Wednesday, January 22, 2020

தமிழர் என்ற வரையறையில் குல தெய்வத்தின் முக்கியத்துவம்


தமிழர் என்ற வரையறையில் குல தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு தம்பி சொன்னார்.
அதாவது, பல தலைமுறைகளாக தமிழகத்தில் வாழும் கன்னடர், மலையாளிகள் போன்றோர் தமிழர்களைப் போலவே பட்டப் பெயர்களை பயன்படுத்திக் கொண்டு சாதிச் சான்றிதழ் பெற்று அரசு பணியிலும் அமர்ந்துள்ளனர் என்று கூறினார்.
எடுத்துக் காட்டாக, பிள்ளை என்ற பட்டத்தைப் பயன்படுத்தும் ஒரு மலையாளி தன்னை வேளாளர் என்று சாதிச் சான்று பெற்று அரசு வேலையில் இருப்பதாக கூறினார். ஆனால் அவரது குலதெய்வத்தைப் பற்றி விசாரிக்கும்போது அது கேரளாவில் இருப்பதாகச் சொன்னதாக தெரிவித்தார். அதேபோல கவுண்டர் என்ற பட்டப் பெயரை பயன்படுத்தி வரும் ஒரு கன்னடரின் குல தெய்வம் மைசூரின் அருகே உள்ளது என்பதையும் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழர் என்று வரையறை செய்வதில் அவரது சாதி (குலம்), பூர்வீகம் அடிப்படை அலகுகளாக இருப்பதோடு குல தெய்வங்களையும் ஒரு அலகாக எடுத்துக் கொள்ளலாம் என்பது சரியாகவே படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் தமிழராகவே இருந்தாலும் அவரின் செயல்பாடுகளே அவரை தமிழரா இல்லையா என்பதைக் காட்டும்.


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...