Friday, April 19, 2019

அமமுகவின் பொதுச் செயலாளராக தினகரன்




அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் பதவி சசிகலாவுக்காக தயாராக உள்ளது என்று தினகரன் அறிவித்துள்ளார். அதிமுகவுக்காக உரிமை கோரப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். சசிகலாவின் ஒப்புதலோடுதான் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக தங்கத் தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். இந்த நகர்வு தினகரனுக்கு முழு அதிகாரத்தை வழங்கக் கூடியதாக உள்ளது. இந்த நிகழ்வுகள் வரவேற்கத் தகுந்தவையாகத் தோன்றுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு முக்கியமில்லை என்று கூறி தேர்தல் செலவுகளுக்குத் தேவையான பணத்தை சசிகலா தரப்பினர் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நகர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்தப் பின்னணியில் இருந்தாலும் இந்த நகர்வு வரவேற்கத் தக்கதே. ஏனெனில் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா-தினகரன் போன்றோர் அதிகம் தெரியாத பிரமுகர்களாகவே இருந்தனர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் தினகரனை தலைவருக்கான ஒரு சிறந்த நபர் என்பதை நிரூபித்துள்ளன. ஆனால், சசிகலா இன்னமும் நிரூபிக்கப்படாத தலைவராகவே இருக்கிறார். அவர் வெளியில் வரும்போதுதான் அவரது நிலைப்பாடு என்னவென்று தெரியவரும். அவர் அமமுகவின் தலைவராக இருந்து செயல்படுவாரா? அல்லது அவர் தனியாக ஒரு கட்சியை தொடங்குவாரா என்பது தெரியவரும். எது எப்படி இருந்தாலும் அமமுகவின் இந்த நகர்வு அக்கட்சிக்கு நல்லதே.


https://bangaloremirror.indiatimes.com/news/india/ttv-dinakaran-becomes-general-secretary-of-ammk/articleshow/68957379.cms

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...