அன்புத் தம்பிக்கு. ...
வெள்ளையர்களாகிய எட்கர்தர்ஸ்டன்{ south indian castes and tripes} - நெல்சன் {madura country manual } ஹூலி {ancient Ceylon } ஜேம்ஸ் ராபர்ட் { jafna kingdom} கால்டுவெல் {tinnavely manual} என பலரும் முக்குலத்தோர் ஒருவரே என்றும் கள்ளர் -மறவர் -அகம்படியர் ஆகியோர் ஒரே மூலத்தை உடையவர்கள் என்றும் சொல்கிறார்கள். இவற்றைத் தவிர வெள்ளையர்களுக்கு விரோதிகளாக இருந்த ப்ரெஞ்சு மற்றும் டச்சு போர்ச்சுகீசியர்களும் தங்களது ஆவணங்களில் மறவர் மற்றும் அகம்படியர் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் அகம்படியர் மறவரில் ஓர் உட்பிரிவினர் என்றும் சொல்லியுள்ளனர். ஒருவர் இருவர் கூறினால் உங்கள் வாதப்படி, சரி அறியாமல் எழுதி ஆவணப்படுத்திவிட்டார்களோ என்று ஐயப்பாடு தோன்றலாம். ஆனால் உள்நாடு மற்றும் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த அனைவரும் இதை உறுதிப்படுத்தும் போது நாம் அதிலுள்ள உண்மையை ஏற்கத்தானே வேண்டும்! .
மேலும் தற்போது சில வருடங்களாகத்தான் அகம்படியர் முக்குலத்தோர் அல்ல - அது ஒரு செயற்கை சமூகம் என்ற ரீதியான கருத்துக்கள் எவ்வித ஆதாரங்களுமின்றி பிரிவினைவாதிகளாலும் முக்குலத்தோர் ஒற்றுமையை விரும்பாத மாற்று சமூகத்தவர்களாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக அவர்கள் ஒரே மரபிலிருந்து தோற்றம் பெற்றவர்கள் என பல்வேறு தரவுகள் கொண்டு அவ்வப்பொழுது நிரூபித்தவண்ணம் இருக்கின்றோம்.
மேலும் மறக்குடி- மறக்குலம் பற்றி பல்வேறு சமூக ஆய்வாளர்கள் மிகத் தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளனர். அதில் வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவரும் தமிழ்நாடு தொல்லியல் துறை உதவி இயக்குநர் ஆக இருந்து பணிநிறைவு பெற்ற திரு.பூங்குன்றன் ஐயா அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவராவார். அவர் தனது மறவர் மரபு எனும் கட்டுரையில் மறவர்கள் சங்ககாலத்திலிருந்தே இருக்கும் குடியினர் என்றும் அவர்களிடமிருந்துதான் வேளீர் சீறூர் மன்னர்கள் முதற்கொண்டு பல்வேறு அரசுகள் தோற்றம் பெற்றது என்றும் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த டாக்டர். கமால் அவர்களும் அகம்படியர் மறவர் கள்ளர் ஒரே சமூகத்தவர் என்று தரவுகள் மூலம் தெளிவாக்குகிறார். மறக்குடி - மறக்குலம் என்பது மறவர்களை மட்டுமின்றி மறவர்களின் வழித்தோன்றலாகிய முக்குலத்தோர் மற்றும் அதன் உபஜாதிக் கிளைகளையும் உள்ளடக்கியதாகும். நீங்கள் நல்ல நண்பர் மற்றும் சீராய்வு செய்யும் திறன் உள்ளவர் ஆகையால் தப்பித்தவறி பிரிவினை வாதிகளின் கரங்களில் சிக்கிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முக்குலத்தோரிடமிருந்து விலக்கி அகம்படியரைத் தனியே வைக்கும் முயற்சிகள் யாவும் இறுதியில் படு மோசமான தோல்விகளையே தழுவும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனெனில் இன்று ஆராய்ச்சி மாணவர்கள் அதிகம் பெருகிவருகின்றனர். அவர்கள் அவ்வப்போது உண்மை எதுவென்பதை உறுதிசெய்து கொண்டே இருப்பார்கள். நான் மட்டும் அல்ல எனக்கு பின்வரும் சந்ததியினர் முக்குலத்தோர் ஒரே இனத்தவர் என்பதை நிச்சயம் உறுதிசெய்துகொண்டேயிருப்பார்கள். நன்றி! ,மீண்டும் இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே இருங்கள் நான் இனிமேல் அவற்றுக்கான பதில்களை கடித வடிவில் முகநூலில் எழுதி பதிலளிக்கிறேன். வீட்டில் அனைவரது நலனையும் இந்த அன்பு அண்ணன் கேட்டதாகக் கூறவும்!
நன்றி!
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
No comments:
Post a Comment