1.
ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையில் காதல் பாதுகாப்பு, கலப்புத் திருமண பாதுகாப்பு
பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
2.
காதலிப்போர், கலப்புத் திருமணம் செய்வோர் இந்த பிரிவில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
3.
அவர்களோ அல்லது அரசாங்கமோ உடனடியாக ஒரு கணிசமான தொகையை இவர்களுக்காக காப்பீடு எடுக்க
வேண்டும். அவர்கள் பாதிக்கப்படும்போது அந்தக் காப்பீட்டுத் தொகையை அவர்களுக்குக் கொடுக்கலாம்.
4.
காதல் நல்லது என்று பிரச்சாரம் செய்வோர், அதை வைத்து பணம் சம்பாதிப்போர், அதை வைத்து
பிழைப்பு நடத்துவோர் ஒரு பாதுகாப்பு நிதியத்தை உருவாக்க வேண்டும். அந்த நிதியிலிருந்து
இதுபோன்றோருக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
5.
சாதி கெட்டது என்று பிரச்சாரம் செய்யும் அமைப்புகள், ஊடகங்கள் உடனடியாக சாதியை ஒழிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது சாதி-மதத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என்று சார்
பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே அவர்களுக்கு
வேலை வாய்ப்புத் தரவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் போலியான பிரச்சாரம் செய்கிறார்கள்
என்று அர்த்தமாகும்.
6.
அரசாங்கம் சாதி, மதங்களுக்கு ஆதரவானதா எதிர்ப்பானதா என்பதை அறிவிக்க வேண்டும். அவ்வாறு
அறிவித்து ஆதரவானது என்றால் மேற்படி விஷயங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். எதிர்ப்பானது
என்றால் சாதி, மத விவகாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
7.
ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது. ஒன்று சாதி, மதம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால்
அது இரண்டும் இருக்கக் கூடாது.
8.
காதல் திருமண, கலப்புத் திருமணம் செய்து கொண்டோரின் பாதுகாப்பிற்கு ஒன்று அல்லது இரண்டு
காவலர்களை நியமிக்கலாம்.
செய்வார்களா?
இவர்கள் செய்வார்களா?
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=93915
No comments:
Post a Comment