இந்திய அரசுக்கு எதிராக தமிழர்கள் யோசிக்க காரணமாக அமைந்தது ஈழப்போர் மட்டுமே.
அதுவரை தமிழர்கள் இந்தியவை தங்கள் தாய்நாடாகத்தான் நம்பி வந்தார்கள். இன்னமும் கூட இந்தியா தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் உரிய மரியாதை அளித்து அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆரம்பித்தால் தனித் தமிழ்நாடு போன்ற சிந்தனை தேவையில்லை.
அதேவேளையில் தற்போதுள்ள இந்திய அரசியல்வாதிகளை பார்க்கும்போது யாருமே ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படப்போவதில்லை என்றுதான் தெரிகிறது.
இதுபோன்ற சூழலில் கூட்டாட்சியே சிறந்தது. எனவே ஓரளவு அரசியல் அறிவு பெற்ற அரசியல்வாதிகள் கூட்டாட்சியை நோக்கி நகர வேண்டும். அல்லது எல்லா தேசிய இனங்களும் தனித்தனியே பிரிந்து போனாலும் கூட அவர்கள் தங்கள் பாதுகாப்புக் கருதி தங்களுக்குள் யூரோ போன்ற ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதுதான் சரி.
ஆனால் எல்லாரும் பிரிந்து சேருவது என்பதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அந்த நிலை வரை போகாமல் சிறந்த கூட்டாட்சியை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
இதையெல்லாம் இன்று வரை உள்ள அரசியல்வாதிகளால் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் பல்வேறு சூழ்நிலைக் காரணிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே புதிய தலைமுறை அல்லது இளைஞர்கள்தான் அதுபோன்ற ஒரு அரசியலை நோக்கி நகர வேண்டும். இதை அரசியல் என்பதை விட நிலப்பரப்புக்கான ராஜதந்திரம் என்றே சொல்ல வேண்டும்.
நான் சொல்றது புரியுதா?
No comments:
Post a Comment