத் தானே சரி செய்து கொள்ள வேண்டும். 

அதற்கு சிறிதும் விட்டுக் கொடுக்காத கூட்டாட்சி முறையை அமல்படுத்த இந்தியக் கட்சிகள் முன் வரவேண்டும். ஆனால் அதற்கான தலைவர்கள் இருப்பதாக சிறு அறிகுறி கூட தென்படவில்லை. 

இது இந்தியாவின் ஒற்றையாட்சி, அதிகார குவிப்பு, பெருந்தொழில் லாப ஆதரவு, ஜனநாயக ஏகாதிபத்தியம் போன்றவற்றை வீழ்த்தி இந்தியாவையே வீழ்த்த வழிவகுக்கலாம். 

வாழ்க ஜனநாயகம்.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...