Tuesday, November 5, 2019

தேவதானப்பட்டியில் அமைதிக் கூட்டம்


இன்று தேவதானப்பட்டி பிட் 1 கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து பெரியகுளம் வட்டாட்சியர் தலமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புல்லக்காபட்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பலகை மற்றும் கொடி மரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியின் பலகையையும் கொடி மரத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று புகார் தெரிவித்தது தொடர்பாக இந்த அமைதிக் கூட்டம் நடைபெற்றது. "ஊரின் நலன் கருதி கட்சி பலகை மற்றும் கொடி மரத்தை அருந்ததியரின் ஆலயத்திற்கு நேராக இருப்பதிலிருந்து சற்று நகற்றி அமைத்துக் கொள்ள வட்டாட்சியர் முன்மொழிந்தார். அதேபோல கட்சிப் பலகை அருகே அருந்ததியர் அமைந்துள்ள கோவில் மணியை சற்று நகற்றி கோவில் பீடத்தின் அருகே வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார். மேற்படி முன்மொழிவுக்கு ஒப்புதல் மனு எழுதி வட்டாட்சியரிடம் வழங்கிய போது எடுத்த படம். இந்தக் கூட்டத்தில் தேவதானப்பட்டி வருவாய் அதிகாரி, சார்பு ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். படத்தில் இடமிருந்து வலமாக பெரியகுளம் வட்டாட்சியர், தேவதானப்பட்டி பிட்2 கிராம நிர்வாக அதிகாரி, நான், அ.இ.பா.பி. மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தங்கராஜா, அ.இ.பா.பி. தேவதானப்பட்டி நகர பொதுச் செயலாளர் ஆர். மணிகண்டன். 

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...