தேனி
மாவட்டம் பெரியகுளம் வட்டம் மேல்மங்கலம் கிராமத்தில் இருதினங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட
சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை
காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால்
ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின்
2 குடிசைகளை தீயிட்டுக் கொளுத்தினர். இதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீசார் இதுவரை
15-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். காவல்துறை ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றி
வளைத்து அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தது. அந்த ஊரே வெறிச்சோடிக் கிடந்தது. காவலர்கள்
மட்டுமே அங்கு நிறைந்துள்ளனர்.
நடவடிக்கை
என்ற பெயரில் போலீசார் அத்துமீறி ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக இங்குள்ள மக்கள், குறிப்பாக
பெண்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஏப்ரல் 10-ம் தேதி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை
முற்றுகையிட்டனர்.
தேனி
மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியின் செயலாளர் எஸ்.ஆர். தமிழன், தேவரின பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள், வழக்கறிஞர் கலைமணி
அம்பலம், கம்பூர் சேகர், அருண்மொழித்தேவன், வழக்கறிஞர் திருமங்கலம் ஜெகதீசன், பாண்டி,
மாணிக்கம், உசிலை சுரேஷ், கோச்சடை சேகர் முதலானோர் அடங்கிய குழுவினர் அங்கு விரைந்தனர்.
அவர்களுடன்
கிராம மக்கள் சென்று கலெக்டரிடம் போலீசார் செய்யும் அட்டூழியங்களைப் பற்றி புகார் செய்தனர்.
போலீசார்
தீவைப்பில் ஈடுபட்டவர்களை மட்டும் கைது செய்யாமல் கண்ணில் பட்டவரையெல்லாம் கைது செய்ய
ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை வேனில் அழைத்து வந்து அவர்கள்
கைநீட்டும் அனைவரையும் கைது செய்ய ஆரம்பித்தனர்.
பள்ளி,
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து அவர்களின் எதிர்காலம் பாழாக வேண்டும்
என்ற உள்நோக்கத்துடன் அவர்களை கைது செய்ய ஆரம்பித்தனர்.
வீட்டில்
ஆண்கள் இல்லாவிட்டால், அவர்களை அழைத்து வரவேண்டும் என்று பெண்களை மிரட்ட ஆரம்பித்தனர்.
இல்லாவிட்டால் ஆடைகளை களைந்து அவர்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வோம் என்று மிரட்டினர்.
ஆண்கள்
கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகள், வயல்களுக்குச் சென்று மறைந்திருக்கிறார்கள் என்பதை
அறிந்து அங்கு சென்றும் அவர்களை தேடித் தேடிக் கைது செய்தனர்.
ஒரு
வீட்டில் இருப்பவர்கள் நோயுற்று இருக்கிறார்களா, உதவிக்கு யாரும் இல்லையா என்பது பற்றியெல்லாம்
கண்டுகொள்ளாமல் அவர்களை கைது செய்தனர். பெண்கள் இது பற்றி கலெக்டர் கே. பழனிச்சாமி,
மற்றும் தேர்தல் அதிகாரி எம்.ஆர்.மீனாராமிடமும் புகார் செய்தனர்.
இந்தச்
சம்பவம் தொடர்பாக போலீசார் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துமீறி
நடந்துகொள்ள ஒத்தாசை செய்யும் மாவட்ட காவல் அதிகாரி மஹேஷை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். என்று வேண்டுகோள்
விடுத்தனர். அவ்வாறு செய்யவில்லை என்றால் தாங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்தனர்.
இந்தப்
புகாரைத் தொடர்ந்து காவல்துறை தனது அட்டூழியத்தை நிறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment