Wednesday, April 23, 2014

இது நீண்டநாட்களாக எழுத நினைத்த பதிவு...


எனது பதிவுகளை உன்னிப்பாக கவனித்து வரும் நண்பர்கள், என்னோடு வாக்குவாதம் செய்யும் நண்பர்கள், என் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் எனக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

அதாவது,
நீங்கள் சாதி, மதம் குறித்து கடுமையான வாக்குவாதங்களை முன் வைக்கிறீர்கள். அதோடு நீங்கள் உங்கள் பயண விபரங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறீர்கள். எல்லாப் பிரிவுகளிலும் மூர்க்க குணம்படைத்த, வன்முறையில் ஈடுபடக் கூடிய நபர்கள் இருக்கிறார்கள். உங்களை விரும்பாதோர் அவர்களைப் பயன்படுத்தி உங்களை தாக்க முயற்சிக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

அவர்களின் எச்சரிக்கையில் உண்மை இருக்கிறது. அவர்களது அன்பை, அக்கறையைப் பாராட்டுகிறேன்.

அவர்களைப் போன்றோருக்குத்தான் இந்தப் பதிவு.

உங்கள் அன்பு, அக்கறைக்கு நன்றி நண்பர்களே,

உண்மையில் சாதி, மதம் குறித்து பல பொய்மைகள் கட்டமைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. அவை பல சமூக பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகின்றன. மக்கள் சேவை, தாய்நாட்டுச் சேவை என்று வரும்போது அவற்றை தவிர்த்துவிட்டு, அல்லது அவற்றைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று பெரிதாக எதையும் செய்து விட முடியாது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட பொய்மைகள் ஒவ்வொரு சாதிக்கும், மதத்திற்கும் எதிராக உள்ளன. இவை ஒருபோதும் இந்த சாதிகளை, மதங்களை ஒன்றிணைய விடமாட்டா. எனவே அந்த பொய்களை, அவை எதுவாக இருந்தாலும் அவற்றைக் களைந்தெறிவது நமது கடமையாகிறது.

அவ்வாறு நாம் செய்யும் செயல் பலருக்குப் பிடித்திருக்கலாம். பலருக்குப் பிடிக்காமல் போகலாம். பிடிக்காது போகும் நபர்கள் நமக்கு எதிராக திரும்புவது சாத்தியமே. நாம் யாரையும் புண்படுத்தாமல் கண்ணியமாக, அதேவேளையில் தர்க்க ரீதியான கேள்விகளை முன்வைக்கிறோம்.

நமக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் தர்க்க ரீதியாக எதிர்க்க வந்தால் அவர்களை வரவேற்போம். இல்லை மூர்க்கத் தனமாகத்தான் செயல்படுவோம் என்றால் அதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். அவர்களையும் வரவேற்போம்.

பொய்மைகளால் அணைகட்டி காட்டாற்று வெள்ளத்தைத் தேக்க முடியாது. உண்மை என்ற இறை சக்தியை போலிக்குள் மறைத்து விட முடியாது. இறைவனின் சக்தியான உண்மையைப் பற்றி பேசும் பணி நம்மிடையே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீமைகள் தலைதூக்கும்போது அங்கு நன்மையின் வலுவான சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி இறைவனின் சக்தியாக உள்ளது.

பொய்மை, தீமையின் அட்டூழியம் அதிகரிக்கும்போது இறைவன் அருள்பாலிக்கிறான். அவன் அவதாரமாக பிறக்கிறான். இறைவன் தன் சக்தியை அவ்வாறு அனுப்புகிறான். அதுபோன்ற சக்தி நமக்கு கிடைத்துள்ளது. அதுவே நம்மை தீமைக்கு எதிராக அனுப்பியுள்ளது.

பொய்மையை உடைப்பதும் ஒருவகைப் போரே. அந்தப் போரில் ஒரு படை தோற்றால் இன்னொரு வலிமையான படை அனுப்பி வைக்கப்படும். அது நிச்சயம் தீய சக்திகளை அழித்தொழிக்கும்.

இந்த போராட்டத்தில் ஒரு பெருமாள் தேவன் போகலாம். அதேவேளையில்  அவனை விட ஆயிரம் மடங்கு வலிமையான ஆயிரம் பெருமாள் தேவன்கள் வருவார்கள். அவர்கள் தீமையைத் தேடித் தேடி ஒழித்துக் கட்டுவார்கள்.  

இதனை பதிலாக, தகவலாக, விளக்கமாக, எச்சரிக்கையாக எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்  கொள்ளலாம்.

                                    -----------------------------------------

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...