Monday, January 6, 2020

யார்_அந்த_ஆதித்தமிழன் - பாகம்_1


இன்றை முகநூலில் அதிகமாக நடக்கும் வரலாற்று போர் என்னவென்றால்
பாண்டியர் யார்...?
சோழர் யார்...?
சேரர் யார்..?
வேளிர் யார்..?
என்பதை வைத்து அவரவர் தத்தம் சாதியை வைத்து ஆண்ட பரம்பரை வரலாற்றை பல ஆண்டுகளாக அரங்கேற்றி வருகிறார்கள்.
ஆனால் மூவேந்தர்கள்,வேளிர்களின் தந்தையாக வரும் அந்த ஆதித்தமிழன் யார் என்பதை இந்தியா மட்டுமல்லாமல் உலக வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட மிகப்பெரிய வரலாற்று ஆய்வாளரான, பெருமதிப்பிற்குரிய ஐராவதம் மகாதேவன் IAS அவர்கள் முடிவுரையே எழுதிவிட்டார் என்பது இங்குள்ள 149/- டேடா பேக் ஆய்வாளர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
ஐராவத மகாதேவனின் சிறுகுறிப்பு:-
அக்டோபர் 2, 1930 அன்று பிறந்த ஐராவாதம் மகாதேவன். சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்துவிட்டு, இந்திய ஆட்சிப் பணிக்கு படித்து தேர்வாகி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றினார்.
1962-ல் தொல்லியல் துறை அறிஞர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கே.வி. சுப்ரமணிய ஐயர் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. அப்போதிருந்தே தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டிவந்த ஐராவதம் மகாதேவன், 1980-ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினையில் காணப்பட்ட மிருகத்தை குதிரை எனக் கூறி அது ஆரிய நாகரிகம்தான் என்ற கூற்றை முறியடித்து பல்வேறு ஒப்பீட்டு சான்றாதாரங்களின் மூலம் அது காளை என்பதை நிருபித்தார். அதன்மூலம் சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.
தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.
தன் இறுதி வாழ்நாள் வரை தமிழுக்காகவே தொண்டாற்றிய மாமனிதரை, இவ்விடத்தில் போற்றுகிறேன்💐🙏
அப்படிப்பட்ட மாமனிதரின் ஆய்வில் இறுதியாக தமிழ் நாட்டில் இன்றுள்ள ஒரு மாபெரும் சமூகம் தான், தமிழ் இனத்திற்கே முன்னோர் என்றும், அவர்கள் வழி வந்த இரண்டு உட்பிரிவினர்களும் இந்தியாவின் அடையாளம் என்று தன்னுடைய ஆய்வின் இறுதி அத்தியாத்தை எழுதியுள்ளார்.
யார் அந்த சமூகம்...?
அவர்களை மட்டும் கூற காரணம் என்ன..?
அவர்களை இலக்கியம் மூலமாக மூத்த குடி என்றாரா..?
இல்லை தொல்லியல் ஆய்வு மூலமாக கூறினாரா...?
இல்லை பண்பாடு,கலாச்சாரம் என்கிற மானுடவியல் மூலமாக கூறினாரா...?
யார்..? யார்..? ஏன்..? ஏன்..? எதனால்..?எதனால்..?
ஆதித்தமிழனின் பயணம் தொடரும்................!
நன்றி
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Jonathan Mark Kenoyer Felicitation Volume
And
THE HINDU NEWS PAPER
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...