ராஜேந்திரன் தலைமை
தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி. 1007-ம் ஆண்டைச் சேர்ந்த (929) (சாளுக்கிய மன்னன்)
சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. சோழ குலத்திற்கு அணியாக
விளங்கியவனும் ராஜராஜ நித்தியா விநோதனின் மகனுமாகிய நூர்மடிச் சோழ ராஜேந்திர
வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய
பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து பெரும்போர்
புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும், நகரங்களை
கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக்
கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியைச் அழித்தும் அளவற்ற பொருட்களை கவர்ந்துகொண்டும் தன்
நாட்டிற்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது.
இதன் பிறகு தமிழரைக் கொன்ற (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை
விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென்
பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது. பகைவனின்
கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன்
செய்திருக்கக் கூடுமா என்ற வினா எழுந்தாலும் ராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய
நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி
உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆனால் விரைவிலேயே சத்தியாசிரயன் கடும்போரின் விளைவாகச் சோழப்
படையெடுப்பைத் தடுத்தது நிறுத்தினான். நுளம்பாடியிலும்,
காணப்படுவதைப் போன்று, இரட்டபாடியைச் சோழர்
கைப்பற்றினர் என்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை.
சோழர்கள் நூலிலிருந்து...
இப்போது புரிகிறதா திராவிடர்களும், முற்போக்கு முகமூடிகளும் சாதியை ஒழிக்க வேண்டும் ஏன் துடிக்கிறார்கள்
என்று.
No comments:
Post a Comment