அஞ்சூர் கள்ளர் நாட்டின்
பெருமை
அனைத்து சமூக பிரதிநிதித்துவம்
பாண்டிய நாட்டின் கிழக்கு அரணாக உள்ள கள்ளர் நாடுகளில் ஒன்றாக வருவது
தான் அஞ்சூர் நாடு.
அம்பலம் பட்டம் தாங்கிய நாட்டார் கள்ளர்களின் ஆளுமையில் ஏனாதி கிராம தலைமை
அம்பலகாரர்களால் பூவந்தி, கீரனூர், மடப்புரம், செம்பூர் போன்ற ஐந்து கிராமங்களை இணைத்து
அஞ்சூர் நாடாக ஆளப்படுகிறது.
அஞ்சூர் நாட்டில் முக்குலத்தோர், செட்டியார், வேளார், வெள்ளாளர், முதலியார்,
கோனார், வன்னார், நாடார், பள்ளர், பறையர் முதலிய வகுப்பினர்கள் வாழும் பகுதியாகும்.
இதில் கள்ளர்,அகமுடையார்,கோனார்,செட்டியார் ஆகியோர் நிலவுடைமையாளர்களாக
உள்ளனர்.
ஏனாதி கிராமத்தின் தலைமை அம்பலகாரரே அஞ்சூர் நாட்டின் நீதிவழங்குதல் நிர்வாகம்
தலைமை அம்பலகாரராக வலம் வருகிறார்.
ஏனாதி என்ற பெயரின் பொருள்:- வில்லான்மையில் சிறந்து விளங்கிய படைத்தலைவர்களுக்கு
சோழர்கள் வழங்கிய பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராமங்களில் உள்ள பெரும்பாலான நாட்டார் கோவில்களில் அனைத்து சமூகத்திற்கும்
உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக: பத்ரகாளியம்மன் கோவிலுக்கு நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்
பூசாரியாக உள்ளனர். தன்னாயிரம் கோவிலில் கோனார் சமூகத்திற்கு மரியாதை வழங்கப்படுகிறது.
முக்கிய அம்சம்: பள்ளர் சமூகத்திற்காக தாங்கள் வணங்கி வந்த கருப்ப சாமி
கோவிலை, கள்ளர் பெருங்குடிகள் விட்டுக் கொடுத்துவிட்டனர்.
எந்தவித சாதிய பூசல் இல்லாமலும், மனச்சகிதம் இல்லாமலும் அஞ்சூர் நாடு
இன்றும் கம்பீரமாக தனது புகழுடன் நிற்கிறது.
நன்றி
வரலாற்றுத் துறை
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்
அன்புடன்
சோழபாண்டியன்
No comments:
Post a Comment