Monday, January 20, 2014

செயல் வீரர் ராஜா உடையார்


இன்று (20-01-2014) காலை 6.30 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. தோழர் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் பேசினார். 

அவரது நண்பர் செந்தில்குமார் மும்பையில் அந்தேரி, மரோல் நாக்கா பகுதியில் கோயமுத்தூரைச் சேர்ந்தவரின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டிலிருந்த முதியவர் (70 வயது) இறந்து விட்டார். அவர்கள் வீட்டில் 2 பெண்கள் மட்டுமே சிறு குழந்தைகளுடன் இருந்தனர். 

அவரது உறவினர்கள் அனைவரும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசித்து வந்தனர். அண்மையில் அங்கு சென்றுள்ள செந்தில்குமாருக்கு இந்தி தெரியாது. அவர் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தவித்தார். 

உடலை அடக்கம் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டியுள்ளது என்று தெரிந்தவர்கள் மூலம் உதவ ஏற்பாடு செய்யுங்கள் என்று தோழர் களஞ்சியம் கேட்டுக் கொண்டார். 

நான் உடனே, நண்பர் ராஜா உடையாரை அழைத்து விவரத்தைச் சொன்னேன். உடனே அங்கு கிளம்பிச் சென்ற ராஜா உடையார் தனது நண்பர்கள் செம்பூர் ஆறுமுகம், அந்தேரி ஆர். குமார் ஆகியோரை உடன் அழைத்துக் கொண்டு ஈமகிரியைச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். 

அனைத்து வேலைகளையும் நல்லபடியாக செய்து முடித்து விட்டதாக மதியம் 2.00 அளவில் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். 

அவருக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                       ******

                                          செயல் வீரர் ராஜா உடையார்

நண்பர் ராஜா உடையார் மும்பை தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். மும்பை மாநகர பாஜக செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். பல கருத்தரங்கு, பட்டிமன்றம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 

முன்பே அறிமும் இருந்தாலும் சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பின் மூலமாக 2007ம் ஆண்டிலிருந்து மும்பையில் இணைந்து பல சமூகப் பணிகளைச் செய்தோம். 

2012ம் ஆண்டு மும்பை காவல்துறையால் நிறுத்தி வைக்கப்பட்ட குமரிமாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை விடுவிக்க நாங்கள் இருவரும் இணைந்து உதவினோம். 

அதேபோல மும்பை சயான் மருத்துவமனையை சுகாதாரமாக வைத்திருக்க நாங்கள் ஆற்றிய 4 மாத பணியில் இவரது பணி முக்கியமானது. 

இத்தனைக்கும் ராஜா உடையார் ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதற்கிடையே சமூக, அரசியல் பணிகளை செய்து வருகிறார். எல்லாவற்றும் மேலாக இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி, சமூக சேவகர். 

இவரைப் போன்ற ஒப்பற்ற செயல்வீரர்கள் பல அரசியல் பதவிகளைப் பெற இறைவனை வேண்டுவோம். 

https://www.facebook.com/Rajaudayar?ref=ts&fref=ts

1 comment:

Unknown said...

திரு ராஜா உடையார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...