Monday, November 4, 2019

மாலிக்கபூரும் மதுரை சுல்தான் ஆட்சியும் கள்ளர்களின் உயிர்தியாகமும் கோவில் காவலும்



மாலிக் கபூர் என்ற பெயரை தவிர்த்து தென்னிந்திய வரலாறை எவராலும் தொகுக்க முடியாது.

தென்னிந்திய வரலாற்றை மாலிக்கபூரை வைத்து முன்பு, பின்பு என கூட பிரிக்கலாம். ஏனென்றால் தென்னிந்தியா வரை படையெடுத்து வந்த ஒரே டெல்லி சுல்தானின் படைத் தளபதியே இம் மாலிக்கபூர் என்பவர்.

பிறப்பால் இந்துவாக இருந்து பிற்காலத்தில் அலாவுதீன் கில்ஜியின் ஆசை நாயகியாகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர்.

கிபி1311ஆம் ஆண்டு காஷ்மீர் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள அகண்ட பாரதத்தை, தன்னுடைய ஹொசூர்(எஜமான்) காலனியின் கீழ் கொண்டு வந்தவர்.

அப்படிப்பட்ட மாலிக்கபூர் கடைசியாக வெறியாட்டம் ஆடிய பகுதி தான் இன்றைய மதுரை.....!

கிபி1311ஆம் ஆண்டு மதுரையில் பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட சகோதர யுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு மாலிக்கபூர் தன்னுடைய கொடும்படையுடன் மதுரைக்குள் நுழைந்தார்.

அப்போது அவரை எல்லையில் எதிர்த்து உயிர் நீத்த கள்ளர் தளபதி கீழக்குயில்குடி வீரத்தேவர் என்பவருக்கு நடுகல் எழுப்பி இன்றும் அவர்களுடைய வாரிசுதாரர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மதுரையை தாக்கி பின்பு மதுரை திருப்புவனம் வழியாக திருப்பத்தூர், சூரைக்குடி, தேவகோட்டை, திருவாடனை, இராமேஸ்வரம் என தான் செல்லும் வழிகளில் உள்ள கோவில்களை சேதப்படுத்திக் கொண்டே சென்றார் மாலிக்கபூர்.

அப்போது திருப்புவனம், திருப்பத்தூர், தேவகோட்டை, புதுக்கோட்டை பகுதி வாழ் கள்ளர் படைப்பற்றுகளை வீழ்த்திக் கொண்டே சென்றுள்ளார் மாலிக்கபூர்.

ஏனென்றால் மேலே குறிப்பிட்ட ஊர் மற்றும் நாடுகளில் கள்ளர் படைகள் (வில்லவர்கள், களப்படை) சுந்தர பாண்டியத்தேவரால் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாலிக்கபூர் சென்ற வழித்தடம் அத்தனையும் கள்ளர் நாடுகளே ..!

எனவேதான் ஒவ்வொரு கள்ளர் பற்றையும் கருவறுத்தே முன்னோக்கி சென்றுள்ளார்.

மாலிக்கபூருக்கு பின்பு அவரது அடிமையை மதுரையின் செல்லி சுல்தான் பிரதிநிதியாக நியமித்து விட்டு மீண்டும் டெல்லிக்கே சென்றுவிட்டார் மாலிக்கபூர்.

அதற்கு பின்பு கிபி1335 ஜலாலுதீன் ஆசாம் கான் என்பவர் டெல்லியில் உள்ள துக்ளக் ஆட்சியை உதறி, மதுரையை தன்னாட்சியாக அறிவித்து அவருக்கு பின்பு ஏறக்குறைய 43 வருடங்கள் மதுரையை ஆட்சி புரிந்துள்ளனர்.

அந்த 43 வருடங்களில் திருப்பத்தூர், திருப்புவனம், திருப்பரங்குன்றம், காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்த பெரும்பாலான சைவ, வைணவ கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன.

அக்காலகட்டத்தில் மதுரை சுல்தான்களுக்கு எதிராக கலகம் செய்த சூரைக்குடி கள்ளர் குல விஜயாலத்தேவர் தலைமை கொண்ட கள்ளர் படைப்பற்று, மதுரை சுல்தானின் தளபதிக்கு கட்டுப்பட்ட பொன் அமராவதி நாடான விராச்சிலை, கோட்டையூரில் சுல்தான் படைகளையும், ஊர்களையும் தாக்கி சூரையாடி பெரும் சேதத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தனர்.

இதனால் கோபமுற்ற சுல்தான் தனது முதன்மை தளபதியான இராஜாதி கான் தலைமையில் மூன்று உப தளபதிகளான மஞ்சிலிஸ் எலிஸ் கான், ஆசாம் கான், முவாசம் கான் மற்றும் அவர்தம் பெரும் படைப்பற்றை வைத்து சூரைக்குடி கள்ளர் படைப்பற்றை தீக்கிரையாக்கி முற்றிலுமாக அழித்து தரைமட்டமாக்கிறார்கள்.

அழித்தது மட்டும் இல்லாமல், சுல்தான் மாத்தூர் குளத்தில் பொன் அமராவதி நாடான விராச்சிலை மட்டும் கோட்டையூர் நாட்டுக்கூட்டத்தை கூட்டச் சொன்னார்.

அப்படி அந்த பொன் அமராவதி நாட்டுக் கூட்டத்தில் எங்களுக்கு எதிராக வாளை சுழட்டிய கள்ளர்களையும் அவர்களது தலைமை இடமான சூரைக்குடியையும் அழித்துவிட்டோம்.

இனி எங்களுக்கு எதிராக யாரும் வாளை சுழட்டினால் சூரைக்குடி கள்ளர் பற்றுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான் இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த சம்பத்தை திருக்கோலக்குடி நாயனார் கோவிலில் கல்வெட்டாக வெட்டியுள்ளனர்.

இதே சுல்தான் ஆட்சி காலத்தில் கோயம்புத்தூரில் ஹிஜிரா ஆண்டு 769 பொது ஆண்டு கிபி1368

காங்கய நாட்டு முத்தூர் கோவில் சிவபிராமணருக்கும், திருவாநந்தீஸ்வரர் கோவில் சிவபிராமணருக்கும் ஓலை அனுப்பப் பெற்றுள்ளது.

அதில் கோவிலை பாதுகாக்க கள்ளர் மரபைச் சேர்ந்த ஒருவருக்கு காவல் உரிமை அளிக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் கிடைத்த ஹிஜிரா கல்வெட்டுகள் மிக மிக குறைவே அதில் பெரும்பாலும் கள்ளர்களின் உயிர்தியாகமும், காவலுமே உள்ளது.

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...